இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

33. இப்ராஹீமும் நானும்...!


ஒரு காரணமும் இல்லாமல் ஒரு பொருளுக்கு தொன்றுதொட்டு சான்றோர்களால் இடப்பட்டு வழங்கும் பெயர், இடுகுறிப் பெயர் எனப்படும். நாற்காலி, மரங்கொத்தி, கரும்பலகை, சிறுவர், பறவை, அணி, வளையல், வட்டம் இப்படி ஏதேனும் ஒரு காரணம் பற்றி இட்டு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும். ஓசைகளை வைத்தும் பெயர்களைச் சூடுவர்.

‘மனிதர்களின் பெயர்களில் மகத்துவம் என்ன இருந்து விடப்போகிறது? பெயர்கள் வெறும் அடையாளத்துக்காக தானே?’ என்பீர்கள்.

மனிதர்களுக்கு வைக்கப்படும் எந்தப் பெயரும் மனிதர்களுக்கு எவ்வித நேர்மறை எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என வாதிடுவீர்கள்.

‘ஒரு மனிதனுக்கு ராமசாமி எனப் பெயர் வைத்தால் அவன் ராமசாமி. அதே அவனுக்கு ராபர்ட் எனப் பெயர் வைத்தால் அவன் ராபர்ட். அவனுக்கு ரஹீம் எனப் பெயர் வைத்தால் அவன் ரஹீம்’ என கூறி சிரிப்பீர்கள். மதத்தால் தொழிலால் தோற்றத்தால் ஓசையால் உறவு முறையால் மனிதர்களுக்கு பெயர்கள் சூட்டப்படுகின்றன.

உலக மனிதர்களில் 15 கோடி பேருக்கு ‘முகம்மது’ என்கிற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆறேகால் கோடி பெண்களுக்கு ‘மரியா’ என்கிற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அஞ்சரை கோடி பேருக்கு ‘நுஷி’ என்கிற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. உலகின் தனித்துவமான குழந்தைகள் பெயர்களாக வின்டி, வின்னிலா, வெல்வெட், ஸ்டார்லெட், ஸ்னோட்ராப், கைரோ, கெனான், பிரியான் பெயர்கள் விளங்குகின்றன.

மெக்ஸிகோவில் விருத்தசேதனம் என பெயர் வைக்கவும், ஜப்பானில் டெவில் என பெயர் வைக்கவும், பிரான்சில் ஸ்ட்ராபெர்ரி என பெயர் வைக்கவும் தடை உள்ளது. உலகின் வித்தியாசமான பெயர்கள் சொலைல் மற்றும் ஜோஸிபா. உலகில் மிக நீளமான ஆண் பெயர் ஹீபர்ட் பிளய்ன் உல்ப் எஸ்செல் ஜெல்ஸ்டெய்ன் ஹாசன் பெர் ஜெர்டார்ப் சீனியர். உலகின் மிக நீளமான பெண் பெயர்- ரோஷன் டியா டெலி நெசியா உன்னி வா செங் கோயானிஸ்க் குவாட் சியூத் வில்லியம்ஸ்.

பீடிகை போதும் கதைக்குள் வருவோம்.


எனது இயற்பெயர் நாசர். சூயஸ் கால்வாய் கட்டி கப்பல் போக்குவரத்தை எளிதாக்கிய எகிப்து அதிபர் நாசர் பெயரைத்தான் என் அத்தா எனக்குச் சூட்டியிருக்கிறார். வெறும் நாசர் தான். நாசர் முகமது அல்லது முகமது நாசர் என அவர் பெயர் வைக்கவில்லை.

ஒற்றை வார்த்தையாய் இருக்கும் நாசர் என்கிற பெயர் எனக்கு பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நாசர்கள் இருப்பர் நாஜர், நஸீர் என்று கூட என் சாயலில் பெயர் இருக்கும்.

பின்னாளில் நான் ‘ஆர்னிகா’ என்கிற மாதஇதழ் நடத்தினேன். ஆர்னிகா என்றால் மருத்துவக் குணமுள்ள ஹோமியோபதி மலர். பெண் பெயர் போலவும் இருக்கிறது உச்சரிக்க இசை நயமாகவும் இருக்கிறது. அதனால் என் பெயரை அரசு கெஜட்டில் கொடுத்து ஆர்னிகா நாசர் என மாற்றிக் கொண்டேன்.

பெயர் மாறியதும் என் வாழ்க்கையில் எல்லாம் மாறின.

அழகான அறிவான மனைவி கிடைத்தார். எழுத்தில் புகழ் பெற்றேன். இரு குழந்தைகளுக்கு தந்தையானேன். இப்போது நிம்மதியான ஓய்வூதிய வாழ்க்கை மனைவியுடன் கோவையில் மகன் வீட்டாருடன் வாழ்கிறேன். இரண்டரை வயது பேரனோடு கும்மாளம் குதியாட்டம் கொண்டாட்டம்தான். என்னை பொறுத்தவரை சும்மா கிடக்கும் பெயர்களை மனிதன் எடுத்து சூட்டியபின் அவனுக்கு பெயரால் நன்மையோ தீமையோ கொட்டத் தொடங்கி விடுகின்றன.

ராஜா, தேவி, சாந்தி, பிரபு, ரவி, மணி போன்ற பெயர்கள் தாங்கியவர்கள் வாழ்க்கையில் பெரிய சோகங்களையும் தோல்விகளையும் சந்திக்கிறார்கள் என நம்புகிறேன்.


இப்போது எனக்கு வயது 64.

இத்தனை வருட வாழ்க்கையில் ‘தென்னரசு’ என்கிற பெயருடைய நபர்கள் எல்லாம் எனக்கு ஏதாவது ஒரு வகையில் தீங்கு இழைத்து வந்திருக்கிறார்கள். அதே நேரத்தில், இப்ராஹீம் என்ற பெயருடைய நபர்கள் எல்லாம் எனக்கு எதாவது ஒரு வகையில் நன்மையை சுமந்து வந்திருகிறார்கள்.

நீங்கள் நூறு முஸ்லிம் ஆண்களை சந்திக்கிறீர்கள் என்றால் ஒரு 20 ஆண்களாவது இப்ராஹீம் பேரை தாங்கி இருப்பர். இப்ராஹீம் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபிகளில் ஒருவர். இறைவனின் ஆணைக்காக இஸ்மாயீல் நபியை பலி கொடுக்க இருந்தவர். ஆபிரகாம் என்கிற பெயரின் அரபி படிவம் தான் இப்ராஹீம். இந்த பெயரின் மூலம் ஹிப்ரூ மொழி. பெயரின் அர்த்தம் பல குழந்தைகளுக்கு தந்தையாய் சிறந்தவன் என்பதே!

என் வாழ்க்கையில் நான் முதன்முதலில் சந்தித்த இப்ராஹீம் என் திண்டுக்கல் பெரியத்தா. ஆறேகால் அடி உயரமிருப்பார். திராவிட நிறம். எப்போதுமே சுருட்டு பிடித்துக் கொண்டே இருந்ததால் அவரை சுருட்டு பெரித்தா என அழைப்போம். வீட்டில் நூற்றுக்கணக்கான புறா வளர்த்தார். அவருக்கும் என் அத்தாவுக்கும் உறவுமுறை சரியில்லாததால் நான் அவருடன் ரகசியமாக பேசிக் கொள்வேன். கரகர எம் ஆர் ராதா குரல் அவருக்கு. ஸ்டைலில் ரஜினிகாந்த் என் சுருட்டு பெரித்தாவிடம் பிச்சை வாங்க வேண்டும். கால் மேல் கால் போட்டு கொண்டு அவர் சுருட்டு பிடிக்கும் அழகே அழகு.

இரண்டாவதாக என் பால்ய விளையாட்டுத் தோழன் இப்ராஹீம். அவனும் நானும் சேர்ந்து சுத்தாத இடமில்லை. ஹார்லிக்ஸ் பாட்டிலில் மீன் பிடிப்போம்.குதிரைவால் முடியில் சுருக்கு அமைத்து ஓணான் பிடிப்போம். தீப்பெட்டி லேபிள்கள் சிகரட் அட்டைகள் சேகரிப்போம். செதுக்கு சிப்பி விளையாடுவோம். நொண்டித்தட்டு அரங்கேற்றுவோம். திருடன் போலீஸ் விளையாட்டு ஆடி மகிழ்வோம். திண்டுக்கல் மலைக்கோட்டை மீது ஏறுவோம். நாகூர் ஹனீபா மற்றும் எல் ஆர் ஈஸ்வரி பாடல்கள் ரசிப்போம். மாரியம்மன் கோவில் திருவிழாவில் லூட்டி அடிப்போம். இருவரும் தெப்பக்குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ள ஆரம்பித்தோம். ஒரு நாள் இப்ராஹீம் தனியாக நீச்சல் அடிக்கப் போய் நீரில் மூழ்கி இறந்தான். அவனது வயிறு வீங்கிய மீன்கள் கொறித்த உடல் என் மனக்கண்ணில் அப்படியே நிற்கிறது!.

மூன்றாவதாக திண்டுக்கல் மாநகரில் மட்டன் கடை வைத்திருந்த இப்ராஹீம். எந்த நேரமும் தலையில் தொப்பி இருக்கும். நீண்ட பெரிய தாடி. நூறு கிராம் கறி கேட்டாலும் ஒரு கிலோ கறி கேட்டாலும் முகம் சுளிக்காமல் தருவார். நூறு கிராம் கைமா கேட்டால் அரிவாளை எடுத்துக் கொண்டு கறியுடன் ஜக் ஜக் ஜக் ஜக்கென்று விளையாடுவார். அவர் ஒரு மட்டன் இளையராஜா. கறி வாங்கும் போது “கொஞ்சம் குர்தாவையுங்க பாய்!” என்போம்.

ஆட்டின் ஆணுறுப்பு பலூன் மாதிரி நீண்டிருக்கும். அதிலிருந்து சிறிது அரிந்து கறியோடு வைப்பார். அவரின் ஆட்டுக்கறி நுங்கு போல இளசாக இருக்கும். ஆயிரம் வாடிக்கையாளர்களின் பெயர்கள் மனப்பாடம். என்னைப் பார்த்ததும் “ஆடிட்டர் சம்சுதீன் மகனே வா” என்பார். யாரையும் காத்திருக்க விட மாட்டார். எல்லோருக்கும் சமமான முக்கியத்துவம்.

அடுத்து மனைவி சொந்தத்தில் ஒரு இப்ராஹீம். என் மனைவிக்கு சச்சா உறவுமுறை. காலாவின் கணவர். நான் வகிதாவை திருமணம் செய்து கொண்ட போது எங்களது எல்லா புகைப்படங்களிலும் பச்சை சட்டை அணிந்து அவரே நின்றிருந்தார். என் மனைவியின் சொந்தங்களில் சிலர் என்னைக் கண்டு ஒதுங்கிப் போவர். ஆனால், இவர் மட்டும் எப்போதுமே வாஞ்சையுடன் என்னை அணுகுவார்.

பரங்கிப்பேட்டை இப்ராஹீம் என் கல்கண்டு தொடர்கதைகளைப் படித்துவிட்டு எனக்கு வாசகர் ஆனவர். ஒரு தடவை என்னைப் பரங்கிப்பேட்டைக்கு அழைத்து விருந்து வைத்தார். இப்போது அவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். முகநூலில் நாங்கள் நண்பர்கள்.

என்னுடைய சிறுகதைகளை நாவல் ஜங்ஷன், புஸ்தகாவுக்கு ஆன்லைன் வாசிப்புக்கு கொடுக்கும் போது என்னுடைய பல பழைய நாவல்களை காணாமல் தவித்தேன். அப்போது கைகொடுத்தார் உளுந்தூர்பேட்டை இப்ராஹீம். இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை பணம் எதுவும் வாங்கிக் கொள்ளாமல் கொடுத்து உதவினார்.


அடுத்த மிகமிக முக்கியமான இப்ராஹீம். என் அண்ணனை பற்றிச் சொல்லப் போகிறேன். எங்கள் மகன் டாக்டர் நிலா மகனுக்கு ஒன்றரை வருடங்களாகப் பெண் தேடிக் களைத்திருந்தோம். நீண்ட நாள் தொடர்பின்மைக்கு பிறகு எனது ஒன்றுவிட்ட அண்ணன் ஜனாப். எம். சுல்தான் சையது இப்ராஹீம் கைபேசியில் பேசினார். அவரின் பரிந்துரைப்பால் டாக்டர். ர. பஹிமா ஆப்ரினை என் மகனுக்கு மனைவியாக்கினோம். ஓர் அற்புதமான மருமகளை எங்களுக்கு தந்த இப்ராஹீம் அண்ணனை நெஞ்சார நன்றி பாராட்டுகிறேன்.

இஸ்லாம் எப்எம்மிலிருந்து ஒரு இப்ராஹீம் பேசினார். அழகிய முகமன்கள் பரிமாற்றம். “பாய் உங்களின் இஸ்லாமிய நீதிக் கதைகளை வாரம் ஒன்றாய் 100 வாரங்களுக்கு உங்க குரலிலேயே ஆடியோ கதையாய் ஒலிபரப்ப விரும்புகிறேன்”

ஆடியோ கதை தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இப்போது முகநூலில் நட்பு கோரிக்கை வைக்கும் நண்பர்களில் எப்படியும் இரண்டு மூன்று இப்ராஹீம் வந்துவிடுவர். நானும் அவர்களது நட்புக் கோரிக்கையை ஒப்புக் கொள்வேன்.

மனாஸ் கார்டனின் மகன் கட்டிய வீட்டில் குடியேறினோம். எங்களுக்கு எதிர்த்த வீட்டிலிருந்து ஒரு இப்ராஹீம் அறிமுகமானார்.

பேரன்புடன் கூடிய சிறிய உருவம். அவர்கள் வீட்டில் என்ன விசேஷ சமையல் செய்தாலும் அவரது மனைவி எங்களுக்கு கொடுத்துவிடுவார். நாங்களும். இப்ராஹீம் பாயின் பேரன் 12 வயது பகத் எங்கள் இரண்டாரை வயது பேரன் முஹம்மது அர்ஹானுக்கு விளையாட்டுத் தோழன்.

இதோ பேசிக் கொண்டிருக்கும் போதே என் கைபேசி அழைக்கிறது. எடுத்துக் காதில் இணைத்தேன். “கனடாவிலிருந்து ஆபிரகாம் பேசுகிறேன். அதாவது இப்ராஹீம் பேசுகிறேன். உங்களின் அனைத்து இஸ்லாமிய நீதிக்கதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பும் ராயல்டி தருகிறோம்!”

“ஓகே இப்ராஹீம்!”

- இப்போதும் இனிமேலும் என் மீதி ஆயுட்காலத்தில் எனக்கு நன்மை செய்ய வர இருக்கும் இப்ராஹீம்களுக்காக டன் கணக்கில் அன்புடன் காத்திருக்கிறேன்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/islamstories/p33.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License