இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

35. கிப்லாவை நோக்கி


அந்தப் புதிய பள்ளிவாசல் துருக்கியக் கட்டடக்கலை பாதிப்பில் கட்டப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் தரைத்தளத்திலும், முதல் தளத்திலும் சேர்த்து ஆயிரம் பேர் தொழலாம். பள்ளியின் உள்முகப்பில் ஸான்ட்லியர் விளக்கு சரம்சரமாய் தொங்கியது. தரைத் தளத்தில் 50 மின்விசிறிகள். முதல் தளத்தில் ஐம்பது மின்விசிறிகள். தவிர, இரு தளங்களிலும் மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. அழகிய நீர் தடாகம். இமாம், மோதினார், முத்தவல்லி ஆகியோருக்குத் தனித்தனிக் கழிவறை இணைக்கப்பட்ட அறைகள். பள்ளிவாசல் முழுக்க மின் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விடிந்தால் புதிய பள்ளிவாசல் தொழுகைக்காகத் திறத்து விடப்படும்.

தலைமை - பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் கபூர்

இமாம் - எஸ். முகமது யாசின் ஹசனி கிராஅத் செய்கிறார். பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் உலமா பெருமக்கள் ஜமாஅத்தார்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

சர்வ மதத்தினர் வாழ்த்துரை.

செய்தித்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினர்.

முத்தவல்லியும் ஜமாஅத்தாரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். உடன் பிற மத சகோதரர்கள் சிலர்.

அவர்கள் முன் ஒரு கிரான்ட் செரோக்கி எல்ஜீப் சறுக்கி வந்து நின்றது.

அதிலிருந்து இருவர் இறங்கினர். இருவருமே பைஜாமா குர்தா அணிந்திருந்தனர். கால்களில் ஷூ. தலையில் துணி தொப்பி. கச்சிதம் செய்யப்பட்ட தாடி.


“அஸ்ஸலாமு அலைக்கும்!”

“வஅலைக்கும் ஸலாம்!”

“இங்க யார் முத்தவல்லி?”

“நான்தான்!” என நெஞ்சில் கைவைத்தபடி முன் வந்தார் முத்தவல்லி.

“நீங்கள் ரெண்டு பேரும் யாருன்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா?”

“நாங்க ரெண்டு பேரும் கிப்லா சரிபார்ப்பு தன்னார்வ நிறுவனத்திலிருந்து வருகிறோம். என் பெயர் ஹிஜாஸ் அகமது. இவர்பெயர் அப்துல் சுபஹான்”

“இங்கு என்ன விசயமாக வந்திருக்கீங்க?”

“இன்னும் புரியலையா? தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரக்கணக்கான மசூதிகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் கிப்லா சரியான திசையில் அமைந்திருக்கிறதா எனச் சோதிப்பது எங்கள் பணி!”

“பள்ளிவாசல் கட்டும் போதே நீங்கள் வந்திருக்கலாமே… நாளை திறப்பு விழா… இன்றிரவு வந்து சோதித்தால் எப்படி?”

“தகவல் எங்களுக்கு தாமதமாகத்தான் கிடைத்தது”

“என்ன தகவல் உங்களுக்குக் கிடைத்தது?”

“இந்தப் பள்ளிவாசலைக் கட்ட முழு நிதி உதவி செய்தவர் பெரும்பணக்காரர் ஹாஜி. எம். என். நவாசுதீன் சித்திக் எனக் கேள்விப்பட்டோம். அவர் பள்ளிவாசல் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத ஆர்க்கிடெக்ட் வைத்து பள்ளி கட்டுவதாகவும் செய்தி கிடைத்தது. கிடைத்த செய்திகள் தாமதமானவை என்றாலும், அதனை உடனே பரிசோதிப்பது முறைதானே?”


“உங்களுக்குக் கிடைத்த தகவல்கள் தவறு. நான்கு கோடி ரூபாய் செலவில் பள்ளிவாசல் கட்டும் எங்களுக்கு அடிப்படைகள் தெரியாதா?”

“நாங்கள் பள்ளியின் உட்புறம் முழுக்கப் பார்வையிட விரும்புகிறோம்!”

“நாங்கள் வக்பு போர்டுக்கு மட்டுமேக் கட்டுப்பட்டவர்கள்!”

“முஸ்லிம்கள் அனைவரும் உண்மைக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் முத்தவல்லி. நீங்கள் எங்களைத் தடுத்தாலும் தடுக்கா விட்டாலும் நாங்கள் பள்ளியைப் பார்வையிட்டேத் தீருவோம்!”

“சரி, உள்ளே வாருங்கள்!”

இருவரும் கால் ஷுக்களை கழற்றி விட்டு ஒளு செய்து விட்டுப் பள்ளிவாசலுக்குள் நடந்தனர்.

ஒருவர் கிப்லா காம்பஸைக் கையில் எடுத்தார்.

“முத்தவல்லி! கிப்லா திசையைக் கணிக்கப் பிரதானமாக ஐந்து செயலிகள் உள்ளன. முஸ்லிம் ப்ரோ, ஈமான், அதான், முஸ்லிம் அஸிஸ்டென்ட் மற்றும் பிரேயர்டைம் எஸ்ஜி!”

முத்தவல்லி மௌனித்தார்.

“இந்தப் பள்ளி கட்ட நிதி உதவி செய்த ஹாஜி நவாசுதீன் சித்திக் அவர்களை வரச் சொல்லுங்கள்!”

திறன்பேசியில் பேசி வரச்சொன்னார் முத்தவல்லி.

அடுத்தப் பத்து நிமிடங்களில் நவாசுதீன் சித்திக் வந்து சேர்ந்தார். விஷயம் கேள்விப்பட்டதும் தாட்பூட் என்று குதித்தார்.

“ஆண்டி பெத்தது அஞ்சும் குரங்கு; பண்டாரம் பெத்தது பத்தும் குரங்கு!” என்றார்.

“நவாசுதீன் சித்திக் பாய், கிப்லா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?”

முறைத்தார் சித்திக்.

“கிப்லா என்கிற வார்த்தைக்கு திசை என்கிற பொருள் உண்டு. கிப்லா என்பது இஹ்ராமுக்குள் நுழைவதற்கான திசை. துஆவுக்கான திசை. சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் பகுதி மக்காவிலுள்ள புனித மசூதியின் பெயர் அல் மஸ்ஜித் அல்ஹரம். அதன் மையத்திலுள்ள கனசதுரம் தான் கிப்லா. கிப்லா கடவுளின் வீடு. காபாவை நோக்கி தொழுதும் திசையே கிப்லா. காபாவை இப்ராகீம் நபியும் இஸ்மாயீல் நபியும் கட்டினர். துப்பும் போது மலஜலம் கழிக்கும் போது சிறுநீர் கழிக்கும் போது தவிர்க்க வேண்டிய திசை கிப்லா. இறந்தவர்களின் முகத்தைப் புதைக்கும் போது கிப்லா நோக்கித் திருப்ப வேண்டும். காபா 50 அடி உயரமுள்ள 120 சதுர மீட்டர் செவ்வகம். சாம்பல் கல்லினால் ஆனது. கிஸ்வா துணியால் காபா மூடப்பட்டிருக்கும்”

“இதெல்லாம் ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்?”


“காரணம் இருக்கு பாய். முதலில் நபிகள் நாயகம் ஜெருசலேமிலுள்ள அல் அக்ஸா மசூதியின் பைத்துல் முகத்தஸை நோக்கி 16 அல்லது 17 மாதங்கள் தொழுதார். கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கு உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான் இல்லையா? இறைவனிடமிருந்து நபிகள் நாயகத்துக்கு ஒரு தெய்வீகச் செய்தி கிடைத்தது. கிப்லா திசையை காபா நோக்கி அமைத்துக் கொள்ள இறைவன் அனுமதி தந்தான். துல்லியமாக காபா திசை கணித்து தொழுவது ‘அய்ன் அல் காபா’. பொதுவான திசை அமைத்து தொழுவது ‘ஜிஹாத் அல் காபா’. கிபி 623 ஆம் ஆண்டு ரஜப் அல்லது ஷாபான் மாதத்தில் தான் முதன்முதலாக காபாவை கிப்லா திசையாக அறிவித்து தொழுகை நடத்தப்பட்டது”

‘நவாசுதீன் சித்திக் கோபத்தை மென்று விழுங்கினார்.

“கிப்லா திசையைத் துல்லியமாகச் சொல்லுங்கள் பார்ப்போம் பாய்!”

சித்திக் திணறினார்.

“உங்களுக்குத் தெரியாது. மேற்கிலிருந்து வடக்கு திசை 21 டிகிரியில் இருந்து 25 டிகிரி வரை!”

“ஆமாம்… அதற்கென்ன?”

“தீவிர ஷியாக்களான கர்மத்தியர்கள் கி.பி 930ல் மக்காவைச் சூறையாடினர். தவிர, பல்வேறு கிப்லாக்களை கொண்ட வரலாற்று மசூதிகள் உலகில் நிறையவே உள்ளன…”

இருவரும் தொழுமிடத்துக்கு நடந்தனர்.

எதையோத் தேடினர்.

“என்ன தேடுறீங்க?”

“மசூதிகளில் கிப்லாவின் திசையைக் குறிக்கும் மிஹ்ராப் சுவர் இருக்கும். அது எங்கே?”

“அ…அ… அது” திணறினார்.

“சரி… இந்தப் பள்ளிவாசலில் கிப்லாவை எந்தத் திசையில் வைத்திருக்கிறீர்கள் எனப் பார்க்கலாமா?”

“சரி”

“தோழர்களே… இப்பள்ளியில் கிப்லா தலைகீழாய் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆர்க்கிடெக்ட் மட்டுமல்ல ஸ்பான்ஸர், முத்தவல்லி, இமாம் மற்றும் ஜமாத்தார்கள் யாருமேப் பார்க்கவில்லையா? கோடிகோடியாகச் செலவழித்தாலும் தவறான திசையில் தொழ வைப்பது பெரும்பாவம் இல்லையா? கோள முக்கோணவியல் சூத்திரத்தைப் பயன்படுத்தி கிப்லாவைச் சரியாகக் கணக்கிட்டிருக்கலாமே?“


“தவறு நடந்து போச்சு!”

“தவறை மறைத்து நாளை பள்ளிவாசல் திறப்பு விழாவை நடத்தி விடலாமா?”

“திறப்புவிழா நடத்திவிட்டு கிப்லாவை மாற்றி அமைப்போம்!”

“நோ… பள்ளிவாசல் திறப்பு விழாவைச் சில மாதங்கள் தள்ளி வையுங்கள். பள்ளிவாசல் சுவரை இடித்துக் கட்டி கிப்லாவை மாற்றுங்கள். கிப்லா மாற்றத்துக்கேற்ப உள்கட்டமைப்பை தகவமைப்பாக மாற்றுங்கள்”

சுற்றியிருந்த ஜமாத்தார்கள் கோரஸாய் சத்தமிட்டனர். “வந்தவர்கள் சொல்வதுதான் சரியான முடிவு. தவறான கிப்லாதிசையில் ஒரு ரக்அத் தொழுகை கூட நாங்கள் தொழ விரும்பவில்லை. ஒரு தடவைக்கு பல தடவை கிப்லா திசையைச் சரி பார்த்த பிறகே, பள்ளிவாசலை திறங்கள். அதற்கு ஒரு வருடம் ஆனாலும் பரவாயில்லை”

“விமானத்தில் ரயிலில் செல்பவர் கூட கிப்லா ப்ரோ வைத்து கிப்லாவைக் கணித்துத் தொழுகின்றனர். உங்களுக்கென்ன கேடு வந்தது? பணத்திமிர் கண்களை மறைத்து விட்டதா?”

- மறுநாள்

பள்ளிவாசலின் சுவர் இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. உடன் நவாசுதீன் சித்திக்கின் திமிரும் போலி கௌரவமும்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/islamstories/p35.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License