இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

36. அமீன் பாதுஷா


கோவை போத்தனூர். செல்லம்மாள் காலனி, நான்காவது குறுக்கு தெரு.

அந்த வீட்டின் உரிமையாளர் மோகன்தாஸ் தன் மனைவி கோகிலாவுடன் போர்ட்டிக்கோவில் நின்றிருந்தார்.

ஏழெட்டு வேலையாட்கள் கையில் கழிகளுடன் நின்றிருந்தனர்.

“இதோ இங்கதான் பாம்பைப் பார்த்தேன்!”

“இதுக்குள்ள பாம்பு போறதை என் கண்ணால பார்த்தேன்!”

“எட்டு அடி நீளம் இருக்கும்!”

“கடிச்சா ஆளு ஸ்பாட் அவுட்தான்!”

ஓட்டி வந்த பைக்கை நிறுத்தினான் அமீன் பாதுஷா. வயது 43. சிவந்த நிறம். பாரசீக முகம். முகவாயில் குச்சித் தாடி.

மோகன்தாஸ் அமீன் பாதுஷாவிடம் ஓடினார். “நீங்க வன அலுவலர் அனுப்பிய பாம்பு பிடிக்கும் ஆளு தானே?”

“ஆமாம்!”

“எப்படியாவது பாம்பைக் கண்டுபிடிச்சு அடிச்சுக் கொல்லுங்கள்!”

“கொல்ல மாட்டோம். பிடிச்சுக் கொண்டு போய் காட்ல விட்ருவோம்!”

“எப்படியாவது பாம்பை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தினாச் சரி!”

“ பாம்பை மொதல்ல பார்த்தது யாரு?”

“நான்தான்!” ஒரு வேலையாள் முன்வந்தான்.

“எந்த இடத்தில் பாத்த-”

“கார் ஷெட் அருகில்!”


அமீன் பாதுஷா ஓடினான். ஷெட் அருகில் மழை நீர் தேங்கிய பெயிண்ட் வாளிகள் இருந்தன. கவிழ்த்தான்.

கார் ஷெட்டுக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய சாமான்களை நகர்த்தி விலக்கிப் பார்த்தான் அமீன்.

ஏறக்குறைய ஆறு மணி நேரம் அந்தப் பெரிய வீட்டைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுத் தேடினான்.

குளியலறையில் பாம்பைக் கண்டுபிடித்து விட்டான்.

மரணப் போராட்டம் நடத்தி, அந்த எட்டடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்து விட்டான். மேல் தாடையையும் கீழ்தாடையையும் இணைத்து தலையை மென்மையாக நசுக்கிப் பிடித்தான். பாம்பின் வால் அவனின் கைகளைப் பின்னியது.

எல்லோரும் பதறி சிதறி ஒடி வந்தனர்.

“எங்க எங்க பாம்பைக் காட்டுங்க...”

பாம்பை ஒரு பையில் போட்டுக் கட்டினான். அத்துடன் தில்லாது தோட்டத்துப் பக்கம் போய் அலசி ஆராய்ந்தான்.

ஒரு புதர் பொந்தில் பத்துக் குட்டி பாம்புகள் இருந்தன.

அவைகளையும் பைக்குள் இட்டுக் கட்டினான்.

மோகன்தாஸ் கைகூப்பினார். “பெரிய காரியம் பண்ணிட்டிங்க தம்பி!”

கோவையில் காணப்படும் விசப்பாம்பு விசமற்ற பாம்புகள் பற்றியும் பாம்பின் கடிவகை பற்றியும், பாம்பு கடித்தால் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியத்தை பற்றியும் பாம்பின் குணாதிசயம் அவற்றின் வசிப்பிடம் பற்றியும் வகுப்பெடுத்தான் அமீன் பாதுஷா.

“தம்பி, நீங்க முஸ்லிமா உங்க பேர் என்ன-”

“அமீன் பாதுஷா!”

“எங்க இருக்கீங்க தம்பி?”

“உக்கடம் ஜி எம் நகர்ல”

“உங்க மனைவி குழந்தைகள் பற்றி சொல்லுங்க தம்பி?”

“என் மனைவியும் ஒரு முஸ்லிம்தான். காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன்.. காதல் தொடர்கிறது”

“குழந்தைகள்?”

“மூத்தவனுக்கு வயது பத்து. இளையவனுக்கு வயது 5”

“மூத்தவன் என்ன படிக்கிறான்?’

அமீன் பாதுஷா முகத்தில் சோகம் படர்ந்தது “அவன் ஒரு விளையாட்டுப் பிள்ளை. ஒரு நாள் விளையாடும் போது தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தான். மருத்துவமனையில் சேர்த்தோம். தலையில் மேஜர் ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷனுக்குப் பிறகு என் மகன் கோமா நிலையில் ஆழ்ந்தான். கடந்த ஒரு வருடமாக அவனை வீட்டில் வைத்துத்தான் பார்க்கிறோம். மாதம் 50 ஆயிரம் செலவாகிறது. நம்பிக்கையுடன் செலவு செய்கிறோம்!”

“பாம்பு பிடிப்பது உங்கள் முழு நேரப் பணியா?”


“நல்ல சம்பளத்துடன் கூடிய பணியில் இருந்தேன். பாம்புகளின் மீதுள்ள கிரேஸால் பாம்பு பிடிக்கும் பணிக்கு முழுமையாகத் தாவி விட்டேன். பாம்புகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே சமாதானம் பேசுபவனாக நான் நிற்கிறேன். பாம்பு யாரையும் விரும்பிக் கடிப்பதில்லை. அதன் இருப்புக்கு ஆபத்தோ சவாலோ வந்தால் கடிக்கும்!”

“உங்களைக் கடித்திருக்கிறதா?”

“ஓரிருமுறை”

“பாம்பு பிடிக்க சார்ஜ் பண்ணுவீர்களா?”

“ஒரு பாம்பு பிடிக்க 500 ரூபாய் சார்ஜ் பண்ணுவேன்!”

“11 பாம்பு பிடித்திருக்கிறீர்கள். கணக்குப் பார்க்காமல் தருகிறேன். இந்தாருங்கள் ஐம்பதாயிரம் ரூபாய்!”

“ஆயிரம் ரூபாய் போதும்!”

“என் சந்தோஷத்துக்கு வாங்கிக் கொள்ளுங்கள்!”

“எனக்குக் குற்ற உணர்ச்சி பெருகுமே… ஆயிரம் ரூபாய் போதும்… என் நம்பரை whatsapp-யில் குரூப்புகளில் பகிருங்கள். பாம்பை பாத்த பத்து நிமிடத்தில் என்னை அழையுங்கள். அது நள்ளிரவு நேரம் என்றாலும் ஓடோடி வருவேன்!”

அமீன் பாதுஷா பாம்புகள் கட்டப்பட்ட பையுடன் புறப்பட்டான்.

- பதினைந்து நாட்கள் கழித்து,

ஒரு குளிர்பதன மூட்டப்பட்ட பனிரெண்டு இருக்கை டெம்போ ட்ராவலர் வீட்டு வாசலில் நின்றது

வேனில் இருந்து ஒரு பாதிரியாரும் இரு கன்னியாஸ்திரீகளும் இறங்கினர்.

கோமாவில் இருக்கும் மகனை சுத்தப்படுத்தி மலஜலம் அகற்றி உணவு ஊட்டி படுக்க வைத்துக் கொண்டு இருந்தான் அமீன் பாதுஷா

“கர்த்தருக்கு ஸ்தோத்திரம் - நாங்க உள்ளே வரலாமா?”

“வாருங்கள்!”

அமீன் பாதுஷாவுக்கு எதிரே அமர்ந்தனர்.

“நான் பாதர் இக்னேஷியல் இவங்க பேட்ரிஷியா. இவங்க ஆன்ட்ரியா நாங்க ஊட்டி செயின்ட் தாமஸ் காப்பகத்திலிருந்து வருகிறோம். எங்கள் காப்பகத்தில் முதியோரை, அனாதை குழந்தைகளை நீண்டநாள் நோயில் வீழ்ந்து கிடக்கும் நோயாளிகளைப் பராமரிக்கிறோம்!”

“டொனேஷன் வாங்க வந்தீங்களா, நான் ஒரு ஏழை என்ஜிஓ அதிகபட்சம் என்னால் ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிக்க முடியும்!”

“நாங்க மோகன்தாஸ் சொல்லி வந்திருக்கிறோம்!”

“எந்த மோகன்தாஸ்?”

“பதினைந்து நாட்களுக்கு முன் அவர்கள் வீட்டில் ஒரு தாய் பாம்பையும் பத்து பாம்புகுட்டிகளையும் பிடித்தீர்களே ஞாபகமிருக்கா? அந்த மோகன்தாஸ்தான் எங்களை அனுப்பினார்!”

“என்ன விஷயம்?”

“பதட்டப்படாதீர்கள்… உங்க மகனின் கோமாநிலையை பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்?”

“மருத்துவம் தொடர்ந்தால் ஐந்து வருடத்திலும் எழுவான், 50 வருடத்திலும் எழுவான் அல்லது எழாமலே அமைதியாக மரணிப்பான் என கூறினார்”

“கருணைக்கொலை யோசிக்கலாமே?”

“நோயாளிக்கு மருத்துவம் செய்யும் கட்டாயத்திலிருந்து தப்பிக்க ஏதேனும் தந்திர வழியில் கருணைக் கொலையை மேற்கொள்வது ஹராம். இது உயிர்க்கொலைக்குச் சமம்.”

“உங்கள் மகனின் மெடிக்கல் ரிக்கார்ட்ஸ் அனைத்தையும் கொடுங்கள்”

கொடுத்தான் அமீன் பாதுஷா.

“மிஸ்டர் அமீன் பாதுஷா உங்கள் மகனை எங்களிடம் ஒப்படையுங்கள். எப்போது எழுந்து வந்து அம்மா அப்பா என உங்களை அழைக்கிறானோ அதுவரை அவனுக்கு உயர் ரக மருத்துவ சிகிச்சை அளிப்போம். நீங்கள் விரும்பிய போதெல்லாம் உங்கள் மகனை வந்து பார்க்கலாம்“


“நோ. எங்களுக்கு இறைவன் அளவு கடந்த மகிழ்ச்சியை கொடுக்கும் போது, ‘இந்த மகிழ்ச்சியை எங்களால தாங்கிக்க முடியல’ ன்னு சொல்லி யாருக்காவது கைமாற்றி விட்டோமா? இறைவன் தனக்கு பிரியமானவர்களுக்கு அதிக சோதனைகளைத் தருகிறான். அந்தச் சோதனைகளைத் தாக்குப் பிடித்து இறைவனின் பிரியத்தை தக்க வைத்துக் கொள்வதுதானே முறை? நாங்கள் தான் எங்கள் மகனை பெற்றோம். அவனைப் பாதுகாப்பது எங்களின் பொறுப்பு. பொறுப்பைத் தட்டிக் கழிக்கலாமா? எழுந்து வர 100 வருடமானாலும் காத்திருப்போம். மரித்தால் எங்கள் மடியில் மரிக்கட்டும் எதை இறைவன் செய்தாலும் சாந்தமாக ஏற்றுக்கொள்வோம். நீங்கள் புறப்படலாம்”

“பெரும்பாலான மதங்களைச் சார்ந்தோர் சந்தோஷ தருணங்களில் இறைவனை கருவேப்பிலையாகவும், துக்கத் தருணங்களில் எட்டிக்காயாகவும் பாவிக்கின்றனர். முஸ்லிம்களில் உங்களைப் போன்ற சிலர் முழுமையாக இறைவனைச் சார்ந்து இருக்கிறீர்கள். சந்தோஷத்தில் நிதானம் இழப்பதில்லை துக்கத்தில் வாய்விட்டு தூற்றுவதில்லை. இதுதான் உங்களைப் போன்ற முஸ்லிம்களின் ப்ளஸ் பாய்ண்ட்டும், மைனஸ் பாயிண்ட்டும் கூட. உங்கள் மகன் வெகு சீக்கிரமே கோமாவிலிருந்து எழ பரம பிதாவை வேண்டுகிறோம். அல்லேலூயா”

கைபேசி அழைக்க, பாம்பு பிடிக்கப் புறப்பட்டான் அமீன் பாதுஷா.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/islamstories/p36.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License