இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

37. எனக்கு சிகிச்சை தேவையில்லை!


முகமது அலி ஜின்னாவை அவரது இரண்டு மகன்கள் குண்டுக்கட்டாய்த் தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் வந்தனர். ஜின்னாவுக்கு வயது 62. பழைமைவாத முஸ்லிம். சமயம் சொன்னதையும் கடைப்பிடிப்பார், சமயம் சொல்லாததையும் சொன்னதாகச் சொல்லிக் கடைப்பிடிப்பார்.

“டாக்டர் வணக்கம். இவர் எங்கள் தந்தை. இவருக்குக் கடந்த ஒரு வருடமாகவேக் கடுமையான மலச்சிக்கல். அவ்வப்போது ஆசனவாயில் இரத்தம் வழியும். ஒரு வருடத்தில் 6 கிலோ எடை குறைந்திருக்கிறார். வயிற்றில் அசௌகரியம் உணர்கிறார்!”

‘விடுங்க என்னை… நான் வீட்டுக்கு போகனும்…. எனக்கு வைத்தியம் தேவையில்லை. நோயைக் கொடுப்பவன் இறைவனே, நோயைக் குணப்படுத்துவதும் இறைவனே!’’

“பேசாமல் இருங்கத்தா…”

முதலில் மருத்துவர், ஜின்னாவைக் குப்புறப் படுக்க வைத்து கையுறை கைகளால் குதப்பகுதியை ஆராய்ந்தார். பின் 50 நிமிடங்கள் கோலோனோஸ்கோபி வைத்துப் பெருங்குடலை நுணுக்கமாகப் பார்த்தார். பின் கோலான் பயாப்ஸி எடுத்தார்.

பயாப்ஸி பரிசோதனைக் குறிப்பைப் பார்த்த மருத்துவர் இரு மகன்களிடம் “உங்கள் தந்தைக்கு ஆரம்ப நிலைப் பெருங்குடல் புற்றுநோய். தகுந்த மருத்துவம் செய்தால் குணப்படுத்தி விடலாம்!”

“போய்யா டாக்டர். உன் பையை நிரப்பிக்க எனக்கு வைத்தியம் சொல்றியா?”


அறைக்குள் மருத்துவ மனநல ஆலோசகர் ஜீனத் நுழைந்தாள்.

“இவரை என் அறைக்குக் கூட்டிட்டு வாங்க!”

ஜீனத்தின் அறையின் இருக்கையில் தந்தையை அமர வைத்தனர் மகன்கள்.

“அஸ்ஸலாமு அலைக்கும் அத்தா!”

“வஅலைக்கும் ஸலாம்…”

“உங்களுக்கு என்ன பிரச்சனை? ஒரு நோய்க்கு மருத்துவம் பார்க்கிறது, இஸ்லாத்துக்கு எதிரானதுன்னு நம்புகிறீர்களா?”

“ஆமாம்!”

“நான் ஒரு இஸ்லாமியப் பெண். மருத்துவத்துடன் மார்க்கத்தையும் படித்திருக்கிறேன். குர்ஆன் மருத்துவ அறிவியலை ஆதரிக்கிறது. குர்ஆனில் நோயைக் குணப்படுத்துதல் தொடர்பான ஆறு வசனங்கள் உள்ளன. சூரா தஹா மற்றும் சூரா இன்ஷிரா. இரண்டுமே குர்ஆனிய மருத்துவத்தில் உள்ளடக்கம். இஸ்லாமிய மருத்துவம் என்பது அறிவியல், தத்துவம், ஆன்மிகம் மூன்றும் தனித்துவமாக இணைந்த சங்கமம்…”

‘ம்ப்ச்!”

“ஒருவருக்கு நோய் ஏற்படுகிறது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகிறது. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு சிகிச்சை உண்டு. அந்த நோய்க்கு முறையான சிகிச்சை தந்தால் அது அல்லாஹ்வின் விருப்பத்தால் குணமாகும். ருக்யா, தெய்வீக பரிகாரங்கள், இஸ்லாமிய பிரார்த்தனைகள், சூத்திரம், நோய்க்கு நாம் சாப்பிடும் மருந்து அனைத்தும் அல்லாஹ்வின் விதியை மாற்றுமா? அவை அனைத்துமே அல்லாஹ்வின் விதியில் ஒரு பாதி. மருந்தைத் தேவைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவர் ஆலோசனை அதி முக்கியம்…”

“நீ சொல்வதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நடந்த, நடக்கும், நடக்கப் போகும் ஒவ்வொரு விஷயமும் அல்லாஹ்வால் தீர்மானிக்கப்படுகிறது. நோய் நமக்கு மனத்தாழ்மையை கற்றுத் தருகிறது. திமிராக இருக்கும் நாம் நோய்வாய்ப்பட்ட பின் நம் வாழ்க்கைமுறையை மறுபரிசீலினை செய்கிறோம். ஒவ்வொரு வலியும் ஒவ்வொரு சோர்வும் ஒவ்வொரு ஆரோக்கியமற்ற நேரமும் உண்மையில் பாவ சுத்திகரிப்பு செய்முறை!”


“இன்னும் சிலபடி இறங்கி வாருங்கள் அத்தா. இஸ்லாத்தைப் பொறுத்தவரை மருத்துவம் ஒரு மரியாதைக்குரிய தொழில். ‘ மனிதரின் நோய்களுக்கு மருத்துவரின் கைகளில் மருந்தை அனுப்பி வைத்தியம் பார்க்கிறேன்’ என்கிறான் அல்லாஹ். மேலும் எந்த மருத்துவர் ஒரு நோயாளியை காப்பாற்றுகிறாரோ அந்த மருத்துவர் மனித குலத்தை முழுவதுமாக காப்பாற்றியவராகிறார் (அல்குர்ஆன் 5:32) மருத்துவச் சிகிச்சையை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது. சிகிச்சையைத் தேடுவது உங்கள் பின்வாங்க முடியாத ஒரு கடமையாகும். முதுமையைத் தவிர எல்லா நோய்களுக்கும் சிகிச்சை உண்டு. ஹலாலான மருந்துகள் கொண்ட சிகிச்சை முறை சாலச் சிறந்தது!”

“என்னை மூளைச் சலவை செய்கிறாய் அம்மா!”

“தேன் மனித குலத்துக்கு தேவையான அருமருந்து. அத்திப்பழம், திராட்சை, பேரீச்சை, மாதுளம் பழங்கள் நான்குமே மருத்துவப் பழங்கள். வெங்காயம் பூண்டு போன்றவை புற்று நோய்க்கு எதிரானவை என்கிறது இஸ்லாம்!”

“வெறும் தேனைத் தொடர்ந்து குடித்தால் என் பெருங்குடல் புற்றுநோய் குணமாகுமா?”

“இந்த அறியாமை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இல்லை. முஸ்லிம் சமுதாயம் மருத்துவத்தில் உலகத்திற்கே வழிகாட்டியது. கிபி 872 இல் கெய்ரோவின் துலும் மருத்துவமனை நூலகத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள் இருந்தன. பாக்தாத், முஸ்தான், சிரியா, கோர்டோபா, திரிபோலியிலும் பல்லாயிரக்கணக்கான மருத்துவ புத்தகங்கள் இருந்தன. துனிசியாவில் கிபி 830ல் கொய்ரவான் மருத்துவமனை நிறுவப்பட்டது. கிபி 981 இல் பாக்தாத்தில் அல் அகுடி மருத்துவமனை திறக்கப்பட்டது!”

“இதற்கும் நான் மருத்துவத்துக்கு உடன் படாமல் முரண்டு பண்ணுவதற்கும் என்ன சம்பந்தம்?”

“மேற்கத்திய உலகத்துக்கு மருத்துவ அறிவை வாரி வழங்கிய இஸ்லாமிய சமுதாயம் பழைமைவாதம் பேசி இருளில் சிக்கிக் கொண்டது”

“பழைமைவாதம் பெரிய தெய்வக் குற்றமா? பாரம்பரியத்தை பேணுவது தவறாகுமா?”

“மேலும் கேளுங்கள் அத்தா. ஜுனடி ஷாபூர் பாக்தாத் நகரங்களில் மருத்துவர் அறிவு வளர்க்கப்பட்டது. மருந்தியல் நச்சியல் நுணுக்கங்கள் கற்றுக் கொள்ளப்பட்டன. நோயை கண்டறியும் திறன் மேம்பட்டது. மய்யபாரிகின் மருத்துவமனையில் அறிவியல் சங்கம் நிறுவப்பட்டது!”

முகமது அலி ஜின்னா இறுகி மௌனித்தார்.


“ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை என்கிற இருளை விட்டு வெளி வரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் இலக்கியம், முஸ்லிம்களின் விஞ்ஞானம் மற்றும் மருத்துவமே அடிப்படை. இந்த அறிவுதானத்திற்கு ஐரோப்பா பெருமளவுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது. மருத்துவ முன்னோடி முஸ்லிம்களின் பட்டியலை உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள்...

1. அல்ராஸி(ரோஜஸ்)கிபி844-946–மருத்துவம்:பாக்டீரியா துறையின் முன்னோடி.

2. இப்னு சீனா (அவி சென்னா) கிபி 980- 1037– மருத்துவம்: அல் கானூன் புத்தகம்.

3. அல் ஜஹ்ராவி கிபி 936- கிதாப் அல் தஸ்ரிப் புத்தகத்தை எழுதிய அறுவை சிகிட்சை நிபுணர் பல் மருத்துவரும் கூட.

4. இப்னு ஸுஹ்ர் - அறுவை சிகிச்சை.

5. கல்கசாந்தி - தூக்கநோய் காரணம் கண்டறிந்தவர்.

6. முஹம்மது சகரிய்யா யாஸீன் – மருத்துவம்.

7. அலி இப்னு அப்பான் (20 பாகங்கள் கொண்ட மருத்துவ நூல் எழுதியவர்)

8. இபின் பஜ்ஜா – கிதாப் அன் நபாத்

9. இபின் அல் வாபித் - ரசவாத கலையில் தேர்ச்சி.

10. இபின் அல் தஹபி - நீர் புத்தகம்.

11. அல் கஹாப்

12. இல்ம் அல் அகாமீர்

13. யுஹன்னா பின் மசவாய்

14. அல் பால்கி - உளவியல்

15. அல் மவ்சிலி - கண் புரை மருத்துவர்.

16. இபின் அல் ஹைதம் - நவீன ஒளியியல் தந்தை

17. இபின் அல் நபீஸ் – சிரியா.

18. இபின் ருஷத் அல் குல் லியத் பி அல் திப் -லத்தீன் மொழியில் கோவிஜெட். பெரியம்மை ஒரு மனிதரை ஒரு தடவை தான் தாக்கும் என்கிற புரட்சி கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்!”

இப்ப்டி நிறைய இசுலாமிய மருத்துவர்களைச் சொல்லிக் கொண்டேப் போகலாம்!

“ இந்தப் பட்டியல் எல்லாம் எனக்கு எதற்கு?”

“இப்படித்தான் இந்திய முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடுவதாக நினைத்து, ஆங்கில மொழியை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ளக்கூடாது என பத்வா கொடுத்தனர். விளைவு இந்திய முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பதில் பின்தங்கி போயினர்”

“என்னதான் முடிவாக சொல்ல வருகிறாய் அம்மா?”


“உங்களுக்கு வந்திருக்கும் பெருங்குடல் புற்று நோய்க்கு நீங்கள் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் சீக்கிரமே இறந்து, தற்கொலை செய்வதற்கு சமமான பாவத்தைச் சுமந்து நிற்பீர்கள்… மருத்துவத்தை முழு நம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள். முழுமையாக நலமடைந்து விடுவீர்கள். மருத்துவத்துக்கு இடையே உங்கள் மார்க்க கடமைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். முஸ்லிம்கள் மருத்துவம் துணை மருத்துவம் விண்வெளி பௌதிகம் கால்நடை மருத்துவம் உயிரியல் தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் முத்திரை படைக்கட்டும். நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பதை சாத்வீக முறையில் உலக மக்களுக்குக் காட்டுவோம்…!”

சூரியனித்தார் முகமது அலி ஜின்னா.

“இன்ஷா அல்லாஹ்… மருத்துவரின் ஆலோசனையை முழுமையாகப் பின்பற்றுவேன்…. உனக்குத் திருமணம் ஆகி விட்டதா?”

“இல்லை!”

“என் இளைய மகன் அரசுக் காப்பீட்டு நிறுவனத்தில் உதவி மேலாளராக இருக்கிறான். அவனுக்கு உன்னைப் பெண் கேட்டு விரைவில் உன் வீட்டுக்கு வருகிறோம்... மாஷா அல்லாஹ்!” 

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/islamstories/p37.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License