இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

38. முன்மாதிரி


வீட்டிற்குள் பிரவேசித்தான் அபுல்கலாம் ஆசாத். வயது இருபது. உயரம் 180 செமீ. இளங்கலை பௌதிகம் மூன்றாம் ஆண்டு படிக்கிறான். வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் அவனுக்குத் தேடல் அதிகம். குறிப்பாக, ஆன்மிகத் தேடல்.

அவனுடைய கேள்விகளில் சில மாதிரிகள் இதோ -

உயிர்களைப் படைப்பதற்கு முன் இறைவன் ஒரு அந்தகார இருளில் இருந்தான் என்கிறீர்கள். எது அவனை உயிர்களைப் படைக்க தூண்டியது?

இஸ்லாம் தோன்றி 1400 ஆண்டுகள் ஆகின்றன. இஸ்லாமுக்கு முன் நன்மை செய்த மாற்றுமத அல்லது மதமே இல்லாத மனிதர்கள் சொர்க்கம் போவார்களா, நரகம் போவார்களா?

சொர்க்கமும் நரகமும் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு தயாராக உள்ளனவா அல்லது மறுமை நாளின் போதுதான் நிர்மாணிக்கப்படுமா?

நபிகள் நாயகத்திற்கு இறை செய்திகள் 23 வருட இடைவெளியில் அவ்வப்போது வந்தன. சொல்ல வேண்டிய இறைசெய்திகளை எல்லாம் ஒன்றாக இணைத்து எழுத்து வடிவில் இறைவன் ஜிப்ரயீல் வானவர் தலைவர் மூலம் கொடுத்து விட்டிருக்கலாமே?

மறுமை நாளில் கேள்வி கணக்கு எதற்கு? ஒரு மனிதனின் உள்ளும் புறமும் இறைவனுக்கு நன்கு தெரியுமே? நேரடியாக மனிதரை சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்புவதை விட்டுவிட்டு கேள்வி கணக்கில் நேர விரயம் எதற்கு?

ஏழ்மையை வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என கூறுவதை விட்டு ஏழை எளியவருக்கு ஜக்காத் ஸதகாத் கொடுக்க வேண்டும் என இஸ்லாம் ஏன் கூறுகிறது?

இறைவனின் படைப்பில் வறுமை ஒரு அம்சமா?

இஸ்லாம் பூமி தட்டை எனக் கூறுகிறதா?


நபிகள் நாயகம் 23 வருடங்களில் இறைவனை தெரிந்து கொண்டதை விட இறைவன் பல்லாயிரம் மடங்கு மகத்தானவன் இல்லையா? நபிகள் நாயகத்திற்கும் தெரியாத இறைவனின் தன்மைகள் கோடி இருக்குமே?

சைத்தான் இறைவனுக்கு எதிரானவன் எனக் கூறுகிறோம். ‘மனிதரை நீ கெட்டது பக்கம் இழு. நான் நன்மையின் பக்கம் இழுக்கிறேன். மனிதன் எப்பக்கம் போகிறான் என பார்ப்போம். இது நான் உனக்கு கொடுக்கும் அஸைன்மென்ட். மறுமை நாள் வரை செய்’ என இறைவன் சைத்தானை பணித்திருப்பானோ என்னவோ?

ஏதேனும் பரிகாரமாக நபிகள் நாயகம் அடிமைகளை விடுதலை பண்ண சொன்னாரே தவிர ஏன் அடிமைத்தனத்தை ஆரம்பத்திலேயே முற்றிலும் தடை செய்யவில்லை?

நாள்தோறும் ஆயிரம் கேள்விகள் கேட்பான். அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல், அவனது தந்தை மீரா மைதீன் திணறுவார். பல சமயம் மகனின் கேள்விகளைப் பள்ளிவாசல் இமாமின் பக்கம் திருப்பி விடுவார்.

கேள்விகள் கேட்கிறானே தவிர, இஸ்லாம் அபுல் கலாம் ஆசாத்தின் உயிர் மூச்சு.

தஸ்பீஹ் மணி மாலையை எடுத்து உருட்டிக்கொண்டிருந்த மீரான் மைதீனை மகனது “அஸ்ஸலாமு அலைக்கும்!” இடைமறித்தது.

“வஅலைக்கும் ஸலாம்!”

“அத்தா!”

“என்னப்பா?”

“நான் உங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசலாமா?”

“தாராளமா!”

தந்தையின் காலடியில் அமர்ந்தான் ஆசாத்.

“ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ வாழ்க்கையில் ஒரு அழகிய முன்மாதிரி தேவையா?”

“முன் மாதிரிகள் இருந்தால் தப்பில்லை!”

“ஒரு மனிதனுக்கு எத்தனை முன் மாதிரிகள் இருக்கலாம்?”

“உலக வாழ்க்கைக்கு ஒன்று! ஆன்மிகத் தேட்டத்துக்கு ஒன்று!”

“இயற்பியல் படிப்பிற்கான என் முன் மாதிரி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். எனது ஆன்மிக தேட்டத்துக்கு பொருத்தமான முன் மாதிரி இதுவரை கிடைக்கவில்லை!”

“ஓ...!”

“உங்களை முன் மாதிரியாகக் கொள்ள ஆசைபட்டேன்!”

“வேண்டாமப்பா. நன்மைக்கும் தீமைக்கும் இடையே அல்லாடும் எறும்பு நான்!”

“ஜமால்?”

“ஜமால் யார்?”


“பள்ளிவாசலில் அறிமுகமானவர். அவருக்கு வயது முப்பது இருக்கும். பல் மருத்துவத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். ஐந்து வேளை தொழுகையாளி. முப்பது நோன்பும், ஆறு நோன்பும் நோற்பவர். குர்ஆனை அரபியில் ஓதத் தெரிந்தவர். அளவாகச் சாப்பிடுவார். அந்நியப் பெண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார். புதிதாய் மலர்ந்த பூ போல சுய சுத்தம் பேணுவார். பிற சமய சகோதரர்களுடன் கண்ணியமாகப் பழகுவார். மனைவி மகனுடன் நீதமாய் வாழ்கிறார்.. மார்க்கம் தொடர்பாக எது கேட்டாலும் அவருக்குத் தெரிந்த பதில் கூறுவார்!”

“ஜமாலை எத்தனை வருடங்களாகப் பள்ளியில் பார்க்கிறாய்?”

“கடந்த பத்து வருடங்களாக...!”

“அதற்கு முன்?”

“ஜமால் ஒரு நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறியவர். திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டு இருந்திருக்கிறார். பெரியார் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்…!”

“மீண்டும் ஜமால் நாத்திகனாக வாய்ப்பு உண்டுதானே?”

“வாய்ப்பில்லை என நம்புகிறேன். ஆனால் மனித வாழ்வில் எதுவும் நடக்கலாம்!”

“ஜமாலை எங்கெங்கு சந்தித்து இருக்கிறாய்?”

“பெரும்பாலும் பள்ளிவாசலில் அபூர்வமாய் அவரது மருத்துவமனையில்...!”

“ஜமால் தன் பெற்றோருக்கு ஒரு முகம் காட்டலாம். மனைவி குழந்தையிடம் ஒரு முகம் காட்டலாம். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் ஒரு முகம் காட்டலாம். பொது இடங்களில் ஒரு முகம் காட்டலாம். பள்ளி வாசலில் ஒரு முகம் காட்டலாம்!”

மௌனித்தான் ஆசாத்.

“ஜமால் 30 வயது இளைஞன். அவருக்கு கவனம் சிதறும் வாய்ப்புகள் அதிகம். அடுத்த 30 வருடங்களில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்!”

“நம்ம பள்ளிவாசல் இமாமை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளவா?”

“இமாம்களுக்கும் தடுமாற்றம் உண்டு மகனே!”

“பள்ளிவாசலுக்கு பக்ரூதீன் என்கிற எண்பது வயது பெரியவர் வருகிறார். அவரை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளவா?”

மீரான்மைதீன் பகபகவென சிரித்தார்.

“எதுக்கு சிரிக்கிறீங்க அத்தா?”

“யு ஆர் ஸோ டெஸ்பரேட் டு சூஸ் எ ரோல்மாடல்!”

“யெஸ்... அப்கோர்ஸ்!”

“அஷ்ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி (ரஹ்) கூறியதைப் பார்ப்போம்!”

“என்ன சொன்னார்?”


“ஒருவர் உயிர் வாழும் போதே அவரை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில், அவரது வாழ்வின் முடிவில் என்னவாகும் என்று உங்களுக்குத் தெரியாது என்கிறார்!”

“ஓ...!”

“மார்க்கத்தைப் பேசிக் கொண்டிருப்பவர்களைப் பின்பற்றாதீர்கள்.

மார்க்கத்தைப் பின்பற்றுகின்றவர்களை பின்பற்றுங்கள் எனக் கூறுகிறார்!”

‘ஊப்..!”

“மார்க்கத்தின் அடிப்படையில் வாழ்ந்து முடிந்த ஓர் உன்னத மனிதரை மாதிரியாகக் கொள்ளுங்கள். காரணம் காலையில் நம்பிக்கையாளராக இருக்கும் பிரசாரகர் கூட, மாலையில் நிராகரிப்பாளராக மாற வாய்ப்புண்டு எனவும் மொழிகிறார்!”

“அத்தா! பேசாம நபிகள் நாயகத்தை முன் மாதிரியாக வரித்துக் கொள்ளவா?”

“நாம் அந்த மாமனிதரின் கால் தூசி பெற மாட்டோம்!”

“உமறு இப்னு அல்-கத்தாப்- நபிகள் நாயகத்தின் மூத்த தோழர் மற்றும் மாமனார் இரண்டாவது கலீபா. அவரை முன் மாதிரியாகக் கொள்ளவா?”

“வேண்டாம். நான் உனக்கு ஒரு தெளிவான அறிவுரை கூறுகிறேன். மார்க்கத்தின் அடிப்படைகள் முழுக்க உனக்குத் தெரியும். இதுதான் சிலபஸ். ஆன்மிகம் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி கேள்வித்தாள் கொடுத்து தேர்வு வைக்கிறது. அந்தத் தேர்வினை நீ தான் எழுத வேண்டும். அதற்கான மதிப்பெண்களைத் தர தகுதியானவன் இறைவன் ஒருவனே. அழகிய முன்மாதிரிகளைத் தேடி அலையாதே. முன்மாதிரிகளைத் தேடி அலையும் நேரத்தை ஆன்மிகத் தேடலுக்குச் செலவழி. மனித நேயத்துடன் எப்போதும் இரு. தவறுகளுக்கு நெஞ்சைத் தொட்டு மன்னிப்பு கேள். உதவிகளுக்கு உளமார நன்றி சொல். எதிலும் மிதமாய் இரு. தேவைகளில் தன்னிறைவு கொள். கேள்விகளைக் குறைத்து நம்பிக்கையில் மூழ்கு. சொர்க்கத்தின் விருப்பம் கருதாது நல்லவனாக இரு. வாழும் வாழ்க்கையில் பரிபூரணம் தொடு… எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்!”

“யா அல்லாஹ்!” நெட்டுயிர்த்தான் அபுல் கலாம் ஆசாத். ஆசாத்தின் மூக்கின் நுனியில் முழு நிலா பூத்தது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/islamstories/p38.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License