இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

46. மஷ்வரா


பெண் குழந்தைகள் மதரஸா.

உஸ்தாது பீவி ஆமீனா முஹம்மது தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். மார்க்க ஞானம் முந்திரிக் கொட்டையாய்த் துருத்திய முந்திரிப்பழம் அவர். அவருக்கு வயது 52. உயரம் 152 செமீ. துருக்கியப் பெண்களின் முகஜாடை யோகத்தில் நிலைத்திருக்கும் ஆன்மிகக் கண்கள்.

மதரஸா பெண் குழந்தைகள் ஷிபானா, ஜஸிலா பானு, அதீபா, பலீக்கா அமர்ந்து கித்தாப்பை படித்துக் கொண்டிருந்தனர்.

உஸ்தாது பீவியைப் பார்க்க ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும் ஒஸ்தாத்பீ!”

“வஅலைக்கும் ஸலாம். என்ன விஷயம்?”

“நம்ம நகருக்கு பக்கத்ல கபர்ஸ்தான் அமைக்க மாநகராட்சி தீர்மானம் பண்ணி அறிவிச்சிருக்காங்க. பல வருடங்களுக்கு முன் நம் புல்லுக்காட்டு பகுதி குப்பை கொட்டப்படும் இடமாக இருந்திருக்கிறது. கழிவுநீரில் ஊறி திளைத்திருக்கிறது. இப்போது கபர்ஸ்தான் வந்தால் மீண்டும் நம் நகர்களின் சுகாதாரநிலை படுமோசமடையும். கபர்ஸ்தானுக்கு பதிலாக நூலகமோ அல்லது வேறு எதாவது ஒரு கல்விக்கூடமோ கட்டலாம். கபர்ஸ்தானுக்கு எதிர்ப்பாக ஒரு கடிதத்தை நீங்கள் தயார் செய்யவேண்டும். மதரஸா குழந்தைகளின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்!”


“மதரஸா சார்ந்தவர்களுடன் மஷ்வரா செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன். ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்!”

“ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!” வந்த பெண் புறப்பட்டு போனார்.

அவர் போனவுடன் மதரஸா பெண்குழந்தைகள் உஸ்தாது பீவியை சூழ்ந்து கொண்டன.

“ஒஸ்தாத் பீ எங்களுக்கு ஒரு சந்தேகம்!”

“என்ன?”

“மசுரா செய்வதாக கூறுனீர்களே? மசுரா மைசூர்பாக் போன்றதொரு இனிப்பா?”

உஸ்தாது பீவி கலகலவென சிரித்தார்.

“அட என் பட்டுரோஸ்களா? மஷ்வரா என்கிற வார்த்தையை நம் மக்கள் பேச்சு தமிழில் ‘மஷுரா’ என்பர். ‘மஷ்வரா’ என்றால் கலந்தாலோசித்தல் என பொருள்!”

“ஓஹோ!”

“உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் பூக்குட்டிகளா... ஆலோசனை தேடுபவன் வருத்தமடைவதில்லை. இஸ்திகாரா செய்பவன் நஷ்டம் அடைவதில்லை. பொருளை நடுநிலையாய் செலவு செய்பவன் ஏழை ஆவதில்லை!”

“ஒஸ்தாத் பீவியின் பஞ்ச் டயலாக்!”


“ஒரு பிரச்சனையில் முடிவெடுக்க இஸ்லாமில் இரு வழிமுறைகள் உள்ளன. ஒன்னு- இஸ்திகாரா. இஸ்திகாரா என்றால் இறைவழிகாட்டலை தேடும் தொழுகை. இரண்டு- இஸ்திஷாரா அல்லது மஷுவரா...”’

“இஸ்திகாரா, இஸ்திஷாரா நல்ல எதுகை மோனையுடன் இரு விஷயங்கள்!”

“யாருமே தன்னடிச்ச மூப்பு தனிச்ச ராஜ்ஜியம் என இருக்கக் கூடாது உலகத்தின் 810கோடி மக்களில் நான் மட்டுமே புத்திசாலி மற்ற அனைவரும் முட்டாள்கள் என தலைகீழ் ஆட்டம் யாரும் ஆடக்கூடாது. என் தந்தையார் அடிக்கடி கூறுவார்- ஒரு இடத்துக்கு வழி கேட்கிறாய் என்றால் குறைந்தது மூவரிடம் தனித்தனியாக வழி கேள். சரியான போகுமிடம் சேர்ந்து விடுவாய்...”

“நான் எல்லாம் தேன்மிட்டாய் வாங்க குறைஞ்சது மூணு இடம் அலைவேன்!”

முறைத்தார்.

“ஷிவானா! நீ ஒரு தின்னிப்பாப்பா!”

“நீங்க தொடர்ந்து சொல்லுங்க ஓதரம்மா!”

“மஷுவராவில் மூன்று முக்கியமான விஷயங்கள் செயல்படும். ஒன்று- நப்ஸ். இரண்டு-புத்தி. மூன்று –ஷரியா. ஒரு கருத்தை வெளிபடுத்தும் போது தனிப்பட்ட உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நப்ஸ் தனக்குள்ளேயே சுயநல உணர்வுகளை உருவாக்கும். புத்தி நப்ஸை கட்டுபடுத்தும். புத்தி வழி தவறினால் ஷரியா தலையில் குட்டி அடக்கும். ஒருவர் தன் உள்உணர்வுகளை கட்டுப்படுத்துவது உண்மையான சீர்திருத்தம்!”

“இன்று மதரஸாவுக்கும் எதாவது சாக்குபோக்கு கூறிப் போகாமல் இருப்போம் என கூறி இளிக்கும் எங்கள் நப்ஸ். சோம்பலாய் அமர்ந்திருப்பதற்குப் பதிலாக மதரஸாவுக்கு போனால்தான் என்ன எனக் கூறும் எங்கள் புத்தி. ஒரே இடத்தில் அமர்ந்து கித்தாப்பு ஓத வேண்டுமா என புத்தி தடுமாற்றத்தை மார்க்க கல்வியின் முக்கியத்துவம் கூறி மதரஸாவுக்கு அனுப்பி வைக்கிறது ஷரியா!”

“மஷுரா என்கிற ஆலோசனை நல்லது என அல்லாஹ் கூறுகிறானா?”

“ஆம். அவன் நபிகள் நாயகத்துக்கே கூறியிருக்கிறான். ‘சகலகாரியங்களிலும் ஸகாபிகளுடன் கலந்தாலோசனை செய்வீர்களாக!’ என அல்லாஹ் நபிகள் நாயகத்துக்கு கட்டளை இடுகிறான்!”

“மஷுராவுக்கு என பிரத்தியேகமாக துஆ உண்டா?”

“உண்டு. ‘அல்லாஹ்! எங்கள் செயல்களில் உன் வழிகாட்டுதலால் எங்களை ஊக்குவிக்கவும் எங்கள் ஆன்மாவின் தீமைகளிலிருந்தும் எங்கள் தீயசெயல்களுக்கான தண்டனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறோம்.’ இதுவே அந்த துஆ!”

“மஷுரா பற்றி மேலும் கூறுங்க உஸ்தாத்பீ!”

“மஷ்வரா என்கிற ஆலோசனையை நம்பிக்கைக்குரியவர்களிடம் துறை சார்ந்தவர்களிடம் கேட்கவேண்டும். காய்ச்சலுக்கு மருந்து இன்ஜினியரிடம் கேட்பாயா? கட்டட வரைபடம் வரைய மருத்துவரைப் பணிப்பாயா?”

“ஒஸ்தாத்பீ! பலீக்கா 16ம் வாய்ப்பாடு ஒப்பிக்கிறதை பற்றி ஸ்கூல் ஆயாகிட்ட அய்டியாக் கேட்டா”

பலீக்கா அதீபாவை முறைத்தாள்.


“இஸ்லாமிய ஷரீஅத்துக்கு உட்பட்ட பர்ல், வாஜிப், ஹராம் முதலியவற்றில் ஆலோசித்து செயல்பட கூடாது. மார்க்கம் சொன்னதை வேதவாக்காக நிறைவேற்ற வேண்டும்!”

“நீங்க சொல்வது லட்சம் சதவீதம் சரி!”

“ஆலோசனை கேட்பவருக்கு தவறான ஆலோசனை கூறுவது பெரும் மோசடி. மஷுவராவில் வயது முக்கியமில்லை. நீங்க நான்கு வாண்டுகள் கூட எனக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனை சில விஷயங்களில் தரலாம்!”

“சொல்லிட்டா போச்சு... இனி செங்கல் நிறபுடவை கட்டிக்கிட்டு மதரஸா வராதிங்க உஸ்தாத்பீ. மயில் நீல நிறப் புடவைதான் உங்களுக்கு செமலுக்கு!”

“மஷுவராவில் இறுதி உரிமை முதலில் ஆலோசனை கேட்பவருக்கேச் சொந்தமானது. குழந்தையின் பால்குடியை மறக்கடிக்கக் கூட மஷுவரா தேவை. கனவு கண்டு மகனை குர்பானி கொடுக்க முடிவு செய்யும் முன் இப்ராஹீம் நபியவர்கள் தன் மகனிடம் ஆலோசனை கேட்கிறார். இஸ்லாமிய ஆட்சித் தேர்வு முறை மஷுவராவின் அடிப்படையிலானது. அன்னை ஆயிஷா ரலி அவர்கள் மீது நயவஞ்சகர்கள் இட்டுகட்டிய போது நபிகள் நாயகம் தன்னை விட வயதில் குறைந்த ஹழ்ரத் அலி ரலியிடமும் உஸாமா ரலியிடமும் ஆலோசனை பெற்றார்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையில் அதிருப்தி அடைந்த சஹாபிகளை நேர்வழிபடுத்த நபிகள் நாயகம் உம்மு ஸலாமா ரலியிடம் ஆலோசனை பெற்றார்கள். ஒன்று தெரியுமா? மனைவியிடம் கணவன் ஆலோசனை பெறுவது சுன்னத். உங்கள் அத்தாக்கள் உங்கள் அம்மாக்களின் ஆலோசனைகளை பெறுகிறார்களா?”

“எப்போதாவது ஒஸ்தாத்பீ”

“நான்கு பேர் சேர்ந்து ஒரு ஆலோசனையில் ஈடுபட்டால் நால்வரில் ஒருவரை அமீராக நியமித்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வை விசுவாசித்து நபிகள் நாயகத்தை பின்பற்றும் உம்மத்துகள் மஷுவரா செய்தால் ஒற்றுமையாக இருப்பார்கள் ஹிதாயா பெறுவார்கள். மஷ்வராவில் ஒவ்வொருவரும் தூய இதயத்துடன் அமர்ந்து அனைவருக்கும் சரியான வழிகாட்டல் காட்ட அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். நேர்மையுடன் அமர்ந்தால் தவறு சரி செய்யப்படும்.

மஷ்வராவில் கருத்து முரண்பாடோ கருத்து திணிப்போ டாமினேஷனோ கூடாது. தேன் கூட்டில் இருந்து தேன் எடுப்பதே மஷ்வரா. மஷ்வராவில் வளவளா கொளகொளாவென்று நீண்ட நேரம் ஒருவர் பேசக் கூடாது. எதிராளி கேட்கும் வரை கருத்து சொல்லக்கூடாது. ஒருவர் பேசும்போது முந்திரிக்கொட்டைத் தனமாய் குறுக்கேப் பேசக்கூடாது. மஷ்வராவில் கோபம் விரக்தி கூடவே கூடாது. மஷ்வராவில் நேர்மறை நோக்கம் அதிமுக்கியம். பிறர் ஆலோசனையைக் கேலி செய்து சிரிக்கக் கூடாது. ஆலோசனை முடிந்து காரியம் தவறாய்ப் போய் விட்டால் யார் மீதும் பழி சுமத்தாதீர்கள். தினமும் நூறு தடவை அஸ்தக்ஃபிருல்லாஹ் (நான் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருகிறேன்) சொல்லுங்க!”


“அஸ்தக்ஃபிருல்லாஹ்!” சிறுமிகள் முணுமுணுத்தனர்.

“சரியான ஆலோசனை அமிர்தம் என்றால் தவறான ஆலோசனை ஆலகாலவிஷம். ஆலோசனைகளை மனத்தராசில் இட்டு எடைபோட்டு தெளிவடைய வேண்டும். ஆலோசனைக்குரியவர்கள் பெற்றோர், ஆசிரியர், மதக்குருமார்கள் மற்றும் நல்ல நண்பர்கள். பொதுவாக எந்தப் பிரச்சனை என்றாலும் அதில் நம் கண்ணோட்டத்தின் தரம் உயர வேண்டும் நான் என்கிற அகம்பாவம் அதளபாதாளத்தில் தலைகுப்புறத் தள்ளிவிடும்!”

“கபர்ஸ்தான் விஷயத்தில் நாங்கள் மஷ்வரா பண்ணலாமா?”

“ஓ!”

“ஏற்கனவே ஒரு கபர்ஸ்தான் இருக்கையில் புதுகபர்ஸ்தான் எதற்கு?

கபர்ஸ்தான் அமைக்கத் திட்டமிட்ட இடத்தில் இலவச நீட்கோச்சிங் சென்டர் அமைக்கலாம். அது எங்கள் அக்காமார்களுக்கு பேருதவியாக இருக்கும்!” என்றார்கள் சிறுமிகள் ஒரேக் குரலில்.

“மாஷா அல்லாஹ். இதே கருத்துதான் எனக்கும் தொடர்ந்து மஷ்வரா செய்வோம்!” என்றார் ஆமீனா முஹம்மது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/islamstories/p46.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License