இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

48. நானே சிறந்த அத்தா!


“தெற்கு உக்கடத்தின் நம்பர் ஒன் அத்தா நான்தானே?” மனைவியை வினவினார் சிராஜுல்ஹஸன்.

ஹஸனுக்கு வயது 65 முதன்மை மருந்தாளுநராக பணிபுரிந்து 2018ல் பணி ஓய்வு பெற்றவர். ஹஸனின் மனைவி பெயர் ஜமீலா. ஹஸன்-ஜமீலா தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தது மகள். கணவர் குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசிக்கிறாள். மகள் முதுகலை மின்னணுப் பொறியியல் மற்றும் முதுகலை மேலாண்மை நிர்வாகம் படித்தவள். இரண்டாவது மகன். அவனின் பெயர் இப்னு பத்ர். ஸ்பீச் தெரபிஸ்ட்டாக கிளினிக் வைத்திருக்கிறான். அவனது மனைவியும் ஒரு ஸ்பீச் தெரபிஸ்ட்தான். இருவருக்கும் மூன்றே கால் வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

“என்ன சொன்னீங்க… காதுல விழல!” காதில் கை வைத்துக் கேலியாக வினவினாள் ஜமீலா.

“ஐ எம் தி பெஸ்ட் அத்தா இன் சௌத் உக்கடம். இல்லையா?”

வாயை மூடிக் கொண்டு சீமான் போலச் சிரித்தாள் ஜமீலா.

“அப்படியா? அப்டின்னா யாராவது சொல்லி உங்களுக்கு அவார்டு கொடுத்திருக்காங்களா?”

“யாரும் சொல்லனுமா என்ன? என் மனசுக்குத் தெரியாதா என்ன?”

“டெல்லில இருக்ற உங்க மகன்கிட்டச் சொல்லிப் பாருங்க. அவன் ஒத்துக்கிரானான்னு…”

“நேத்தைக்கிப் போன்ல சொன்னேன்… தற்பெருமை பீத்திக்காதே.. போனை வைத்தான்னுட்டான்!”

“பெஸ்ட் அத்தான்னு சொல்லிக்கிற மாதிரி பிள்ளைகளுக்கு என்ன செஞ்சீங்க?”


“மூத்தவளை நாலு டிகிரி படிக்க வச்சேன். ஒரு இமாமின் மகனை மருமகனாக்கினேன். பேத்தியை நாலு வருஷம் நம்மளோடு வச்சு கவனிச்சிக்கிட்டோம். மகள் கொடுத்த காசில மகளுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுத்தோம்…”

“சரி!”

“இப்னுபத்ர் ஒலியியல் மற்றும் பேச்சு மொழி நோயியலில் இளங்கலை பட்டமும், முதுகலை குழந்தை மனநல மருத்துவமும் படிக்க வச்சோம்…”

“ஆமா அதுக்கென்ன? மத்த அத்தாமார்கள் தங்கள் மகன்களைப் படிக்க வைக்காம மாடு மேய்க்கவா அனுப்புராங்க?”

“ஒன்றரை வருஷம் தமிழ்நாடு முழுக்க அலைஞ்சு அம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பார்த்து ஒரு சிறப்பான பெண்ணை இப்னுபத்ருக்கு மணம் முடித்து வைத்தோம்!”

“சரி!”

“பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட வெக்கத்தை விட்டுக் கேட்டு ஆடியோ விஷுவல் எய்ட்ஸ் உடன் மகனுக்கு ஒரு கிளினிக் அமைச்சு தர வைச்சம்!”

“கிளினிக் வச்சதுல புல் கிரிடிட் சம்பந்தி வீட்டாருக்குதான்!”

“கிளினிக் திறப்பு விழாவை மிகப்பெரிய விஐபி வைத்து நடத்திக் கொடுத்தேன். கிளினிக் திறப்புச் செய்தியை எல்லாத் தினசரிகளிலும் பிரசுரிக்க ஏற்பாடு செஞ்சேன்!”

“அப்றம்?”

“பணி ஓய்வுக்கு பிறகு தனியாக இருந்த நாம், மகனின் குடும்பத்துக்குப் பாதுகாவலாக நிற்க அவன் குடும்பத்துடன் வந்து உறைந்தோம்!”

“இது பெரிய தியாகமா?”

“பேரன் பிறக்கிறப்ப பேரனுக்குப் பெயர் வைக்கும் உரிமையை மருமகளுக்கு விட்டுக் கொடுத்தேன்!”


“உங்களுக்கு உரிமை இல்லாத விஷயத்தை எப்படி விட்டுக் குடுப்பீங்க?”

“கோவையில் மகன் வாடகை வீட்டில் இருப்பது நெஞ்சுக்கு பொறுக்கவில்லை. சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பிளாட் நமக்குச் சொந்தமாய் உள்ளது. அதனை மகளுக்குக் கொடுத்திடுவோம். மகனுக்குக் கோவையில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டிக் கொடுத்து விடுவோம் என ஐடியா பண்ணினேன்!”

“நீங்க பணியில் இருக்கும் போது சிக்கனமாக இருந்திருந்தா இப்ப நம்மகிட்ட நாலு வீடு சொந்தமாய் இருக்கும்!”

“கையிலிருந்த சேமிப்பு பணத்தை வைத்து ஒண்ணேமுக்கால் சென்ட்டில் இதிரீஸ் நகரில் ஒரு மனை வாங்கினோம். மனை வாங்க சம்பந்தி வீட்டாரும் உதவினர்!”

“ஆமாம்!”

“இருபத்தியைந்து லட்சம் ரூபாய் வங்கிக் கடன் வாங்கி மகனுக்கு வீடு கட்டிக் கொடுத்திட்டோம். வீட்டுக் கடனுக்கு மாதம் 42,000 ரூபாய் கட்டுகிறோம். இன்னும் ஆறே வருஷத்தில் வீட்டுக் கடனைக் கட்டி முடித்திடுவோம்!”

“இடுப்பு வேட்டியையும் கழற்றிக் கொடுத்திட்டு ரோட்ல நிக்ற மாதிரில பேசுறீங்க. உங்க பென்ஷன் 52,000 ரூபாய். உங்க கவுன்ஸலிங் வருமானம் மாதம் 15 ஆயிரம் ரூபாய். சென்னை வீட்டு வாடகை 7000 ஈஎம்ஐ கட்டியது போக உங்களுக்கு 32,000ரூபாய் மிஞ்சுது. உங்களுக்கும் எனக்கும் மாதமருந்து செலவு மூவாயிரம் ரூபாய். வாரம் அஞ்சு சினிமா போறீங்க. ஊர்ல உள்ள எல்லா ஒடிடிக்கும் பணம் கட்டி உலக சினிமா பூராவும் பாக்றீங்க. வருஷம் ஆறு சுற்றுலாக்கள் போறீங்க. உங்க சந்தோஷத்ல ஒரு சிறு சதவீதமாவது இழந்திருக்கீங்களா? வீட்டு வாடகை தராம மகன் வீட்டின் இருமாடி அறைகளை பயன்படுத்தி கொள்றீங்க. கரன்ட் செலவு சமையல் செலவு எல்லாம் நமக்குச் சேத்து மகன் பார்த்துக்கிரான்!”

“மகனுக்கு போஸ்டல் இன்ஷுரன்ஸ் கட்றேன். மகனின் பிஹெச்டி முதல் வருட கல்வி கட்டணம் ஒரு லட்சத்தை கட்டினேன். பேரக் குழந்தைகள் மூன்றின் பேரிலும் போஸ்டல் சிறுசேமிப்பு கணக்கு தொடங்கி பணம் கட்டி வருகிறேன். பேரனை ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் கவனிக்கிறோம் மொத்தத்தில் மகன் குடும்பத்துக்கு காவல் தேவதைகளாக ஊழியம் செய்கிறோம்!”

“தாய்ப்பால் இவ்வளவு கொடுத்தேன் என்று எந்த தாயாவது குழந்தைகளிடம் சொல்லிக் காட்டுவாளா?”

“பள்ளிவாசல் சந்தா நகர் சந்தா கட்ரோம். நகருக்கு தலைவராக இருந்து நகருக்கான அடிப்படை வசதிகளைப் போராடி நம் புதுவீட்டுக்கும் பெற்றுத் தந்திருக்கிறேன்!”

“அவ்வளவுதானா? இன்னும் இருக்கா?”

“தட்ஸ் ஆல் யுவர்ஆனர்!”

“மிஸ்டர் கணவர் உங்களை விடச் சிறப்பான அத்தாமார்களில் ஒரு சாம்பிளை உங்களுக்கு அருகிலேயேக் காட்றேன்!”

“ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணவா?”

“இல்ல வெகுவெகு அருகில்தான்!”

எங்களது வீட்டிலிருந்து நூறடித் தொலைவில் ஒரு வீடு எழும்பிக் கொண்டிருந்தது. தலையில் செங்கல் சுமந்து கட்டப்படும் வீட்டுக்குள் நடந்தார் அவர்.

அவர் பார்க்க பழைய வில்லன் நடிகர் ஆர்.எஸ். மனோகர் மாதிரி இருந்தார். திமிசுகட்டை உடல்வாகு. கைவைத்த அழுக்கு பனியன். ரிக்ஷாக்காரன் எம்ஜிஆர் போல கால் பகுதி பேன்ட்டை சுருட்டி விட்டிருந்தார். முகத்தில் மருதாணி பூசிய தாடி. வயது 60 இருக்கும்.

“நீங்கள் பார்க்கும் நபரின் பெயர் அப்துல் ரகீப்தீன்!”

“இவர்தான் இந்த வீட்டு கொத்தனாரா?”

“இவர்தான் இந்த வீட்டு கொத்தனார் மேஸ்திரி மற்றும் சிவில் என்ஜினியர். டி ராஜேந்தர் மாதிரி ஆல் இன் ஆல் அழகுராஜா!”

“ஓஹோ!”


“இவர் ஒப்பணக்கார வீதி நடைமேடையில் மாற்றுச் சாவி செய்து தரும் நடமாடும் கடை வைத்திருக்கிறார். அதில் வந்த வருமானத்தை வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சிறுசுசிறுகச் சேர்த்து இந்த மனையை வாங்கினார். இந்த மனைக்கு தானே ஒரு ப்ளூ பிரிண்ட் தயாரித்தார். கடந்த எட்டு மாதங்களாக இந்த வீட்டைத் தனியாளாக கட்டிக் கொண்டிருக்கிறார். காலையில் எட்டு மணிக்கு வேலையைத் தொடங்குவார். இரவு எட்டு மணிக்கு வேலையை முடிப்பார். சில நாட்களில் இவர் மனைவி வந்து சித்தாள் வேலை செய்து கொடுப்பார். 12 மணி நேர வீட்டு வேலையில் இரண்டு வடை ஒரு டீதான் இவர் உணவு. கடந்த எட்டு மாதங்களில் யாரின் முகத்தையும் ஏறெடுத்து பார்க்க மாட்டார். ஜின் மாதிரி பகபகன்னு வேலை பார்ப்பார்!”

“வாவ்!”

“நாம் சிவில் இன்ஜினியர் வச்சு 25 லட்சத்தில் கட்டின வீட்டை இவர் வெறும் 12 லட்சத்தில் தரமாகக் கட்டுகிறார். போன வாரம் பத்தடி உயரத்திலிருந்து விழுந்து காயமானார். மருத்துவம் பார்த்துவிட்டு பணியைத் தொடர்கிறார்!”

“இவரின் வீடு இப்ப எங்கிருக்கு?”

“மனைவியும் கணவரும் ஒரு குடிசையில் வாழ்கிறார்கள்!”

“அப்டின்னா இந்த வீட்டை யாருக்காக கட்டுராங்க?”

“மகனுக்காகக் கட்டுகிறார். வீட்டைக் கட்டி முடித்து பால் காய்ச்சி விட்டு வீட்டுச் சாவியை மகனிடம் கொடுத்துவிட்டு இவரும் இவரது மனைவியும் குடிசை வீட்டுக்கேத் திரும்பி விடுவார்களாம்!”

“மகன் என்ன செய்கிறான்?”

“தள்ளு வண்டி பழக்கடை வைத்திருக்கிறான் புதிதாகத் திருமணமானவன்!”

“இப்படிப்பட்ட தியாகத்தை மகன் கேட்டானா?”


“கேட்காமல் செய்வதுதான் தியாகம் இஸ்லாமியர்களில் மட்டுமல்ல பிறமதச் சகோதரர்களின் பல தந்தைமார்கள் பெற்ற மகன் மகளுக்காகப் பல தியாகங்களைச் செய்கின்றனர். தேடிப் போனால் நமக்கு ஆயிரம் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. நான்தான் பெஸ்ட் அத்தா என்கிற இறுமாப்பு எதற்கு? நம் குழந்தைகளுக்கு நம்மால் ஆன வசதி வாய்ப்புகளைச் செய்ய இறைவன் நம்மை அனுமதித்தான் என்கிற சுய திருப்தி கொள்வோம். இன்று நீங்கள் உங்கள் மகனுக்குச் செய்றதை நாளை உங்கள் மகன், அவனது மகனுக்கு செய்வான்… எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்!” என்றாள் ஜமீலா.

சிராஜுல்ஹஸன் “மகனுக்கு சிறு துரும்பை கிள்ளிப்போட்ட லட்சக்கணக்கான அத்தாக்களில் நானும் ஒருவன்! கர்வம் ஒழித்தேன்!” இறைவனின் தாள் பணிந்தார்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/islamstories/p48.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License