இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

8.க(டை)டன் கணக்கு


இர்பானா தஸ்னீம் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர். கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தார் பர்ஹான் முகமது. வயது 52. பருமனான உடல்வாகு. ஒரு டன் சோகத்தைக் கடித்து விழுங்கி தொண்டையில் வைத்திருப்பது போல ஒரு விசனமுகம். தாடியை மருதாணி டை அடித்திருந்தார். வெள்ளை வேட்டியும் வெள்ளை முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார்.

அப்துல் அஜீஸ் வாகிதி கடைக்குள் நடந்தார். பர்ஹான் முந்திக்கொண்டு “அஸ்ஸலாமு அலைக்கும்!”

“வஅலைக்கும் ஸலாம்!” அப்துல் அஜீஸ் வாகிதி நகரப்பள்ளியில் இமாமாக இருப்பவர். அனைவரும் அவரைச் செல்லமாக ‘ஜீன்ஸ் இமாம்’ என அழைப்பர். தொழுகை இல்லாத நேரங்களில் பல வண்ணமயமான ஆடைகள் அணிந்து நகர்வலம் வருவார். சென்ட் பிரியர். வீட்டில் ஆறு பூனைகள் வளர்க்கிறார். நகைச்சுவையாய் பேசுவதில் சமர்த்தர்.

“என்ன சகோ... உம்முனாம் மூஞ்சியாக உட்கார்ந்திருக்கிறீர்கள்... என்ன விஷயம்?”

கல்லாப்பெட்டியை, கடை சிப்பந்தியைக் கவனிக்க சொல்லிவிட்டுத் தனி அறைக்கு ஒதுங்கினர்.


“எனக்கு வாழவேப் பிடிக்கல ஹஜ்ரத்!”

“வாழை பிடிக்கலைன்னா, தென்னை வச்சுக்கங்க சகோ...”

“ஜோக் அடிக்க இதுவல்ல நேரம்… நான் இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறேன்… கடந்த ஐந்து வருடங்களில் கடையில் எண்பது லட்சம் ரூபாய் நஷ்டம். வியாபாரம் எட்டிக்காயாய்க் கசக்கிறது. சில சமயங்களில் தற்கொலை எண்ணம் மனதிற்குள் தலை விரித்து ஆடுகிறது”

“ஒரு மூமீனுக்கு தற்கொலை தடுக்கப்பட்ட விஷயம்…”

“இந்த வருட டிசம்பரோட கடை நஷ்டம் ஒரு கோடி ஆகிவிடும்… வீட்டை விற்று நகைகளை விற்றுப் பணம் சேர்த்தாலும் அம்பது லட்சம் சேராது. மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு ரோட்டோர குடிசைக்குப் போய்விடலாமா என யோசிக்கிறேன்!”

“சகோ.. அவசரப்படாதிங்க. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு அல்லாஹ் வச்சிருக்கான்… நான் எம்பிஏ படிச்ச ஆலிம். நான் உங்களுக்கு உதவ முடியும்!”

“எப்படி?”

“உங்க டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரின் அனைத்து விஷயங்களையும் அடுத்த ஒரு வாரம் அலசி ஆராயப் போகிறேன். எட்டாவது நாள், உங்களிடம் ஒரு ரிப்போர்ட் கொடுப்பேன். அந்த ரிப்போர்ட்டை அப்படியே நீங்கள் அமுல்படுத்தினால் நஷ்டம் காணாமல் போய் லாபம் துளிர்த்து விடும்!”

“நடக்குமா?”

“இரண்டாயிரம் நாட்களில் 90லட்சம் நஷ்டம். அதாவது ஒரு நாளைக்கு 4500ரூபாய் நஷ்டம். மிக எளிதாகச் சரிப்படுத்திவிடலாம்!”

“என் நஷ்டத்தை சரிப்படுத்திக் கொடுக்கும் உங்களுக்குச் சம்பளம்?”

“சரிப்படுத்திய பின் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்!”

“மகிழ்ச்சி!”

“எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்!” ஆலாபித்தார் வாகிதி.

மறுநாள் காலை… தஸ்னீம் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் திறப்பதற்கு முன் போய் நின்று விட்டார் வாகிதி. கடை ஊழியர்களைத் தனித்தனியாக நேர்காணல் செய்தார். அவர்களது குடும்பப் பின்னணியைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டார். ஸ்டோரின் குடோவுனுக்கு போனார். காலடியில் ஒரு எலி புகுந்தோடியது.

கடையில் எத்தனை மின்விளக்குகள் உள்ளன என எண்ணினார். நாற்பது இருந்தன. டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் திறக்கும் நேரம், மூடும் நேரம் கேட்டறிந்தார்.

அக்கம்பக்கத்தில் என்னென்ன கடைகள் உள்ளன என நோட்டமிட்டார்.

200அடி தூரத்தில் கீர்த்தி டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்!

பெயர்ப்பலகை இல்லாத மூன்று மளிகை கடைகள்! இரு பெட்டிக்கடைகள்!

அனைத்துக் கடைகளிலும் விலைப்பட்டியல் கேட்டுச் சேகரித்தார்.

“சகோ! உங்க கடைல உறவினர்கள், நண்பர்கள் வந்து ப்ரீயா பொருட்கள் எடுத்துப் போவார்களா?”

“போவார்கள்!”

“ப்ரீயாக பொருட்கள் எடுக்க வராதீர்கள் எனச் சொல்ல வேண்டியதுதானே?”

“வாய்திறந்து சொல்ல சங்கோஜப்படுகிறேன்!”

“உங்க கடைப் பொருட்களை மொத்தமாக எங்கே வாங்குகிறீர்கள்?”

“மொத்த வியாபாரிகளிடமிருந்து...”

“எக்ஸ்பயரி பொருட்களைத் திருப்பி வாங்கிப்பாங்களா?”

“இல்ல...”

“உங்க கடைல டோர் டெலிவரி உண்டா?”

“இல்லை!”

“ஏன்?”

“அதைப் பொறுப்பா செய்ய ஆளில்லை!”

“உங்கள் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் ஊழியர்கள் வரும் வாடிக்கையாளரிடம் எப்படிப் பேசுகிறார்கள் என்பதனைக் கவனித்து இருக்கிறீர்களா?”

“இல்லை!”

“ஏன்?”

“அது பெரிய விஷயமில்லை என நினைக்கிறேன்!”

“அதுதான் மிகப்பெரிய விஷயம். கனிவான அனுசரனையான இதம். பதமான பேச்சு ஆயிரம் வித்தைகளைப் புரியும்…”

“இம்!”

“நீங்கள் முஸ்லிம் என்பதால் முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளரிடம் சற்று ரப் அண்ட் டப்பாக உங்கள் ஊழியர்கள் நடந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா?”

“வாய்ப்பிருக்கிறது!”

“வியாபாரத்தில் மத உணர்வு குறுக்கிடக்கூடாது!”

“சரி!”

“தினசரிக் கணக்கைச் சரி பார்த்த பின்புதானே வீட்டுக்குப் போவீர்கள்?”

“அதற்கு ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரம் ஆகுமே... வாரம் ஒரு முறை கணக்கைச் சரி பார்ப்போம்!”

“ஹிமாலயன் தவறு. மூன்று மணி நேரமானாலும், தினசரி கணக்குப் பார்த்தேத் தீர வேண்டும்!”

தலையாட்டினார் பர்ஹான் முகமது.

தினம் காலையில் இரண்டு மணி நேரம். மாலையில் இரண்டு மணி நேரம். ஒரு வாரத்தில் மொத்தமாக 28மணி நேரம் வாகிதி கடைப் பிரச்சனைகளைத் தணிக்கை செய்தார்.

- எட்டாவது நாள்...

தேநீர் அருந்தியபடி அமர்ந்திருந்தார் வாகிதி.

அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

“பர்ஹான் முகமது இங்கு நான் ஒரு மருத்துவன். நீங்கள் ஒரு நோயாளி. உங்களுக்கு வந்திருக்கும் நோயைக் கண்டறிந்து பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்திருக்கிறேன்…” ஒரு சீட்டை நீட்டினார்.


அதில் -

1. உங்கள் கோடவுனில் எலித்தொல்லை அதிகம் இருக்கிறது. ரோடன்ட் கன்ட்ரோலை தொடர்பி எலி பிரச்சனையை நிரந்தரமாக ஒழியுங்கள்.

2. உங்கள் கடை மின்விளக்குகள் மின்சாரத்தைச் சாப்பிடுகின்றன. எல்.ஈ.டி பல்புகளுக்கு மாறுங்கள்.

3. புத்திசாலித்தனமான தரமான பொருள் கொள்முதல் தேவை. எக்ஸ்பயரி டேட் முடிந்த பொருட்களை ஒரு நாளும் விற்காதீர்கள்.

4. திருட்டு, சுயசுத்தமின்மை, மதவெறி, சோம்பேறி ஊழியர்களைக் கழித்துக் கட்டுங்கள். ஊழியர்களுக்குச் சீருடை வழங்குங்கள்.

5. மற்ற கடைகளை விட ஒரு ரூபாய் விலை குறைவாய் பொருட்ளை விற்றுப் பாருங்கள். லாபத்தில் சிறுதுளி குறையும். ஆனால் வியாபரம் செழிப்பமாகும்.

6. தினசரிக் கணக்கு பார்த்தல் கட்டாயம்.

7. உறவினர் நண்பர் தலையீடு தவிர்க்கவும்.

8. கடையை முன்னதாகத் திறந்து பின்னதாக மூடுங்கள்.

9. எல்லா வாடிக்கையாளரையும் சமமாக நடத்துங்கள்.

10. ஒவ்வொரு தொழுகையின் போதும், ஓய்வின் போதும், கீழ்க்கண்ட துஆவை ஓதுங்கள். ‘அல்லாஹும் மக்ஃபீனீ பி ஹலாலிக்க அன் ஹராமிக்க, வஅஃக்னினி பி ஃபள்விக்க அம்மன் ஸிலாக்க!’ (யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதைக் கொண்டும் எனக்குப் போதுமாக்குவாயாக. மேலும், உனது கிருபை கொண்டு உன்னைத் தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக!)

- ஆறு மாதங்களுக்கு பின்…

கடைக் கணக்கை நீட்டினார் பர்ஹான் முகமது. ஒரு நாளைக்கு பனிரெண்டாயிரம் லாபம் வீதம் 180 நாளைக்கு இருபத்தியோரு லட்சத்து அறுபதாயிரம் லாபம் வந்திருந்தது.

“சகோ.. இன்னும் இரண்டரை வருடங்களில் உங்கள் கடன் முழுக்க அடைந்து விடும்...”

“இமாம்.. மலையளவு கடன் அடைந்தது உங்கள் சீர்திருத்தங்களாலேயா? அல்லது நான் ஓதுன துஆவாலயா?”


“ஒரு தேநீர் தயாரிக்க பால், தேயிலை, ஜீனி, இஞ்சி தேவை. ஆனால், அனைத்தையும் நெருப்பால் சூடுபடுத்தினால்தான் சுவையான தேநீர் கிடைக்கும். உங்கள் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான நெருப்பு உங்க துஆ மட்டுமே…”

“உங்கள் சம்பளம்?”

“பள்ளிவாசலின் இரண்டாம் மாடி கட்ட ஆகும் மொத்த சிமென்ட் செலவை ஸ்பான்ஸர் செய்து விடுங்கள் சகோ!”

கபர்ஸ்தானில் ஸ்கிப்பிங் கயிறு ஆட ஆரம்பித்தார் அப்துல் அஜீஸ் வாகிதி.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/islamstories/p8.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License