இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


30. அதிர வைத்த கொலை!

ஊட்டி பி1 போலீஸ் நிலையத்தின் தொலைபேசி பலமாக அலறியது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ரிசீவரை எடுத்து காதுக்கு கொடுத்தார்.

அவர் பேசுவதற்கு முன்பாகவே எதிர்முனையில் பேசிய நபர் பதற்றத்துடன் பேசினார்.

“சார்... போலீஸ் ஸ்டேஷன்தானே?”

“ஆமா... நீங்க யாரு? ஏன் இவ்ளோ பதற்றமா பேசுறீங்க?”

“சார்... நான் ஊட்டி லேக் ரோட்டில் உள்ள ..... லாட்ஜ் மேனேஜர் ஆறுமுகம் பேசுறேன். எங்க லாட்ஜ்க்கு இரண்டு நாளைக்கு முன்னாடி புதுமண ஜோடிங்க ஹனிமூன் கொண்டாட வந்திருந்தாங்க. இன்னிக்குக் காலையில இருந்தே அவங்க ரூம் ரொம்ப நேரமாக பூட்டி இருந்துச்சு. அவங்க ரெண்டு பேரும் வெளியே எங்கேயும் போகலங்கறது எங்களுக்கு தெரியும்ங்கறதுனால, சேஃப்டி கீயை யூஸ் பண்ணி இப்பதான், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரூமை திறந்து பார்த்தோம். அங்கே தங்கியிருந்த புதுமண ஜோடிங்க ரெண்டு பேரையும் யாரோ கொலை செஞ்சி இருக்காங்க. உடனே வாங்க...” என்று ஆறுமுகம் சொல்ல, அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த லாட்ஜ் முன்பு வேகமாக வந்து இறங்கியது போலீஸ் படை.



குணசீலனும் அமுதாவும் தங்கியிருந்த 207ஆம் எண் கொண்ட அறைக்கு வந்து சேர்ந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கொலை செய்யப்பட்டு கிடந்த குணசீலனையும், அமுதாவையும் கூர்ந்து பார்த்தார். குணசீலனின் நெஞ்சில் கத்திக்குத்து காயம் பலமாகத் தெரிந்தது. அவனது நெஞ்சைப் பதம் பார்த்த கத்தி, பெட் ஓரமாக சரிந்து விழுந்து கிடந்த அமுதாவின் கையில் இருந்தது.

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்குக் குழப்பம். கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் இருவரும் ஒருவரையொருவர் குத்திக் கொண்டார்களா என்று சந்தேகித்தவர், கொலைக்கான தடயம் ஏதாவது இருக்கிறதா என்று தேடினார். குணசீலன் பயன்படுத்திய லேப்-டாப் இரண்டு பாகமாக உடைந்து கிடந்தது. அமுதாவின் ஹேண்ட் பேக்கும் தூக்கி வீசியெறியப்பட்டு கிடந்தது. அமுதாவின் ஹேண்ட் பேக்கில் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை.

சுவர் ஓரமாக ஒருக்கழித்த நிலையில் கிடந்த அமுதாவின் உடலை, தன் கையில் இருந்த லத்தியால் மல்லாக்காக திருப்பிப் போட்டபோதுதான் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இறந்ததாக நினைத்த அமுதாவின் வெள்ளைக் கழுத்தில் நாடித் துடிப்பு இருப்பது தெரிந்தது.

“யோவ் ஏட்டையா... இந்தப் பொண்ணு இன்னும் சாகல. உடனே ஆம்புலன்ஸை வரச் சொல்லுங்க. இந்தப் பொண்ணை காப்பாத்தினாதான், குற்றவாளி யாருங்கறதை கண்டுபிடிக்க முடியும்” என்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பலமாக சொல்ல... ஏட்டு ஏகாம்பரம் வேகமாக வெளியேறினார்.

“அந்தப் பொண்ணு சாகலங்கறதை கண்டுபிடிச்சிட்டோம். ஒருவேளை... இவனும் உயிரோட இருக்கலாமோ...” என்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், குணசீலன் மீது சந்தேகப் பார்வையை வீசிய அக்கணமே அரசு மருத்துவ குழுவினர் அங்கே வந்து சேர்ந்தனர்.



குணசீலன் உடலையும், அமுதாவின் உடலையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் அமுதா உயிரோடு இருப்பதையும், குணசீலன் இறந்து விட்டதையும் உறுதிப்படுத்தினர். அடுத்த நிமிடமே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் அமுதா. கொலை நடந்த லாட்ஜில் போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. படுக்கை அறை மட்டுமின்றி குளியல் அறையிலும் ஏதாவது தடயம் கிடைத்து விடாதா என்று தேடிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். அவரது முயற்சி வீண் போகவில்லை. பாதி உபயோகப்படுத்தப்பட்டு மீதி இருந்த பான்பராக் பாக்கெட் ஒன்றை குளியல் அறையில் இருந்து கண்டெடுத்த இன்ஸ்பெக்டர் குணசீலன், சில நிமிடங்கள் அதையே கையில் வைத்துக்கொண்டு பலமாக யோசித்தார்.

அப்போது ஏட்டு ஏகாம்பரம் அவர் அருகில் வந்தார்.

“சார்... குற்றவாளி யாருன்னு கண்டுபுடிச்சிட்டீங்கன்னு நினைக்கறேன். சரிதானே?”

“எதை வெச்சியா அப்படி சொல்ற?”

“நீங்க பலமா யோசிக்கிறீங்களே... அதை வெச்சுதான்!”

“இந்த கேஸ்ல இதுவும் முக்கிய எவிடென்ஸ்தான். இங்கே தங்கியிருந்த ரெண்டு பேரும் ஓரளவு ரிச்சான ஃபேமிலியைச் சேர்ந்தவங்க. இறந்து போன குணசீலன் ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்து இருக்கான். தன்னோட கம்பெனி ஐ.டி.யை குடுத்துதான் இங்கே தங்கி இருக்கான். இவனுக்கும், உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கற அமுதாவுக்கும் கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கல்யாணம் ஆகி இருக்கு. ஹனிமூன் கொண்டாடுறதுக்குத்தான் இங்கே வந்து இருக்காங்க. அப்படி வந்த இடத்துலதான் குணசீலன் கொலை செய்யப்பட்டு இருக்கான். அவனோட மனைவி கொலை முயற்சியில இருந்து தப்பிச்சி இருக்கா. ஆனா, இப்போ உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கா. அந்தப் பொண்ணு சுயநினைவுக்கு வந்தாதான் நடந்தது என்னன்னு தெரிஞ்சுக்க முடியும். அதேநேரம், குற்றவாளி யாருங்கறதை நான் இப்பவே கண்டுபிடிச்சிட்டேன். குற்றவாளி எங்கேயும் ஓடிப் போயிடல. இதே ஊட்டியிலதான் இருக்கான். அவன், இங்கே கூட இருக்கலாம்...” என்ற இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஏட்டு ஏகாம்பரம் மீது அப்படியொரு பார்வையை வீசினார்.



“சார்... குற்றவாளி இங்கேகூட இருக்கலாம்னு சொல்லிட்டு, என்னைப் போய் அப்படி பாக்குறீங்களே. நீங்க நினைக்கற மாதிரி, இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சார்.”

“யோவ் ஏட்டு. அவசரப்படாதய்யா..! இந்த அவசரப் புத்தியினாலதான் 45 வயது ஆகியும் இன்னும் ஏட்டாவே இருக்குற. நான் சொல்ல வந்ததே வேற!”

“போன வாரம் டில்லியில, இரவு நேரத்துல பாய் ப்ரெண்டோட பஸ்ல போன மாணவியை சில பசங்க கற்பழிச்சிக் கொன்னாங்க இல்லீயா? அது மாதிரியான முயற்சியா இந்தக் கேஸ் இருக்குமோ?”

“இப்பதான்யா... நீ ஒழுங்கா யோசிக்க ஆரம்பிச்சி இருக்க. என்னோட சந்தேகமும் அதேதான். இங்கே மயங்கிக் கிடந்த பொண்ணு, பாக்கறதுக்கு ரொம்பவும் அழகா இருக்கா. அவளைக் கற்பழிக்கும் நோக்கத்தோடு உள்ளே நுழைஞ்சி, அதைத் தடுக்க வந்த இவனை கொலை செஞ்சுட்டும், அவளைத் தாக்கிட்டும் குற்றவாளி தப்பிச்சு இருக்கலாம்னு நினைக்கறேன்.”

“இப்பதான் சார், எனக்கு இன்னொரு டவுட் வருது..!”

“குற்றவாளி ஒருத்தனா, ரெண்டு பேரா? அல்லது, அதுக்கும் மேலேயான்னு கேக்குறீயாக்கும்!”

“ஆமா சார். என்னோட மைன்ட் வாய்ஸை எப்படி சார் கரெக்ட்டா கண்டுபிடிச்சிங்க?”

“அதனாலதான்யா நான் இன்ஸ்பெக்டரா இருக்கேன்! சரி, ஓவரா டயலாக் பேசினது போதும். ஏதாவது தடயம் கிடைக்குதான்னு பாரு...” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எதார்த்தமாக உடைந்து கிடந்த நாற்காலிக்கு அடியில் ஏதோ ஒரு பொருள் விசித்திரமாய் தெரிய... அதை எடுக்கக் குனிந்தார்.

அது, வேறு ஒன்றுமல்ல; அமுதா குளியல் அறையில் குளிப்பதை படம் பிடிக்க ரூம்பாய் விவேக் வைத்துவிட்டுச் சென்ற அதே கீ - செயின் கேமராதான்.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/serial/p5ad.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License