இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


21. ஊட்டி சாக்லெட்டின் கதை!

ஊட்டி தாவரவியல் பூங்காவின் அழகை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள் ஷ்ரவ்யா. விதவிதமான வண்ண மலர்கள்... நீண்டு வளர்ந்த மரங்கள்... பஞ்சு மெத்தைப் புல்வெளிகள், ஜில்லென்ற குளிர்ந்த காற்று... என்று, ரம்மியமாக அமைந்திருந்த அந்தப் பூங்கா அவளை இன்னும் உற்சாகமாக்கியது. ஆனந்தின் இடது கையைத் தனது வலது கைக்குகள் சிறைப்பிடித்துக் கொண்டு அந்தப் பூங்காவை வலம் வந்தாள்.

“ஆனந்த் இந்தப் பூங்கா ரொம்ப அழகா இருக்குல்ல?”

“ஊட்டின்னாலே அழகுதான். அங்குள்ள பூங்காவின் அழகு பத்திச் சொல்ல வேணுமா என்ன?”

“இப்படியொரு அழகான பூங்காவை வேறு எங்கேயும் நான் பார்த்ததே இல்லை.”

“அதுசரி, இந்தப் பூங்காவுக்கு இன்னொரு ஸ்பெஷாலிட்டியும் இருக்கு தெரியுமா?”

“என்னது?”

“இந்தப் பூங்காவின் புல்வெளிகளில் கதாநாயகிகளோடு உருண்டு புரளாத கதாநாயகன்களே இல்லை, அதனால்தான் அப்படிச் சொன்னேன்.”

“என்னது... இங்கே ஷூட்டிங் எல்லாம் எடுப்பாங்களா?”

“ஆமாம்... இடைக்கால சினிமாக்கள் பார்த்தாலே தெரியும். அழகழகான பூங்காவையும், மலைப்பிரதேசங்கள்ல மட்டுமே பார்க்கக் கூடிய மரங்களையும் காட்டுவாங்க. அந்த இடம் வேறு எதுவும் இல்லை. இதே இடம்தான். ஏன்... இப்போ நாம நின்னுட்டு இருக்கோமே... இந்த இடத்துல நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் எல்லோரும் ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா கூட டூயட் பாடியிருக்காங்க. நீ ஆசைப்பட்டா நாமளும் ஒரு டூயட் பாடிடுவோம்.”

“எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ஆனா, பேக்ரவுண்ட்ல சாங்க் எதுவும் ஓடாதே...”



“பேக்ரவுண்ட்ல சாங்க் ஓடலன்னா என்ன, மனசுக்குள்ள ஓட்டிட வேண்டியதுதான்...” என்று சொன்ன ஆனந்த், ஷ்ரவ்யாவின் இடுப்பில் கிடுக்கிப்பிடி போட்டுக் கொண்டு மெய்மறந்து நடந்தான். அவன் எந்தக் கவலையை மறக்க வந்தானோ, அவை சட்டென்று காணாமல் போய் இருந்தன.

அப்போதுதான் அவனுக்கு அந்த நினைவு வந்தது. தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து, சில சாக்லெட்டுகளை வெளியே எடுத்தான். ஷ்ரவ்யாவிடம் நீட்டினான்.

“என்னங்க... எனக்குத் தெரியாம சாக்லெட் எங்கே வாங்கினீங்க? அதுவும், சாப்பிட்டுட்டு கொடுக்குற மாதிரி இருக்குது.”

“உனக்குக் கொடுக்காம நான் மட்டும் எப்படி சாக்லெட் சாப்பிடுவேன். அதுவும், உனக்கு பிடிக்குமேன்னு வாங்கி இருக்கேன்.”

“எனக்கு சாக்லெட் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“எல்லாப் பெண்களுக்கு பிடிச்ச விஷயம்தானே அது?”

“ஓ... நீங்க அந்த வழிக்கு வர்றீங்களா? அது சரி... இந்த சாக்லெட் ஏன், பைவ் ஸ்டார் சாக்லெட் மாதிரி பேக் செய்யப்படாம இப்படி ஓப்பனா இருக்கு...”

“நீ சொல்ற சாக்லெட் வேற. இது ஊட்டி சாக்லெட்!”

“என்னது... ஊட்டி சாக்லெட்டுக்குமா பேமஸ்?”

“ஆமா... அது உனக்குத் தெரியாதா?”

“தெரியாதுங்கறதுனாலதானே உங்கக்கிட்ட கேக்கறேன்...!”



“இந்த சாக்லெட்டுக்குப் பின்னாடி சுவாராசியமான ஹிஸ்ட்ரியே இருக்கு தெரியுமா?”

“அப்படீன்னா... சாக்லெட் பார்சலை அப்படியேக் குடுங்க...” என்று, அதை வாங்கிக் கொண்ட ஷ்ரவ்யா, சாக்லெட் துண்டுகளில் ஒன்றை எடுத்துக் கடித்தாள்.

“உண்மையிலேயே இந்த சாக்லெட் சூப்பரா இருக்கு ஆனந்த். வீட்டுச் சாப்பாடுன்னு சொல்வாங்க இல்லையா..? அந்த மாதிரியான ஒரு ஃபீலிங் இருக்கு.”

“நீ சொன்னதுதான் உண்மை. இந்த சாக்லெட்டோட பெயர் ஹோம் மேட் சாக்லெட். பெயர் ஒண்ணுதான்னாலும், க்ரன்ச், கேரமில்க், அல்மாண்ட் ஃபட்ஜ், பிஸ்தா ஃபட்ஜ், வால்நட் ஃபட்ஜ், ஃப்ரூட் அண்ட் நட்ஸ், நட் மில்க், ஹோல் நட், ரோஸ்டட் அல்மாண்ட்... இப்படி இருநூறுக்கும் மேற்பட்ட வெரைட்டீஸ் இதுல இருக்கு.”

“நீங்க சொல்றதப் பார்த்தா... இந்தச் சாக்லெட் உருவான கதை கண்டிப்பா சுவாராசியமாத்தான் இருக்கும். நடந்து கிட்டே நீங்க அந்தக் கதையைச் சொன்னா நான் மறந்துடுவேன். அதோ... அந்த இடத்துல அழகான புல்வெளி தெரியுது. அங்கே உட்கார்ந்து, சாலெட் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமே...” என்ற ஷ்ரவ்யா, ஆனந்தை அங்கே அழைத்துச் சென்றாள்.

“சரி, இப்போ நீங்க சொல்லக்கூடிய ஊட்டி சாக்லெட்டுக்கும் பிரிட்டிஷ்காரங்களுக்கும் சம்பந்தம் இருக்கா என்ன?”

“எப்படி கரெக்ட்டா கண்டுப்பிடிச்ச?”

“உங்ககூட பேசிப் பேசியே நானும் அறிவு ஜீவி ஆயிட்டேன்.”

“என்னை ரொம்பப் புகழ்றேன்னு நினைக்கிறேன் ஷ்ரவ்யா. ஆனா, எனக்கு இந்தப் புகழ்ச்சி எல்லாம் பிடிக்காது.”



“பில்டப் கொடுத்தது போதும்... இப்போ ஊட்டி சாக்லெட் கதையை சொல்லுங்க...”

“இதோ சொல்றேன்...” என்ற ஆனந்த், ஊட்டி சாக்லெட் வந்த கதையை தெளிவாகச் சொன்னான்.

“இந்தியாவைக் கைப்பற்றி ஆங்கிலேயே ஆட்சி முறையை அமல்படுத்திய பிரிட்டிஷ்காரர்கள் சென்னையைத் தலைநகரமாகக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு என்னவோ பிடித்த இடம் என்றால் அது ஊட்டிதான். அங்கு நிலவிய குளுகுளு சூழ்நிலை அவர்களுக்குப் பிடித்து இருந்தாலும், ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் நிறையவே ஏங்கினர். அதற்குக் காரணம், சாக்லெட்! இங்கிலாந்தில் அவர்கள் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் விதவிதமான சாக்லெட்களை வாங்கி ருசிக்கலாம். ஆனால், ஊட்டிக்கு வந்து குடியேறிய ஆங்கிலேயர்களுக்கு சாக்லெட் நினைத்த மாத்திரத்தில் கிடைக்கவில்லை. அவர்களின் சாக்லெட் தாகத்தைப் புரிந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டிலேயே அவர்களுக்குத் தேவையான சாக்லெட் தயார் செய்து கொடுக்க ஆரம்பித்தார். இப்படித்தான் ஊட்டி சாக்லெட் வந்தது...” என்று, ஊட்டி ஹோம் மேட் சாக்லெட்டின் வரலாற்றை சொன்ன ஆனந்த், “இந்தச் சாக்லெட் சாப்பிட்டால் நிறைய நன்மை கிடைக்கும்னு சொல்றாங்க. அது என்ன தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, சஸ்பென்ஸ் ஆக நிறுத்தினான்.

“சஸ்பென்ஸ் வெச்சுப் பேசினது போதும். அப்படி என்ன நன்மைதான் இந்த சாக்லெட் சாப்பிடுறதுனால கிடைக்குது?” ஆர்வமாகக் கேட்டாள் ஷ்ரவ்யா.

“ஊட்டி ஹோம் மேட் சாக்லெட், ப்யூர் சாக்லெட்ங்கறதுனால அதைத் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும். இதயத்துக்கும் நல்லது. சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடணும்ங்கறதுக்காக சுகர் ஃப்ரீ சாக்லெட்டும் இப்போ கிடைக்குது. இந்தச் சாக்லெட்டோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா... இந்தச் சாக்லெட்டை இங்கே தவிர, வேறு எங்கேயும் தயாரிக்க முடியாது.”

ஆனந்த் இப்படிச் சொன்னதும், “ஏன் தயாரிக்க முடியாது” என்று அப்பாவியாய் கேட்டாள் ஷ்ரவ்யா.

“ஊட்டியில தயாராகுற ஹோம் மேட் சாக்லெட்களை வெறும் கண்ணாடியில் வெச்சுதான் விற்கிறார்கள். ஊட்டியோட க்ளைமேட் காரணமா அது கெட்டுப் போகாம அப்படியே இருக்கும். ஆனா, மற்ற ஊர்கள்ல இதை செஞ்சா, ஃபிரிட்ஜ்ல வெச்சிருந்தா மட்டும்தான் அப்படியே இருக்கும். ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்தா... ஐஸ்கிரீம் மாதிரி உருகிப் போயிடும்...”

ஊட்டி ஹோம் மேட் சாக்லெட் உருவான கதையை விலாவாரியாகச் சொன்ன ஆனந்த்தை, ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரவ்யா.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/serial/p5u.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License