இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கடைசிச் சோறு

பொன். இராம்


அன்று ஏனோ விடுதலையாகிய பெரியசாமிக்கு ஜெயிலை விட்டுப் போகவே மனமில்லை. ஜெயிலர் இரண்டொரு நாட்களுக்கு முன்னரே விடுதலை பற்றிச் சொல்லியும் சுவாரசியமே காட்டவில்லை. இங்கேயே பர்மனென்ட்டாக இருக்க முடியாதா எனக் கேட்க அதுக்கு நீ பழையபடி தப்பு செஞ்சுட்டு வந்துடு பெருசு... இதுக்கே ஆயுள்தண்டனைன்னு போட்டுட்டு 35 வருஷத்துக்கு அப்புறம் வெளியே வுடறாங்க... சந்தோஷமாப் போவியா... என கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாகத் தள்ளிக் கதவைச் சாத்தினான் காவலாளி. பெரியசாமி கதவை விட்டு வெளியே தள்ளாடித் தள்ளாடி கைத்தடியை ஊன்றி வெளியே வந்தான்.

வானத்தில் சிறகடித்துப் பறந்து கூட்டை நோக்கிப் பறந்து செல்லும் பறவைகளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் கரைந்து கதிரவன் கதிர்களை மறைத்துக் கொண்டான்.

போவதற்கு இடமில்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட ஜெயில் உழைப்புக் காசுகளை எண்ணிக் கொண்டிருந்தான். நேராக சென்ட்ரல் போய் தனது நண்பர்களைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

யார் இருக்கிறார்களோ... இல்லையோ... கந்தன் இருப்பான்... அவனுக்காகத்தானே இத்தனை கஷ்டம். செய்யாத தப்புக்காக அவன் செஞ்ச தப்புகளையெல்லாம் நாம செஞ்சதா ஏத்துக்கிட்டோம். அவன் எப்படியும் நம்மைப் பார்த்துப்பான் என்ற நம்பிக்கையில் பஸ் நிற்கும் இடம் சென்று பார்த்தான். புழலில் இருந்து நேரிடையான பஸ் இன்னும் வர சிறிது நேரம் ஆகும் தாத்தா! நீங்க அதனால பில்லர் போய் மாறிக்கங்க தாத்தா! நானும் அந்தப் பக்கம்தான் போறேன் என்றான் ஒரு இளைஞன். அந்த இளைஞனையே உற்றுப் பார்த்தான். தனது சாயலில் தெரிந்த இளைஞனிடம் என்னை சென்ட்ரலில் பிள்ளையார் தெருவுக்குக் கொண்டுபோய் வுடறியா கண்ணா! எனக்கேட்டார்.தாத்தா! எனக்கும் அந்தத் தெருதான்... யார் வீட்டுக்குப் போவணும் நீங்க?

அந்தத் தெருவுல கந்தன்னு ஒருத்தன் இருந்தாருல்ல... அவரு வீட்டுக்குத்தாம்ப்பா போகணும்.



எங்கப்பாதான் அவரு... உடம்பு நல்லா இருக்கும் போது யாருக்கும் நல்லது செய்யலை... உடம்பெல்லாம் நோய்... செய்யாத பாவம் கிடையாது. கொலை, கொள்ளை, போதைமருந்து கடத்தறது, பணத்துக்காக அடிதடி சண்டை, நல்லா இருக்கற குடும்பத்தைப் பிரிக்கறது, வெட்டுறது எல்லாம் உண்டு. இவரு ஃப்ரெண்டு செஞ்ச தப்பையெல்லாம் ஏத்துக்கிட்டு ஜெயிலுக்குப் போய்ட்டாராம். யாரோ பேரு கூடப் பெரியசாமியாம்! பள்ளிக்கூடத்துல ஒண்ணா படிச்சு வந்தாராம். அவரு நல்லா படிப்பாராம்! எங்கப்பன்தான் கூட சேர்ந்து படிக்கவிடாம செஞ்சாராம்... காரணம் அந்த பெரியசாமிக்கு அப்பா, அம்மா யாரும் கிடையாது. எங்கப்பன்தான் தான் கொண்டு போற சோற்றைக் கொடுப்பாராம். இப்ப எங்கப்பனுக்கு எந்தக்கையால அரிவாளு, பொண்ணுங்க இதைத் தொட்டாரோ அந்தக்கைகள் இரண்டுமே வரலை! எந்தக்காலால எல்லாரையும் மிதிச்சாரோ அந்தக்கால்கள் இரண்டும் எழுந்து நடக்க வரலை... இருந்தும் அந்த உயிர் யாருக்காகவோ வாசலை மட்டும் பாத்துக்கிட்டே வருஷக்கணக்கா இருக்கு... ஏன்னுதான் தெரியலை?

உங்களைப் பார்த்தா எங்கப்பாவைப் பார்க்குற மாதிரி இருக்கு... எங்கப்பன் அவருதான் படிக்கலையே தவிர என்னை ஹாஸ்டல்ல அனுப்பிச்சு நல்லா படிக்க வச்சிட்டாரு... அவர் ஃப்ரெண்ட் ஆசைப்பட்டாராம். கைக்குழந்தையா இருந்த என்னைப் பார்த்துக்கிட்டே இருப்பாராம். எங்கவீட்டுப் பரண்ல சின்னவயசுல நீங்க இருக்கற மாதிரி ஒரு ஞாபகம்... பெரியசாமி முகத்தில் நிலாவின் ஒளியால் வந்த வெளிச்சமா! இலலை... தனது மகன் இவ்வளவு பேசுகிறானே என்ற பெருமையா என்று தெரியாமல் மகிழ்ச்சியினை மறைத்துத் தலைகுனிந்தார்.

எனது மகன் என நான் எந்தக் காலத்திலேயும் சொல்லமாட்டேன் என கந்தனுக்குச் செய்து கொடுத்த சத்தியம் ஞாபகத்திற்கு வந்தது.

எனக்குன்னு யாரும் இல்லை பெரியசாமி! அடி, தடி, கொள்ளைன்னு இருக்கறவனுக்கு எவன் பொண்ணு கொடுப்பான் சொல்லு... உன் பையனை எனக்குக் கொள்ளி போடச் சொல்லுவியா பெரியசாமி!

தனக்கும் யாரும் இல்லை என்பதை ஏனோ உணர மறுத்த பெரியசாமி நோயினால் மனைவி இறந்த துக்கத்தைத் தாளமுடியாமல் குழந்தையையும் தூக்கிக் கொடுத்தான். டீக்கடை வைத்த நாள்முதல் ஏதோ வருமானம் வந்ததில் ஓடிய பிழைப்பு கந்தன் செய்த தவறுக்கெல்லாம் பொறுப்பேற்று ஜெயிலுக்குச் சென்றதில் கடை மூடுவிழா கண்டது. கந்தனைப் பார்த்துவிட்டு ஏதாவது அனாதை ஆசிரமத்தில் சேர்ந்து விடவேண்டும் என்ற நினைப்பு மனதில் எழுந்தது. கண்ணை மூடியபடியே சீட்டில் சாய்ந்து படுத்திருந்த பெரியசாமியைத் தாத்தா... இறங்கி ஆட்டோ பிடிச்சு போய்டலாம் தாத்தா! வீட்ல அப்பாவுக்கு சோறு ஊட்டணும்... பாத்ரூம் வேற போயிருப்பாரு... வேஷ்டியெல்லாம் மாத்தணும்... சீக்கிரம் போகணும்...!

மகனை அப்படியே இழுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை அடக்கிக் கொண்டார் பெரியசாமி.

ஆட்டோவைக் கையைத் தட்டி அழைத்தான் மகன்.

சர்ரென ஆட்டோ அருகில் வந்து நின்றது.

ஐயா! நல்லா இருக்கிங்களா... என சத்தமாக டிரைவர் பேசவே திகைத்தான் மகன்.

அங்கிள் இவரைத் தெரியுமா?



இவரை இந்த ஏரியாவில் தெரியாதவங்களே கிடையாது தம்பி... உங்கப்பன் பொழுதன்னைக்கும் பெரியசாமி கையாலே கடைசிச் சோறு வாங்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்குதே... அவருதான் இவரு...

அவரு டீ போட்டாருன்னா இன்னைக்கெல்லாம் எத்தனை டீ வேணும்னாலும் குடிக்கலாம். ஐயா! இது யாருன்னு தெரியுதா! உங்க... என்று இழுத்த டிரைவரை உஷ்! என சைகை காட்டி வாயடைத்தார் பெரியசாமி.

பேசிக்கொண்டே வண்டி ஓட்டியபடி வந்ததில் கந்தனின் வீடு வந்து விட்டது. வீட்டிற்குள் நுழையவும் பினாயிலும், டெட்டாலும் கலந்த வாசனை பெரியசாமியை வரவேற்றது.

அப்பா! யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க!

அப்பாவால தானா எழுந்திருக்க முடியாது... யாராவது தூக்கித்தான் உட்கார வைக்கணும். பக்கபலத்திற்குத் தலையணை வைக்கணும்... நீங்க பாத்திட்டு இருங்க... நான் போய் சாதத்தைக் கரைச்சு எடுத்திட்டு வர்றேன்...

மகன் உள்ளே சென்றதை உறுதிப்படுத்தியபடி நனைந்திருந்த கண்களைத் துடைத்தபடி நல்லாப் படிக்க வைச்சுட்டடா! எம் புள்ளையை... உன்னைத் தூக்கறதுக்கு ஆள்வேணும்னுதான் என்புள்ளையைக் கேட்டியாடா! சொல்ல மாட்டேண்டா அவன் என் புள்ளைதான்னு...

மகன் வரவே! கொண்டா... நான் ஊட்டுறேன்...

வந்ததிலிருந்து ஒண்ணுமே பேசாம ஏண்டா கண்ணீரா கொட்டுறே...!

அப்பாவுக்கு உங்களைப் பார்த்த சந்தோஷம். அப்பாவாலே பேச முடியாது... கர்ருன்னு சத்தம்தான் வரும். காது மட்டும் கேட்கும் - சொன்ன மகனை உற்றுப் பார்த்தான்.

யாரையும் அசிங்கமாப் பேசாதடா கந்தா! கடைசி காலத்துல பேச்சு வராம போய்டும்னு தனது பேச்சு பலித்ததைப் பெரியசாமி நினைத்தான்.

கொண்டா... வேஷ்டியை நான் மாத்தறேன்...

வேஷ்டியை மாற்றியபின் தட்டில் இருந்த சாப்பாட்டை ஒரு ஸ்பூன் எடுத்துக் கந்தன் வாயில் வைத்தார்.

ஹக்! என்ற சத்தம் வர... என்னப்பா! என்ன செய்யுது... என மகன் நெருங்கி வர... பெரியசாமி... என்னைக்குன்னாலும் கடைசி சோறு உங்கையாலதாண்டா சாப்பிட்டுட்டு சாகணும் எனச் சொன்னது ஏனோ பெரியசாமிக்கு நினைவில் வந்தது. நெஞ்சைத் தொட்டுப் பார்க்க முகத்தை அவனுடைய நெஞ்சில் பதித்தார் தாத்தா.



அப்பாவின் கையைத் தொட்டுப் பார்த்துச் சில்லென்று இருக்கவும் அப்பா இறந்துட்டார்! நான் போய் வெளியில் ஆட்டோக்கார அங்கிள் போய் இருக்கமாட்டார்... சொல்லிட்டு வர்றேன் எனக் கண்ணீரைத் துடைத்தபடி கிளம்பினான்.

ஆட்டோக்காரர் வெளியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கவே, அங்கிள் அப்பா இறந்துட்டார்... எனக்கு யாரும் இங்கே அவ்வளவா தெரியாது.ஹெல்ப் பண்ணுங்க அங்கிள்... என்றான் மகன். நேராக ஆட்டோக்காரர் உள்ளே வந்து பார்த்தார்.

பெரியசாமி நெஞ்சில் படுத்தபடி இருக்கவே, மகனுக்குச் சந்தேகம் எழுந்தது. அங்கிள் அப்போதிலிருந்தே இந்தத் தாத்தா இப்படித்தான் இருக்கார்... என யோசித்தான்.

தாத்தான்னு சொல்லாதேப்பா... அவர் பெற்ற மகன் நீதானப்பா! உன்னை வளர்த்ததுதாம்ப்பா கந்தன்...

வளர்த்த அப்பாவிற்குக் கொள்ளி வைச்சுடுப்பா! பதில் சொல்லிய ஆட்டோக்காரரை வினோதமாகப் புரிந்தாற் போலப் பார்த்தான் மகன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/shortstory/p262.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License