இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கடவுள்களின் அம்மா

"இளவல்" ஹரிஹரன்


"உனக்கு அலுக்கவே அலுக்காதா... வாசுகி...?"

"எது... சாவித்திரி...!"

"அதுதான்... இந்த வாழ்க்கை... இப்பிடியே வெறுமனே இருக்கறது... எந்த வித ஆதரவும் இல்லாம... எந்தவிதத் தனிப்பட்ட விருப்பமுமில்லாம... கடைசி வரைக்கும் இப்படியே நிரந்தரமா இருந்திடலாம்னு முடிவு பண்ணிட்டியா...!"

வாசுகி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். சாவித்திரியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது... சின்ன வயதுச் சிநேகிதி அவள்.

இந்த ஒரு சிநேகிதம் மட்டும் அவர் வாழ்வில் இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் நீடித்திருந்தது. அது ஒன்றுதான் ஆறுதலாகவும் இருந்தது வாசுகிக்கு.

காலம்தான் எவ்வளவு கொடுமையானது. தன் இயல்பில் சென்று கொண்டிருந்த வாழ்க்கையை, திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அப்படியேப் புரட்டிப் போட்டுக் குப்புறக் கவிழ்த்திவிட்டு எதுவுமே நடைபெறாத வண்ணம் கடந்து கொண்டிருக்கும் காலம் தான் எவ்வளவு கொடுமையானது.

வாசுகி எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

தம் இளமை நாட்களில் எவ்வளவு குதூகலமாகவும் கொண்டாட்டமாகவும் இருப்பார்... கலகலவென்ற பேச்சும் துறுதுறுவென்ற நடவடிக்கையும் யாரையும் எளிதில் கவர்ந்துவிடும் வண்ணம் இருந்தது.

வாசுகியின் அம்மாவே அடிக்கடி சொல்வார்... "என் கண்ணே பட்டுடும் போலிருக்கேடி... நல்லபடியா ஒருத்தன் கிட்டெ ஒப்படைக்கிற வரைக்கும் என் உசிரு உன் கிட்டெயே இருக்கும். அப்பா இல்லாத குறைய கஷ்டப்பட்டு இதுவரைக்கும் நீ உணராதபடி வளத்துட்டேன்... இனிமே கடவுளா கண்ணத் திறந்து ஒரு வழி காட்டணும்டி குழந்தே..."

ஆமாம்... கடவுள் கண்ணைத் திறந்துதான் பார்த்தார். ஆனால் அரைகுறையாகப் பார்த்துவிட்டாரோ என்னவோ... வாசுகிக்கு ஒரு நல்ல வரன் அமைந்தது, அசலில் தான் என்றாலும் அனுசரணையான மாப்பிள்ளைதான். கல்யாணத்தேதி எல்லாம் நிச்சயித்தாயிற்று. தம் சக்திக்கு மீறி இருப்பதையெல்லாம் விற்றாவது வாசுகி கல்யாணத்தை முடித்துவிட வாசுகி அம்மா நினைத்தார்.

திருமணம் ஒரு வாரம் இருக்கும் போது, கடுமையான மாரடைப்பின் காரணமாக வாசுகி அம்மா இறந்துவிட, தனி மரமாக நின்றார், வாசுகி.


வாசுகிக்குப் பார்த்த மாப்பிள்ளைதான் ஓடியாடி எல்லாக் காரியத்தையும் முன் நின்று செய்ய வைத்தார்.

மாப்பிள்ளையின் தாயாருக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை. முகத்தைக் கடுகடுவென்று துக்கம் விசாரிக்க வந்து, பின் வலுக்கட்டாயமாக மகனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மாமனாரும் ஒன்றும் செய்யவியலாமல் பின் தொடர, வாசுகிக்கு இந்த உலகமே இருண்டது. செய்வதறியாது திகைத்தார்.

ஆனால் மாப்பிள்ளை தன் தாயாரிடம் பிடிவாதமா வாசுகியைத்தான் திருமணம் செய்து கொள்வேன் எனத் தெரிவித்து விட்டதால், வேறு வழியின்றி தாயார் ஏற்றுக்கொள்ள, மீண்டும் திருமணத்தேதி நிச்சயிக்கப்பட்டது.

மாமியாரின் முணுமுணுப்பு மட்டும் நிற்கவில்லை.

"முதல்ல தேதியஂ நிச்சயஞ்செஞ்சப்ப அம்மாக்காரிய முழுங்கிப்புட்டா... இப்ப இரண்டாவதா நிச்சயித்திருக்கோம்... இப்ப யார முழுங்கப்போறான்னு தெரியலியே... என்ன மாயஞ் செஞ்சாளோ... இவன் வேற... ஊர்லெ வேற பெண்ணே இல்லாத மாதிரி இவளையே கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்தக்கால்லே நிக்கிறான்... என்ன நடக்குமோ..."

வாசுகிக்குச் ச்சே என்றாகிவிட்டது.

... என்ன மனிதரிவர்... ஒரு பெண்ணாய் இருந்து கொண்டு இன்னொரு பெண்ணை இவ்வாறெல்லாமா நோகடிப்பது... என்ன செய்ய... மாப்பிள்ளைக்காகவாவது விதியே என்று சகித்துக் கொள்ள வேண்டும்.

திருமணத்தேதி நெருங்க... நெருங்க... வாசுகிக்குத் திக்திக் என்று இருந்தது.

எல்லாம் நல்லபடியாய் நடந்து முடிந்தது.

வாசுகி மாப்பிள்ளையின் மார்பில் சாய்ந்து கொள்ளும் இன்பம் உணர்ந்தாள். மாமியார்க்காரியின் முகம் எள்ளும் கொள்ளும் வெடித்தவாறே இருந்தது. அது, இது என்று சொல்லி நல்ல நாள், நல்ல நேரம் எனப் பார்த்து முதல் இரவை ஒரு வாரம் தள்ளிப்போட, புதுமணத் தம்பதிகள் வேறுவழியின்றி ஏற்க வேண்டியதாயிற்று.

நண்பரைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று போன மாப்பிள்ளை, ஏதோ ஓர் ஆலையை மூடக்கோரி நடக்கும் போராட்ட ஊர்வலத்தில் சிக்கிக் கொள்ள... ஊர்வலத்தில் திடீரென வெடித்த கலவரத்தினை அடக்கக் கூடிய காவல்துறை, முடியாது போகவே, நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானான்.


மாமியார்க்காரியின் அவலமான அழுகையினூடே வாசுகியைக் கரித்துக் கொட்ட அவர் தவறவில்லை.

"இதுக்குத்தான் சொன்னேன்... என் பையன் கேக்கலியே... இந்த விளங்கா மூஞ்சியத்தான் கட்டிக்குவேன்னு நின்னானே... இப்ப அவனையும் முழுங்கிப்பிட்டு நிக்கிறாளே... ராட்சசி... இவ நல்லா இருப்பாளா... எம் பையன இப்படி வாரிக்கொடுத்திட்டு நிர்க்கதியா நிக்கிறமாதிரி ஆயிடிச்சே..."

இதில் வாசுகிக்கு யார் ஆறுதல் கூறுவார். அழக்கூட முடியாமல் பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்திருந்தாள். கண்கள் வெறித்தபடி இருந்தன.

யார் யாரோ வந்தார்கள்...போனார்கள். எல்லாம் முடிந்தது.

அரசியல் கட்சிகளின் கண்டனம் காரணமாக துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு அரசு நிவாரணம் வழங்கப்பட்டது.

பிடிவாதமாய் வாங்கிக்கொண்ட மாமியார்க்காரி வாசுகியைத் தெருவிலே நிர்க்கதியாய் நிற்கவைத்தாள்.

போகுமிடம் அறியாது ஒரு வழியும் தெரியாது நின்றாள்.

... ஆமாம்... சாவித்திரி... நீ படிச்சு முடிச்ச கையோட கல்யாணம் பண்ணிட்டு வெளிநாட்டிலே செட்டிலாயிட்டே... இவ்வளவு வருடம் கழித்து என்னைத் தேடி எல்லா விபரமும் தெரிஞ்சிக்கிட்டு இங்கே வந்திருக்கே... இங்கே நான் ரொம்ப மனநிறைவா இருக்கேன் சாவித்திரி... நான் அனாதரவா நின்னப்போ இந்த இடந்தான் எனக்கு அடைக்கலம் குடுத்திச்சி... இப்ப எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன் தெரியுமா...

உனக்கு ஒண்ணு தெரியுமா... எனக்கு இப்ப முப்பத்து மூன்று குழந்தைக... எல்லாம் தங்களோட விதவிதமான குரல்லே என்னை அம்மான்னு அழைக்கும்போது எப்படி எல்லாம் இருக்கும் தெரியுமா... திருமணமாகி தாம்பத்ய சுகங்கூட அனுபவிக்காத எனக்கு இவ்வளவு குழந்தைகளை என் கணவர் எனக்குக் கொடுத்திருக்கார்னா... பாரேன்.

உனக்கு வேண்ணா... இவங்க மன வளர்ச்சி குன்றிய குழந்தைங்கன்னு தோணலாம்... ஆனா... கள்ளங் கபடமில்லாம, ஒரு கல்மிஷமும் அறியாம இருக்கற இவங்க தெய்வத்தோட குழந்தைங்க... இவங்களச் சிரிக்க வைக்கறதும், விளையாட வைக்கறதும், சாப்பாடு ஊட்டுறதும், தூங்க வைக்கறதும், இவங்க மலஜலம் கழிச்சா அத அசிங்கமாப் பாக்காம, சுத்தம் செய்றதும், தொடச்சி விட்றதும், இவங்களுக்குப் பாடம் நடத்தறதும், சேர்ந்து கூத்தடிக்கறதும்... இதிலெல்லாம் கிடைக்கற சந்தோஷம், சொர்க்கம்னு சொல்றாங்களே அங்கே கூடக் கிடைக்காது...

என்ன சொன்னேன்... இவ்வளவு குழந்தைகளையும் என் கணவர் கொடுத்ததாச் சொன்னேனா... ஆமாம்... அவர் இந்த மன வளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு இல்லத்துக்கு மாதாந்தர நன்கொடையாளர். அவரோட சாவுச் செய்தி கேள்விப்பட்டு, அந்த இல்லத்துப் பொறுப்பாளர், துக்கம் விசாரிக்க வந்த போது, என் நிலைமையப் பாத்து புரிஞ்சிக்கிட்டு இங்கே அழச்சி வந்தார். இப்ப என்னையேக் காப்பாளராக்கிட்டு அவர் ஓய்விலே இருக்கார்.

எப்பவும் பெண் துவண்டு போய் நிற்கக் கூடாது... புதுமைப்பெண்ணாக் கூட வேணாம்... ஒரு சாதாரண பெண்ணா சூழ்நிலை அனுசரித்து, கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக்கணும், எப்பவும் மனந் தளராம சுற்றியுள்ள கெட்டவங்கள தவிர்த்து, ஒரு சுய முன்னேற்றங் கொள்ள கத்துக்கணும்... அப்படி எனக்கு அமைந்த வாய்ப்பு... இந்த இல்லம்... இந்தக் குழந்தைங்க... இன்னார்க்கு இன்னார்னு சொல்றாங்களே... அது கல்யாணத்துக்கு மட்டுமில்லே... இந்தக் குழந்தைங்க விஷயத்திலேயுந்தான்...


இவங்களுககு நீ தான் அம்மான்னு கடவுள் விதிச்சத, வாழ்க்கையிலே யாரு மாத்த முடியும். இந்தக் குழந்தைங்க கடவுள்கள்னா... நான் கடவுள்களின் அம்மா இல்லையா... சாவித்திரி.!

"மேடம்... குழந்தைங்க உங்களோட சாப்பிட்றதுக்காக காத்துக்கிட்டிருக்காங்க..."

பராமரிப்பு இல்லப் பணியாளர் ஒருவர் வாசுகியை அழைத்தார்.

"வா... சாவித்திரி... இன்னைக்கு என் தெய்வக்குழந்தைகளோட சேர்ந்து நீயும் சாப்பிடலாம்..."

வாசுகி அழைக்க, சாவித்திரி பெருமிதமாய் வைத்த கண் வாங்காமல் கடவுள்களின் அம்மாவைப் பார்த்துக் கொண்டேஇருந்தார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/shortstory/p278.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License