இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

அரையனா கூடக் கொடுங்க...

மலையாளம்: எஸ். கே. பொட்டெக்கட்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


“கணபதி பப்பா மோரியா...” மராத்தியக் குழந்தைகள் கோரசாகக் குரல் எழுப்பினர்.

“கணபதி மகாராஜாக்கு ஜே..”. வயதானவர்கள் ஜே கோஷம் போட்டனர்.

ஒரு சிறிய ஊர்வலம் சௌபாத்தியின் தெருக்கள் வழியாகப் போய்க்கொண்டிருந்தது. பாம்பேயில் மராத்திகள் விநாயகர் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

விநாயகர் சதுர்த்தியின் ஐந்தாவது நாள். அன்று கௌரி நாள். சதுர்த்தி முதல் பூசை செய்து வந்த விநாயகர் சிலையையும் கௌரி சிலையையும் கடலில் கரைக்க மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

பாம்பேயில் ஒரு வியாபாரியான நாராயணன் கோடே காங்கரரின் பாதயாத்திரைதான் அப்போது அந்த வழியாக கடந்து போய்க்கொண்டிருந்தது. அந்த விநாயகர் சிலை ஐம்பது ரூபாய் விலையுடையது. முதலாளித்துவத்தின் என்றும் பின் தொடரும் பாவங்களையும், வருங்காலத்தில் வர இருக்கும் துன்பங்களையும் ஒன்றாகச் சேர்த்து அகற்ற வேண்டுமே என்ற பிரார்த்தனையோடும் நம்பிக்கையோடும்தான் அந்த ஆள் ஐம்பது ரூபாய் விலை கொடுத்து அந்தப் பெரிய விநாயகர் சிலையை வாங்கியிருந்தார்.

அந்த ஐந்து நாள் பூசைகளில் ரகசியமாகப் பல விண்ணப்பங்களையும், ஆசைகளையும் அந்த சிலையின் செவியில் அவர் மந்திரித்து ஓதி வைத்திருந்தார். அந்தச் சிலையை மலர் அலங்காரத்தோடு கூடிய பெரிய ஒரு பல்லக்கில் தூக்கிக்கொண்டு நான்கு பலசாலியான ஆட்கள் ஊர்வலத்துக்கு நடுவில் மெதுவாக நகர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு முன்னால் ஒரு கதர் பையில் பூசை சாமான்களுடன் ஒரு பூசாரி போய்க்கொண்டிருந்தார். வாத்திய கோஷ்டிகளுடன் ஒரு பாடல் குழுவினரும் ஆட்டக்காரர்களும் சென்று கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் முன்னால் கோடே காங்கரரின் குடும்பத்தில் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் கூட்டமாகச் சேர்ந்து கைகளால் தாளம் போட்டுக் கொண்டு விநாயகர் சிலைக்குப் பின்னால் உரத்தக் குரலில் பாடியபடி சென்றார்கள்.

“கணபதி பப்பா மோரியா... மங்கள பப்பா மோரியா...” உற்சாகத்தோடு பெரிய சத்தத்துடன் உரத்த குரலில் கோஷமாகப் பாடிக்கொண்டிருந்த குழந்தைகளுக்குப் பின்னால் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் சென்றார்கள். சில பெண்களுடைய கையில் குங்குமமும், கற்பூரமும் நிறைந்த தாம்பாளங்களும், தேங்காய்களும் இருந்தன.

பட்டையான பெரிய ஜரிகைக்கரை போட்ட ஒரு சிவப்புப் பட்டுத் தலைப்பாகையுடன் முழங்கால் வரை நீளமான ஒரு கோட்டையும் போட்டுக் கொண்டு உயரம் குறைந்த ஒரு ஆள் ஊர்வலத்தின் பக்கவாட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர்தான் ஊர்வலத்தின் தலைவரும் நாதனும் கட்டுப்பாட்டாளருமான நாராயணன் கோடே காங்கரர்.


பணத்தின் பெருமையும், மதிப்பு மரியாதையின் பிரகாசமும், தான் செய்த பாவங்கள் எல்லாம் பிள்ளையாருடைய தலையில் போட்டாயிற்று என்ற ஒரு ஆறுதல் மனப்பான்மையும் அந்த வியாபாரியுடைய முகத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. வழியில் பார்க்கும் சில தெரிந்தவர்கள் வணக்கம் சொல்லும் போது, அதைத் தலை குனிந்து ஏற்றுக்கொள்வதும், விநாயகருக்கு எல்லாம் சரியாக நடக்கிறதா என்ற கவலையோடு திரும்பிப் பார்ப்பதும் தவிர, அவர் வேறெதையும் யாரிடமும் பேசவில்லை.

ஊர்வலம் சௌபாத்தி கடற்கரையை வந்து சேர்ந்தது. கரையில் ஒரு நாழிகை தூரம் அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கடலில் கரைக்க வந்து சேரும் நூற்றுக்கணக்கான ஊர்வலங்கள் எல்லாம் அருவிகள் போலச் சிறிதாகத் தொடங்கி பின் ஒன்று சேர்ந்து பெரிய நதியாகி அங்கே வந்து சேர்ந்து கொண்டிருந்தன. எல்லாச் சிலைகளும் கடலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. பிடித்து வைத்த பிள்ளையார் அளவு முதல் குட்டியானை அளவுக்குப் பெரியதாக இருக்கும் சிலைகள் வரை ஆயிரமாயிரம் விநாயகர் சிலைகள்.

பெண்கள் நடைபாதையில் அணிவகுத்து நின்று கொண்டு அந்த வழியாகப் போகும் சிலைகளின் சிரசுகளின் மீது பயபக்தியுடன் அரிசியையும் மலர்களையும் தூவி வழியனுப்பிக் கொண்டிருந்தனர். கோடே காங்கரரின் விநாயகர் சிலை கரையை அடைந்தது. தூக்கிக்கொண்டு வந்தவர்கள் தலை மீதிருந்த பாரத்தை இறக்கி வைத்தார்கள்.

பூசாரி சிலையைத் தாங்கிப் பிடித்து மண்ணில் பிரதிஷ்டை செய்தார். கடல் நீர் எடுத்துக் கொண்டு வரப்பட்டது. கடைசி பூசைக்குரிய ஏற்பாடுகள் ஆரம்பித்தன. பழங்கள் நிறைத்து வைக்கப்பட்டிருந்த பித்தளைத் தாம்பாலமும், கற்பூரம் ஏற்றிவைத்த வெள்ளித் தட்டும், குங்குமம் கரைத்து வைக்கப்பட்டிருந்த தட்டும், தூபக்காலும் எல்லாம் அவற்றுக்குரிய இடத்தில் வைக்கப்பட்டன.

மணியோசை முழங்கியது. ஆராதனையும் மந்திர உச்சரிப்புகளும் தொடங்கின. ஊர்வலத்தில் வந்த எல்லோரும் சுற்றி நின்று பாட்டு பாடினர். “கணபதி பப்பா மோரியா” என்று ஒரே குரலில் குரல் எழுப்பினர். பூசைகள் முடியத் தொடங்கியபோது கோடே காங்கரர் முழங்காலிட்டு விநாயகருக்கு முன்னால் விழுந்து வணங்கினார். தன்னுடைய விண்ணப்பங்கள் எல்லாவற்றையும் விநாயகரிடம் மறுபடி ஒரு தடவை நினைவுபடுத்தினார்.

பிறகு, விநாயகரின் தங்கக்கிரீடத்தை மூன்று முறை தொட்டு தன் நெற்றியில் வைத்துக் கொண்டார். பூசாரி ஒரு தேங்காயை உடைத்து அதில் இருந்த தண்ணீரை எல்லோருடைய கையிலும் கொஞ்சமாக ஊற்றிக் கொடுத்தார். கடைசியில் விநாயகருக்குப் பிரசாதம் படைக்கும் சடங்கும் முடிந்தது. இப்போது சிலையைக் கடலுக்குக் கொண்டு போய்க் கரைக்கும் வேலை மட்டும்தான் மீதி இருந்தது. அரை நிர்வாணமான ஐந்தாறு பேர் முன்னால் வந்தார்கள். “சாஹிப். நான் கொண்டு போறேன். நாலனா தந்தாப் போதும். ரெண்டனாக்கு நான் எடுத்துட்டுப் போறேன்” இப்படி கூட்டம் கூடி போட்டி போட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு நடுவில் பலசாலியான ஒரு ஆள் முன்னால் வந்தான். “சாஹிஃப்புக்கு என்ன விருப்பமோ அதக் கொடுத்தாப் போதும்”. கோடே காங்கரர் அவனை உற்றுப் பார்த்தார்.

“அரை நாழிகை தூரம் கடல் தண்ணியில கொண்டு போய் கரைக்கணும். முடியுமா?”


“என்னோட மூக்கு முங்குற மட்டும் ஆழத்துக்குப் போனாப் போதுமில்லயா?”. காக்கி நிறத்தில் நீண்ட கால்சட்டை போட்டுக் கொண்டிருந்த அந்த வாலிபன் விநாயகர் சிலையை அடிப்பலகையோடு எடுத்து தலையில் வைத்துக் கொண்டு கடலில் இறங்கினான். மாலை நேரத்தின் வண்ணமயமான வானம்.

சௌபாத்தி கடலில் பரந்து விரிந்து கிடக்கும் சேறும் சகதியுமான மெல்லிய நீர்ப்பரப்பில் வானத்தின் அழகு நிறம் பிரதிபலித்து ஆடியசைந்து கொண்டிருந்தது. இருட்ட ஆரம்பித்திருந்தது. சிலைகளைக் கரைக்க கடலில் வெகுதூரம் போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த மனிதர்களுடைய நிழல்களும் மின்மினிப்பூச்சிகள் போல மின்னிக் கொண்டிருந்த செயற்கை வெளிச்சங்களும் பளபளக்கும் கடல்நீர்ப் பரப்பின் பின்னணியில் சங்கமித்துக் கொண்டிருந்தன.

விநாயகருடைய உணவுப் பொட்டலத்தை அன்று பரிகாசம் செய்ததால் சபிக்கப்பட்ட சந்திரன் ஒரு இடுங்கிப்போன சிரிப்போடு மலபார் குன்றுகளில் ஒளிந்துகொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். கோடே காங்கரர் விநாயகரைத் துதி பாடும் நாமங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அரை மணிநேரம் கழித்து அந்த வாலிபன் காலியான தட்டுடன் திரும்பி வந்தான். “சாஹிஃப். தன்ணியில மூழ்கியே போயிருப்பேன். எப்படியோ உயிர் பிழைச்சேன்”. அவன் தட்டைக் கீழே வைத்து கால்சட்டையில் தண்ணீரைப் பிழிந்து கொண்டு சொன்னான்.

அவனுடைய உடல் நடுங்கியது. அவர் பாக்கெட்டுக்குள் கையைவிட்டு இரண்டு காலனா நாணயங்களை எடுத்து அவனுக்கு நேரே நீட்டினார். அவன் அந்த நாணயங்களை துச்சமாகப் பார்த்தான். வாங்கத் தயாராகவில்லை. “என்ன! ரெண்டு பைசாவா! எனக்கு வேணாம். நாலனா தரணும். மூனு அனாவாச்சும் தரணும்”. “விருப்பப்பட்டதத் தந்தா போதும்னுதானே நீ சொன்ன? ரெண்டு பைசா தாராளமாப் போதும்”.

“நீங்க என்ன சொல்றீங்க? எவ்வளவு கனம் தெரியுமா? சேத்திலயும் தண்ணியிலயும் கழுத்து வரை முங்கிதான் சிலயக் கரைச்சேன்”

“ஒரு பைசா கூட கூடுதலா கொடுக்கமாட்டேன்”

“சாஹிஃப். நான் பட்டினி கிடக்கற ஒரு ஏழை. ஒரு நேரச் சாப்பாட்டுக்குள்ள ரெண்டு அனாவாச்சும் தயவுசெஞ்சு தரணும்”

“உன்னோட கதயயெல்லாம் கேக்க நான் தயாராயில்ல. மரியாதயா பைசாவ வாங்கிகிட்டுப் போ”

“நீங்க இந்தக் கொண்டாட்டத்துக்கெல்லாம் எவ்வளவு பனம் செலவழிச்சீங்க? என்னோட உழைப்புக்குரிய கூலியயாச்சும் எனக்குத் தரக்கூடாதா? போகட்டும். ஒருநேர ஆகாரத்துக்கு உள்ள பைசா கொடுத்தாக்கூட போதும். பசிக்குது. அதுதான். ஒன்னரை அனாவாச்சும் தயவுசெஞ்சு...”

“டேய். உன்னோட தத்துவத்தயெல்லாம் கேக்க நான் விரும்பல. ஒத்தப் பைசா கூட தரமாட்டேன். இது வேணுமா? இல்லாட்டாப் போ”

“சாஹிஃப். போகட்டும். ஒரு அனாவாச்சும் கூடக் கொடுங்க”

“ஊஹும். தரமாட்டேன்”

“அரையனாவாச்சும் தர்றதுதான் நல்லது. இல்லாட்டா நீங்க கேக்க விருப்பப்படாத ஒன்னு என்னோட வாயிலேர்ந்து வரும்”

அவருடைய முகம் சிவந்தது.

அவர் அந்த வாலிபனுக்கு அருகில் போனார். “என்னடா தெம்மாடி! நீ என்ன சொல்லுற!”

“சாஹிஃப். கோவிச்சுக்காதீங்க. அரையனா கூடக் கொடுத்துட்டுப் போங்க”

“தரமாட்டேண்டா... தரமாட்டேன். இத வேணும்னாப் பொறுக்கி எடுத்துக்க”

அவர் நாணயங்களை மண்ணில் எறிந்தார்.


அந்த வாலிபன் கோபமும் நிராசையும் அருவருப்பும் கலந்த பாவத்தில் அவரைப் பார்த்தான். பிறகு குனிந்து அந்த நாணயங்களைப் பொறுக்கி எடுத்து நிமிர்ந்து நின்று கொண்டு சொன்னான்.

“நான் அதச் சொல்லிடறேன். உங்களோட பிள்ளையாரைத் தூக்கிகிட்டுப் போன நான் ஒரு முஸ்லீம்!”. அவருடைய கண்களில் இருட்டு ஏறியது. காதுகள் அடைத்துக்கொண்டன. தலைக்குள் ஒரு கூக்குரல் முழங்கியது. அப்போது அவன் அங்கேதான் இருந்தான். ஆனால் அவருக்கு ஏதாவது செய்வதற்கும் சொல்வதற்கும் முன்னால் அவன் அங்கே இருந்து எங்கோ மறைந்து போனான்.

அன்று ராத்திரி கோடே காங்கரர் நாசிக் போகும் வண்டியில் ஏறினார். அங்கே இருந்த பெரிய விநாயகர் கோயிலுக்குப் போனார். பிராயச்சித்தமாக இருநூறு ரூபாய் அடைத்த பிறகு, பெரிதாக ஒரு பூசையையும் நடத்தினார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/translation/p25.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License