இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

மண்ணிலிருந்து ஒரு குரல்

மலையாளம்: வி. வி. குமார்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


பழமையான ஏதோ ஒரு துக்கம் அப்பாவுடைய மனதை முற்றிலும் வேட்டையாடுவதாகப் பல வேளைகளிலும் எனக்குத் தோன்றுவதுண்டு. சில நேரங்களில் அப்பா மலையை நோக்கிக் கண்களை நட்டு வைத்துச் சும்மா இருப்பார். இல்லாவிட்டால் நிலா வெளிச்சத்தில் அப்படியும் இப்படியுமாக ஒரு உலாத்தல். ஒரு நாள் மலை முகட்டில் நட்சத்திரங்கள் பூத்துக் குலுங்கிய ஒரு ராத்திரியில் ஆகாயத்தில் நட்டிருந்த அவருடைய கண்கள் கண்ணீரால் நிரம்பித் தளும்புவதை நான் பார்த்தேன்.

அப்புறம் ஒரு நாள் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் வெளியில் சென்ற பிறகுஅவர் மட்டும் திருப்பலி நடக்கும் மேடையை நோக்கி கைகளை நீட்டி அழுவதைப் பார்த்த போது என்னுடைய மனது சுக்குநூறாக உடைந்து சிதறியது.

“எதுக்காக அப்பா இப்படி அழற?” என்று கேட்பதற்கான துணிச்சல் அப்போது எனக்கு இல்லை.

ஒன்று துக்கக்கரமான ஏதோ நினைவுகள் அவரைத் துன்பப்பட வைக்கலாம். அப்படி இல்லையென்றால், எப்போதோ நடந்த ஏதோ காயத்தால் இந்த முகமூடி போட்ட மர்மமான துக்கமும் மனதுக்குள் வெந்து உருகும் வேதனையும் அவரைத் துரத்திக் கொண்டிருக்கலாம். நான் ஊகித்தேன். பனி மூடிய ஒரு ராத்திரியில் அப்பா வருவதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்.

வெளித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த அம்மா சொன்னாள். “உனக்குத் தெரியுமா? உன்னோட அப்பா வாழ்க்கை ஒரு நிலையில்லாத பயணம். உனக்குத் தெரியுமா? உன்னோட அப்பாவும் அம்மாவும் எப்படி இந்த மலைக்கு வந்து சேர்ந்தோம்னு? ஜில்லிட்டு விரைத்துப் போன நான் அம்மாவுடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“திட நாட்டுலதான் நானும் உன்னோட அப்பாவும் பிறந்து வளந்தோம். போட்டுகிட்டு இருந்த துணிக்கு மாத்துத் துணி இல்லாமக் கஷ்டப்பட்டுகிட்டு இருந்த காலம். மத்தியான ஒரு வேளை கஞ்சிக்குக்கூட வழியில்லாத வாழ்க்கை. பசி பட்டினியால சோந்துபோய் அலைஞ்சு திரிஞ்சப்பதான் உன்னோட அப்பாவும் நானும் கணக்கால் அவுசேப் அப்பாவும் சாக்கோச்சனும் காட்டுக்குப் போய் வாழலாம்னு தீர்மானிச்சோம்.


குலுங்கியும் ஆடிக்கிட்டும் வந்தப் பேருந்தில் எவ்வளவு நேரம் பயணம் செஞ்சோம்னு தெரியுமா? உப்பு தர கடைத்தெருவுல பேருந்து திரும்பறதுக்கு நடுவுல ஒரு தேநீர்க் கடயப் பாத்து நாங்க வண்டியிலேந்து இறங்கினோம். தேநீர்க்கடைக்காரன் வர்கீஸ் மாப்ள கையில காசு இல்லாட்டாலும் பரவாயில்லைன்னு எங்களுக்கு புட்டயும் சுடச்சுடத் தேநீரையும் கொடுத்தாரு.

பசியில அலைஞ்சு திரிஞ்சதுனால அன்னிக்கு சாப்பிட்ட அது எல்லாத்தோட ருசியும் இப்பவும் இதோ இந்த நாக்குல இருக்கு. வர்கீஸ் மாப்ளதான் இந்த இடத்த எங்களுக்கு சுலபமா கிடைக்கற மாதிரி செஞ்சாரு. ஊர்ல இருந்த மூனரை செண்ட் நிலத்த வித்து வந்த காசுல உப்புத் தரயில எல்லாருமா சேந்து மூனு ஏக்கர் நிலம் வாங்கினோம். ஒத்துமையா எல்லாரும் ஒரே மனசோட பயிர் செஞ்சோம்.

ராத்திரி பகல்னு பாக்காம முதுகெலும்பு உடயற மாதிரி வேல. மூனு குடிசைங்களப் போட்டோம். புல்லு வேஞ்சு கூரயப் போட்டோம். அப்ப... அதோ வருது ஒரு சட்டம். வனத்துறையோட எஜமானனுங்க வீட்டச் சுத்தி வளைச்சாங்க. கஞ்சிக்குக்கூட வழியில்லாம ஊர விட்டு வந்தவங்கன்னு நாங்க சொன்னாலும் அவுங்க கேக்கற மாதிரி இல்ல.

ஒரு நாள் பொழுது விடியற நேரத்துல அப்பா வெளியில இறங்கினப்ப அங்க தலயில மப்ளர சுத்திகிட்டு மூனு நாலு பேரு தோட்டத்துல வாழ எல்லாத்தயும் வெட்டிகிட்டு இருந்தாங்க. உன்னோட அப்பா மரம் வெட்டற பிச்சுவா கத்தியோட படியிறங்கினாரு. கூடவே சாக்கோச்சனும் அவுசேப் அப்பாவும் அலறிகிட்டே ஓடி வந்தாங்க.

“எவண்டா அவன்? என்னோடத் தோட்டத்துக்குள்ள புகுந்தது?”

உங்கப்பாவுக்கு அந்த அளவு ஆக்ரோஷம் வரும்னு அன்னிக்குத்தான் எனக்குத் தெரிஞ்சுச்சு. அன்னிக்கு அலறியடிச்சுகிட்டே ஓடின அந்த ஆளுஞ்க அப்புறம் இந்தப் பக்கம் தலயவச்சுக்கூடப் படுக்கல”

ஒரு மழைக்கால ராத்திரி. அலறலைக் கேட்டுதான் நான் ஓடினேன். அப்பா முற்றத்தில் ஏலச்செடிகளுக்கு நடுவில் விழுந்துகிடக்கிறார். அம்மாவும் நானும் அலறியடித்துக் கொண்டு ஓடினோம். அப்போதுதான் தெரிந்தது. அப்பா விழவில்லை. மண்ணில் காதை கூர்மையாக்கி வைத்துக் கேட்கிறார். ஓடி வந்த எங்களை உதட்டில் விரலை வைத்து அமைதியாக இருக்கச் சொல்லிய அப்பா சொன்னார்.


“பாரு. பூமிக்குள்ள ராட்சச பனிப்பாறைங்க உருகிப் பிளக்கற சத்தம் கேட்குது. மண் பிரளயம்தான். ஜோஸ். காத நீ கூர்மையாக்கிக்கிட்டு கேளு. அவன் வரான். அவன் வரான்”. நாங்கள் அப்பாவைப் பிடித்து எழுந்திருக்க வைத்தோம். உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்த வெள்ளை நிறக் கற்களை தட்டிவிட்டுக்கொண்டே அப்பா சொன்னார்.

இந்தக் கல்லுங்கள தூக்கிப் போட்டுடாத போஸ். நீ அன்னிக்கு செஞ்சது மாதிரி இது எல்லாத்தயும் கண்ணாடிக் குவளையில போட்டு வை”. அப்பா என்னுடைய பெயரை தவறாகத்தான் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு நானும் அம்மாவும் அழுதோம். “அப்பாவுக்கு என்ன ஆச்சு கர்த்தரே?”. அப்பாவை வராந்தாவில் இருந்த சாய்வு நாற்காலியில் உட்கார வைத்தேன். அம்மா தலையைத் துவட்டிவிட்டாள். எதையோ புலம்பிக்கொண்டு அவர் நாற்காலியில் சாய்ந்தபடி தூங்கிப்போனார்.

எவ்வளவு பலவீனமானவன் நான் என்று சொல்லாமல் சொல்வது போல அப்பாவுடைய நெஞ்சு உயர்ந்து தாழ்வதைப் பார்த்து எனக்கு வேதனையாக இருந்தது. நான் சத்தம் போட்டு அழுதேன். அன்று அப்பா தூங்கிய பிறகு வெளியில் பெய்து கொண்டிருந்த பேய் மழையைப் பார்த்துக் கொண்டே அம்மா எனக்குத் தெரியாத ஜோசப் சித்தப்பாவுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

உனக்குத் தெரியுமா? உனக்கு ஒரு சித்தப்பா இருந்தாரு” அதை ஒரு நடுக்கத்துடன் நான் கேட்டேன். “அப்படின்னா அவரு இப்ப எங்க?”

“நீ பிறக்கறப்ப அவனுக்கு எட்டு வயசு. அந்த சித்தப்பாவக் கூப்பிட்டுதான் அப்பா இன்னிக்கு அழுதாரு. ஜாக்கிங்கற நாயும்அவனோடவே இருந்துச்சு. அவுங்க ரெண்டு பேரும் சேந்து இந்தக் காட்டயும் மலையையும் சலிச்சு போட்ட மாதிரி நடப்பாங்க.

முன்னால அவன் ஓடறப்ப அவனுக்குப் பின்னாலயே ஜாக்கியும் ஓடும். அவன் நல்லாப் பாடுவான். அப்பா ரப்பர வெட்டறப்ப கப்பக் கிழங்கு களை எடுக்கறப்பந ஏலத்துக்கு உரம் போடறப்ப பாடிக்கிட்டே அவன் அப்பாவோடவே இருப்பான். கூடவே ஜாக்கியும்”. இதைச் சொல்லி அம்மா திண்ணையில் இருந்த பழைய துருப்பிடித்த ராலி சைக்கிளை வெறுமையாகப் பார்த்தாள்.

பட்டென்று அம்மா விம்மி விம்மி அழுதாள். “அதோ இருக்கே அந்த சைக்கிள்லதான் மூனு பேரோட சவாரியும். சாத்தனோட திருவிழாவப் பாக்கவும் முனியறயப் பாக்கவும் அவுங்க ரெண்டு பேரு கூட ஜாக்கியும் மலயேறிப் போச்சு. அப்படி ஒரு நாள் காஞ்சியாத்துல சைக்கிள் வித்த நடக்குதுன்னு கேள்விப்பட்டு அங்கப் போனாங்க.

ஒரு வாரம் அந்த வித்த நடந்துச்சு. அதப் பாத்துட்டு வந்த நாள் முதலே ஜோசப்பு எப்பப் பாத்தாலும் சைக்கிள்லதான் சுத்தினான். சைக்கிளோட மல்லாந்து படுத்துகிட்டு சக்கரத்த உதச்சப்ப தலகுப்புற விழுந்தான். அதுக்கு அடுத்த ரெண்டு நாள்லயும் அப்பா வேலைக்குப் போனப்ப, அப்பாகிட்ட சொல்லாம எங்கிட்ட சொல்லிட்டு சைக்கிள் வித்தயப் பாக்கப் போயிட்டான்.

ஒரு நாள் அப்பா சாயங்காலச் சந்தையிலேர்ந்து திரும்பி வர்றப்ப ஜோசப் சைக்கிள் வித்த காட்டற ஆளுக்கு முன்னால நின்னுகிட்டு ஒரு கோழியத் தூக்கிப் பிடிச்சு ஏலம் விட்டுகிட்டு இருந்தான். “ஒரு தடவ.. ரெண்டு தடவ.. மூனு தடவ...” அப்பா அவனைப் இடிச்சு இழுத்துகிட்டு வீட்டுக்கு வந்தாரு. கம்பு உடயற மட்டும் அடிச்சாரு. தடுக்கப்போன எனக்கும் அடி விழுந்துச்சு.

ராத்திரி படுத்துக்கறப்ப அப்பா எங்கிட்ட கேட்டாரு. “ஏண்டி. எத்தன அடிச்சப்பவும் அவன் அழலயே? கல்லு மாடிரி மூஞ்சிய வச்சுகிட்டு நின்னுகிட்டு இருந்தானே தவிர, அவன் வேற எந்த உணர்ச்சியயும் காட்டலயே?”

அன்றைக்கு ராத்திரி ஜோசப்பும் ஜாக்கியும் எங்கே என்று தெரியாமல் மறைந்து போனார்கள். மழை இரு மடங்காகப் பெய்ய ஆரம்பித்திருந்தது.

அம்மா மழையைப் பார்த்து விதும்பினாள். மழைத்தண்ணீர் பாய்ந்து வேகமாக ஓடிப் பாறைகளுக்கு நடுவில் பாய்ந்து கொண்டிருந்தது. “விடிகாலையில ஜோசப்பக் காணலைன்னு தெரிஞ்சப்ப அப்பா அலறிகிட்டே ஓடினாரு. மலையில பள்ளத்துல எல்லா இடத்துலயும் தேடினாரு. கூடவே வர்கீசும் அவுசேப் அப்பாவும் போனாங்க. எப்பப் பாத்தாலும் பாடிகிட்டே வேல பாத்துகிட்டு இருந்த உன்னோட அப்பா அதோட மௌனமாயிட்டாரு.

அப்புறம் யார் யாரோ ஜோசப்ப சைக்கிள் வித்த நடக்கற இடத்துலப் பாத்ததா சொன்னாங்க. அவன் இப்ப பெரிய வித்தைக்காரனாயிட்டான்னும் காஞ்சியாத்துல அவன் பூமிக்கு உள்ள மூனு மணி நேரம் இருந்து ஆரவாரமான கைத்தட்டலுக்கு நடுவுல மேலே வந்தான்னும் சொன்னாங்க. அப்ப அப்பாவோட கண்ணுலேர்ந்து கண்ணீரு வழிஞ்சோடிகிட்டே இருந்துச்சு”

ஒரு மழைக்கால ராத்திரியில் அப்பா எதுக்காக மண்ணில் படுத்து பூமிக்குள்ளே காதை வைத்து கேட்டார் என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. அப்பா அளவுக்கு வெளிக்காட்டவில்லை என்றாலும், அம்மா உள்ளுக்குள் புகைந்து புகைந்து ஒரு நாள் போய்ச் சேர்ந்தாள். அன்றைக்கு அடுத்த நாள் அப்பா திடீரென்று திடுக்கிட்டு எழுந்து யார் பெயரையும் சொல்லாமல் ஆக்ரோஷமாகக் கத்தினார்.


“யாருடா இந்த விளக்க எல்லாம் அணைச்சது? எதுக்காகடா இந்த ஜன்னல்களயெல்லாம் மூடி வச்சிருக்க?”. அப்பா பைத்தியம் பிடித்தவரைப் போல ஓடினார். எல்லா ஜன்னல்களையும் மட்ட மல்லாக்கத் திறந்துவிட்டார். எல்லா விளக்குகளையும் போட்டு வராந்தாவில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து இருட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்புறம் அவர் சொன்னார். “ஜோஸ். உனக்குத் தெரியாது இல்லயா? அவளுக்கு வீட்ட அடைச்சு வச்சிருக்கறது பிடிக்காது”

அப்பா விம்மி விம்மி அழுதார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p32.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License