இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

பணம் முக்கியமில்லை

மலையாளம்: சி. வி. ஹரீந்திரன்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


”இருட்டு நிறஞ்ச என்னோட வாழ்க்கையில நம்பிக்கையோட இன்னொரு நாள். வாழ்க்கையில பல கட்டம். பலப்பல நாடுங்க. பல கலாச்சாரங்க. இந்த எல்லா வழியிலயும் கடந்து போன கொஞ்ச வருஷங்க. எல்லாத்தயும் கை விட்டுட்டுத்தான். ஆமாம். பிறந்து வளந்த மண்ணுல தன்னந்தனியாளா...” மனதின் சுவர்கள் மீது மோதிமோதி பிரதிபலித்துக் கொண்டிருந்த அந்த வார்த்தைகளின் மீது அறையின் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த பழைய பெண்டுலம் கடிகாரத்தில் இருந்து முழங்கிக் கொண்டிருந்த மணியோசை அவன் மீது பதிந்த போது மேனன் மெதுவாகக் கண்களைத் திறந்தான்.

நன்றாகக் களைத்துப் போயிருந்தான் என்றாலும் எதையோ யோசித்துக் கொண்டே அவன் படுக்கையை விட்டு எழுந்திருந்தான். சில உறுதியான தீர்மானங்களுடன்தான் மேனன் அவசரகதியில் சென்று கொண்டிருந்த தன்னுடைய வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினான்.

“தனக்குப் பின்னால் தனக்குன்னு ஒரு நிரந்தர வாரிசைக் கண்டுபிடித்து, தனக்கு இருக்கும் எல்லாச் சொத்துகளையும் அவனுடையப் பெயருக்கு மாற்றி எல்லாவற்றையும் அவனுடையக் கையில் ஒப்படைத்துச் சுதந்திரமாக, மீதி இருக்கும் காலத்தை அவனோடு சேர்ந்து வாழ்ந்து முடிக்க வேண்டும்” மேனன் இதற்காக எல்லா முன்னேற்பாடுகளையும் செய்திருந்தான்.

காலைக்கடன்களை முடித்த பிறகு அவன் வாசல் திண்ணையில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து செய்தித்தாளின் பக்கங்களில் கண்களை ஓடவிட்டான். தலைப்புச் செய்திகள், மற்றவற்றையும் ஒரு தடவை வேகமாக வாசித்து முடித்த பிறகு ஒரு குட்டித் தூக்கத்தில் நழுவி விழுந்தான். “அவசரகதியில் ஓடிப்போன வாழ்க்கையில பலதும் எனக்கு நஷ்டமாப்போச்சு. குடும்பம். ஆரோக்கியம். நண்பர்கள். கடைசியா எல்லா அவசர வேலைகளயும் உதறி விட்டுட்டு நான், இதோ நானாக வாழ முடிவு செஞ்சிருக்கேன்.


கணக்குங்க... வரவு செலவு... நேர நெருக்கடிகளும் இல்லாத என்னோட தனிப்பட்ட வாழ்க்கைக்கு நான் திரும்ப வந்திருக்கேன். ஒரு நீண்ட வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வச்சு இதோ நான் என்னோட பிறந்த ஊருக்கு வந்திருக்கேன்” அவனுடைய எண்ணங்களுக்கு இடைவேளை கொடுத்து, சாய்வு நாற்காலிக்குப் பக்கத்தில் இருந்த டீப்பாயில் மொபைல் சிணுங்க ஆரம்பித்தது.

சிறிதும் ஆர்வமில்லாமல்தான் அவன் போனைக் கையில் எடுத்தான் என்றாலும், அதன் ஸ்கிரீனில் பளிச்சிட்ட டாக்டர் டிக்ரூஸ் என்ற பெயர் அவனை அந்த அழைப்பை எடுக்க தூண்டிவிட்டது. ஜெர்மனியில் அவனுக்குச் சிகிச்சை கொடுத்த டாக்டர்தான் டிக்ரூஸ். ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பு, சுயமாக டயாலிசிஸ் நடத்துவதற்கு உரிய சில ஏற்பாடுகளை செய்தும், அவசர நேரங்களில் ஆலோசனை செய்யவும் எர்ணாகுளம் ஹாஸ்ப்பிட்டலில் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை தொடர்புபடுத்தி அவர் கொடுத்திருந்தார். என்றாலும் ஒவ்வொரு நாளும் போன் மூலம் அவர் மேனனை அழைத்து உடல் நலம் பற்றி விசாரித்துக் கொண்டேயிருந்தார்.

“குட் மார்னிங் டாக்டர். யெஸ் ஐ ஹேட் இட். ஷூர். நோ ப்ராப்ளம். நோ ஐ வில் மேனேஜ் தட். ஓகே. ஓகே. ஹேவ் எ நைஸ் டே”. போன் இணைப்பைத் துண்டித்த பிறகு மடியில் இருந்த செய்தித்தாளை மடக்கி டீப்பாயில் வைத்துவிட்டு அவன் மெதுவாக எழுந்திருந்தான்.

“முன்பு எல்லாம், என்னோட ஒவ்வொரு காரியத்தயும் கவனிச்சு அதப் பத்தியெல்லாம் ஞாபகப்படுத்தறதுக்கும் செஞ்சு தர்றதுக்கும் பல பேரு போட்டி போட்டுகிட்டு என்னைச் சுத்தி இருந்தாங்க. எனக்குப் பிடிச்சதயும் பிடிக்காததயும் அவுங்க எல்லாரும் சேந்து கட்டாயப்படுத்தியும் படுத்தாமயும் செஞ்சாங்க. ஆனா இப்ப இதோ நான் ஒத்தயா. எதுவும் என்னோட சௌகரியத்துக்குத்தான். என்னோட நேரத்துக்கு. எல்லாத்தயும் நான் தனியா செய்யறேன். இந்தச் சுதந்திரத்த நான் அனுபவிக்கறேன். ரசிக்கிறேன்”

சோர்ந்து போயிருந்த முகத்தில் ஒரு சிறிய வெளிச்சத்தைப் பரப்பிவிட்டு சுய ஹோம் டயாலிசிஸ் செய்ய அவன் அறைக்குப் போனான். தீவிரமான நீண்ட நாள் சிறுநீரக நோய் இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சுயமாக டயாலிசிஸ் செய்ய தன்னுடைய வயிற்றுப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த குழாய் வழியாக ப்ரத்யேகமாக தயாரித்து வைத்திருந்த திரவத்தை அவன் பெரிட்டோனியத்துக்குள் செலுத்தினான்.

தொடர்ந்து குழாயின் மூடியை அடைத்த பிறகு மெதுவாகப் படுக்கையில் சாய்ந்தான். படுக்கையில் இருந்த பிறகு, மெதுவாக தன்னுடைய மேக் புக் ப்ரோமை ஆன் செய்து நெட்டை ஆக்டிவாக்கினான். டச் பேட் வழியாக சுண்டு விரலை இயக்கி கூகுல் குரோமில் தன்னுடைய ஜி மெயிலை ஓப்பன் செய்தான். புதிதாக வந்த மெயில்களுடன் இணைக்கப்பட்டிருந்த போட்டோக்களையும் பயோடேட்டாக்களையும் விரிவாக ஆராய்ந்தான்.


ஒரு மெயில் கூட திருப்தி தருவதாக இல்லை. லாக் அவுட் செய்த பிறகு அவன் தன்னுடைய மொபைலை எடுத்து டயல் செய்து காதோடு சேர்த்து வைத்தான். “ஹலோ மிஸ்ட்டர் ப்ரவீன். நீங்க அனுப்பின எல்லா மெயிலயும் நா ஓப்பன் செஞ்சுட்டேன். ஆனா வழக்கம்போல அதெல்லாமும் என்ன நிராசைப்படுத்திச்சு. நீங்க அனுப்பினது எல்லாம் சரியாயிருக்கலாம். ஆனா பயோடேட்டாவயும் தனி மனுஷங்களயும் பாத்து ஆள தேர்ந்தெடுக்கணும்னு நான் நினைக்கல.

இத நான் பல தடவ வக்கீல்கிட்ட சொல்லியிருந்தேன். சில சமயத்துல ஒரே பார்வையில எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு ஆளு. அந்த ஆளு யாரா வேணுமானாலும் இருக்கட்டும். எப்படிப்பட்ட சூழ்நிலையில வளந்தவனா இருந்தாலும் சரி. எப்படிப்பட்ட சுபாவம் இருக்கறவனா இருந்தாலும் சரி. எல்லாத்தயும் அவனுக்குக் கொடுக்கணும். என்னோட வீட்டயும் சம்பாதிச்சது எல்லாத்தயும். கேக்கறவங்களுக்கு விசித்திரமா தோணலாம்.

சில நேரத்துல எனக்குப் பைத்தியம்னு கூட சொல்லலாம். அதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையில்ல. எங்கிட்ட இருக்கறது எதயும் எங்கேயிருந்தும் நான் எடுத்துகிட்டு வந்தது இல்ல. எல்லாம் எங்கிட்ட வந்து சேந்ததுதான். அதயெல்லாம் எனக்கு சரின்னு படற ஒரு ஆளுகிட்ட கொடுத்துட்டு மீதி காலத்த அவனோட சேந்து வாழணும். அவனுக்காக வாழணும். அந்த வாழ்க்கைய ரசிச்சு வாழணும்.

வக்கீல். நீங்க நிராசப்படவேணாம். எங்கயாச்சும் அப்படி ஒரு ஆளு இருப்பான். நாம கண்டுபிடிக்க மட்டும்தான் செய்யணும். நாம இந்த முயற்சிய ஆரம்பிச்சுட்டு அதிக நாள் ஆகல இல்லையா? நீங்க உங்க முயற்சிய தொடருங்க. நானும் என்னோட வழியில தேடறேன். இப்பவும் நான் நல்ல நம்பிக்கையோடதான் இருக்கேன். அடுத்த நாளே அது சம்பவிக்கும்னு என்னோட மனசு சொல்லுது. ஓகே. ஓகே. குட் பை”

அவனுடைய வீட்டில் சமையல் வேலைக்கும் வெளி வேலைகளுக்குமாக பகல் நேரத்தில் மூன்று நான்கு வேலையாட்கள் இருந்தார்கள் என்றாலும் அவர்கள் எல்லோரும் முடிந்தவரை அவனுடைய கண்ணில் படாமல் இருக்கவே முயற்சி செய்தார்கள். காலை ஆறு மணி முதல் சாயங்காலம் ஆறு மணி வரைதான் அவர்களுடைய வேலை நேரம். அவசரகதி வாழ்க்கையை வெறுத்து தனிமையை விரும்பும் அவன் அவர்கள் தன் கண்ணில் படாமல் இருக்கவேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்திச் சொல்லியிருந்தான்.

கிடைக்கவேண்டியதற்கு அதிகமாகவேச் சம்பளத்தோடு மற்றவையும் கிடைத்ததால், அவனுடைய விருப்பம் போல அவர்கள் தங்களுடைய வேலைகளைச் சரியாகச் செய்து மறைந்து நின்று அவனைத் திருப்திப்படுத்தினார்கள். தோய்த்து காயவைத்து இஸ்திரி போட்ட துணிகள் அதனதன் இடங்களுக்கு ஒழுங்காகப் போய்ச்சேரும்.

வேளாவேளைக்குச் சாப்பாடு டேபிளில் வந்து தயாராக அமர்ந்துகொண்டன. சாப்பிடும்போது பழைய மலையாள சினிமாப்பாட்டுகள் மெல்லிய ஒலியில் டைனிங் ஹாலில் மிதந்து வந்தது. பிரார்த்தனை நேரங்களில் அவனைச் சுற்றிலும் சந்தன ஊதுபத்தியுடன் கற்பூரத்தின் வாசனை நிறைந்தது. இப்படி அவர்கள் அவனுக்காக எல்லாவற்றையும் அவர்கள் கவனத்தோடு செய்தார்கள்.

மத்தியானச் சாப்பாட்டுக்கு பிறகு ஒரு குட்டித்தூக்கம் போடும் அவன் எழுந்தவுடன் டயாலிசிஸ் செய்வது வழக்கம். பெரிட்டோனியத்தில் செலுத்திய திரவத்தை வெளியேற்றிய பிறகு புதியதை நிறைக்க வேண்டும். ஏறக்குறைய நாற்பது நாற்பத்தைந்து நிமிடம் எடுக்கும் இதற்குப் பிறகு கொஞ்சம் புத்தக வாசிப்பு. வாசிப்பில் இருந்து மறுபடியும் குட்டித்தூக்கம்.

அவசரமும் வேகமுமான அவனுடைய நடமாட்டம் இரவுநேரங்களில்தான். அதுவும் பத்து மணிக்குப் பிறகுதான். நகரம் தூங்க ஆரம்பிக்கும்போது அவன் தன் வெளிநாட்டு வாழ்க்கையை ஞாபகப்படுத்திக் கொள்ளும் வகையில் கோட்ட்டையும் சூட்டையும் டையையும் போட்டுக்கொண்டு போர்ட்டிக்கோவில் நிறுத்தி வைத்திருக்கும் பென்ஸ் சி எல் க்ளாசை தானே ஓட்டிக்கொண்டு நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாகச் சுற்றிவருவான்.

ஒன்றிரண்டு மணி நேரம் நீளும் அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தால் தன்னுடைய முதல் நாள் விருப்பங்கள் கண்ணோட்டங்கள் உயர்வு தாழ்வுகளின் எண்ணிக்கையை எழுதி முடித்த பிறகு, நேராக படுக்கைக்குப் போவதுதான் அவனுடைய வாடிக்கை. வழக்கமாக ராத்திரியில்தான் அவன் பயணம் செய்வான். பகலில் மிக நெரிசலாக இருக்கும் ஒரு தெரு வழியாகப் அவன் இரவில் அன்றும் வழக்கம்போல அவன் முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கும்போதுதான் ஏதோ ஒன்று அவனுடைய கவனத்தைப் பின்னோக்கி ஈர்த்தது.

அவன் காரை நிறுத்தினான். கொஞ்சம் பின்னோக்கி எடுத்தான். தெரு கடைக்காரர்கள் வீசியெறிந்துவிட்டுப் போன மிச்சம் மீதிகளுக்கு நடுவில் ஒரு மைல்கல்லின் மீது அவனுடைய கண்கள் எதையோத் தேடின. அழுது வடிந்து கொண்டிருந்த தெருவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தெளிவில்லாமல் ஒரு உருவம். கையில் நீட்டிப் பிடித்துக் கொண்டிருந்த கொசு விரட்டி மட்டையை வைத்துத் தன்னை தொந்தரவு செய்து கொண்டிருந்த கொசுக்களை அவன் மேலும் கீழும் ஆட்டி விரட்டிவிட்டுக் கொண்டிருந்தான். மட்டையில் விழுந்த கொசுக்கள் கொதித்த எண்ணையில் விழுந்த கடுகு மாதிரி வெடித்துச் சிதறின.

மேனனுடைய கண்கள் அப்போதும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. கொசுவதைக்கு ஒரு இண்டர்வெல் விட்டு அவன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபோது உண்டான வெளிச்சத்தின் உதவியுடன் மேனன் தன் கண்களில் அவனுடைய உருவத்தை பதித்துக் கொண்டான். துணியை உள்நோக்கி இழுக்கும் போது சிகரெட்டின் முனையில் தென்பட்ட பிரகாசத்தில் அவனுடைய முகம் சிவந்து துடித்ததை மேனன் கவனிக்கவேயில்லை.


திரும்ப வீட்டுக்கு போய்ச் சேரும்போது மேனனுடன் அந்த ஆளும் காரில் இருந்தான். மேனனுக்குப் பின்னால் அவனும் காரில் இருந்து இறங்கினான். நீண்டு வளர்ந்த தாடியும் முடியும். அழுக்கு படிந்த மரவுரி போல ஆடைகள். ஆக மொத்தத்தில் ஒரு பயங்கர வடிவம். போர்ட்டிக்கோவில் ட்யூப் லைட்டின் வெளிச்சத்தில் அவனைத் தெளிவாகப் பார்த்த போதும், காரில் இருந்து இறங்கும்போது உண்டாகியிருந்த அதே சந்தோஷம் கொஞ்சம் கூடக் குறையாமல் மேனனுடைய முகத்தில் விளையாடிக் கொண்டிருந்தது.

“இப்ப எதுக்கு இந்த ஆள் என்னை இங்க கூட்டிகிட்டு வந்திருக்கான்? இவனுக்கு என்ன பைத்தியமா?” தன்னை அங்கே அழைத்துக் கொண்டு வந்ததன் பொருள் புரியாமல் பிரமை பிடித்தவன் போல பார்த்துக் கொண்டிருந்த அவனை மேனன் வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனான். அவனுக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டான். புது ஆடைகளைக் கொடுத்தான். மேனனுக்குள் ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. மேனனுடைய யோசனைப்படி அவன் முகத்தை ஷேவ் செய்து பளிச்சென்று ஆனான்.

வளர்ந்து கிடந்திருந்த முடிகளை வெட்டி நீக்கினான். குளித்து புது ஆடைகளைப் போட்டுக் கொண்டான். பயங்கரவாதித்தனத்தைத் தூக்கியெறிந்து மனித வடிவம் எடுத்த அந்த ஆளை மேனன் ஒரு நிலைக்கண்ணாடிக்கு முன்னால் வந்து நிற்கச்சொல்லி அழைத்தான். தன்னுடைய பிம்பத்தோடு அவன் மேனனையும் கண்ணாடியில் பார்த்தான். அவனால் அதை நம்பமுடியவில்லை. அவனுடைய பார்வையில் ஒரே மாதிரி இரண்டு பேர்!

அந்த இரண்டு உருவங்களில் தான் எது? மேனன் எது என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நம்ப முடியாத அந்தக் காட்சியில் லயித்துப்போய் அவன் அப்படி நிற்கும்போது, அந்தக் காட்சியைத் தன் கண்களில் நிறைத்து மனதில் பதித்தபடி மேனன் தன் அறைக்கு ஓடினான். ஒரு தீவிர சிறுநீரக நோயாளி தான் என்பதையே அவன் மறந்து போயிருந்தான்.

வலுவான ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு இளம் வயதுக்காரனைப் போலத்தான் அவன் அறைக்கு ஓடினான். எல்லையில்லாத மகிழ்ச்சியோடு டேபிளுக்கு பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அதில் உட்கார்ந்துகொண்டு, தன்னுடைய டயரியையும் பேனாவையும் கையிலெடுத்து மிதமிஞ்சிய ஆவேசத்தோடு தனக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் அவன் எழுதினான்.

“நான் இதோ கண்டுபிடித்திருக்கிறேன். என்னுடைய சகலவிதமான சொத்துக்களையும் ஏற்றுக்கொண்டு, எனக்குத் துணையாக இந்த வீட்டில் என்னோடு சேர்ந்து வாழ அருகதையுள்ள ஒரு மனிதனை இதோ நான் கண்டுபிடித்திருக்கிறேன்”. ஆனால் அடுத்த அறையில் புதிய வேடத்தில் புதிய உருவத்துடன் புதிய பாவத்தில் நிலைக்கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த அந்த ஆள் வேறொன்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

“பார்வைக்கு இவனும் நானும் ஒரே மாதிரியாத்தான் இருக்கோம். ஒரே உயரம். ஒரே நிறம். ஒரே முகச்சாயல். ஏறக்குறைய ரெட்டைப் பிறவிங்க போல. இந்த ஆள் என்னை இங்கக் கூட்டிகிட்டு வந்தது, எதுக்காக வேனும்னாலும் இருக்கட்டும். இது எனக்கு கிடச்ச அதிர்ஷ்டம். இப்ப நான் இங்க வந்த விஷயம் என்னையும் இவனையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

நாளைக்கு நான் மட்டும்தா இங்க இருக்கேன்னா என்னைப் பாக்கற எவரும் நான் இந்த ஆள்தான்னு நினைச்சுப்பாங்க. அப்படி இந்த ஸாம்ராஜ்யம் என்னோடதாக மாறும். என்னோடது மட்டும். என்னோடது மட்டும். நான் இந்த ஆளா இங்க வாழனும்னா இதுக்கு அப்புறம் இந்த ஆள் உயிரோட இருக்கக்கூடாது.

இவன் மட்டும் இல்ல. இவனோட நான் இங்க வந்ததுக்கான அடையாளம் கூட எதுவும் இருக்கக்கூடாது. எல்லாத்தயும் சுவடே இல்லாத மாதிரி அழிக்கணும். விடிய இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு. அதுக்கு முன்னால எல்லாத்தயும் முடிக்கணும். எல்லா ஆதாரத்தயும் அழிச்சாகணும். இது எனக்குக் கிடச்ச மிகப்பெரிய வாய்ப்பு. இத நான் நழுவ விடக்கூடாது”

உறுதியான தீர்மானத்தோடு அவன் ஓசை எழுப்பாமல் சமையலறை இருந்த இடத்தை நோக்கி நடந்தான். அவனுடைய கண்கள் அங்கே எல்லா இடத்திலும் எதையோத் தேடின. கடைசியாக ஒரு கிறிஸ்ட்டல் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் கத்தியில் அவனுடைய பார்வை நிலைகுத்தி நின்றது. அப்போதும் மேனன் தன்னுடைய டயரியில் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p37.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License