இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

கேலுகுட்டே

மலையாளம்: எம். சந்திரப்பிரகாஷ்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


ராகுல் மத்தாய் ஒரு பீடியை எடுத்து உதட்டில் வைத்தான். அது அந்த ஆளின் ஒரு பழக்கம். அது கொஞ்ச நேரம் அஞ்கே இருந்து எரிய ஆரம்பித்த பிறகு நெருப்பைப் பற்ற வைப்பான். சில சமயம் அப்படி நடப்பதேயில்லை. பேசிய பிறகு அல்லது அடுத்தவர் சொல்வதைக் கேட்ட பிறகு அதைத் துப்பிவிடுவான். மறுபடியும் வேறொன்றை எடுத்து அந்த இடத்தில் வைத்துக் கொள்வான்.

தீப்பெட்டியை கையில் அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பான். நகரத்தில் குப்பைக்கிடங்குதான் அவனுக்கு இப்போது தலை போகிற பிரச்சனை. கேலுகுட்டேயில் குப்பைக்கூளம் அவனைக் கொஞ்சம் நஞ்சம் கவலைப்பட வைக்கவில்லை. அது அவனுடைய தலைக்குள் புகுந்து மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.

அடுக்கு மாடிக்குடியிருப்புகள் அதிகமான பிறகுதான் அஞ்கே இவ்வளவு குப்பைகள். அவன் லாலிடம் இதையெல்லாம் ஒரு உரிமையோடு சொன்னான். லால் ராகுல் மத்தாயுடைய ஒரு நண்பண் மட்டுமில்லை, அவனுடைய மனசாட்சியின் பாதுகாவலனும் கூட. “இந்த ப்ராஜெக்டை நம்மால சுலபமா முடிக்க முடியும்னு எனக்குத் தோணல ராகுல்ஜி”

ராகுல் தொண்டையைக் கணைத்துக் கொண்டு சொன்னான். அவனுக்கு யார் மீதோ பகை இருப்பது போலத் தோன்றியது. கேலுகுட்டையில் கொஞ்சம் கூடச் சுத்தம் இல்லாத வழிகளின் ஊடே நடக்கும் போது லால் அவனுடைய கிராமப்புறத்து வீட்டைப் பற்றியும் ஆஸ்த்துமாவின் வலையில் சிக்கி இருமியும் பெரிய சத்தத்துடன் மூச்சு விட்டுக் கொண்டும் வாழும் அம்மாவைப் பற்றியும் நினைத்துக் கொண்டான்.

ராத்திரிகளைப் பார்த்தால் அம்மாவுக்கு பயம். இருட்டின் ஓட்டை வழியாக குளிர் பாய்ந்து நுழைந்து வந்து சுவாசக் குழாய்களை மோதி இடிக்கும் கெட்ட கனவில் அம்மா விதும்பி விதும்பி அழுவாள். தாய்ப்பாசத்தால் பிணைக்கப்படும் ஒரு நிமிடமே மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது என்று அவனுக்குத் தோன்றியதுண்டு. அவன் சின்னக் குழந்தையாக இருக்கும் போது, அம்மாவுடைய நெஞ்சின் அரவணைப்பில் மல்லாந்து கிடந்து இளம் சூட்டை அனுபவித்த ஞாபகம் கூடிதான் அது.


“லால். நாம நாளைக்கு ஒரு இடம் வரைக்கும் போகணும்” ராகுல் மத்தாய் சொன்னான்.

“காலையில ஒரு ஒம்பது மணியாறப்ப நீங்க எனோடா ப்ளாட்டுக்கு வந்துடுங்க. நாம என்னோட கார்ல போலாம்”.

“சரி” என்று தலையை ஆட்டும் போதும் “எங்கே?” என்று லால் கேட்கவில்லை.

கேலுகுட்டேயில் மிகப் பழமையான அகோர சிவன் கோயிலுக்குதான் அந்தப் பயணம் என்று எதனாலேயோ அவனுக்குத் தோன்றியது.

இரண்டாயிரம் வருடங்களுக்கும் கூடுதலான பழமையானது என்று கருதப்படும் ஒரு கோவில் அது. மதில்கள் இடிந்து விழுந்து உள்ளேப் போகும் வழி தடைப்பட்டிருக்கும். அங்கு வருடங்களாக பூசையோ திருவிழாக்களோ நடப்பதில்லை. குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அரசு கண்டுபிடித்து வைத்திருந்த இடம் அது. முன்பு ஒரு தடவை லால் மத்தாயியோடு அங்கே போயிருக்கிறான்.

முழுக்க முழுக்க பயங்கரமான சுற்றுச்சூழல். கோவிலின் மேற்கூரையில் மிகப் பழையதாகிப் போன ஓடுகள் பல இடம் விட்டு நகர்ந்து போயிருக்கின்றன. திருக்கோயில் மட்டும் சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தது. வருடங்களாகப் பூசை நடக்காத சிவலிங்கம் பளபளப்போடு நிற்கிறது. சிவகனங்கள் வந்து திருக்கோயிலையும் திருமூர்த்தியையும் காவல் காக்கின்றன என்று ஆட்கள் நம்பினார்கள்.

அதனால் சாயங்காலம் ஆனால், அங்கே யாரும் போவதில்லை. சில இரவுகளில் சிவ தாண்டவத்தின் பெரிய சத்தங்கள் அங்கேயிருந்து கேட்கின்றன என்று சிலர் சொன்னார்கள். பூதக் கனங்களின் அட்டகாசமும் காதைச் செவிடாக்கும் மணியோசையும் செண்டை மேளத்தின் முழக்கமும் எல்லாம் அங்கே கேட்டன.

அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு லால் மத்தாயியுடைய ப்ளாட்டுக்குப் போனான். வில்லி அக்கா சமைத்திருந்த சூடான புட்டையும், கடலைப் பொறியலையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது லால் ராகுலிடம் கேட்டான். “நாம கோயிலுக்குத்தானேப் போறோம்?”- லால் ராகுலிடம் கேட்டான்.


லாலை அதிசயிக்க வைத்து ராகுல் சொன்னான்.

“இல்ல”.

“அப்பறம்?”

லாலுக்கு ஆர்வத்தை அடக்க முடியவில்லை.

“ரமேசன் பூசாரியோட வீட்டுக்கு”

லாலுக்கு ரமேஷ் பூசாரியைத் தெரியும். ரொம்பக் காலத்துக்கு முன்பு அகோர சிவனுக்கு பூசை செய்து கொண்டிருந்த பாயன்னா பூசாரியோட மகன். கேலுகுட்டேயில் குப்பைகளை அகற்றும் திட்டத்தை எதிர்க்கும் மக்கள் சங்கத்தின் தலைவன்.

புதிய கருத்துக்களையும் கண்ணோட்டத்தையும் உடைய இளைஞன். மணிப்பால் மருத்துவக் கல்லூரியில் இருந்து மருத்துவப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு கேலுகுட்டேயில் பாவப்பட்ட மனிதர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ரமேசனை லாலுக்குப் பிடிக்கும். மரியாதையும் உண்டு. மழை பெய்து நெகிழ்ந்து போயிருந்த சேற்று வழியில் ரமேசனுடைய பழமையான இரண்டு மாடிக் கட்டிடத்துக்கு முன்னால் கார் போய் நின்றபோது மணி பத்தைத் தாண்டியிருந்தது.

வீட்டுக்குள் நுழைவதற்கு முன் நீண்ட பெரிய வராந்தா. வீட்டின் திண்ணையில் அவனுடைய தொண்டர்களாக சில இளம்வயதுக்காரர்கள். அவன் ராகுல் மத்தாயியையும், லாலையும் மேல் மாடியிலிருந்த ரூமுக்குக் கூட்டிக் கொண்டு போனான்.

“கொஞ்சம் சர்க்கரத்தண்ணி குடிச்சுட்டு அப்புறம் நாம பேச ஆரம்பிக்கலாம்”. ரமேசன் சொன்னான்.

அது அந்த இடத்தில் இருந்த ஒரு விருந்தோம்பும் பழக்கம். சர்க்கரை கலந்த பச்சைத் தண்ணீர் குடித்தால் ஏற்பட்ட சோர்வு நீங்கும் என்று ஒரு நம்பிக்கை.

“சரி” ராகுல் சிரித்தான்.

விருந்தோம்பலுக்குப் பிறகு ரமேசன் விஷயத்துக்கு வந்தான்.

“சாரே. உங்க ப்ராஜெக்ட்ட ஏத்துக்கறதுல எங்களுக்கு பல கஷ்டங்க இருக்கு”

சிறிது நேரம் ராகுல் எதுவும் பேசவில்லை.

பிறகு மெதுவாக எழுந்திருந்து, ரமேசனுடைய தோளில் கையை வைத்துக் கொண்டு சொன்னான்.

“நானும் இந்த ப்ராஜெட்ட ஏத்துக்கல”

ரமேசன் நம்பமுடியாதவன் போல ராகுலுடைய முகத்தைப் பார்த்தான்.

லாலுக்கும் ஆச்சரியம்!! கேலுகுட்டேயில் குப்பைகளை அகற்ற அரசாங்கம் நியமித்த பெரிய அதிகாரியான ராகுல் அரசின் திட்டத்தை எதிர்க்கிறாரா?

லாலுக்கு எதுவும் புரியவில்லை. “நான் சொன்னது சத்தியம். உங்களோட கேலுகுட்டேயில ஒரு வேள சோத்துக்குக் கூட வழியில்லாத மனுஷங்களோடதான் நானும் இருக்கேன். அரசாங்கம் தத்தெடுக்கவேண்டிய ஒரு கிராமம் இது. அதில்லாம விஷத்த நிரப்பி கொல்றதுக்கு உரியது இல்ல எந்தத் திட்டமும்”

ரமேசனின் கண் நிறைவதை லால் பார்த்தான்.

அவன் ராகுலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு சொன்னான். “நீங்கதான் உண்மையான ஒரு மனுஷன்! இப்ப எங்களோட தலைவர்”

அந்த வார்த்தைகள் நடுக்கத்தோடு விதும்பின. லாலுக்கும் ராகுலுடைய மனதுதான்.

இருந்தாலும் அவன் சொன்னான். “ராகுல்ஜி. கலெக்டர்கிட்ட நாம் என்ன சொல்றது?”

லாலை ஆச்சரியப்படுத்தி ராகுல் சொன்னான்.

“என்னோட ராஜினாமாவ நான் கொடுத்துட்டேன். அகோர சிவனோட மண்ணு அழுக்காகக் கூடாது. மனுஷங்களோட மனசும்”

“அப்பாவப் பாக்க வேணாமா உங்களுக்கு?” ரமேசன் கேட்டான்.

“பாக்கணும்” ராகுல் சொன்னான்.

உடம்பு முழுவதுமாக தளர்ந்து கீழ் அறையில் இருக்கும் பூசாரியைப் பார்த்த போது ராகுல் வேதனையோடு சொன்னான்.

“தெய்வத்துக்கு ரொம்பப் பிடிச்சமான பூசாரி”


அதை அவர் கேட்டிருக்கவேண்டும். ஒரு சிறிய மந்தகாசச் சிரிப்பு பூசாரியுடைய முகத்தில் பளிச்சிட்டது.

விடை பெற்றுக் கொண்டு திரும்பும்போது ராகுல் ரமேசனிடம் சொன்னான்.

“இன்னிக்கு சாயங்காலம் நாங்க அந்தக் கோயில் வரைக்கும் போகணும்”

“இருட்டு மூடிடுச்சுன்னா அங்க யாரும் போறது இல்ல” ரமேசன் சொன்னான்.

“அகோர சிவன ஒரு தடவை பாக்கணும்”

ரமேசனுக்கு கேட்காது என்ற தோரணையில் ராகுல் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

“லால். வண்டிய ஓட்டு. நான் கொஞ்ச நேரம் கண்ண மூடிட்டு இருக்கேனே?” வண்டி சாவியை லாலுக்கு முன்னால் நீட்டியபடி ராகுல் சொன்னான்.

“கேலுகுட்டே முழுக்க குப்பைங்க மூடி பெரிய குப்பத்தொட்டி போல ஆயிடுச்சு. மனுஷங்க எல்லாரும் அதுக்குள்ள அகப்பட்டுகிட்டு மூச்சு விட முடியாம செத்துகிட்டிருக்காங்க.

\மரணத்தோட கையில துடிதுடிக்கற பிஞ்சுக் குழந்தைங்க. பொண்ணுகளோட முடிவில்லாத அலறல்”

“நிறுத்து!” ராகுல் அலறினான்.

லால் ஒரு அதிர்ச்சியோடு வண்டியை சட்டென்று நிறுத்தினான்.

“என்ன? என்ன ஆச்சு?”. அவன் கேட்டான்.

ராகுலுடைய முகம் வியர்வையில் குளித்திருந்தது.

“ஹோ! ஒன்னுமில்ல. ஒரு கெட்ட கனவு”

“முகத்த கழுவிட்டு கொஞ்சம் தண்ணி குடிங்க’ லால் வாட்டர் பாட்டிலை ராகுலுக்கு முன்னால் நீட்டினான்.

அவன் வெளியில் இறங்கி தண்ணீர் குடித்து பாட்டிலைத் திரும்பக் கொடுத்துக் கொண்டு சொன்னான். இனிம நான் ஓட்டறேன்”

ப்ளாட்டுக்கு உள்ள ரோடு பிரியும் இடத்தில் வண்டியை நிறுத்திய ராகுல் லாலிடம் கேட்டான்.

“நீ அம்மாவப் போய்ப் பாக்கவேணாமா?”

“ஒவ்வொரு நிமிஷமும் அம்மாவப் போய்ப்பாக்கணும்னு நினைக்கற” லால் உடனே சொன்னான்.

“வேணும்.. வேணும்.. போய்ப் பாக்கணும்”

”போயிட்டு வா” ராகுல் தொடர்ந்தான்.

“அம்மாவுக்குக் கொஞ்சம் சாமான்கள நான் வாங்கி வச்சிருக்கேன். ப்ளாட்டுல இருந்து அத எடுத்துக்க”

“அப்ப ராகுல்ஜி கோயிலுக்குத் தனியாவாப் போறீங்க?” லால் கேட்டான்.

“தனியாயில்லயே? பூத கணங்கள் இல்லயா?” ராகுல் சிரித்தான்.

“அய்யோ. அது வேணாம். நானும் கூட வர்றேன்”

“வேணாம் லால். இந்த தடவ நான் தனியாத்தான் போறேன். அது இந்த இடத்துல இருக்கற மனுஷங்களுக்கான பிரார்த்தனையும் வழிபாடும் கூட”

“எச்சரிக்கையா இருக்கணும். அங்க ஊர்ந்து போற ஜீவிங்க நிறய இருக்கு” லால் நினைவுபடுத்தினான்.

“துணைக்கு அகோர சிவன் இருக்காரில்லயா?” சொல்லிவிட்டு ராகுல் வழக்கத்துக்கு மாறாக உரத்த குரலில் சிரித்தான்.

மாலையில் ஊருக்கு போகும் இரயிலில் இருக்கும் போது லால் ராகுலை நினைத்துக்கொண்டான்.

“தன்னந்தனியா பிடிவாதத்தோட கோயிலுக்கு போறது எதுக்காக?” காரணமில்லாத ஒரு பயம் லாலுக்குள் எட்டிப் பார்த்தது.

இரண்டு மூன்று தடவை ராகுலைத் தொடர்பு கொண்டு பேச முயற்சித்தான்.

ராகுல் கிடைக்கவில்லை.

“தொடர்பு எல்லைக்கு வெளியில்” இருந்தான்.

இரவு வெகுநேரம் கழித்தே லால் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.

அம்மா தூங்காமல் சாப்பாட்டை எடுத்துவைத்துக் காத்துக் கொண்டிருந்தாள்.

“வலி கொஞ்சம் குறஞ்சது மாதிரி இருக்கு” அம்மா மகிழ்ச்சியில் இருந்தாள்.

அவள் லாலுக்கு மிகப் பிடித்த சாப்பாடு செய்து வைத்திருந்தாள்.


ருசித்துக் கொண்டு சாப்பிடும் போது அம்மா சொன்னாள். “நான் இன்னிக்கு நம்ம மகாதேவன் கோயிலுக்குப் போயிருந்தேன். அகோர சிவன் இல்ல, சிவனோட பஞ்ச முகங்கள்ல ரொம்ப அழகா இருக்கற முகம். இன்னிக்கு புரட்டாசி சதுர்த்தசி இல்லயா? அகோர சிவனோட புண்ணிய நாள்”

திடீரென்று ஏதோ ஞாபகத்துக்கு வந்தவனைப் போல, லால் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்ட மாதிரி இருமினான்.

“தண்ணி குடிப்பா. ஏதோ வேண்டாதத நினைச்சுகிட்டயா?” லால் ராகுல் மத்தாயியை நினைத்தான்.

கேலுகுட்டேயில் மனிதர்களை நினைத்தான். அங்கே கோர சிவனுடைய பூத கணங்களை நினைத்தான். அகோர சிவனை நினைத்தான்.

“அன்போட இருக்கற சிவன், அத விட அன்போட இருக்கற ராகுல காப்பாத்துவாரு” லால் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான் என்றாலும் அன்று இரவு அவன் தூங்கவில்லை.

அம்மா கவலையில்லாமல் தூங்குவதைப் பார்த்துக் கொண்டே அவன் கண்களைத் திறந்தபடி இருட்டில் கிடந்தான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p40.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License