இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

கதைத் திருடர்கள்

மலையாளம்: குசுமம் ஆர். புன்னப்புரா

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


”அது என்னோட பென்சன் காசு. வயசானவங்களுக்கு தர்ற பென்ஷன் காசு. அதுல மிச்சம் பிடிச்சது”. சிறிய வயதுக்காரனாக இருந்த போலீஸ்காரனிடம் கண்ணீரோடு வயசான அந்த அம்மா சொன்னாள். அருகில் வந்த மற்றொருவன் போலீஸ் பாணியில் கேட்டான். “ஏய் கிழவி. பொய் சொல்லாத. எத்தன ரூபா வச்சிருந்த?”

வயதான அவளிடம் இருந்து பெரியதொரு சத்தத்தோடு வந்த அழுகையே அதற்குப் பதில் கூறியது. நடந்தது முழுவதையும் ஒரு இம்மி இடுக்கு விடாமல் ஒரே மூச்சில் அவள் சொல்லி முடித்தாள். அவனுக்குப் போவதற்கு உள்ள வாகனம் வந்த பிறகும் கதையை முழுக்கக் கேட்பதற்காக அடுத்த வண்டியில் போகலாம் என்று தீர்மானித்து அவன் அங்கேயே இருந்தான்.

”மகனே. வீட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு அடகு வச்சு பொண்ணக் கட்டிக் கொடுத்தேன். கடனுக்குக் கட்ட வேண்டிய வட்டிய எடுத்துட்டுவந்தேன். நிறய நாளாயிடுச்சு. என்னோட மகளும் கட்டிக் கொடுத்த அவ புருஷன் நாயரும் செத்துப் போயிட்டாங்க. ரெண்டு பசங்களும் இப்ப என்னோட வீட்டுலதான். வட்டி கட்ட முடியாமப் போனதுனால அபராதம் போட்டு நோட்டீஸ் வந்துடுச்சு. ஜப்தி நோட்டீஸும் வந்துடுச்சு. மருந்து கூட வாங்காம மிச்சம் பிடிச்சு பேங்க்ல அடைக்கறதுக்காக எடுத்துட்டுப் போன காசு. பதினஞ்சாயிரம் ரூபா!”

மறுபடியும் அழுகை. “வீடு எங்க இருக்கு?” விசாரித்த அவன் அவளையும் அழைத்துக் கொண்டு போலீஸ் ஜீப்பில் கிளம்பினான். அவனுடைய ஒரு நண்பனின் வீடு அங்கேதான் இருந்தது.

“அந்த பக்கம்தான் இந்த ஆயாவோட வீடு இருக்கும்” நினைத்துக் கொண்டான்.

அவனுக்குப் போக வேண்டிய பேருந்து வந்தது. பேருந்தில் உட்கார்ந்திருக்கும் போதும் ஆயாவோட அழுகை முகம்தான் அவனுடைய மனதில் நிறைந்தது.


“என்ன செய்வது? அங்க இருக்கும் யாரும் ஆயாவுக்கு உதவ முன் வரல” புதிதாக வெளிவந்திருந்த அவனுடைய புத்தகத்தில் இருந்து காசு ஏதாவது கிடைக்குமா என்று தெரிந்து கொள்ளப் போய்விட்டு அவன் திரும்பிய வழிதான் அது. பணம் இல்லை. இல்லாவிட்டால் ஆயாவுடைய கையில் ஏதாவது கொடுத்து விட்டு வந்திருக்கலாம். நாட்கள் கடந்து போயின. ஒரு நாள் எதிர்பாராத விதமாகத்தான் நண்பனை அவன் வாசகர் சாலையில் சந்தித்தான். வாசிப்பு அறையில் இருந்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டபோதுதான் ஆயா தகவலை அவன் நண்பனிடம் சொன்னான்.

அவனுடைய வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி இருந்தது ஆயாவுடைய வீடு. ஆயாவைப் பற்றி நண்பனுக்கு நன்றாகத் தெரியும். ஆயாவின் வாழ்க்கை ஒரு பணக்கார ஜமீன்தார் வாழ்க்கையின் பாக்கி பத்திரம். ஆயா சொன்னது அத்தனையும் பச்சை உண்மை. கணவனை இழந்த விதவை. யாரிடமும் கடன் வாங்காமல் எப்படியோ நான்கு பெண்களைக் கட்டிக் கொடுத்தாள். நாலாவது பெண்ணைக் கட்டிக் கொடுத்த போதுதான் வீட்டை அடகுக்கு வைத்தாள். யாருக்கும் ஐந்து பைசா கூட கடனாகக் கொடுக்கக்கூடிய வசதி அவளுக்கு இல்லை. கஞ்சியானாலும் குளித்து குடி. கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்ற பழமொழியை வாழ்க்கை முழுவதிலும் பின்பற்றிய பெண்மணி அவள். இந்தத் தகவல்கள் சுற்றுவட்டாரத்தில் அதிகம் யாருக்கும் தெரியாது.

கடனை அடைக்கவேண்டும் என்று நோட்டீஸ் வந்த போது ஓடிப்போய் ஒரு வருடத்துக்குள் அடைப்பதாக வாக்கு கொடுத்துவிட்டு வந்தாள். இந்த நிகழ்வு போலீஸ்கார இளைஞனுடைய மனதில் நிறைந்து கிடந்தது. எப்போதோ அது எழுத்து வடிவத்தில் வெளியில் வந்தது. ஒரு நாள் காகிதத்தில் எழுத்துகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து எழுதி முடித்தான். அது முழுவதும் ஒரு உண்மை சம்பவத்தைக் கூறும் நாவலாக மாறியது.

மனதிற்குள் நீண்ட மௌனம் உண்டாகும்போது நிம்மதி ஏற்படும். எழுத்துக் குவியல்கள் கிறுக்கிய கதையாக மாறியது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்பனைப் பார்க்கும் போது ஆயாவைப் பற்றிக் கேட்டான்.

விருது வாங்க வேண்டும் என்பதற்காக இல்லை. கிறுக்கி எழுதி முழுமையாக்கிய நாவலை வெளியிடுவதற்காக அவன் அனுப்பினான். நாட்கள் கடந்து போயின. அந்த நிகழ்வு நடந்து இப்போது ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது. நண்பனைத் தேடி அவனுடைய வீட்டுக்குப் போனான். ஆயாவுடைய வீட்டுக்குப் போனான்.


ஆயாவின் வீட்டைச் சுற்றி போடப்பட்டிருந்த வேலிக்கு அருகில் சென்ற போது, ஆயா முற்றத்தில் உட்கார்ந்து கொண்டு முறத்தில் எதையோப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

“ஆயா”

“யாரோ ஒரு ஆள். யாரு?. என்ன?. முன்னபின்ன பழக்கம் இல்லயே?”

“வசுமதி அம்மா”

ஆயாவுக்கு நான் வைத்த பெயர். அது என்னையும் அறியாமல் வெளியில் வந்தது.

“எனக்கு உங்கள நல்லாத் தெரியும்” அவன் சொன்னான்

“என்னோட பேரு பார்வதி அம்மா. என்னோட வீட்டுக்காரரு சாகற மட்டும் என்னை “பாரு அம்மா”ன்னுதான் கூப்பிடுவாரு. மகன் யாரைத் தேடி வந்தீங்க? என்னைத் தெரியுமா?”

“தெரியும்”

“அன்னிக்கு பேங்குக்குப் போகற வழியில நீங்களும் இருந்தீங்களா?”

“ஆமாம்”

“கஷ்டகாலம். வேறென்ன சொல்றது?

கடனை அடைக்கப் போனப்ப வட்டிக்காச திருடிகிட்டு போயிட்டான். பாவம் அவன். போகட்டும். போன ஜென்மத்துல நான் அவங்கிட்ட கடன் பட்டிருப்பேன். அதான் எடுத்துகிட்டுப் போயிட்டான். என்னை நானேச் சமாதானப்படுத்திக் கொண்டேன். அன்னிக்கு இருந்த கஷ்டத்துல அழுகையே வந்துடுச்சு. போலீஸ்காரரும் வண்டியிலல் கூட்டிக்கிட்டு வந்து வீட்டுல இறக்கிவிட்டாரு”

“அப்ப கடனை அடைக்க வேணாமா?” அவன் கேட்டான்.

“வேணும். கொஞ்சம் கொஞ்சமா சேத்துகிட்டு வரேன். நீங்க எதுக்காக வந்தீங்கன்னு இன்னும் சொல்லலயே?”

“சொல்றேன். அன்னிக்கு அந்த திருடன் திருடிகிட்டு போன காச போலீஸ்காரங்களுக்கு பயந்துகிட்டு தெருவோரமா வீசியெறிஞ்சப்ப எனக்கு அது கிடச்சது. நான் அத பேங்க்குல போட்டு வச்சேன். அதுக்கு இப்ப வட்டியும் சேந்து வந்திருக்கு. உங்களோட வீட்டக் கண்டுபிடிக்கக் கஷ்டமாப் போயிடுச்சு. இன்னிக்குதான் அது முடிஞ்சது”


பார்வதி அம்மாவால் நம்ப முடியவில்லை. “மகனே. நீ சொல்றத என்னால நம்பவே முடியல”

“நம்பணும். நம்பினாத்தான் நல்லது. கைய நீட்டி காச வாங்கிக்கங்க”. காசைக் கொடுத்துவிட்டு திரும்பி நடக்கும் போது பார்வதி அம்மா சொன்னது அசரீரீ போல அவன் காதுகளில் கேட்டது.

“பாவம். இவரு போன ஜென்மத்துல ஏதாச்சும் கடன் பட்டிருக்கணும்”

ஆயாவுடைய வாழ்க்கைக் கதையை காகிதத்தில் வடித்து பென்சன் காசு என்று பெயர் கொடுத்த போது அதற்கு இந்த அளவு மதிப்பு கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் எழுதிய அந்த நாவலுக்கு போட்டியில் பரிசு கிடைத்த விவரம் அவனுக்கும் அவனுடைய நன்பனுக்கும் மட்டும்தான் தெரியும்.

அவனுடைய உள் மனதில் இருந்து ஒரு கேள்வி. “ஒரு விதத்துல நானும் திருடன்தானே? ஆமாம். நான் மட்டும் இல்ல. எல்லா கதை எழுதறவங்களும் திருடங்கதான். மத்தவங்க இல்லாட்டா சொந்த வாழ்க்கையதான் கதையா எழுதறாங்க. சுத்தி நடக்கற சம்பவங்கள எல்லாத்தயும் சுவாரசியமான விதத்துல கண்ணும் காதும் கையும் காலும் வச்சுசேத்து எழுத்துகளாக்கி சொந்தமாக்கறாங்க. ஆக மொத்தத்துல கதை எழுதற எல்லாரும் பெரிய திருடங்க!”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p52.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License