இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

எதுவும் பேசாத கோபி

மலையாளம்: ஜோதீஸ் வசந்த்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


“அடேய் கோபி. அந்த ஃபேனைக் கொஞ்சம் போட்டுவிடேன்”, வராந்தாவுக்கு வெளியில் முற்றத்தில் உண்டாக்கிய திண்ணையில் இருந்து பாய்ந்துவந்த கோபி மின் விசிறியைப் போட்டுவிட்டு மறுபடியும் திண்ணைக்கேச் சென்று தரையைப் பார்த்துக் கொண்டு நின்றான். ஒரு லுங்கிதான் அவனுடைய ஆடை. நரைத்துப்போன முடி. மெலிந்த உடல்வாகு.

ஒரு அறுபது அறுபத்து வயது ஐந்து இருக்கும். பார்த்தால் ஒரு மதிப்பு ஏற்படும் உருவம். நான் பார்க்கும் போதெல்லாம் அவன் அந்த லுங்கியை மட்டும்தான் கட்டிக்கொண்டிருந்தான். ஒரு வேளை பல டிசைன்களில் உள்ள லுங்கிகளை வைத்திருக்கலாம். அதற்கான வாய்ப்பு உண்டு. ஏனென்றால் வாசு ஒரு தற்பெருமைக்காரன்.

அவன், பழைய காலத்துக் குறுநில ராஜாக்களின் ஒரு மனோபாவம் உள்ள ஆள். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் வைத்து அமுக்கி வெளிப்பார்வைக்கு அமைதியாக நடக்கும் ஒரு ஆள் போலப் பழகுவான். வாசுவுடைய அப்பா ஒரு பழைய ஜமீந்தார். இதற்காக வாசுவை நீங்கள் தவறாக நினைக்கக்கூடாது.

இந்த மனோபாவத்தை அவன் ஒரே ஒரு ஆளிடம் மட்டுமேப் பிரயோகிப்பது வழக்கம். ஒன்றையும் பேசாத பாவம் கோபியிடம் மட்டும்தான் இந்தக் குணத்தை அவன் வெளிப்படுத்துவான். அவன் கூப்பிட்டவுடனேயே கோபி திடுக்கிட்டு எழுந்து வந்து வேலைகளை செய்துமுடிப்பான்.

விசிறி ஓடிக்கொண்டிருந்தது. கோபி அண்ணன் மறுபடியும் திண்ணைக்குப் போய் கால்கள் இரண்டையும் இணைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தான். அதிக நேரம் அப்படி உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. “அடேய். கோபி. இந்த டீ டம்ளர கொண்டுபோய் வச்சுட்டு வா” குரல் கேட்டவுடன் கோபி குதித்துப் பாய்ந்து வந்தான்.


டம்ளரை கையில் எடுத்துக் கொண்டான். அவன் பேசுவதில்லை. நாக்குக்கு ஏதாவது கோளாறு இருக்கும். இல்லாவிட்டால் எப்போதாவது எதற்காகவாவது ஒரு தடவையாவது அவன் பேசியிருப்பான் அல்லவா? சைகை மொழியைப் பயன்படுத்தி பேசியதை நான் பார்த்ததேயில்லை. “கோபி பேசமாட்டான்” வாசு சொன்னான். அது சரிதான். அவன் பேசுவதில்லை. பேசுவோரின் வாயை வாசு பூட்டுவதும் இல்லை. கோபி புத்திசாலியாக இருந்தான். அன்றைய எஸ்எஸ்எல்சியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவன். வாசு தொடர்ந்தான்.

“இவன் அப்பாவோட செல்லப் பிள்ளயா இருந்தான். எப்பவும் அப்பா கூடவே இருப்பான். அப்பாவோட புத்தி எல்லாம் கோபிக்கு கிடைச்சுச்சுன்னுதான் அப்ப அம்மா சொல்லுவாங்க. அப்பறம் அவனோட மூளையில ஏதோக் கோளாறு. அவனுக்கு சிகிச்சை செஞ்சு செஞ்சு எனக்குப் பைத்தியமே பிடிச்சுடும் போல இருந்துச்சு”. வாசு பழைய கஷ்டகாலங்களின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டினான். “அடேய் கோபி. நீ மொட்டை மாடிக்குப் போய் அங்க காஞ்சுகிட்டு இருக்கற துணிங்கள எடுத்துகிட்டு வா. மழ வர்ற மாதிரி இருக்கு”. கோபி மீண்டும் ஓடினான்.

சில நாட்கள் காலை பத்துக்கும் பதினொன்றுக்கும் இடையில் முற்றத்தில் கோபி அலட்சியமாக நடப்பதைப் பார்க்கலாம். அதைப் பார்க்கும் போது ஏதோ பெரிய ஆலோசனையில் அவன் இருப்பது போலத் தோன்றும். என்ன? அவன் யோசிக்கக்கூடாதா? நியாயமான கேள்விதான்.

அவனுடைய முகத்தை நான் பல சமயங்களிலும் கவனிப்பதுண்டு. எதற்காக என்கிறீர்களா? ஒன்றுமில்லை. பேருக்குக் கூட பேசாத ஒரு ஆளுடைய முகபாவங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அந்த ஆராய்ச்சியைச் செய்தேன். அவனுடைய முகத்தில் எப்போதும் ஒரே பாவம்தான். எப்போதும் சீரியஸான முக பாவம்தான். அதில் பல விதங்கள் உண்டு. ஆனால் அவனுடையது எப்போதும் கனிவுடைய ஒன்றுதான். அப்படிப்பட்ட ஒரு முகமூடியை கோபி தானே தேர்ந்தெடுத்து போட்டுக்கொண்டனா? ஒரு வேளை தன்னந்தனியாக இருக்கும்போது அவன் இந்த முகமூடியை கழற்றிவிடுவானா? அது எப்போது?

வாசு இல்லாத நேரங்களே இல்லை. ஆனால் மாதத்திற்கு ஒரு தடவை வாசுவும் அவனுடைய மனைவியும் சின்னப் பையனைப் பார்க்கச் சொர்னூர் போவார்கள். பெரிய பையன் கல்யாணமாகி அங்கே தங்கியிருந்தான். அவன் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். சின்னப் பையனை விட பெரிய பையன் மீது வாசுவுக்கு கொஞ்சம் கூடுதல் ப்ரியம் உண்டு.


ஆனால் வாசு ஊருக்குப் போகும்போது கோபியை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுப் போவான். அடுத்த நாள் மத்தியானம் திரும்பி வந்துவிடுவார்கள். பேசாத ஒரு ஆளை இப்படி உள்ளே வைத்து வெளியில் பூட்டிவிட்டுப் போவது சரியா? வாசுவேதான் சொல்லுவான். கோபுவுக்கு கொஞ்சம் மூளை சரியில்லை.

இப்படிச் செய்வது மகா பாவம் இல்லையா? இந்தப் பாவங்களை எல்லாம் வாசு எங்கே போய்க் கழுவுவான்? நான் யோசித்துப் பார்த்ததுண்டு. கோபி அல்லவா இதைப் பற்றி யோசிக்க வேண்டும்? அடுத்தவருடைய குடும்ப விஷயங்களில் தலையிடுவது சரியில்லையே? ஊருக்குப் போய்விட்டு வந்தால் வாசுவுக்கு எல்லாருடனும் பாசம் அதிகமாகும். லட்டு ஜிலேபி இலை அடை எல்லாம் எனக்கு கொடுப்பான். அப்புறம் அழைத்து உட்கார வைத்துப் பேசி ஒரு துவம்ச வதம் செய்வான். கதை விடிகாலை நான்கு மணிக்குக் காரில் ஏறியது முதல் நிகழ்ந்த சம்பவங்களின் வர்ணனைகள் வழியாக விரிந்து பரந்து செல்லும். கேட்க சுவாரசியமாக இருக்கும். வாசு சொல்லி முடிக்கும் போது நாமும் அவனோடு ஒரு பயணம் போன சோர்வு ஏற்படும்.

“கோபி. அந்தக் கேட்டத் திறந்துவிடு”. வாசு கடைக்குப் போக காரில் புறப்படுகிறான். சிறிய வயதில் கோபி அழகுடன் இருந்தான். ஒல்லியான உடம்பு. அதிகம் பேசுவதில்லை. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில். “அப்பா அவனை டாக்டராக்கணும்னு நினைச்சார். ஆனால் நான் ஒரு ரௌடிப் பய மாதிரி நடந்துகிட்டேன். எப்பப் பாத்தாலும் சரியில்லாத கூட்டுக்காரங்க. வாழ்க்கையில செய்யக்கூடாதது எல்லாத்தயும் செஞ்சிருக்கேன். ஆனா பாத்தாத் தெரியாது இல்லயா?” வாசு கொஞ்சம் நிறுத்தினான்.

“அந்த காலத்துல எனக்கு ஒரு தைரியம் இருந்துச்சு. ஏன்னா சரியில்லாத நண்பர்களோட ஒரு கூட்டமே என்னைச் சுத்தித் திரிஞ்சுது. எல்லாம் பின்னால ஒரு நாள்ல பெரிய பிரச்சனைகளா இருந்துச்சு. எல்லாப் பயல்களும் தறுதலைப் பசங்களா இருந்தாங்க. ஒரு தடவை போதைப் பொருளக் கூட பயன்படுத்தியிருக்கேன். எல்லாத்தப் பத்தியும் தெரிஞ்சுக்கணும் இல்லயா? அன்னிக்கு எனக்கு வயசு இருபது கூட இருக்காது. ஒரு நாள் சாயங்காலம் நண்பண் ஒருவன் ஒரு பொருளத் தந்தான்.

உடனேச் சாப்பிட்டு சோதிச்சுப் பாத்தேன். ஆகாயத்துல பறவைங்க பறக்கற மாதிரி தோனிச்சு. ஸ்கூட்டர்ல வீட்டுக்கு வர்ற வழியில நான் நடுவுல குனிஞ்சு வண்டி டயர பாத்தேன். வண்டி ஆகாயத்துல பறந்து போய்கிட்டு இருக்கற மாதிரி தோனிச்சு. போதையோட மயக்கத்துல மிதந்துகிட்டே முன்னாலப் போய்க்கிட்டுருந்த லாரி மேல மோதினப்பத்தான் நான் ஆகாயத்துலேர்ந்து பூமிக்கு இறங்கி வந்தேன்.

அதிர்ஷ்டவசமா உயிர் தப்பினேன். அதுக்கப்புறம் இன்னிக்கு வரை அந்தப் போதப்பொருளக் கையாலத் தொடல”. வாசுவுடைய தள்ளு வண்டி கதைப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. “கோபியோட கதயத்தான் முன்னால நாம சொல்லிகிட்டிருந்தோம். அவன் எப்பவும் அப்பா கூடவேதான் இருப்பான். அப்பாவோட நிழலா இருந்தான்.

அப்பா சொல்ற மாதிரியே கேப்பான். அப்படி ஒரு நாளு அப்பா கூட வயக்காட்டு வழியா நடக்கறப்பதான் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்துச்சு. அந்த இடத்துலயே அவரு மயங்கி விழுந்தாரு. செத்துப் போனாரு. இது கோபுவுக்கு பெரிய அதிர்ச்சி. சிகிச்சை ஆரம்பிச்சுது. ஆயுர்வேதம் அலோபதி எல்லாத்தயும் பாத்தோம்.

ஆனா மனசோட தாளம் தப்பிப் போச்சு. அப்பறம் தெய்வத்தோட அன்பளிப்பா நான் அவனை எங்கூடவே வச்சுகிட்டேன்” வாசு கதையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அன்றைக்கு வாசுவுக்கு நல்ல மூடு. நிறுத்துவதாகத் தெரியவில்லை. நடுவில் அனாவசியமான ஒரு கேள்வியை வாசுவின் மீது நான் தொடுத்தேன்.

அப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்க வேண்டியதில்லை என்று பிறகு பல சமயங்களிலும் எனக்குத் தோன்றியது. ஆனால் வாசு தன்னுடைய சொந்த வாழ்க்கையில் கோபுவை ஏற்றுக் கொண்டதைப் பற்றியும் அதற்கு அப்புறம் ஏற்பட்ட கஷ்டங்களை அவன் தொடர்ந்தான். நான் சும்மா ஒரு கேள்வியைக் கேட்டேன்.

அந்தக் கேள்வி வாசுவை குழப்பிவிட்டது. பதில் கிடைத்தது என்றாலும், அதில் எனக்கு ஒரு திருப்தி ஏற்படவில்லை.

“கோபி கல்யாணம் செஞ்சுகிட்டாரா?”

இதுதான் நான் கேட்ட கேள்வி. வழக்கம் போல வாசுவும் அவனுடைய மனைவியும் இந்த மாதமும் ஊருக்குப் போனார்கள். போகும்போது கோபிக்கு சாப்பிடத் தேவையான உணவை எல்லாம் எடுத்து வைக்க வாசுவுடைய மனைவி மறக்கவில்லை. ஒரு கோப்பை குடிக்க தண்ணீரும் வைக்கப்பட்டது.

வாசு வீட்டைப் பூட்டி சாவியை என்னிடம் தந்தான். கோபி அமைதியானவன். எப்போதோ அந்த வீட்டுக்குப் பக்கத்தில் நடந்து சென்ற போது தொலைக்காட்சியில் நந்தனம் சினிமா பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு நிம்மதியாக இருந்தது. நான் வாசுவுடைய வீட்டுக்கு திரும்பிப் போகவில்லை.


அடுத்த நாள் வாசு போனில் கூப்பிட்டான். “மனைவிக்கு உடம்பு சரியில்ல. அவளுக்கு தல சுத்துது. ஆஸ்பத்திரியில இருக்கோம். நாளைக்கு வரோம். கோபிய பத்திரமாப் பாத்துக்கணும்” சொல்லி முடித்தான். அன்னிக்கு ராத்திரி எனக்கும் கோபிக்கும் இரண்டு பொட்டலம் சப்பாத்தியையும் குருமாவையும் வாங்கிக்கொண்டேன். வாசுவின் வீட்டை அடைந்தேன்.

கையில் இருந்த சாவியை வைத்து கதவைத் திறக்கும்போது லேசான ஒரு பதட்டம் ஏற்பட்டது. கோபியைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அவன் வயலண்ட் ஆக மாறுவானா? தெரியாது. உள் அறையில் தொலைக்காட்சி சத்தம் கேட்டது. கோபியின் கட்டிலுக்குப் பக்கத்தில் ஒரு தொலைக்காட்சி செட் அப். என்னைப் பார்த்தவுடன் கோபி எழுந்தான். அங்கே இருந்த நாற்காலியில் உட்காரச் சொல்லி அவன் என்னுடன் சைகை பாஷையில் பேசினான்.

சப்பாத்தியை சாப்பிடத் தயாரானேன். கோபி என்னுடைய கையில் இருந்த பொட்டலத்தை வாங்கிக் கொண்டான். கீழே இருந்த சாப்பாட்டு மேசைக்கு அழைத்தான். சமையலறையில் இருந்து இரண்டு தட்டுகளையும் இரண்டு பாட்டில் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தான். இருக்கைகளில் நாங்கள் உட்கார்ந்தோம். பேசாத கோபியோடு நானும் எதுவும் பேசவில்லை.

ஆனால் என்னை அதிர்ச்சி அடையச் செய்து கோபி மெல்லிய குரலில் கேட்டான். “வாசு அண்ணன் இன்னிக்கு வரல இல்லயா?”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/translation/p66.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License