இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

29.நல்லவர்களுடன் நட்பு வைக்காவிட்டால்...?


யாருக்கிட்ட எப்ப எதைக் கேக்கணும்னு ஒரு முறை இருக்கு. எல்லாரும் எப்போதும் ஒரே மாதிரியா இருக்க மாட்டாங்க. இதையெல்லாம் பாத்துத்தான் ஒருத்தர அணுகணும். அப்படி இல்லாமா எக்குத்தப்பா எதையாவது நாம போயிக் கேட்டோம்னா நமக்கு அவமானந்தான் மிஞ்சும். இதுக்கு ஒரு கதை இருக்குது.

ஒரு பெரிய காடு இருந்துச்சு. அதுல பல்வேறு விதமான விலங்குகள் வாழ்ந்து வந்ததுங்க. அந்தக் காட்டுக்கு பெரிய சிங்கம் ஒண்ணு ராஜாவா இருந்துச்சு. அதுபாட்டுக்கு யாரையும் தொந்தரவு செய்யாம வாழ்ந்து வந்துச்சு. அந்த சிங்கந்துக்கூட ஒரு நரியும் இருந்துச்சு. அந்த சிங்கம் வேட்டையாடிட்டு வந்து சாப்பிட்டு எஞ்சியதை எல்லாத்தையும் இந்த நரி சாப்புட்டுரும். சிலசமயம் கொஞ்சங்கூட நரிக்குக் கிடைக்காமப் போயிரும். அப்ப கிடைக்கிற எலும்பத் தின்னுட்டு நரி கிடக்கும். ரெம்ப எதுவும் நரி முரண்டு பண்ணினா ஒரேயடியில சிங்கம் நரிய அடிச்சிரும். இதுக்குப் பயந்துக்கிட்டே இந்த நரி பேசாமா சிங்கத்துக்கூட இருக்கும்.

ஆனாலும், இந்த நரிக்கு மனசுக்குள்ளாற ஒரு உறுத்தல். எல்லாத்தையும் இந்தச் சிங்கம் அடிச்சிருது. இந்தச் சிங்கம் யாருக்கிட்டயும் ஒதை வாங்க மாட்டேங்குதே. எப்படியாவது இந்தச் சிங்கத்தை ஒரு ஒதையாவது வாங்க வச்சிரணும். அதுக்குச் சரியான ஆளத் தேடிப் புடிக்கணும்னு ரெம்ப நாளா இந்த நரி யோசிச்சிக்கிட்டே இருந்துச்சு.

ஒருநாளு சாவகாசமா இருக்கறபோது இந்த நரி சிங்கத்துக்கிட்ட, ‘‘மகாராஜா நீங்கதான் இந்தக் காட்டுக்கே ராஜா. ஆனா ஒரு பயகூட ஒங்கள வந்து பாக்க மாட்டேன்றாங்க. நீங் இருக்கறதே இந்தப் பயலுகளுக்கு மறந்து போச்சு. நீங்க ராஜாவா இல்லையாங்கறதே சந்தேகமா இருக்கு. இதுக்கு ஏதாவது வழிபண்ணனும். இல்லைன்னா ஒங்கள எல்லாரும் மதிக்க மாட்டானுகன்னு’’ சொல்லி உசுப்பேத்தி விட்டுருச்சு.

இதைக் கேட்ட சிங்கம், ‘‘அட நரிப்பயலே நீ சொல்றதும் உண்மைதாண்டா. இங்க என்னைய வந்து ஒரு பயகூடப் பாக்கமாட்டேங்கறாங்க. இதை இப்படியே விட்டுறக்கூடாதுடா. இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணணும். ஏதாவது யோசனை இருந்தாச் சொல்லுடான்னு’’ நரியப் பாத்துக் கேட்டது.

நாம தெனந்தோறும் இந்தக் காட்டுக்குள்ளாற நடந்து போவோம். எதுத்தாப்புல வர்றதுகளுக்கிட்ட இந்தக் காட்டுக்கு யார் ராஜான்னு நீங்க கேளுங்க. அப்ப அதுக ஒங்கள ராஜான்னு ஒப்புத்துக்கிருச்சுன்னா அதுகள விட்டுருவோம். இல்லைன்னா அதுகள ஒரேயடியா அடிச்சுக் கொன்னுப்புடுவோம். அப்ப மத்ததுகளுக்கும் பயம் வந்துரும். ஒங்ககிட்ட ரெம்ப மரியாதையா நடந்துக்குவாங்க’’ அப்படீன்னு யோசனை சொன்னது.

சிங்கமும், ‘‘ஆமாட நீ சொல்றதுஞ் சரிதான். இப்பவே நாம கௌம்புவோம். எதிர்ல வர்ற ஒவ்வொரு விலங்குக்கிட்டயும் இந்தக் காட்டுக்கு ராஜா யாருன்னு நானே கேள்வி கேக்குறேன்னு’’ சொன்னது.



சிங்கமும் நரியும் கௌம்புச்சுங்க. சிங்கம் முன்னாலயும் நரி பின்னாலயும் போனபோது எதித்தாப்புல ஒரு முயலு வந்துச்சு. அதை மரிச்சி, ‘‘டேய் முயலே இந்தக் காட்டுக்கு யாரு ராஜா?’’ அப்படீன்னு சிங்கம் கேட்டது. முயலு நடுங்கிக்கிட்டே, ‘‘இதுல என்ன சந்தேகம்? நீங்கதான் ராஜா’’ அப்படீன்னது. சிங்கத்துக்கு உள்ளுற மகிழ்ச்சி. ‘‘சரி சரி நீ போ’’ அப்படீன்னு சொல்லிட்டுக் கௌம்புச்சு.

இப்படியே கரடி, நாய், மான், புலின்னு எல்லா விலங்குகளும் சிங்கந்தான் ராஜான்னு சொல்லிருச்சுக. சிங்கத்துக்கு ரெம்ப மகிழ்ச்சியாப் போச்சு. சிங்கம் நரியப் பாத்து, ‘‘என்னடா நரிப்பயலே பாத்துக்கிட்டியா? இந்தக் காட்டுக்கு ராஜா நாந்தான்னு எல்லா விலங்குகளும் ஒப்புத்துக்கிருச்சுல்ல. அப்பறம் என்ன?ன்னு’’ கேட்டது.

இதைக் கேட்ட நரி, ‘‘மகாராஜா நீங்க சொல்றது சரிதான். ஆனா எல்லாரும் வந்து நீங்கதான் ராஜான்னு ஒப்புத்துக்கிட்டாங்க. ஆனா உருவத்துல ஒங்களவிடப் பெருசா இருக்கற யானை மட்டும் வரலையே? கவனிச்சீங்களா? அந்த யானையப் பாத்து இந்தக் காட்டுக்கு ராஜா யாருன்னு கேட்டுறணும். அதுவரைக்கும் எம்மனசு ஆறாது. வாங்க இப்பவே அந்த யானையப் பாத்து இதத் தெளிவுபடுத்திக்கிட்டு வருவோம்னு’’ சொல்லி சிங்கத்த இழுத்துக்கிட்டுப் போச்சு.

யானைய எங்க தேடியும் காணோம். சிங்கம் களைச்சிப் போயிருச்சு. நரியப் பாத்து, ‘‘டேய் நரிப்பயலே நாளைக்கு அந்த யானையப் பாத்து இந்தக் கேள்வியக் கேட்டுக்குவோம். இப்ப வாடா திரும்பிப் போயிருவோம்னு’’ கூப்புட்டுச்சு.

இதக் கேட்ட நரி, ‘‘இங்க பாருங்க மகாராஜா எதையும் ஒடனக்கு ஒடனே முடிச்சிப்புடணும். நாளைக்குன்னு ஆறாப்போட்டம்னா அது அர்த்தமில்லாமப் போயிரும். நீங்கபாட்டுக்கு வாங்க. அந்த யானை எங்க நின்னாலும் அதப் பாத்து ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சிக்கணும்னு’’ சொல்லிக்கிட்டே சிங்கத்தப் பேசவிடாம இழுத்துக்கிட்டுப் போச்சு.

ஒவ்வொரு விலங்குக்கிட்டயா யானை எங்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு சிங்கமும் நரியும் யானை இருந்த எடத்துக்குப் போச்சுங்க. எல்லா யானையும் ஆத்துக்குள்ளாறப் போயிக் குளிச்சிட்டு அப்பத்தான் வெளியில நடந்து வந்துக்கிட்டுருந்துச்சுங்க.

நரிக்கு இதுதான் சிங்கத்த மாட்டிவிடுறதுக்கு சரியான நேரம்னு நெனச்சிக்கிட்டு, சிங்கத்தப் பாத்து, ‘‘மகாராஜா கேளுங்கன்னு’’ தூண்டிவிட்டது. சிங்கம் யானைகளோட பக்கமப் போயி, ‘‘ஏய் யானைகளா இந்தக் காட்டுக்கு யாரு ராஜா? ’’அப்படீன்னு கேட்டது. இதைக் காதுல வாங்கிக்காமயே யானைகள் நடந்து போச்சு. சிங்கத்துக்குக் கோபம் பொத்துக்கிட்டு வந்துருச்சு.

நான் இந்தக் காட்டுக்கு ராஜா. நாங்கேக்கறதுக்குப் பதிலுச் சொல்லாம இந்த யானைங்க போறதா? அப்படீன்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு ஓட்ட ஓட்டாமா ஓடிப்போயி யானைக முன்னால கொஞ்சம் எட்டியே நின்னுக்கிட்டு, ‘‘என்ன நாம்பாட்டுக்குச் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீங்கபாட்டுக்குப் போயிக்கிட்டு இருந்தா எப்படீன்னு?’’கேட்டுச்சு.



இதப்பாத்த நரி ஓட்டமா ஓடிப்போயி மறைவான எடத்துல நின்னு என்ன நடக்குதுன்னு வேடிக்கை பாத்துச்சு. சிங்கம் சொன்னதைக் கேட்ட யானை, ‘‘ஏ சிங்கமே நீ என்ன சொன்ன அப்படீங்கறது என்னோட கதுலயே விழல. ஏங்காதுல விழுகிறது மாதிரி கொஞ்சம் பக்கத்துல வந்து சொல்லு’’ அப்படீன்னு சொன்னது.

சிங்கமும் தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு யானைக்கு முன்னால நின்னுக்கிட்டு, ‘‘இந்தக் காட்டுக்கு யாரு ராஜாங்கறதச் சொல்லிட்டு அப்பறமாப் போங்கன்னு’’ சொன்னது. ஒடனே முன்னால நின்ன யானை தன்னோட துதிக்கைய நீட்டி சிங்கத்தைப் புடுச்சி தூக்கி எறிஞ்சது. சிங்கத்தோட ரெண்டு மூணு எலும்புக ஒடிஞ்சி போச்சு. இதுக்கு மேல இங்க நின்னா நம்மல இந்த யானைக கொன்னுருங்கன்னு நெனச்ச சிங்கம் செத்தோம் பிழைச்சோம்னு ஓட்டமா ஓடி வந்துருச்சு. அதனால நடக்க முடியல. கால இழுத்து இழுத்துக்கிட்டு வந்துச்சு.

இதப் பாத்த நரி மனசுக்குள்ளேயே சிரிச்சிக்கிட்டு, ‘‘அடடா மகாராஜா இந்த யானைகளுக்கு எவ்வளவு கொழுப்பு. கேள்விக்கு விடை தெரியலைன்னா பேசாமப் போயிறவேண்டியதுதான. அதுக்குப் போயி ஒங்கள இப்படித் தூக்கிப் போட்டுக் கொல்லப் பாக்கலாமா? நீங்க கவலைப் படாதீங்க மகாராஜா இந்த யானைகளுக்கு அறிவே இல்லை’’ அப்படீன்னு சொன்னது.

இதைக் கேட்ட சிங்கம், ‘‘டேய் நரிப் பயலே எல்லாம் உன்னாலதாண்டா. சும்மா இருந்த என்னைய உசுப்பேத்திவிட்டு மிதிவாங்கவச்சு இப்ப வந்து ஆறுதலா சொல்ற. ஓம்பேச்சக் கேட்டதுக்கு எனக்கு வேணுன்டா.. இனிமே நீ இங்க வராத. ஓடிப்போயிரு. இங்க வந்த கொன்னே போட்டுருவேன்னு’ சொன்ன ஒடனே நரி வெரண்டு அடிச்சி ஓடிப்போச்சு. நல்லவங்ககூட சினேகம் வச்சிக்கிடலைன்னா இப்படித்தான் அவமானப்பட வேண்டியிருக்கும். அதனால நல்லவங்ககூட சேரணும்னு இந்தக் கதையச் சொல்வாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1ac.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License