இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

30.சங்கப் புடியா…


யார் யாரை எதெதுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும்னு ஒரு கணக்கு இருக்கு. சில பேரக் கூட்டிக்கிட்டுப் போனா அந்தக் காரியம் நல்லா நடக்கும். சிலபேரக் கூட்டிக்கிட்டுப் போனா நடக்குற காரியமும் நடக்காமப் போயிடும். சிலபேரு நம்ம கூட வராம இருந்தாலே போதும்னு நாம போயிடணும். இதைப் பத்தின கதையொண்ணு இந்தப் பக்கம் வழக்கத்துல இருந்து வருது.

ஆடு களவாங்குற களவானிப் பய ஒருத்தன் இருந்தான். அவன் எப்படிப்பட்ட இடத்துலேயும் ஆடுகளக் களவாண்டுக்கிட்டு வந்துருவான். ஆனா அவனுக்கு ஒதவிக்கு யாராவது ஒரு ஆளு மட்டும் இருக்கணும். கூட வர்ற ஆள பேசாம இருக்கச் சொல்லிட்டு இவனே எல்லாத்தையும் பாத்துக்கிடுவான். ஒரு எடத்துல களவாங்கணும்னு முடிவு பண்ணிட்டான்னா அதை முடிக்காம விடமாட்டான்.

இப்படித் திறமையான களவானிப் பய ஒரு ஊரு வழியாப் போனான் அப்ப அந்த ஊருல நல்ல நல்ல ஆடுகளா மந்தை மந்தையாத் திரிஞ்சிச்சு. இந்த ஆடுக எங்க அடையுதுங்க, அதுகள பத்திரமாப் பாதுகாக்கறவன் யாரு? எந்த எடத்துல கிடை போடுறாங்க? அப்படீங்கற விவரத்தையெல்லாம் சேகரிச்சிக்கிட்டான் அவன்.

சாயந்தரம் ஆடுகள அடைக்கிற எடத்தையும் பாத்துட்டு வந்துட்டான். ஊருக்குப் பக்கத்துலயே அந்தக் கிடை இருந்துச்சு. அதப் பாதுகாக்க ரெண்டு ஆளுக இருந்தானுங்க. இந்தக் கெடையில இருந்து ரெண்டு மூணு ஆட்டையாவது களவாண்டுறணும் நெனச்சிக்கிட்டு அதுக்கான நாளையும் குறிச்சான்.

ஆனா அவங்கூட வர்றவனுக்குக் கடுமையான காச்சல். யாராவது ஒருத்தரு கூட இருந்தா எப்படியும் ரெண்டு மூணு ஆட்டையாவது களவாண்டுக்கிட்டு வந்துடலாமே. இப்ப யாரைப் போயிக் கூட்டிக்கிட்டுப் போறது அப்படீன்னு தீவிரமா யோசிக்க ஆரம்பிச்சான்.

அவன் இருக்கற ஊருல ஒரு சாமியாரு இருந்தான். அவன் எப்பவும் சாங்கெ எடுத்துக்கிட்டு ஒவ்வொரு கோயிலாப் போயி ஊதிக்கிட்டு அந்தக் கோயில்கள்ல கொடுக்கற சோத்த வாங்கித் தின்னுட்டு வருவான். ஊருக்குள்ளாற இருக்கற வீடுகளுக்குப் போயி சங்க ஊதி பிச்சை கேட்டு சோறோ அரிசியோ கெடைக்கிறத வாங்கிக்கிட்டு வந்து சாப்பிட்டுப் படுத்துக்குவான்.

அந்தச் சாமியாரு தங்கி இருக்கற எடத்துக்குப் போயி அந்தக் களவானிப் பய சமயம் பாத்து அந்தச் சாமியாரு ஆளுக்கிட்ட ஆசை வார்த்தை கூறினான். அதைக் கேட்ட அந்தச் சாமியாரு ஆளு, ‘‘நான் இது வரைக்கும் இந்த மாதிரியெல்லாம் செஞ்சது கிடையாது. இந்தமாதிரிக் களவாங்கற பழக்கமும் எனக்கிட்ட இல்லைன்னு’’ சொன்னான்.

அதைக் கேட்ட களவானிப் பய அவன விடுறதா இல்லை. அட இதுக்கெல்லாம் பழக்கமும் தேவையில்லை. நான் சொல்லித் தர்றது மாதிரி நீ செய்யி. கெடைக்கிறதுல ஆளுக்குப் பாதியா எடுத்துக்குவோம்னு’’ சொன்னான்.



சாமியாரு ஆளுக்கு மனசுக்குள்ளாற கொஞ்சம் ஆசை துளுத்துக்கிட்டு வந்துச்சு. அந்தாளு களவானிப் பயலப் பாத்து, ‘‘நமக்கு எம்புட்டுக் கெடைக்கும். சொல்லு. கெடைக்கிறதப் பாத்துட்டு நான் பதிலச் சொல்றேன்னு’’ சொன்னான்.

அதுக்கு அந்தக் களவானிப் பய, ‘‘இங்க பாருய்ய ரெண்டு மூணு ஆட்டை பிடிச்சி வித்தோம்ணு வச்சிக்க கிட்டத்தட்ட ஆளுக்கு முப்பது ரூவாக் கெடைக்கும். ஆளுக்கு ரெண்டாடுன்னு பிடிச்சோம்னா இன்னமும் கூடக் கெடைக்கும். இந்த ரூவாக் கெடச்சதுன்னா நீயி இனிமேலு பிச்சை எடுக்கறதுக்கே போக வேணாம். கொஞ்சம் யோசிச்சுப் பாரு. நீ கெடைக்கு வெளியில நில்லு. நான் போயி ஆட்டக் களவாண்டுக்கிட்டு வந்து ஒனக்கிட்ட தர்றேன். நீ ஆட்டைப் புடிச்சிக்கோ. நான் ரெண்டு மூணு ஆட்டைத் தூக்கிக்கிட்டு வந்தவுடனே நாம ரெண்டுபேரும் ஆடுகளத் தோள்ள தூக்கிப் போட்டுக்கிட்டு வந்துருவோம். வான்னு’’ கூப்புட்டான்.

சாமிக்கும் ஆசை வந்துருச்சு. எத்தனை நாளுதான் இப்படி சங்க ஊதிக்கிட்டுத் திரியறதுன்னு முடிவு செஞ்சி, ‘‘சரி வாரேன்னு’’ களவாங்குறதுக்குக் கௌம்பிட்டான். அப்படிப் போறபோது தன்னோட சங்கையும் எடுத்துக்கிட்டு வந்தான்.

அதைப் பாத்த களவானிப் பய, ‘‘ஆமா களவாங்கப் போறபோது ஏஞ்சாமி இந்தச் சங்கு. இந்தச் சங்க இங்ஙனயே வச்சிட்டு வா. பெறகு வந்து எடுத்துக்கிருவோம்னு’’சொன்னான்.

அதைக் கேட்ட சாமியாராகிய ஆளு, ‘‘ஐயையோ இதை வைச்சிட்டு வந்தால் யாராவது எடுத்துக்கிட்டுப் போயிடுவாங்க. சங்கு ஏங்கிட்டயே இருக்கட்டும். நாமபாட்டுக்கு நம்ம வேலையச் செய்வோம்னு’’ மறுத்துட்டான்.

களவானியும் இந்தச் சங்கக் கொண்டுக்கிட்டு வர்றதுனால நமக்கு என்ன நட்டமாவா போயிரும். அதக் கொண்டுக்கிட்டு வரவேண்டாம்னு சொல்லிட்டா எங்க அந்தச் சாமியாரு வராமப் போயிடுவானோன்னு நெனச்சிக்கிட்டு சரி வான்னு அந்தச் சாமியாரையும் கூட்டிக்கிட்டுப் போனான்.

சாமியாரும் களவானி கூடச் சேர்ந்து களவாங்கப் போனான். ரெண்டுபேரும் பக்கத்து ஊருக்கு வந்துட்டாங்க. இருட்டிடுச்சு. நல்லா இருட்டட்டும்னு களவானி நல்ல சமயத்தைப் பார்த்துக்கிட்டே இருந்தான். ஆடுகள அடைச்சிப் போட்டுருக்கற கெடைய வாட்டசாட்டமான ரெண்டு ஆளுகளும் நல்லாத் தூங்குனப் பெறகு களவானி கெடைக்குள்ளாற நொளஞ்சு ரெண்டு ஆடுகளத் தூக்கிக்கிட்டு வந்து சாமியாருக்கிட்டக் கொடுத்திட்டு மூணாவதா ஒரு ஆட்டைப் புடிக்கிறதுக்காக் கிடைக்குள்ளாறப் போனான்.

அப்பப் பாத்து சாமியாரு புடிச்சிருந்த ஆடுக கத்த ஆரம்பிச்சிருச்சு. அந்த ஆடுக கத்துனா அதப்பாத்து மத்த ஆடுகளும் கத்திரும் அப்பறம் காவக்காரனுக முழிச்சிக்கிருவானுகன்னு நெனச்ச களவானி சாமியாராளப் பாத்து, ‘‘யோவ் சங்கப் புடியா… ஆடுகத்துது. சங்கப் புடியான்னு’’ சொன்னான்.



சங்குன்னா ஆட்டோட குரல்வளைன்னு அர்த்தம். ஆனா சாமியாராளு தன்னோட சங்கத்தான் பிடிச்சி சத்தமா ஊதச் சொல்றான்னு நெனச்சிக்கிட்டு, ஒடனே அந்தச் சாமியாராளு தன்னோட மடியில கட்டி வச்சிருந்த சங்க எடுத்து சத்தமா ஊதுனான். இதைக் கேட்ட களவானி ஐயையோ மோசம் போயிட்டமேன்னு நெனச்சிக்கிட்டு கெடையவிட்டு வெளியில வந்து சாமியாரள ஓங்கி ஒரு அறைவிட்டுட்டு, ‘‘ஆட்டோட கழுத்துச் சங்கப் புடிடான்னா நீ பாட்டுக்கு ஒன்னோட சங்கெடுத்துச் சத்தமா ஊதற. ஒன்னப் போயி நான் கூட்டிக்கிட்டு வந்தேன் பாருன்னு’’ சொல்லிக்கிட்டே ஓட ஆரம்பிச்சான்.

ஆனா அதுக்குள்ளாற காவக்கரனுக ரெண்டுபேரும் எந்திருச்சு வந்து சாமியாரளயும் களவானியையும் புடிச்சி நல்லா ஒதைஒதைன்னு ஒதச்சு பஞ்சாயத்தக் கூட்டி அவனுகளுக்கு மொட்டையடிச்சிக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுத மேல ஏத்தி வெரட்டிவிட்டானுக. எதுக்கா இருந்தாலும் அறிஞ்சவந் தெரிஞ்சவனத்தான் கூட்டிக்கிட்டுப் போகணும். அப்படிக் கூட்டிக்கிட்டுப் போகலைன்னா இப்படித்தான் மாட்டிக்கணும்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1ad.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License