இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

32.தேய்க்கிற தேய்ப்பும் பாக்குற பார்வையும்


எதுக்கும் தெறமை வேணும்பாங்க. அதைவிட எதையும் தெறமையோடச் சொல்லத் தெரியணும். எல்லாத்துக்கும் நேரம் கைகூடி வரணும்னு சொல்வாங்க. இதுக்கு ஒரு கதை வழக்கத்துல வழங்கி வருது.

ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு. அவருகிட்ட அரசவைக் கவிஞரா ஒருத்தரு இருந்தாரு. அவருக்கு ராஜாக்கிட்ட நல்ல செல்வாக்கு. அந்த நாட்டுல இருந்தவங்க எல்லாரும் ராஜாவுக்குத் தர்ற மரியாதையை அவருக்கும் கொடுத்தாங்க.

ராஜாவும் அந்தக் கவிஞரக் கலந்துக்காம எதையும் செய்யமாட்டாரு. அந்த அளவுக்கு அந்தக் கவிஞர ராஜா மதிச்சாரு. இப்படி இருக்கையில ஒரு நாளு பக்கத்து நாட்டு ராஜா சொல்லாமக் கொள்ளமா படையெடுத்து வந்துட்டாரு. இந்த நாட்டு ராஜாவுக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல. இருந்தாலும் தன்னோட படைகளைத் திரட்டி சண்டைக்குப் போனாரு. ராஜா கடுமையாச் சண்டை போட்டாரு.

ஆனாலும், சண்டையில பக்கத்து நாட்டு ராஜா இந்த ராஜாவைக் கொன்னுட்டாரு. படைகள் எல்லாம் அழிஞ்சிபோச்சு. பக்கத்து நாட்டு ராஜா அரண்மனைக்குள்ளாற நுழைஞ்சி அங்க இருந்தவங்க எல்லாரையும் கண்டந் துண்டமா வெட்டிப்போட்டாரு. அவ்வாறு வெட்டிப் போட்டதுல அந்தக் கவிஞரும் ஒருத்தரு.

அரண்மனையில இருந்தவங்க யாரும் மிஞ்சல. அதுக்குப் பின்னால பக்கத்து நாட்டு ராஜா ரெண்டு நாட்டுக்கும் ராஜாவாயிட்டாரு. இவரை எதுக்கிறதுக்கு ஆளே இல்லை. பழைய ராஜாவுக்கு வேண்டியவங்க எல்லாரையும் பக்கத்து நாட்டு ராஜா நாடு கடத்திட்டாரு.

செத்துப்போன ராஜாக்கிட்ட கவிஞரா இருந்தவரோட மனைவியும் மகனும் அந்த நாட்டோட எல்லையில ஓட்டைக் குடிசையில ரொம்ப ஏழ்மையில இருந்தாங்க. அந்தக் கவிஞரரோட பையன் வளர்ந்து பெரியவனா இருந்தான். அவன் எந்த வேலைக்கும் போறதில்லை. அவங்க அம்மாவும் சொல்லிப் பாத்தாங்க. கேக்கல. அவங்க அம்மா கெடச்ச வேலைக்குப் போயி எதையாவது கொண்டுக்கிட்டு வந்து அவனக் காப்பாத்துனாங்க.

ஒரு நாளு அந்த அம்மாவுக்கு ஒடம்புக்கு முடியல. அந்தப் பயலும் அங்கிட்டு இங்கிட்டு ஓடிப் பார்த்து ஒவ்வொருவருக்கிட்டயா ஒதவி கேட்டான். அவங்களும் தங்களால இயன்றதச் செஞ்சாங்க. எப்படியோ அவங்க அம்மாவக் காப்பாத்திட்டான். இருந்தாலும் அந்தம்மானால முன்ன மாதிரி ஓடியாடி வேலைக்குப் போக முடியல.

அந்தப் பயலப் பாத்து, ‘‘ஒங்க அப்பா எப்படிப் பேரும் புகழுமா இருந்தாரு. இந்த நாடே அவரக் கையெடுத்துக் கும்புட்டுச்சு. ஆனா நீ என்னடான்னா ஒண்ணுக்கும் ஒதவாம வீட்டுக்குள்ளறயே கெடக்கிற. எப்படியாவது எங்கயாவது நீ போயி சம்பாதிச்சி ஒங்க அப்பா மாதிரி வான்னு’’ சொல்லி அனுப்புனாங்க.



அவனும் சரின்னுட்டு தன்னோட அப்பா அரசவைக்குப் போறபோது போட்டுக்கற உடுப்பெல்லாம் எடுத்துப் போட்டுக்கிட்டு பெரிய பட்டுத் துண்டை எடுத்து அவங்க அப்பா மாதிரி மடிச்சி தோள்மேல போடடுக்கிட்டு கால்போன போக்குல போனான். இவனுக்கு என்ன செய்யிறதுன்னும் தெரியல. இருந்தாலும் அங்கங்க வேடிக்கையப் பாத்துக்கிட்டு நடந்து போயிக்கிட்டே இருந்தான்.

அப்ப ஒரு பன்னி சேத்துல பொறண்டுட்டு ஓடி வந்து ஒரு புளியமரத்துல ஒடம்பப்போட்டு தேச்சிக்கிட்டு இருந்துச்சு. இவன் அந்தப் பன்றியையே பாத்துக்கிட்டு இருந்தான். அந்தப் பன்றி அவனையே பாத்துக்கிட்டு மரத்துல தன்னோட ஒடம்பப் போட்டுத் தேச்சிக்கிட்டு இருந்துச்சு.

அதப்பாத்த அந்தப் பய ஓலைச் சுவடிய எடுத்து, ‘‘நீ தேய்க்கிற தேய்ப்பும் பார்க்கற பார்வையும் தெரியும் தெரியும்னு’’ எழுதிக்கிட்டான். அப்படி எழுதின ஒடனே இவனுக்கு ஒரு யோசன வந்தது. நேராப் போயி இதை அரண்மனையில இருக்கிற ராஜாக்கிட்டக் கொடுத்து ஏதாவது சன்மானம் வாங்குவோம்னு நெனச்சிக்கிட்டு வேகவேகமா அரண்மனையை பாத்துப் போனான்.

இவன் அரண்மனைக்குள்ளாறப் போறபோது அங்க ராஜா கவிஞர்களோட பேசிக்கிட்டு இருந்தாரு. இவனும் போயி ராஜாவைப் பாத்தான். அந்த ராஜா அவனப் பாத்து, ‘‘நீ என்ன கவிதை எழுதிக்கிட்டு வந்துருக்கே. காட்டு’’ அப்படீன்னு சொன்னாரு.

அவனும் தன்னோட ஓலையை எடுத்து ராஜாக்கிட்டக் கொடுத்தான். அதை வாங்கிப் பாத்த ராஜா எங்க நீயே இதை வாசிச்சிக் சொல்லு பாக்கலாம்னு’’ அவங்கிட்டயே கொடுத்து வாசிக்கச் சொன்னாரு.

அவனும், ‘‘நீ தேய்க்கிற தேய்ப்பும் பாக்குற பார்வையும் தெரியும் தெரியும்னு’’ சொன்னான்.’’ அதைக் கேட்ட ராஜாவுக்கு ஒண்ணும் புரியல. ராஜா அங்க இருந்த கவிஞர்கள் எல்லாரையும் பாத்து, ‘‘இங்க பாருங்க நாளைக்கு காலையில இவரு சொன்ன கவிதை எங்க இருக்குது? இதுக்கு என்ன அருத்தம்னு நீங்க எல்லாரும் கண்டுபிடிச்சிச் சொல்லணும்னு’’ சொல்லிட்டு அவையக் கலைச்சிட்டுப் போயிட்டான்.

வீட்டுக்குப் போன எல்லாப் புலவர்களும் எல்லா இலக்கியங்களையும் எடுத்துப்போட்டுப் பார்த்தாங்க. ஒண்ணுலயும் இவன் சொன்ன கவிதை இல்லை. எல்லாரும் தேடித் தேடி சலிச்சிப் போயிட்டாங்க.

இருந்தாலும் தங்களுக்குக் கெடைச்ச புத்தகத்தை எல்லாத்தையும் பெரட்டிப் பாத்துட்டு சரி என்ன நடந்தாலும் நடக்கட்டும்னு ராத்திரி படுத்துட்டாங்க.

இந்தச் சமயத்துல பக்கத்து நாட்டு ராஜா இந்த நாட்டு ராஜாவுக்குச் சவரம் பண்ற நாவிதர ரகசியமா ஆளனுப்பிக் கூப்புட்டு அனுப்பிச்சி நெறையப் பணத்தைக் கொடுத்து, ‘‘நாளைக்குக் காலையில ஒங்க ராஜாவுக்கு மொகச்சவரம் செய்யிறபோது அவரோட கழுத்தை அறுத்துக் கொன்னுடு. அப்படிக் கொன்னுட்டா ஒனக்கு அரசாங்கத்துல பெரிய பதவியும் தர்றேன்னு’’ சொல்லி வீட்டுக்கு அனுப்பிச்சாரு.

வீட்டுக்கு வந்த நாவிதன் நல்ல கத்தியா எடுத்து வச்சிப்பிட்டுப் படுத்துட்டான். மறுநாள் பொழுது விடிஞ்சது. ராஜாவுக்குச் சவரம் பண்றதுக்காக அரண்மனை நாவிதர் நல்ல பதமான கத்திய எடுத்துக்கிட்டு வந்தாரு.

வந்தவரு எப்படிடா ராஜாவைக் கொல்லலாம்னு நெனச்சிக்கிட்டு தான் கொண்டு வந்த வார இழுத்துப் புடிச்சிக்கிட்டு ராஜாவப் பாத்துக்கிட்டே கத்தியத் தீட்ட ஆரம்பிச்சாரு.



இந்த நாட்டு ராஜாவுக்கு கொஞ்சம் சந்தேகம். என்னடா இந்தப் பய எப்பவும் வந்தவுடனேயே சவரம் பண்ண ஆரம்பிச்சிடுவான். ஆனா இன்னக்கிக் கத்தியத் தீட்டிக்கிட்டு இருக்கான்னு மனசுக்குள்ளாற நெனச்சாரு. இருந்தாலும் அத வெளிக்காட்டிக்காமா நாவிதனப் பாத்து, ‘‘நீ பாக்குற பார்வையும் தேய்க்கிற தேய்ப்பும் தெரியும் தெரியும்னு’’ சொன்னாரு.

இதக் கேட்ட நாவிதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஐயையோ நாம ராஜாவக் கொல்ல நெனச்சது அவருக்குத் தெரிஞ்சி போச்சு. ராஜா நம்மளக் கொன்னுப்புடுவாரேன்னு நெனச்சிக்கிட்டு, ‘‘மகாராஜா மகாராஜா என்ன மன்னிச்சிடுங்க. பக்கத்து நாட்டு ராஜாவோட பேச்சில மயங்கி ஒங்களக் கொல்ல நெனச்சேன். அதுக்காகத்தான் நான் கத்திய வாருல நல்லாத் தேய்ச்சித் தீட்டுனேன். எப்படிடா ஒங்களக் கொல்லறதுன்னும் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். இதை நீங்க சரியாக் கண்டுபிடிச்சி, நீ பாக்குற பார்வையும் தேய்க்கிற தேய்ப்பும் தெரியும் தெரியும்னு சொல்லிட்டீங்கன்னு’’ காலப்புடிச்சிக்கிட்டு அழுதான்.

ராஜா ஆகாகா புதுசா கவிதை எழுதுன கவிஞனோட வரியச் சும்மா சொன்னதுனால நம்ம உயிரக் காப்பாத்திக்கிட்டோம். இல்லைன்னா இந்த நாவிதன் நம்மளக் கொன்னுருப்பான்னு மனசுக்குள்ளறயே நெனச்சிக்கிட்டு, நாவிதனப் புடுச்சி சிறையில போட்டாரு.

புதுசா கவிதை எழுதிக்கிட்டு வந்தவனக் கூப்புட்டு அவன தன்னோட அரசவைக் கவிஞர்களுக்குத் தலைவனாக்கிட்டாரு. அங்க இருந்த பெரும்புலவருங்க எல்லாருக்கும் ஒண்ணும் வௌங்கவே இல்ல. ஒரு சாதாரணமான ஒண்ணுமில்லாத வார்த்தை ஒருத்தன கவிஞருக்கெல்லாம் தலைவனாக்கிடுச்சி.

எல்லாம் நேரங்காலம் ஒத்துவந்தா சரியா நடக்குங்குறதுக்கு இதுதான் உதராணமாச் சொல்லப்பட்டு வருது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/villagestories/p1af.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License