இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

33.கழுதையின் அன்பு


ஒரு ஊருல வியாபாரி ஒருத்தரு இருந்தாரு. அவரு பக்கத்து ஊருகளுக்குக் கழுதை மேல சரக்குகள ஏத்திக்கிட்டுப் போயி வித்துட்டு வருவாரு. அவரு ஆசையா தன்னோட வீட்டுல ஒரு நாய வளர்த்தாரு. அந்த நாயி அவரு மேல ரொம்பப் பிரியமா இருக்கும். அவரும் வியாபாரத்துக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தாருன்னா அந்த நாயோட வெளையாடுவாரு. அந்த நாயி அவருமேல முன்னங்கால் ரெண்டையும் போட்டுக் கொஞ்சும்.

அவரோட வியாபாரத்துக்குப் போயிட்டு வர்ற கழுதை அதைப் பார்த்துட்டு ரொம்ப வருத்தப்படும். நான் எந்த விதத்துல கொறஞ்சு போயிட்டேன். அவரோட வியாபாரத்துக்கு நாந்தானே ரொம்ப ரொம்பத் தொணையா இருக்கேன். என்னோட ஒரு நாளாவது அவரு நாயிக்கிட்ட வெளையாண்டது மாதிரி வெளையாடுறாரா? இல்லியேன்னு மனசுக்குள்ளறயே வருந்துச்சு. இருந்தாலும் அதையெல்லாம் வெளியில சொல்ல முடியாமா மனசுக்குள்ளேயே போட்டுக்கிட்டுப் புழுங்கிக்கிட்டு இருந்தது.

மொதலாளி கழுதைய எப்பவும் கட்டுறது இல்ல. அதனால கழுதை அதுபாட்டுக்கு வீட்டைச் சுத்திச் சுத்தி வந்து படுத்துக்கும். வீட்டு முற்றத்துல சோகமாப் படுத்திருந்துச்சு.

அப்ப அந்தப் பக்கமா அந்த நாயி ஓடி வந்துச்சு. சோகமா இருக்கற கழுதையப் பாத்து, “என்ன அண்ணே ரெம்பச் சோகமா இருக்கறீங்க?” அப்படீன்னு கேட்டுச்சு.

அதுக்கு அந்தக் கழுதை, “ஆமாடா தம்பி வருத்தப்படமா நான் என்ன பண்றது? நீயே சொல்லு. நான் நம்ம மொதலாளிக்கு எந்தளவுக்கு ஒதவியா இருக்கேன். என்னைய ஒரு நாளாவது வீட்டுக்குள்ளாற கூட்டிக்கிட்டுப் போயிருக்காறா? இல்ல ஒன்னையக் கொஞ்சுறது மாதிரி என்னையக் கொஞ்சுறாரா? ஒன்ன மாதிரி நானும் வீட்டுக்குள்ளாற வந்து அவரோட படுக்கையில படுத்து அவரோட வெளையாடுறனா? என்னை அவரு ஒதுக்கி ஒதுக்கி வைக்கிறாரு. அதனாலதான் நான் சோகமா இருக்கேன்னு” சென்னது.

அதைக் கேட்ட நாயி, “அண்ணே! ஓம்மேலயும் நம்ம மொதலாளி பாசமாத்தான் இருக்காரு. நல்லாத் தீனி போட்டு பாத்துக்குறாரு. நீ நம்ம மொதலாளி மேல அன்பா இருண்ணே! இன்னும் நல்லா நீ வேலை செஞ்சியினா அவரு ஒன்னைய நல்லாக் கவனிப்பாருன்னு” சொன்னது.

இருந்தாலும் கழுதைக்கு மனசு ஆறல. நாம என்ன செஞ்சு நம்மளோட அன்பை நம்ம மொதலாளிக்குத் தெரியப்படுத்த முடியும்னு? யோசிச்சது.

ரொம்ப நேரம் யோசிச்சு யோசிச்சு அது ஒரு முடிவுக்கு வந்தது. அந்த நாயி என்னன்ன செய்யுதோ நானும் அதே மாதிரி செஞ்சா நம்ம மேல அவருக்குப் பிரியம் வரும்னு முடிவு செஞ்சு நாயி என்னென்ன செய்யுதுன்னு கவனிக்கத் தொடங்கிடுச்சு.

ரெண்டு நாளா சரக்குகள வாங்குறதுக்காக முதலாளி வெளியூருக்குப் போயிட்டாரு. அப்ப கழுதைக்கு எந்த வேலையும் இல்லை. ஓய்வுல இருந்துச்சு. அந்தக் கழுதைக்கு இன்னைக்கு எப்படியாவது நம்மளோட அன்பை நம்ம மொதலாளிக்கிட்டக் காண்பிக்கணும்னு முடிவு செஞ்சது.

யாரும் இல்லாத நேரத்துல கழுதை வீட்டுக்குள்ளாற போச்சு. நேரா மொதலாளி படுக்குற படுக்கையில படுத்துச்சு. நம்ம மொதலாளி வர்றபோது இந்த நாயி மாதிரியே செய்யணும். அப்படி செஞ்சாத்தான் மொதலாளி நான் அவரு மேல வச்சிருக்கற அன்பை உணர்ந்துக்குவாரு. நாயக் கொஞ்சுறாப்புல நம்மையும் கொஞ்சுவாருன்னு நெனச்சிக்கிட்டே படுக்கையில படுத்துக்கிடந்துச்சு.

மொதலாளியும் வந்தாரு. நேரா வீட்டுக்குள்ளாறப் போனாரு. அப்பப் பாத்து படுக்கையில படுத்துக்கிடந்த கழுதை அங்கிட்டும் இங்குட்டுமாக் குதிச்சுக் கும்மாளம் போட்டு படுக்கையில துள்ளிக் குதிச்சது. அதனா கட்டில ஒடஞ்சது. ஒடஞ்ச கட்டில்ல இருந்து வேகமா குதிச்ச கழுதை ஓட்டமா ஓடிவந்து மொதலாளி முன்னால நாயி செய்யிறது மாதிரியே செஞ்சது.

அவரு முன்னால நாயி குதிக்கறது மாதிரி குதிச்சது. அப்படிக் குதிச்சதால அங்ஙன இருந்த பொருளெல்லாம் ஒடஞ்சது செதறிடுச்சு. கழுத அப்படியும் இப்படியும் குதிச்சு வந்து தன்னோட முன்னங்கால உயரத் தூக்கி நாயி செய்யிற மாதிரி அவரோட தோள்ள போட்டு அவரோட மொகத்தை தன்னோட நாவால நக்கிக் கொடுத்துச்சு.



கழுதை மொதலாளி எதிர்பாராத நேரத்துல காலத்தூக்கிப் போட்டதுல மொதலாளி கீழ விழுந்தாரு. அதனால அவரோட மண்டை சுவத்துல பட்டு நல்லாப் பொடைச்சிப் போச்சு. கழுதை நாவால மொதலாளியோட மொகத்தை நக்குனதால மொகமெல்லாம் வீச்சமும் எரிச்சலும் ஏற்பட்டுப்போச்சு.

மொதலாளி கழுதை செய்யிறதப் பாத்துட்டு எரிச்சப்பட்டு கடுமையாக் கோபங்கொண்டு, கழுதைக்கு வெறிபுடுச்சிப் போச்சுன்னு நெனச்சி, அங்க கெடந்த கட்டைய எடுத்து, கழுதையை நையப் புடைச்சு வெளிய வெரட்டிக் கொண்டு வந்து கட்டிப் போட்டாரு. கட்டிப் போட்டதுமில்லாம அதுக்குத் தீனியோ தண்ணியோ எதுவும் கொடுக்கல.

கழுதைக்கு ஒடம்பெல்லாம் வலி. அங்கங்க சின்னச் சின்னக் காயம். கழுதைக்கு அதத் தாங்க முடியல. தன்னோட அன்பை மொதலாளி புரிஞ்சிக்கிடலயே. அந்த நாயி செய்யிற மாதிரிதானே நாமளும் செஞ்சம். இதுக்கு ஏன் மொதலாளி கோபப்படறாரு. ச்சே நம்மள மொதலாளிக்குப் புடிக்கவே மாட்டேங்குதுன்னு” பொலம்பிக்கிட்டே அழுதுகிட்டு இருந்துச்சு.

அப்ப அங்க வந்த நாயி கழுதையப் பாத்து, “அண்ணே கவலப்படாதண்ணே. நீயி மொதலாளி மேல வச்சிருக்கறது உண்மையான அன்புதான். ஆனா அத வெளிப்படுத்துற மொறதான் தப்புண்ணே! அவங்க அவங்க மொறையில அன்பை வெளிப்படுத்துணும்ணே! நான் என்னோட வழியில அன்பை வெளிப்படுத்துறேன். அதையே நீ பார்த்துட்டு அதே மாதிரி செய்யக் கூடாது. நீ ஒன்னோட வழியிலதான் அடுத்தவங்க மேல வச்சிருக்கற அன்பை வெளிக்காட்டணும். அப்படி இல்லாததாலதான் இந்தமாதிரி நெலமைன்னு” சொல்லி ஆறுதல் கூறுச்சு.



இதைக் கேட்ட கழுத, “ஆமாந்தம்பி நீ சொல்லறதுதான் சரி. யாராரு எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் நடந்துக்கணும். அதைவிட்டுட்டு மத்தவங்க செய்யிறாங்களேன்னு நாமளும் ஒண்ணச் செய்யப்படாது. அப்படிச் செஞ்சா என்னய மாதிரி அடிபட வேண்டியதுதான். நான் இதைப் புரிஞ்சிக்கிட்டேம்பான்னு” சொன்னது.

அப்பறமா கழுதை கடுமையா வேலை செஞ்சது. மொதலாளிக்கும் கழுதைய ரொம்பப் புடுச்சிப்போச்சு. கழுதைய நல்லாக் கவனிச்சாரு. கழுதையும் மகிழ்ச்சியா இருந்துச்சு.

நாம நாமளா இருக்கணும். அடுத்தவங்களப் பாத்துட்டு எதையும் செய்யக் கூடாதுங்கறதுக்கு இந்தக் கதையச் சொல்வாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1ag.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License