இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

35.காற்றுள்ள போதே தூற்றிக் கொள்


எப்பவுமே நம்மளால முடியிற போது எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிறணும். எப்பவும் எல்லா நேரத்துலயும் எல்லாச் செயல்களையும் நாம செய்ய முடியாது. நம்ம உடம்பும் மனசும் அதுக்கு ஒத்துழைக்காது போயிரும். மனசு ஒத்துழைச்சாலும் உடம்பு ஒத்துழைக்காது. அதனால எப்பப்ப எதை எதைச் செய்யணுமோ அதையெல்லாம் காலந்தாழ்த்தாம ஒடனடியாச் செய்யணும். அப்படி செய்யலைன்னா எப்பவுமே அந்தச் செயலைச் செய்ய முடியாமப் போயிரும். அப்ப நாம ரொம்ப வருத்தப்படணும். இதை விளக்குறதுக்காக ஒரு கதை எங்க பக்கத்துல வழங்கி வருது.

ஒரு ஊருல நல்ல வசதியா ஒருத்தரு வாழ்ந்துக்கிட்டு இருந்தாரு. அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. அவரு ரெண்டு பேரு மேலயும் நல்லாப் பிரியமா இருந்தாரு. ஆனாலும் சின்னவளுக்கு மூத்தாளப் பிடிக்காது. எதையாவது புருஷங்கிட்ட போட்டுக்குடுத்துக்கிட்டேதான் இருப்பா.

இருந்தாலும் அவன் கேக்கமாட்டான். சின்னவளுக்கிட்ட மூத்தவளக் கரிச்சிக் கொட்டாம அவக்கிட்ட அன்போட இருன்னு சொல்வான். ஆனா சின்னவ கேக்கமாட்டா. அவ மூத்தவளுக்கும் அவளோட பிள்ளைங்களுக்கும் ஏதாவது கெடுதல் செஞ்சிக்கிட்டே இருப்பா.

இப்படி இருக்கற போது அந்த ஆளு தன்னோட மூத்தவளுக்குத் தான் உசிரோட இருக்கற போதே தன்னோட சொத்துல ஒரு பாகத்தைக் கொடுத்துறணும்னு நெனச்சாரு. அத இப்பச் செய்வோம் அப்பறம் செய்வோம்னு தள்ளிப் போட்டுக்கிட்டே வந்தாரு.

அவருக்கும் வயாசாயிப் போயிருச்சு. அவரு சரி நமக்கிட்ட இருக்கிற தங்க நகையெல்லாத்தையும் உருக்கி உருண்டையா வச்சிக்கிருவோம். அந்தத் தங்க உருண்டையை சின்னவளுக்குத் தெரியாம மூத்தவளுக்கிட்ட கொடுத்துருவோம்னு நெனச்சித் தங்கத்தை ரகசியமா உருக்கி அதப் பத்தரமா தன்னோட தலையணைக்கு அடியில வச்சிட்டாரு. சமயம் பாத்து சின்னவளுக்குத் தெரியாம மூத்த பொண்டாட்டிக்கிட்ட கொடுத்துருவோம்னு இருந்தாரு.

ஆனா அவரு நெனச்சது மாதிரி நடக்கல. தங்கக்கட்டி உருண்டையை தலையணைக்கு வச்ச மறுநாளே அவருக்கு வாதம் வந்து காலக்கைய இழுத்துக்கிட்டு படுக்கையில தள்ளிருச்சு. வாயும் கோணிப்போச்சு. பேச்சும் வரல.

படுக்கையிலயே கெடந்துக்கிட்டு இருந்தாரு. அவரு பக்கத்திலேயே சின்னவ அவருக்கிட்ட இருக்கிற பணங்காசப் புடுங்கறதுக்காக ஒக்காந்துட்டா. மூத்தவள புருஷன நெருங்க விடல. அதனால தான் கொடுக்க நெனச்சத கொடுக்க முடியாத நிலைஅந்த ஆளுக்கு ஏற்பட்டுருச்சு. இப்படியே இருக்கயில ஒருநாளு சின்னவ படுக்கையத் தட்டி போடுறபோது தலையணைக்கு அடியில இருந்த தங்கக் கட்டிய பாத்து எடுத்து மடியில வச்சிக்கிட்டா.

இதைப் பாத்த புருஷங்காரன் கத்திக்கித்திப் பார்த்தான். அவனால ஒண்ணும் செய்ய முடியல. அவனோட கத்தலக் கேட்டு மூத்தவளும் அவளோட பிள்ளைங்களும் பக்கத்துல இருந்தவங்களும் ஓடிவந்து அவனப் பாத்தாங்க. அவனோட கண்ணுல கண்ணீரு வழிஞ்சிக்கிட்டே இருந்துச்சு. அவன் ம். . .ம்…னு அனத்திக்கிட்டே இருந்தான்.



தான் வச்சிருந்த தங்க உருண்டையத் தன்னோட மூத்த பொண்டாட்டிக்கிட்ட எப்படியாவது வாங்கிக் கொடுத்துரணும்னு நெனச்சி கையச் சிரமப்பட்டுத் தூக்கி உருண்டை வடிவில ஆட்டி ஆட்டிக் காமிச்சி சின்னப் பொண்டாட்டியப் பாத்தான்.

அவன் சொன்னது மத்தவங்களுக்குப் புரியல. ஆனா சின்னவளுக்குப் புரிஞ்சி போயிருச்சு. அட இந்த ஆளு நாம எடுத்து வச்சிருக்கற தங்க உருண்டைக் கட்டியத்தான் சொல்றான் போலருக்கு. இது மத்தவங்களுக்குத் தெரியப்படாதுன்னு நெனச்சி, ஒரு யோசன பண்ணினா.

ஒடனே சின்னவ, ‘‘ஐயோ நம்ம வீட்டுக்காரருக்கு விளாம்பழம் வேணுமாம் அதத்தான் அவரு கைய உருட்டி உருட்டிக் காட்டுறாரு. அவரோட கடைசி ஆசையத் தீத்து வைங்க. இல்லாட்டி அவரு அந்த விளாம்பழத்தைத் திங்காமயே செத்துப் போயிருவாரு. அவரோட ஆத்மா சாந்தியடையாதுன்னு’’ சொன்னா.

இதைக் கேட்ட புருஷங்காரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனால எதுவும் பேச முடியல. ம்… ம்…ம்னு கத்திக்கிட்டே சின்னவளப் பாத்தான். சின்னவ ஒடனே மத்தவங்களப் பாத்து, ‘‘யாராவது ஓடிப்போயி விளாம்பழத்தை வாங்கிக்கிட்டு வந்து அவருக்குக் கொடுங்கன்னு’’ ஒப்பாரி வச்சி அழுதா.

சின்னவளோட புள்ளைங்கள்ள ஒருத்தன் கடைத்தெருவுக்கு ஓடிப்போயி விளாம்பழத்த வாங்கிக்கிட்டு வந்தான். வந்தவன் அத மூத்தவகிட்ட கொடுத்து ஒடச்சிக் கொடுக்கச் சொன்னான். விவரம் புரியாத மூத்தவளும் அத ஒடச்சிப் புருஷனோட வாயில வச்சித் திணிச்சா.



விளாம்பழத்த அந்த ஆளாள சாப்பிட முடியல. அது தொண்டையில போயி அடச்சிக்கிருச்சு. அவரால மூச்சு விடமுடியாம திணறிச் செத்துட்டாரு. எல்லாரும் அழுதாங்க. சின்னவ ஒப்புக்கு ஒப்பாரி வச்சி அழுதா.

கடைசியில அவரோட ஆசை நெறவேறாமலேயே போயிருச்சு. ஒடம்புல மூச்சுக்காத்து இருக்கறதுக்குள்ளறயே நாம செய்ய நெனைக்கறதச் செஞ்சிப்புடணும். அப்படி இல்லைன்னா எதையும் செய்ய முடியாது. இத மனசுல வச்சிக்கிட்டுத்தான் நம்மாளுங்க ‘காத்துள்ள போதே தூற்றிக்கொள்’ அப்படீன்னு சொல்லி வச்சிருக்காங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1ai.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License