இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

38.கொழுக்கட்டையை மறந்தவன்


எப்பவுமே மாமியார் வீட்டுல மருமகனுக்கு மதிப்புத்தான். எத்தனை வருஷமானாலும் மருமகங்கற முறுக்குக்குக் கொறைச்சலிருக்காது. சில பேரு மருமகங்கறதை ஒவ்வொரு முறையும் நிரூபிச்சிக்கிட்டே இருப்பாங்க. கடைசி வரைக்கும் வீட்டுக்கு வந்த மருமகனுக்கு மாமியார் வீட்டுல மரியாதை கொடுத்துத்தான் ஆகணும். மருமகன் தனியா வந்தாலும் இல்ல பொண்ணு கூட சேர்ந்து வந்தாலும் தனி மரியாதை கொடுக்கணும். இல்லைன்னா எதுவுஞ் சொல்ல முடியாது. பெரிய பிரச்சனை ஆயிரும். இது பத்தின கதை ஒண்ணு இருக்கு.

கறாரான பேர்வழி ஒருத்தன் இருந்தான். அவன் எதுவா இருந்தாலும் கெத்த விட்டுக் கொடுக்க மாட்டான். அவன் என்ன நினைக்கிறானோ அதை ஒடனே மத்தவங்க செய்யணும். இப்படிப்பட்டவன் பக்கத்தூருல சம்பந்தம் போட்டான். அவனுக்குப் பொண்ணுக் கொடுத்தவங்க அவன தாங்குதாங்குன்னு தாங்குனாங்க.

ரெண்டு வருசம் போயிருச்சு. அப்படி இருக்கயில ஒருநாள் அவன் பக்கத்தூருக்குப் போக வேண்டிய சூழல் வந்துருச்சு. அவனும் போனான். போன வேலைய முடிச்சிக்கிட்டு அப்படியோ மாமியா வீட்டுக்கும் போயிப் பாத்துட்டு வந்துருவோம்னு அங்க போனான். மருமகனப் பாத்த மாமியாரும் மாமனாரும் நல்லாக் கவனிச்சாங்க...

மாமியாகாரி மருவமனுக்குக் கொழுக்கட்டை செஞ்சி சாப்புடக் கொடுத்தா. மருமவங்காரனும் கொழுக்கட்டையச் சாப்புட்டான். அவன் இதுக்கு முன்னால இந்தமாதிரி கொழுக்கட்டையச் சாப்புட்டது கெடையாது. கொழுக்கட்டை நல்லா ருசியா இருந்ததுனால வேணுங்கறதச் சாப்புட்டான். சாப்புட்டுப்புட்டு மாமியாகாரிக்கிட்ட இத எப்படிச் செய்யிறதுன்னு கேட்டான். மாமியாகாரியும் பக்குவத்தச் சொல்லிக் கொடுத்தா.

என்ன சாப்புட்டங்கறத மறக்காம மனசுக்குள்ளறயே கொழுக்கட்டை கொழுக்கட்டைன்னு சொல்லிக்கிட்டான். பிறகு இதேமாதிரி நம்ம வீட்டுக்காரிக்கிட்டயும் சொல்லிச் செய்யச் சொல்லணும்னு நெனச்சிக்கிட்டு மாமியாகரிக்கிட்டயும் மாமனாருகிட்டயும் சொல்லிக்கிட்டு ஊருக்குக் கௌம்புனான்.

வழிநெடுக மாமியாரு செஞ்ச கொழுக்கட்டைப் பேரச் சொல்லிக்கிட்டே வந்தான். கொழுக்கட்டை கொழுக்கட்டைன்னு மனசுக்குள்ள சொன்னா மறந்து போகும்னு நெனச்சிக்கிட்டு வாய்விட்டுச் சொல்லிக்கிட்டே வந்தான். ஊருக்குப் போற வழியில தாண்டுற மாதிர ஒரு பள்ளம் இருந்துச்சு. அவனும் பின்னாலயே போயிட்டு வேகமா ஓடிவந்து ஐத்தரிப்பச்சா கொழுக்கட்டைன்னு சொல்லிக்கிட்டே தாண்டுனான்.

தாண்டின பிறகு திரும்பவும் ஐத்தரிப்பச்சா கொழுக்கட்டைன்னு சொல்லிக்கிட்டே வந்தான். அடுத்ததா இதே மாதிரி ஒரு பள்ளம் வந்துச்சு. இவனும் வேகவேகமா ஓடிப்போயி அதத் தாண்டினான். இப்ப ஐத்தரிப்பச்சான்னு மட்டும் சொன்னான். கொழுக்கட்டைங்கறது மறந்து போயிருச்சு. அப்படியே வீடு வர்ற வரைக்கும் ஐத்தரிப் பச்சா ஐத்தரிப்பச்சான்னே சொல்லிக்கிட்டு வந்தான்.



வீட்டுக்குள்ளாற நுழைஞ்ச புருஷனப் பாத்து, ‘‘ஏங்க பக்கத்தூருக்குப் போனீங்களே எங்க அப்பாவையும் அம்மாவையும் பாத்தீகளான்னு’’ கேட்டா.

அதுக்கு அவன், ‘‘ம்..ம்..ம். பாத்தேன் பாத்தேன். நல்லா இருக்காக. ஒங்க அம்மா எனக்கு ஒரு பலகாரம் செஞ்சி சாப்புடக் கொடுத்தாங்க. அதை நீயி செஞ்சி கொடுக்கணும்னு’’ சொன்னான்.

பொண்டாட்டியும் ‘‘சரி செய்யிறேன். அது என்னன்னு சொல்லுங்கன்னா’’ புருஷங்காரனுக்குப் பேரு மறந்து போயிருச்சு. ஆனா அவன் சொல்லிக்கிட்டே வந்தது மறக்கலே. ஒடனே அவன், ‘‘இந்த பாரு ஐத்தரிப் பச்சான்னு ஒரு பலகாரம். அதச் செஞ்சிகொடுன்னான்’’

பொண்டாட்டிகாரிக்கு ஒண்ணும் புரியல. ‘‘அட என்னங்க நீங்க சொல்றீங்கன்னு’’ கேட்டா. அதுக்கு, ‘‘ஏண்டி நாஞ்சொல்றது ஒனக்குப் புரியல. அதாண்டி ஐத்தரிப்பச்சா பலகாரம். அதச் செஞ்சு கொடுன்னான்’’

பொண்டாட்டிக்காரிக்குத் தலையப் பிச்சுக்கலாம் போல வந்துருச்சு. ‘‘என்னது நம்ம வீட்டுக்காரனுக்கு ஏதும் புத்திகித்தி பொரண்டு போச்சா? என்னன்னமோ சொல்லி அதச் செஞ்சிகுடுன்னு பாடாப்படுத்துறானேன்னு’’ நெனச்சிக்கிட்டுப் பேசாம அந்தப் பலகாரம் என்னவா இருக்கும்ணு யோச்சிக்க ஆரம்பிச்சா.

இதப்பாத்த புருஷங்காரனுக்கு கோவம் முட்டிக்கிட்டு வந்துருச்சு. ‘‘ஏண்டி நாம்பாட்டுக்குச் சொல்லிக்கிட்டு இருக்கேன். நீபாட்டுக்குக் குத்துக்கல்லுமாதிரி ஒக்காந்துக்கிட்டு இருக்க. ஒனக்கு என்ன திமிரு... இப்ப எந்திருச்சி வந்து ஐத்தரிப்பச்சா செஞ்சி கொடுக்கிறியா இல்லையான்னு’’ கேட்டான்.

பொண்டாட்டிகாரிக்கு ஒண்ணும் புரியாமா, ‘‘அட என்னங்க வெளாங்காத்தனமா என்னென்னமோ சொல்றீங்க... சொல்லறத என்னன்னுதான் புரியும்படியாத் தெளிவாச் சொல்லித் தொலையுங்களேன்னு’’ வெடுக்குன்னு கேட்டுப்புட்டா.

கோவந்தாங்காத புருஷங்காரன், ‘‘ஏண்டி என்னப்பாத்தா வௌங்காதவனாவாத் தெரியுது. எவ்வள திமிரு ஒனக்குன்னு’’ சொல்லி அவளப் போட்டுக் கம்பால கடுமையா அடிச்சான். அடி பொறுக்காத பொண்ணாட்டிகாரி ‘‘ஐயோ என்னைய எம்புருஷன் அடிச்சிக் கொல்றானே... யாராவது இருந்தா வந்து காப்பாத்துங்களேன்னு’’ சொல்லிக் கத்துனா.

புருஷங்காரன் விடுறதா இல்ல. அடிவெளுத்து வாங்குனான். பொண்டாட்டிகாரியோட சத்தத்தக் கேட்ட பக்கத்துல இருக்கறவங்க வந்து அவனத் தடுத்து விலக்கி விட்டாங்க. பொண்டாட்டிகாரி தேம்பித் தேம்பி அழுதா. அதப் பாத்த பக்கத்துவீட்டுக்காரி , ‘‘ஏய்யா நீயெல்லாம் ஒரு ஆம்பளையாய்யா இந்த மாதிரி கொழுக்கட்டை மாதிரி வீங்குற அளவுக்கு அடிச்சிருக்கே? சுத்த கூறுகெட்ட ஆளாவுள்ள இருக்கன்னு’’ புருஷங்காரனப் பார்த்துச் சொன்னா.



அதக்கேட்ட புருஷங்காரனுக்கு அப்பத்தான் தன்னோட மாமியா செஞ்சி கொடுத்த பலகாரம் கொழுக்கட்டைன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. ஒடனே தன்னோட பொண்டாட்டியப் பாத்துட்டு, ‘‘அடியே நா ஏதோ ஞாபகத்துல மறந்துட்டேன். இப்ப ஞாபகத்துக்கு வந்துருச்சு. ஒங்கம்மா எனக்குக் கொழுக்கட்டை செஞ்சி கொடுத்தாங்க. நீயும் அதுமாதிரி கொழுக்கட்டை செஞ்சி எனக்குக் கொடுன்னு’’ கேட்டான்.

அதக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரி, ‘‘அடப் பாவிமனுசா இந்தக் கொழுக்கட்டைக்குத்தான் இந்தப்பாடா. இத முன்னாடியே சொல்லித் தொலைச்சா என்னா? இப்படி இந்தப் பிள்ளையப் போட்டு அடிஅடின்னு அடிச்சிப்போட்டுட்டியே இனிமே இந்த மாதிரியெல்லாம் செய்யாதய்யான்னு’’ சொல்லிட்டுப் போயிட்டா.

பொண்டாட்டிகாரியும் தன்னோட புருஷனோட கூறு கெட்ட தனத்த நெனச்சி வேதனப்பட்டா. பெறகு அவனுக்குக் கொழுக்கட்டை செஞ்சிக் கொடுத்தா. இன்னைக்கும் கொழுக்கட்டை செஞ்சி சாப்புடற போது இங்க உள்ளவங்க இந்தக் கதைய ஞாபகப்படுத்திப் பேசுவாங்க. எப்பவும் நிதானத்தோடயும் நல்ல நினைவோடயும் இருக்கணுங்கறத இந்தக் கதை நமக்குச் சொல்லுது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1al.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License