இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

41.அம்பலம் சொன்ன தீர்ப்பு


திறமையானவங்க அப்படீங்கறதக் குறிக்கிறதுக்கு சமத்து, சமத்தி, சமத்துப்பிள்ளை, கெட்டிக்காரன், கெட்டிக்காரி என்பது போன்ற எத்தனையோ சொற்கள் வழக்கத்துல வழங்கி வருது. திறமையானவங்கங்கறத எப்படிக் கண்டுபிடிக்கிறது? அதப்பத்தின ஒரு கத ஒண்ணு புதுக்கோட்டை மாவட்டம் பக்கம் வழங்கி வருது.

அக்கா தங்கச்சி ரெண்டு பேரு இருந்தாங்க. ரெண்டுபேரும் ஒருத்தரு மேல ஒருத்தரு பாசமா இருந்தாங்க. அதுலயும் சின்னவ ரொம்பக் கெட்டிக்காரி. எதுவா இருந்தாலும் ரொம்பச் சிக்கனமாச் செய்வா. தேவைக்கு அதிகமாச் செலவழிக்கமாட்டா. ஆனா அக்காகாரி தராளமாச் செலவு செய்வா. எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டா.

இவங்க ரெண்டுபேரும் ஒரே ஊருல வாக்கப்பட்டுப் போனாங்க. அக்காகாரி வீட்டுக்காரன் நல்லாச் சம்பாதித்தான். தங்கச்சியக் கட்டியவனும் நல்லாச் சம்பாதிச்சான். அக்கா தாரளமாச் செலவு செஞ்சதால கொஞ்சங்கூட மிச்சம்புடிக்க முடியல. அதனால வரவுக்கும் செலவுக்கும் சரியா இருந்துச்சு.

தங்கச்சிகாரி வர்ற வருமானத்துல கொஞ்சம் எடுத்து வச்சா. அதிகமாச் செலவழிக்கல. கட்டுச்செட்டா இருந்தா. அக்காகாரி எப்பவும் தங்கச்சிகாரிக்கிட்ட எதையாவது ஓசி வாங்கிக்கிட்டே இருந்தா. தங்கச்சிகாரியும் அக்காதானேன்னு அவ கேக்குறபோதெல்லாம் கொடுத்துக்கிட்டு வந்தா. இப்படி இருக்கறபோது ஒரு நாளு அக்காகாரி தங்கச்சிகாரிக்கிட்ட பணம் கடனாக் கேட்டா.

தங்கச்சிகாரியும் சரின்னுட்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்துரணும்னு சொல்லிக் கடனா அக்காகாரிக்கிட்ட பணத்தைக் கொடுத்தா. பணம் வாங்கின அக்காகாரி சொன்ன நாளுக்குள்ளாற பணத்தைக் கொடுக்கல. தங்கச்சிகாரியும் சரி அக்காகாரி தந்துருவான்னுட்டு பொறுமையா இருந்தா.

கொஞ்சநாளுப் போச்சு. அக்காகாரி பணத்தைக் கொடுக்கிற மாதிரி தெரியல. சரி அக்காக்கிட்டப் போயிப் பணத்தைக் கேப்போம்னு நெனச்சிக்கிட்டு தங்கச்சிகாரி அக்காக்கிட்ட போயி,‘‘ஏக்கா நீயி எனக்கிட்ட வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுக்கக் கூடாதா? எவ்வளவு நாளாயிருச்சுன்னு’’ கேட்டா.

இதைக் கேட்ட அக்காகாரி, ‘‘எப்படி நீ பணங் கொடுத்தே? நான் எப்ப ஒனக்கிட்ட பணம் கடன் வாங்கினேன்? திட்டாந்திரமால்ல நீயி எம்மேல பழியப்போடுற? கடன் வாங்கினேன்னு சொன்னா அப்பறம் நானு பொல்லாதவளா ஆயிடுவேன்னு’’ மல்லு மல்லுன்னு தங்கச்சிக்கிட்ட சண்டைக்கு வந்துட்டா.

தங்கச்சிகாரிக்கு என்னடா நம்ம அக்கா கடன வாங்கிக்கிட்டு வாங்கலைன்னு சொல்றாளேன்னு ரொம்ப வருத்தம். அவ அக்காகிட்டத் திரும்பத் திரும்பக் கேட்டா. ஆனா அக்காகாரி கடன் வாங்கவே இல்லைன்னு சாதிச்சா. ஒடனே தங்கச்சிகாரி நான் போயி ஊரு அம்பலத்துக்கிட்ட சொல்லப்போறேன்னு சொல்லிட்டு ஊருல இருக்கிற ஊர் அம்பலத்துக்கிட்ட பிராது கொடுத்தா.

அதக் கேட்ட ஊரு அம்பலகாரரு ஆளவிட்டு அக்காகாரிய வரச்சொன்னாரு. ஊரம்பலத்தப் பாக்க வந்த அக்காகாரியப் பாத்து, ‘‘நீ ஒன்னோட தங்கச்சிக்கிட்ட கடன் வாங்குனது உண்மையான்னு’’ கேட்டாரு. அதுக்கு அக்காகாரி, ‘‘சத்தியமா நான் ஏந் தங்கச்சிக்கிட்ட கடன் வாங்கலையா. அவ பொய் சொல்றா’’ன்னு அழுதுகிட்டே சொன்னா. ஊரம்பலம் தங்கச்சிகாரியப் பாத்து, ‘‘என்னம்மா ஒங்கக்கா இப்படிச் சொல்றா. நீ அவ கடன் வாங்கினான்னு சொல்றே.. நீயாவது உண்மையச் சொல்லுன்னு’’ அதட்டிக் கேட்டாரு. அதுக்குத் தங்கச்சிகாரி, ‘‘ஐயா நான் பொய்சொல்லலை. எங்கக்காக்கிட்ட பணம் கடனாக் கொடுத்தது உண்மை. ஆனா அதைத் திரும்பக் கேட்டதுக்கு நான் வாங்கவே இல்லைன்னு எங்கக்கா சொல்லுதுன்னு’’ அவளும் அழுதுக்கிட்டுச் சொன்னா.



ஊரம்பலத்துக்கு ஒண்ணுமே புரியல. ஆனா அவருக்கு அக்காகாரிமேல சந்தேகமா இருந்துச்சு. அவ நடந்துக்கிட்ட மொறை அவரச் சந்தேகப்பட வச்சது. அதோடுமட்டுமில்லாம அவரு ரொம்ப புத்திசாலி. எப்படிப்படட வழக்கையும் சரியா விசாரிச்சு யாருக்கும் பாதகமில்லாம தீர்ப்புச் சொல்லிருவாரு.

அவரு மறுபடியும் அக்காகாரியப் பாத்து, ‘‘ஏம்மா நீயி ஒன்னோட தங்கச்சிக்கிட்ட கடன் வாங்குனது உண்மைதானே. மறைக்காம உண்மையச் சொல்லு’’ அப்படீன்னு மிரட்டிக் கேட்டாரு. அப்பவும் அவ உண்மைய ஒத்துக்கல. சரி இவங்கள நாளைக்குக் காலையில வரச்சொல்லித் தீர்ப்பச் சொல்வோம்னு நெனச்சிக்கிட்டு அவங்க ரெண்டுபேரையும் வீட்டுக்குப் போகச் சொன்னாரு.

மறுநாள் காலையில வீட்டுக்கு முன்னால சேறும் சகதியுமா இருக்கற மாதிரி பாத்துக்கிட்டாரு. அக்காவும் தங்கச்சியும் வேகவேகமா ஊரம்பலத்தோடு வீட்டுக்கு வந்தாங்க. ரெண்டுபேரும் சகதி கிடக்கறதப் பாக்காமா வந்துட்டாங்க. கால்ல நல்லா சகதி ஒட்டிக்கிருச்சு. காலுமுழுவதும் சகதியா இருந்ததால ஆளுக்கு ஒரு பெரிய செம்புல தண்ணியக் கொடுத்து காலைக் கழுவிக்கிட்டு வாங்கன்னு சொன்னாரு.

அக்கா தங்கச்சி ரெண்டுபேரும் தண்ணிய வாங்கிக்கிட்டு காலக் கழுவுனாங்க. அக்காகாரி கால்ல தண்ணிய எல்லாத்தையும் ஊத்திட்டு இன்னுங் கொஞ்சம் தண்ணிதாங்கன்னு கேட்டா அம்பலத்துகிட்ட. அவரும் சரின்னு கொடுத்தாரு. ரெண்டாவது தடவை கொடுத்த தண்ணீரையும் அவ காலிபண்ணிட்டு மறுபடியும் மூனாவதா இன்னொரு செம்புத் தண்ணீரக் கேட்டா. அதையும் கொடுத்தாரு அம்பலம். அவ அதையும் மிச்சம் வைக்காம ஊத்திக் காலக் கழுவிட்டு வந்தா.

ஆனா தங்கச்சிகாரி ஒரு செம்புத் தண்ணீருலேயே காலச் சுத்தமாக் கழுவிட்டு மிச்சத் தண்ணீரையும் வச்சிருந்தா. அதப் பாத்த அம்பலம் அக்காகாரியப் பாத்து, ‘‘ஏம்மா பொய்சொல்ற. நீயி ஒன்னோட தங்கச்சிக்கிட்ட நிச்சயமா கடன் வாங்கியிருக்கே. ஒழுங்கா மரியாதையா அவகிட்ட வாங்குன பணத்தைத் திருப்பிக் கொடுத்துரு. இல்லைன்னா ஓம்மேல குற்றச்சாட்டுச் சொல்லி ஊரைவிட்டே ஓதுக்கி வச்சிருவேன்னு’’ சொன்னாரு.

அதக்கேட்ட அக்காகாரி பயந்து போயி தான் கடன் வாங்குனது உண்மைதான்னும் தன்னை மன்னிச்சிருங்கன்னும் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டா. அதுக்குப் பெறகு தங்கச்சிகாரிக்கிட்ட வாங்குன பணத்தையும் திருப்பிக் கொடுத்துட்டுப் போயிட்டா. தங்கச்சிகாரி ஊரம்பலத்துக்கு நன்றியச் சொல்லிட்டு வீட்டுக்குப் போயிட்டா.



இதப் பாத்துக்கிட்டு இருந்த வேலைக்காரன் ஊரம்பலத்துக்கிட்ட, “எப்படிய்யா அக்காகாரிதான் குற்றவாளின்னு கண்டுபிடிச்சீங்கன்னு” கேட்டான்.

அதுக்கு அம்பலம், “அக்காகாரி மூணு செம்புத் தண்ணி வாங்கியும் கால ஒழுங்காக் கழுவல. அவ தண்ணீய அதிகமாச் செலவழிச்சா. ஆனா தங்கச்சிகாரி ஒரு செம்புத் தண்ணீருல காலச் சுத்தமாக் கழுவிட்டு தண்ணிய மிச்சம் வச்சா. அதுலருந்து அக்காகாரி வரவுக்கு மீறி செலவு செய்யக் கூடியவன்னு தீர்மானிச்சிட்டேன். தங்கச்சிகாரி ரெம்பச் சிக்கனமா வாழறவன்னும் தெரிஞ்சிக்கிட்டேன். அதனாலதான் அக்காகாரி குற்றவாளின்னு தீர்ப்பச் சொன்னேன்னு” சொன்னாரு. அவரோட புத்திசாலித்தனத்தக் கண்ட வேலைக்காரன் ரொம்ப வியந்து போயிட்டான். இன்னக்கி வரைக்கும் இந்த ஊரம்பலத்தோட தீர்ப்பக் கதையாச் சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கிறாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1ao.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License