இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

52. செட்டியாரு இருக்காருடா...!


ஒவ்வொரு ஊருலயும் ஒரு கூரு கெட்டவன் இருப்பான். அவங்கிட்ட எதச் சொல்லக் கூடாதுன்னு சொல்றமோ அதைச் சொல்வான். எதைச் செய்யக்கூடாதுன்னு சொல்றமோ அதைச் செய்வான். அவனப் பத்தின கதை ஒண்ணு இந்தப் பக்கத்துல வழக்கத்துல வழங்கி வருது.

ஒரு ஊருல வட்டிக்குப் பணங்கொடுத்து வாங்குற கஞ்சத்தனத்துக்குப் பேருபோன செட்டியாரு ஒருத்தரு இருந்தாரு. அவரு சுத்துவட்டாரத்துல இருக்குற எல்லா ஊருக்கும் போயி பணம் தேவைப்படறவங்களுக்குப் பணத்தைக் கொடுத்துட்டு ஒவ்வொரு வாரக்கடைசி நாள்ல போயி வட்டிய வசூல் செஞ்சிக்கிட்டு வருவாரு.

அப்படி வட்டி வசூல் செய்யப் போறபோது தன்கிட்ட வேலைபாக்குற ஒருத்தனக் கூட்டிக்கிட்டுப் போவாரு. அந்தக் காலத்துல காசுதான் புழக்கத்துல இருந்தது. ஒரு பணம் ரெண்டு பணம்னு சொல்வாங்க. அந்தக் காசுகள வாங்கி சாக்குல போட்டுத் தூக்குறதுக்குத்தான் அந்தச் செட்டியாரு தன்னோட வேலைக்காரனக் கூட்டிக்கிட்டுப் போவாரு. அவனும் காசுகள வாங்கிச் சாக்குலப் போட்டுக்கிட்டுத் தலையில வச்சிக்கிட்டு வருவான்.

இந்தமாதிரி ரொம்ப நாளு அந்த வேலைக்காரன் நாணயமா வேலையச் செஞ்சிக்கிட்டு வந்தான். அப்படி இருக்கறபோது ஒருவாரம் அந்த வேலையாளுக்கு ஒடம்புக்கு முடியாமப் போயிருச்சு. ஆஹா நல்ல வேலைக்காரனுக்குப் போயி இப்ப முடியாமப் போயிருச்சே. என்ன செய்யிறது. வட்டிப்பணத்தை யாருக்கிட்ட கொடுத்து தூக்கிக்கிட்டு வரச் சொல்றதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தாரு.

நாம கொடுக்கற பணத்தை வாங்கிக்கணும். அதே சமயம் சலிக்காம சுமையத் தூக்கிக்கிட்டு வரணும் அப்படியாரு இந்த ஊருல இருக்குறான்னு சிந்திச்சுப்பாத்தாரு. அப்ப அவருக்குச் சட்டுன்னு அந்த ஊருல இருந்த குப்பான் நினைவுக்கு வந்தான். அந்த ஊருல அவன எல்லாரும் கூருகெட்ட குப்பான் கூருகெட்ட குப்பான்னு கூப்புடுவாங்க.

அவன் ஒரு வெவரங் கெட்டவன். இந்தவாரம் இவனக் கூட்டிக்கிட்டுப் போயி வட்டிப் பணத்தை வசூல் செஞ்சிக்கிட்டு வருவோம்னு நெனச்சிக்கிட்டு அவனத் தேடிப் போனாரு. அவனும் அவரு கூப்புட்ட ஒடனேயே சரின்னு ஒத்துக்கிட்டான். செட்டியாருக்கு ரொம்ப சந்தோஷம். அப்பாடா, நாம எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கிறதுக்கு சரியான ஆளு கெடைச்சிட்டான்னு நெனச்சிக்கிட்டு அவனக் கூட்டிக்கிட்டு ஒவ்வொரு ஊராப் போயி வட்டிக்காச வசூல் செஞ்சாரு. நெறையப் பணம் சேர்ந்துருச்சு.

இனி ஊருக்குப் போயிரலாம்னு நெனச்சிக்கிட்டு கூருகெட்ட குப்பானையும் கூட்டிக்கிட்டு தன்னோட ஊரப்பாத்துக் கௌம்பினாரு. ஆனா அந்தக் கூருகெட்ட குப்பான் செட்டியாரப் பாத்து, அது என்ன? இது என்னன்னு ஓயாமா தொணதொணன்னு கேள்விகேட்டுக்கிட்டே வந்தான். இது செட்டியாருக்குப் புடிக்கல. செட்டியாரு கூருகெட்ட குப்பானப்பாத்து, “டேய் பேசாம வாயமூடிக்கிட்டு வாடா”ன்னு அதட்டுனாரு.



அதக்கேட்ட கூருகெட்ட குப்பான், “அப்பன்னா எனக்குக் காசுகுடுங்க. அப்பத்தான் நான் பேசாம வருவேன்”னு சொன்னான். சரி அவனுக்குக் கொடுக்கிற கூலியக் கொடுத்தா அவன் பேசாம வருவான்னு செட்டியாரும் நெனச்சாரு. தனக்கிட்ட இருந்த ஒரு செல்லாத அஞ்சுரூபாக் காச எடுத்துக் கொடுத்து இத வச்சிக்கிட்டுப் பேசாம வாடான்னு சொன்னாரு. அவனும் அந்தக் காசப் பாத்துட்டு, “ஐயா… இன்னக்கி எனக்கு அஞ்சுரூபா கெடச்சிருச்சே”ன்னு அதைச் சட்டைப் பையில போட்டுக்கிட்டு அதத் தொட்டுத் தொட்டுப் பாத்துக்கிட்டு வந்தான்.

அவங்க தங்களோட ஊருக்கு ஒரு காட்டைக் கடந்துதான் போகணும். இருட்டத் தொடங்கினா களவானி பயம் அதிகம். அதனால கூருகெட்ட குப்பான வெரசா நடடான்னு சொல்லிச் சொல்லி வெரட்டிக்கிட்டு அவரும் வேகமா நடந்து வந்தாரு. அப்படி வந்தும் நடுக்காட்டுக்குள்ளாற வந்தபோது கடுமையா இருட்டிருச்சு. கையில வௌக்குமில்லாம எப்படி நடக்குறது? இருட்டுக்குள்ளாற களவானிப்பயலுக வந்துட்டா என்ன செய்யிறது. இருக்குற எல்லாப் பணமும் போயிருமேன்னு செட்டியாரு நெனச்சிக்கிட்டே வந்தாரு.

அப்ப அந்தக் கூருகெட்ட குப்பான், “ஐயா இனிமே என்னால ஒரு எட்டுக்கூட வச்சி நடக்க முடியாது. இருட்டுல பாத தெரியலைய்யா”ன்னு சொன்னான். செட்டியாருக்குமே பாதை தெரியல. அவரும் தட்டுத்தடுமாறித்தான் நடந்து வந்துக்கிட்டு இருந்தாரு. பேசாமா இந்தப் பாதைக்கு அங்கிட்டு இருக்கிற மரத்தடியில தங்கிட்டு காலையில போயிடலாம்னு நெனச்சிக்கிட்டு, குப்பானப் பாத்து, “டேய் கூருகெட்ட குப்பா, இந்த மூட்டைய கொண்டுவந்து இந்த மரத்துக்குப் பக்கத்துல இருக்கற பொதருக்குள்ளாற போட்டுட்டு, அந்தப்பக்கத்துல நீ படுத்துக்க. நான் இந்தப் பொதருக்குப் பக்கத்துல படுத்துக்கறேன். இருட்டுக்குள்ளாற யாரு வந்தாலும் எதக் கேட்டாலும் எதுவும் தெரியாதுன்னு சொல்லிப்புடு”ன்னு சொல்லிட்டு துண்ட ஒதறித் தரையில விரிச்சிக்கிட்டுப் படுத்துட்டாரு. அவனும் மரத்துக்கு அந்தப் பக்கம் பாதை ஓரத்துல படுத்துக்கிட்டான். கூருகெட்ட குப்பானுக்குத் தூக்கம் வரல. பொரண்டு பொரண்டு படுத்துக்கிட்டே இருந்தான்.

ரெண்டுபேரும் இப்படி இருக்கறபோது திடீர்னு அங்க நாலைஞ்சு பேரு ஓடியார சத்தம் கேட்டுச்சு. செட்டியாரு திடுக்குன்னு தூக்கிப்போட்ட ஒடனே முழிச்சிக்கிட்டாரு. இந்தக் களவானிப் பயலுகக்கிட்ட இருந்து தப்பிக்கணும்னு வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கிட்டு இருந்தாரு.

காட்டுக்குள்ளாற ஓடிவந்தவங்கள்ள ஒருத்தன் பாதை ஓரத்துல படுத்துக்கிடந்த கூருகெட்ட குப்பான் மேல பலமா மிதிச்சிட்டான். அப்படி மிதிச்சவன், தடுமாறி விழப்போனான். அப்ப பக்கத்துல வந்தவன், “என்னடா விழுகிறமாதிரி தள்ளாடிக்கிட்டு வர்ற”ன்னு கேட்டான். அதுக்கு அவன், “ஒரு மரக்கட்டையில மிச்சுட்டேன். அதனால நான் தடுமாறிட்டேன்”னு சொன்னான்.

இதைக்கேட்டுக்கிட்டே இருந்த கூருகெட்ட குப்பானுக்கு கடுமையான கோபம் வந்துருச்சு. அவன் ஒடனே எழுந்திருச்சு, “டேய் யாரப் பாத்து ’மரக்கட்டை’ன்னு சொன்னே? நான் ஒன்னையாட்டம் மனுசன்டா? முட்டாப்பயலே”ன்னு சத்தம்போட்டுக் கத்தினான். அவனோட கத்தலக் கேட்ட களவானிப் பயலுக அந்த இடத்துலேயே நின்னுட்டானுக.

கூருகெட்ட குப்பான் இருக்கற எடத்துக்கு வந்து, அவன மடக்கிப் புடுச்சித் தூக்கி நிப்பாட்டி, “டேய் ஓங்கிட்ட இருக்கற காச எடுடா”ன்னு ஓங்கி ஒரு அறை விட்டான். அந்த அறைய வாங்கின குப்பான், “டேய் அடிக்காதிங்கடா, இந்தாங்கடா ஏங்கிட்ட அஞ்சு பணம் இருக்குடா இந்தக் காச வச்சிக்கிட்டு என்னைய விட்டுருங்கடா”ன்னு சொன்னான்.

அட இந்த நடுக்காட்டுல ஒருத்தன் அஞ்சு பணம் வைச்சிருக்கானேன்னு நெனச்சி அத வாங்கித் தொட்டுத் தடவிப் பாத்தானுக. அப்படிப் பாத்த ஒடனே அது செல்லாத காசுன்னு அவனுகளுக்குப் புரிஞ்சி போயிருச்சு. களவானிப் பயகள்ல ஒருத்தன், “டேய் இது செல்லாத காசுடா. அவன விட்டுட்டு வாங்கடா”ன்னு சொன்னான்.



இதக் கேட்ட கூருகெட்ட குப்பானுக்குச் சுள்ளுன்னு கோபம் வந்துருச்சு. “ஏண்டா களவானிப் பயலுகளா எதைப் போயி செல்லாத காசுங்குறீங்க... இதுவா செல்லாத காசு. இது செல்லுமா செல்லாதாங்குறதுக்கு எங்க செட்டியாரு இருக்காருடா அவருக்கிட்டக் கேளுங்கடா”ன்னு சொன்னான்.

ஒடனே அந்தக் களவானிப் பயலுக, “டேய் இன்னொருத்தனும் இங்க இருக்காண்டா... அவனயும் புடிச்சிக் கொண்டாங்கடா”ன்னு சத்தம் போட்டான். களவானிப்பயலுக செட்டியாரப் போயித் தேடி இழுத்துக்கிட்டு வந்தானுக. அப்படி இழுத்துக்கிட்டு வர்றபோது அவரு பக்கத்துல ஒரு மூட்டை கெடந்தது. அது பூராவும் காசுகளா இருந்ததைப் பாத்துட்டு அவனுக ரொம்ப சந்தோஷப்பட்டானுக.

செட்டியாருக்கு ரெண்டு உதை குடுத்து அவருகிட்ட இருந்த பொருளையும், காசுகளையும் பறிச்சிக்கிட்டு கீழ தள்ளிவிட்டுட்டுப் போயிட்டானுக. அப்பத்தான் அந்தச் செட்டியாருக்கு ஒண்ணு புரிஞ்சது. நாம கூருகெட்ட குப்பான ஏமாத்தனும்னு நெனச்சி அவங்கிட்ட செல்லாத காசக் கொடுத்தோம். ஆனா அதுவே நமக்கு எமனாப் போயிருச்சுன்னு வருத்தப்பட்டாரு. மத்தவங்களுக்குக் கூலி கொடுக்குறதுக்கு லோபிப்பட்டுக்கிட்டு ஒரு கூருகெட்டவன நம்பி வந்து எல்லாத்தையும் இழந்துட்டமேன்னு வருந்துனாரு.

ஏமாத்தனும்னு நெனச்சோம்னா நாமதான் ஏமாந்து போயிருவோம். அதத்தான் இந்தக் கதை நமக்குச் சொல்லுது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1az.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License