இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

53. சாமியார் பேச்சைக் கேட்ட பாம்பு


ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் உண்டு. ஆனால் அந்தப் பெயருக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்காது. சிவப்பி என்றால் அவள் கருப்பாக இருப்பாள். அதேபோன்று வெள்ளாடு என்று ஆட்டை அழைத்தால் அது கருப்பாக இருக்கும். மனுசனக் கொல்லக் கூடிய அதிக நஞ்சுள்ள பாம்புக்கு நல்லபாம்புன்னு பேரு. இந்த நல்லபாம்பப் பற்றி ஒரு கதை இருக்கு.

ஒரு பெரிய கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்துக்குப் பக்கத்துல பெரிய காடு. அந்தக் கிராம மக்கள் அந்தக் காட்டச் சுத்திச் சுத்தி ஆடு மாடுகள மேய்ப்பாங்களே தவிர அந்தக் காட்டுக்குள்ளாறப் போகமாட்டாங்க. அதுக்கு அந்தக் காட்டுக்குள்ளாற ஒரு பெரிய நல்ல பாம்பு ஒண்ணு இருந்துச்சு. அந்தப் பாம்பு அந்தக் காட்டுக்குள்ளாற சுத்திச் சுத்தி வரும்.

அப்படி வர்றபோது அந்தப் பக்கம் போற வார ஆளுகளையெல்லாம் கொத்திச் சாகடிச்சிடும். அதனால அந்தப் பாம்புக்குப் பயந்துக்கிட்டு அந்தக் காட்டுக்குள்ளாற யாரும் போகமாட்டாங்க. இதுனால அந்தக் காடு பெரியளவுள வளந்து இருந்துச்சு. அந்தப் பாம்பும் சுகமா அந்தக் காட்டுக்குள்ளாற வாழ்ந்துக்கிட்டு இருந்துச்சு.

இப்படி இருக்கறபோது ஒரு நாள் அந்தக் கிராமத்துக்கு ஒரு சாமியாரு வந்தாரு. அப்படி வந்தவரு அந்தக் கிராமத்துல ஒருநாள் தங்கி இருந்தாரு. அந்தக் கிராமத்துக்காரவுங்க எல்லாரும் அவருக்கிட்ட நல்லவிதமா நடந்துக்கிட்டாங்க. அந்தக் கிராமத்துக்காரங்க நடந்துக்கிட்ட முறை அந்தச் சாமியார ரொம்ப மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்தச் சாமியாரு அந்தக் கிராமத்தவிட்டுப் பொறப்படபோது அங்க உள்ளவங்களுக்கிட்ட சொல்லிக்கிட்டுக் கிளம்பினாரு.

அவரு அந்தப் பெரிய காட்டப்பாத்துக் கிளம்பறதப் பாத்த கிராமத்துக்காரங்க ஓட்ட ஓட்டமா ஓடிப்போயி, “ஐயா தயவு செஞ்சி அந்தக் காட்டுக்குள்ளாறப் போயிடாதீங்க. அங்க யாரும் நாங்க போகமாட்டோம். நீங்க நல்லவுங்க. அங்க நீங்க தெரியாமப் போனீங்கன்னா அங்க உள்ள நல்ல பாம்பு வந்து ஒங்களக் கொத்திக் கொன்னுடும். அதனால நீங்க அந்தக் காட்டுக்குள்ளாறப் போற பாதையில போயிடாதீங்க காட்டத் தள்ளி உள்ள பாதையிலேயே போங்கன்னு” சொன்னாங்க.

அதக் கேட்ட சாமியாரு, “நீங்க எம்மேல வச்சிருக்கற அன்புக்கு ரொம்ப நன்றி. அந்தப் பாம்ப நான் பாத்துக்கறேன். எனக்கு அந்தப் பாம்பால எதுவும் நேராது” அப்படீன்னு சொல்லிட்டுக் கிளம்பிக் காட்டுக்குள்ளாற உள்ள பாதையை நோக்கி நடந்து போனாரு.

அப்படிக் காட்டுக்குள்ளாற நடந்து போறபோது, திடீருன்னு பாம்பு சீறுன மாதிரி ஒரு சத்தம் வந்துச்சு. அதக்கேட்ட சாமியாரு அந்தச் சப்தம் வந்த திசையப் பார்த்து மெதுவா நடந்து போனாரு. அப்ப அவரு முன்னால ஒரு பெரிய நாகப்பாம்பு ஒண்ணு படமெடுத்துக்கிட்டு ஆடிக்கிட்டு இருந்துச்சு.

அந்தப் பாம்பப் பார்த்த சாமியாரு, “என்ன நாகராசா என்னயப் பாத்துட்டு படமெடுத்து ஆடுறியா? ஒனக்கு நல்லபாம்புன்னு ஒரு பேரு இருக்குத் தெரியுமில்ல. இந்த மாதிரி நல்ல பாம்புன்னு பேர வச்சிக்கிட்டுக் காட்டுக்குள்ளாற வாரவுங்க போறவங்களக் கொத்திக் கொல்லலாமா? இது உம்பேருக்குப் பொருத்தமான செயலா இல்லையே”ன்னு சொன்னாரு.



சாமியாரு சாந்தமாக் கேட்டதப் பாத்த நல்லபாம்பு, “சாமி நீங்க சொல்லறது சரிதான். இந்தப் பக்கமா வர்றவுங்க என்னயக் கொல்லறதுக்காக கல்லத் தூக்கி எம்மேல எறியறாங்க. இந்த மனுசங்களே நல்லவுங்க இல்ல. கெட்ட எண்ணம் புடிச்சவங்க. அப்படிப்பட்ட கெட்ட எண்ணம் உள்ளவங்கள, என்னயக் கொல்ல நினைக்கறவங்கள நான் கொல்றது தப்பா”ன்னு திருப்பிக் கேட்டுச்சு.

அதக் கேட்ட சாமியாரு, “நீ நெனக்கிற மாதிரி எல்லாரும் கெட்டவங்க இல்லை. மனுசங்கள்ளயும் நல்லவங்க இருக்கறாங்க. அதப் புரிஞ்சிக்க. நீயி எல்லாரையும் கொத்திக் கொல்லக்கூடாது. ஒனக்கு வேண்டிய எரையத் தின்னுட்டு நீ பாட்டுக்குப் பேசாமா சாதுவா யாரையும் கொத்திக் கொல்லாமா நல்லபாம்புங்கறதுக்கு எடுத்துக்காட்டா இரு. நாஞ்சொல்றதச் செய்யி. ஒன்ன சாமியா நெனச்சிக் கும்புடுவாங்க. நான் இப்பப் போறேன். எப்போதாவது இந்தப் பக்கம் இனி வர்றபோது உன்னையப் பாக்குறேன். நல்லபாம்பா மாறி இரு”ன்னு சொல்லி அந்தப் பாம்புக்கு அறிவுரை சொல்லிட்டுப் போயிட்டாரு.

சாமியாரு சொன்ன அறிவுரையக் கேட்ட பாம்பு இனிமே யாரையும் கொத்திக் கொல்லக் கூடாதுன்னு முடிவு செஞ்சது. இதுனால அந்தக் காட்டுக்குள்ளாற கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வரத் தொடங்கினாங்க. அந்தப் பாம்பு அவங்கள ஒண்ணும் செய்யாம இருந்துச்சு.

பாம்பு ஒண்ணுஞ் செய்யாம இருந்ததப் பார்த்தக் கிராமத்து ஜனங்க அந்தப் பாம்பக் கண்டபடி அடிக்க ஆரம்பிச்சாங்க. மாடுமேய்க்கிற சின்னப்பசங்க எல்லாரும் அந்தப் பாம்ப நல்லா அடிச்சி காயப்படுத்திட்டாங்க. அந்தப் பாம்பு குற்றுயிரும் கொலைஉயிருமா ஆயிப்போயிடுச்சு. அதப் பாத்த சின்னப்பசங்க பாம்பு செத்துப் போயிருச்சுடான்னு நெனச்சிக்கிட்டு அதப் போட்டுட்டுப் போயிட்டாங்க.

அந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துல மயங்கம் தெளிஞ்சி மெதுவா தன்னோட இருப்பிடத்துக்குப் போயிருச்சு. சாமியாரு பேச்சக் கேட்டதனால இப்படி ஆயிப்போச்சேன்னு நெனச்சிக்கிட்டு பகல்பொழுது முழுவதும் தன்னோட இருப்பிடத்துக்குள்ளாறயே இருக்கும். இராத்திரிப் பொழுதானா வெளியில வந்து தனக்கு வேண்டிய இரையத் தேடிப்புடிச்சித் திங்கும்.

சிலசமயம் பாம்புக்கு எந்த எரையும் கிடைக்காது. இதனால பாம்பு ரெம்ப வத்திப் போயி சின்னக் குச்சிமாதிரி ஆயிப்போயிருச்சு. இப்படியே கொஞ்ச நாளு போயிருச்சு. ஒருநாளு அந்தச் சாமியாரு அந்தக் காட்டு வழியா வந்தாரு.

அப்படி வந்தவருக்கு அந்தப் பாம்போட ஞாபகம் வந்துருச்சு. சரி வந்ததுதான் வந்தோம் இந்தப் பாம்பப் பாத்துட்டுப் போயிருவோம்னு நெனச்சிக்கிட்டு அந்தப் பாம்பு எந்தப் பக்கம் இருக்குங்கறத தன்னோட ஞானதிருஷ்டியினாலா தெரிஞ்சிக்கிட்டு அது தங்கியிருந்த இடத்துக்குப் போனாரு.

அந்த இடத்துக்கு வெளியில நின்னுக்கிட்டு, “ஏ நாகராசா, சாமியாரு வந்துருக்கேன். பயப்படாத. வெளியில வா...”ன்னு கூப்புட்டாரு. அந்தப் பாம்பு சாமியாரு குரலக் கேட்டவுடனே மெதுவா ஊர்ந்து வந்துச்சு.



அந்தப் பாம்பப் பார்த்த சாமியாருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அந்தப் பாம்பப் பார்த்து, “என்ன இப்படி எலும்பும் தோலுமா ஆயிட்ட. நீ இப்படி ஆனதுக்கு என்ன காரணம்?” அப்படீன்னு கேட்டாரு. அதக்கேட்ட பாம்பு, நடந்த கதையைச் சொல்லிட்டு, ”எல்லாம் நீங்க சொன்னதக் கேட்டதால வந்த வினை... நான் கொத்தாதனால எல்லாரும் என்னைய அடிச்சித் துன்புறுத்துனாங்க. அதனால நான் பகல்ல வெளியில வர்றதே இல்லை. அதனால சரியான சாப்பாடு எனக்குக் கெடைக்கல. சாப்பாடு சரியாச் சாப்புடாததால நான் ரொம்ப மெலிஞ்சி போயிட்டேன்” னு சொல்லி அழுதது.

அதக் கேட்ட சாமியாரு, “ஏ நாகராசா, நான் உன்கிட்ட சொன்னத நீ சரியாப் புரிஞ்சிக்கல. நீ உன்னை அடிக்க வர்றவங்களப் பாத்துட்டுச் சாதுவா இருக்காத புஷ்ஷுன்னு சீறு. ஆனாக் கொத்தாத. நீ சீறுனாலே அதக்கேட்டுப் பயந்துக்கிட்டு ஒன்னைய எதுவும் செய்யாமப் போயிருவாங்க. ஒன்னையக் கொத்தச் சொல்லல சீறிப் பயமுறுத்ததத்தான் சொன்னேன். இனிமே அப்படியே செய்யி. ஒனக்கு எதுவும் வராது. பழையபடி நீ நல்லா இருப்பே”ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

பாம்பும் மறுநாளு பகல்ல சாமியாரு சொன்னது மாதிரி வெளியில வந்தது. அப்ப அந்தப் பக்கமா வந்த ஒரு கிராமத்து ஆளு அந்தப் பாம்ப அடிக்கறதுக்காக கம்ப எடுத்தாரு. ஒடனே அந்தப் பாம்பு, படமெடுத்து, புஷ்ஷுன்னு ஒரு சீறு சீறுச்சி. அந்த ஆளு பயந்துக்கிட்டு ஓட்ட ஓட்டமா காட்டுக்குள்ளாற ஓடிப் போயிட்டாரு. அதப் பாத்த நல்லபாம்பு சாமியாரு சொன்னத சரியாப் புரிஞ்சிக்கிருச்சு. அவரு சொன்ன மாதிரியே நடந்துச்சு. அந்தப் பாம்பு சீறுனதப் பாத்துட்டுப் போனவங்க பாம்பப் பத்திக் கிராமத்து ஆளுகக்கிட்ட சொன்னாங்க. அதக்கேட்ட ஆளுங்க பயந்து போயி அந்தப் பாம்ப எதுவும் செய்யாம ஒதுங்கிப் போக ஆரம்பிச்சாங்க. பாம்பும் யாரையும் கொத்தாம நல்லபாம்பா மாறி வாழ்ந்துக்கிட்டு வந்தது. யாரையும் பயமுறுத்தலாமே தவிர பழிக்குப் பழிவாங்கக் கூடாதுங்கறதைத்தான் இந்தக் கதை நமக்குச் சொல்லுது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1ba.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License