இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

55. கழுதைக்கு வந்த பெருமை


ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நினைப்பு. அவங்க அவங்களும் தங்களைப் பத்தி பல்வேறு விதமா நினைச்சிக்கிட்டே இருப்பாங்க. ஆனா அது தவறு. தாங்கள்தான் இந்த ஒலகத்தையே தாங்கிக்கிட்டு இருக்கறது மாதிரியும் தாங்கள் இல்லைன்னா இந்த ஒலகமே அழிஞ்சி போகுங்குற மாதிரியும் நெனச்சிக்கிட்டு இருப்பாங்க. கோயில் கோபுரத்துல இருக்கற பொம்மை தான்தான் இந்தக் கோயில் கோபுரத்தைத் தாங்குற மாதிரி நெனச்சிக்கிட்டு இருக்கும். ஆனா அது தவறுங்கறது மத்தவங்களுக்குத்தான் தெரியும். தன்னால ஒண்ணுமே இல்லைன்னு தெரிஞ்சா தாம் தூம்னு ஆடமாட்டாங்க. இதப் பத்தின ஒரு கதை இருக்கு.

ஒரு ஊருல ஒரு கோவேறு கழுதை இருந்துச்சாம். அது தன்னோட உருவத்தைப் பார்த்துப் பார்த்துத் தன்னைத்தானே ரசிக்கும். அந்தக் கழுதை அழகா இருந்ததால அந்த ஊர் மக்கள் அங்க இருந்த கோயில்ல இருக்கற சாமி சிலையை எடுத்து வச்சி ஊர்வலமாக் கொண்டுக்கிட்டுப் போவாங்க.

இப்படியே ஒவ்வொரு வாரமும் நடந்துச்சி. ஊர்ம்க்கள் அனைவரும் இந்தக் கழுதை முன்னால வந்து நின்னுக்கிட்டு கும்புட்டு விழுவாங்க. இதைப் பார்த்த கழுதைக்கு மனசுக்குள்ளாற ஒரே சந்தோஷம். ஆஹா நம்மளோட அழகப் பார்த்துத்தான் இந்த மக்கள் எல்லாரும் கும்புட்டு விழறாங்க. எனக்குக் கிடைச்ச பாக்கியம் வேற யாருக்கும் கிடைக்காது. கையெடுத்துக் கும்புடறது மட்டுமில்லாம சூடமும் பத்த வச்சிக் கும்புடுறாங்களேன்னு பெருமைப் பட்டுக்கிடுச்சி.

இப்படியே கொஞ்ச நாளு போச்சு. கழுதைக்கு மனசுக்குள்ளாற சாமியவிட தான்தான் மிகப் பெரிய ஆளுங்கற நெனப்பு வந்துருச்சு. அதனால அந்தக் கழுத தனக்குப் பின்னால வர்றவங்கள வேணுமின்னே ஒதைக்கும். முன்னால நின்னு சாமி கும்புட்டா முன்னங்காலால எட்டி மிதிக்கும். இப்படியே இருந்துச்சு.

இதைப் பாத்த ஊரு ஆளுங்களுக்கு ஒண்ணும் புரியல. என்னடா இந்தக் கழுத இப்படிப் பண்ணுதுன்னு நெனச்சிக்கிட்டு சாமியக் கும்புட்டுட்டுப் போயிக்கிட்டே இருந்தாங்க. இதப் பாத்த கழுதை நம்மளப் பாத்துத்தான் இந்த ஜனங்க பயப்படுறாங்கன்னு நெனச்சிக்கிட்டு இன்னும் ரொம்ப ரொம்ப மோசமா நடந்துக்க ஆரம்பிச்சிடுச்சு. இதனோட சேட்டை அதிகமானதப் பாத்த அந்த ஊரு மக்கள் என்ன செய்யிறதுன்னு யோசிச்சாங்க.

இந்தக் கழுதைமேல இனிமே சாமிய ஊர்வலமாக் கொண்டுக்கிட்டு வரக்கூடாதுன்னு முடிவுபண்ணினாங்க. மறுநாளு இந்தக் கழுதை தன்னைத்தான் சாமியத் தூக்குறதுக்கு ஓட்டிக்கிட்டுப் போவாங்கன்னு நெனச்சிக்கிட்டு ரொம்பக் கர்வமா நின்னுகிட்டு இருந்துச்சு. ஆனா அந்த ஊராளுங்க எல்லாரும் ஒரு பெரிய மாட்டு வண்டியக் கொண்டு வந்து அந்த வண்டியில சாமிய வச்சி ஊர்வலத்தை ஆரம்பிச்சாங்க.

இதப் பார்த்த கழுதைக்கு ரொம்பக் கோவம் வந்துருச்சி. ஒடனே ஊர்வலத்துக் குறுக்கே பாஞ்சி ஊர்வலத்தை நிறுத்த முயற்சி செஞ்சது. அதப் பாத்த அந்த ஊராளுங்க அந்தக் கழுதையை படார் பாடார்னு அடிச்சித் தொரத்துனாங்க.

அடிவாங்குன கழுதை கத்திக்கிட்டே கூட்டத்தப் பாத்து, “ஏன் எல்லாரும் என்னைய அடிக்கிறீங்க. என்னையக் கடவுளா நினைச்சிக் கும்புட்டுட்டு என்னையவே நீங்க அடிக்கலாமா? ஒங்களுக்கு மூளையே இல்லையா? நான் ஒங்களால வணங்கப்பட்டவன் இல்லையா?”ன்னு கேள்வி மேல கேள்வியக் கேட்டுச்சி.



அதுக்கு அந்த ஊராளுங்க அந்தக் கழுதையப் பாத்து கைகொட்டிச் சிரிச்சாங்க. அந்தக் கழுதைக்கு ஒண்ணுமே புரியல. அது, “எதுக்காகச் சிரிக்கறீங்க”ன்னு கேட்டுச்சு.

அதக்கேட்ட ஊர்க்காரங்க, “பின்ன சிரிக்காம என்ன பண்ணச் சொல்ற. நாங்க ஒன்னக் கும்புடல. ஓம்மேல இருந்த கடவுளத்தான் கும்புட்டோம். கடவுளுக்குத்தான் சூடத்தைப் பொருத்திக் காட்டினோம். இதெல்லாம் ஓம்மேல இருந்த கடவுளுக்குத்தானே தவிர ஒனக்கு இல்லை. கடவுளக் கும்புட்டதை ஒன்னையக் கும்புட்டதா நீ நினைச்சதே தப்பு. நீ ஒன்னக் கடவுளா நினச்சிக்கிட்டு தாறுமாறா நடந்துக்கிட்டே. அதனாலதான் இப்ப மாட்டு வண்டியில சாமிய ஒக்காரவச்சி எடுத்துக்கிட்டு ஊர்வலமாப் போறோம். தள்ளி நில்லு. இல்லைன்னா ஒன்ன இந்த ஊர விட்டே விரட்டிருவோம்”ன்னு சொன்னாங்க.

இதக் கேட்ட கழுதை ஐயையோ அப்ப இவங்கள்ளாம் சாமியத்தான் கும்புட்டுருக்காங்க. அதைப் போயி தப்பா நினைச்சிக்கிட்டு தவறா நடந்துக்கிட்டோமே. நம்மளோட தலைகனத்துக்குச் சரியான பாடங் கெடைச்சிருக்குன்னு தலையைத் தொங்கப்போட்டுக்கிட்டு அங்க இருந்து பக்கத்துல இருந்த காட்டுக்குள்ளாற போயிடுச்சி. மத்தவங்க செய்யிறதப் பாத்துட்டு அதத் தப்பாப் புரிஞ்சிக்கிடக் கூடாதுங்கறத இந்தக் கதை நமக்குச் சொல்லுது. அதுமட்டுமில்லாம நெனப்புத்தான் பொளப்பக் கெடுக்குங்கற பழமொழியும் இந்தக் கதைக்காக இந்தப் பக்கம் வழக்கத்துல வழங்கி வருது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1bc.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License