இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

56. கிழவிக்குக் கிடைக்குமா சொர்க்கம்?


எல்லாமே தனக்குத்தான் கிடைக்கணும். வேற யாருக்குமே கிடைக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்கதான் நெறையப் பேரு இருக்காறாங்க. இப்படி சுயநலத்தோடு இருக்கறவங்கதான் அதிகம். இப்படிப்பட்டவங்க தாங்களும் வாழ மாட்டாங்க. மத்தவங்களையும் வாழ விடமாட்டாங்க. அவங்க எண்ணமே அவங்கள அழிச்சிடும். இதப் பத்தின ஒரு கதை இருக்கு கேளுங்க.

ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்துச்சி. அந்தப் பாட்டி யாருக்கும் எதுவும் கொடுக்காது. படு கருமியா இருந்துச்சு. ஆனா தெனமும் கோயிலுக்கு மட்டும் போகும். ஆனா எச்சிக்கையிலகூட காக்கையா விரட்டாது. இப்படியே அந்தக் கிழவி இருந்துக்கிட்டு இருந்துச்சு.

அப்பப் பாத்து திடீருன்னு அந்தக் கிழவி இறந்து போச்சு. அந்தக் கிழவிய எமகிங்கரர்கள் எல்லாரும் கட்டி இழுத்துக்கிட்டுப் போனாங்க. இழுத்துக்கிட்டுப் போயி எமதர்மராசா முன்னால நிப்பாட்டுனாங்க.

எமதர்மராசா அந்தக் கிழவியப் பாத்து, "இந்தக் கிழவி கடைசிவரைக்கும் எந்தப் புண்ணியத்தையும் பண்ணலை. அதனால இதக் கொண்டுபோயி நரகத்துல தள்ளிவிட்டுட்டு வாங்க" அப்படீன்னு உத்தரவு போட்டாரு. அந்தக் கிழவி அழுது கத்துனா. அவ கதறக் கதற எம கிங்கரர்கள் அவள இழுத்துக்கிட்டுப் போயி நரகத்துக்குள்ள தள்ளிவிட்டுட்டு வந்தாங்க.

நரகத்துக்குள்ளாற தள்ளப்பட்ட அந்தக் கிழவி ஆண்டவன நெனச்சி அழுது கத்துச்சு. "ஆண்டவனே நாளு தவறாம ஒன்னோட வாசலுக்கு வந்து கும்புட்டேனே! என்னப் போயி நரகத்துக்குள்ளாற தள்ளிவிட்டுட்டியே! நல்லா இருக்கா? என்னைய சொர்க்கத்துக்குக் கூட்டிட்டுப் போங்க" அப்படீன்னு கத்துச்சு.

அவ கத்துன கத்தப் பாத்துட்டு கடவுளும் மனசு எரங்கி வந்துட்டாரு. அவரு அந்தக் கிழவியப் பாத்து, "நீயி ஏதவாது நல்லது செஞ்சிருக்கியா?"ன்னு கேட்டாரு. அதுக்கு அந்தக் கிழவி, "அப்படியெல்லாம் ஒண்ணும் செஞ்சதா எனக்கு ஞாபகமில்லை. நன் செஞ்சது எதாவது ஒங்களுக்கு ஞாபகம் இருந்தா அதச் சொல்லி நீங்க என்னையக் காப்பாத்துங்க"ன்னு... அந்தக் கிழவி கடவுளுக்கிட்டயே திரும்பச் சொன்னா.

கடவுளும் யோசிச்சிப் பாத்தாரு. அவரோட ஞாபகத்துல ஒரு சம்பவம் வந்துச்சு. அந்தக் கிழவி ஒரு நாளு ஒரு அழுகிப்போன வாழப்பழத்தை தனக்கு வேணாம்னு ரோட்டுல தூக்கிப் போட்டா. அதை அந்தப் பக்கம் பசியோட வந்த ஒரு பிச்சக்காரன் எடுத்துச் சாப்பிட்டான். இந்தப் புண்ணியத்தைத் தவிர வேற எதுவும் அந்தக் கிழவி செய்யலை. சரி இந்தப் புண்ணியத்தை வச்சாவது அவளைக் காப்பாத்தி சொர்க்கத்துக்குப் போக வைப்போம்னு நெனச்சார்.



அந்தக் கிழவியப் பாத்து, "நீ ஒனக்கும் தெரியாம ஒரு அழுகின வாழப்பழத்தைக் கொடுத்து ஒருத்தனோட பசியப் போக்கிருக்க. அதனலா அந்தப் பழத்தையே இப்ப ஒன்னையக் காப்பாத்த அனுப்பறேன். நீயி அந்தப் பழத்தப் புடிச்சிக்கிட்டு சொர்க்கத்துக்குப் போயிச் சேரு"ன்னு சொன்னாரு. அதக் கேட்ட பாட்டி சரின்னா.

கடவுள் சொன்ன மாதிரியே ஒரு அழுகுன வாழப்பழம் கிழவிய நோக்கி வந்துச்சு. அந்தப் பழத்தைக் கெட்டியா கிழவி புடிச்சிக்கிட்டா. பழம் பறக்க ஆரம்பிச்சிருச்சு. கிழவிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ஆஹா கடைசியில கடவுளு நமக்கு இரக்கப்பட்டு சொர்க்கத்தைக் கொடுத்துட்டாருன்னு நெனச்சா.

வாழப்பழம் அவளை வேகமா சொர்க்கத்தைப் பாத்துக் கொண்டுபோச்சு. அப்ப இந்தக் கிழவி தன்னோட கால யாரோ புடிச்சித் தொங்குறது மாதிரி இருந்தவுடனே யாருடா இப்படித் தொங்குறதுன்னு கீழ குனிஞ்சி பாத்தா. அவளோட கால பத்துப் பதினைஞ்சி பேரு புடிச்சிக்கிட்டு வந்தாங்க. அவளுக்கு கடுமையான கோபம் வந்துருச்சி. அட நாஞ்செஞ்ச தருமத்தாலதான் நான் சொர்க்கத்துக்குப் போறேன். ஆனா நீங்க என்ன செஞ்சிங்க. ஒண்ணுஞ் செய்யாம என்னோட காலப்புடிச்சிக்கிட்டு சொர்க்கத்துக்கு வரப்பாக்குறீங்களா? இப்ப காலை விடப் போறீங்களா? இல்லையா?"ன்னு அந்தக் கிழவி கேட்டுச்சு.

ஆனா யாரும் அவளோட காலை விடுறமாதிரி தெரியலை. அந்தக் கிழவியும் காலை ஒதறி ஒதறிப் பாத்தா. யாரும் கீழ விழறமாதிரி தெரியல. என்னென்னமோ செஞ்சி பாத்த கிழவிக்குத் தாங்க முடியாத கோபம் வந்துருச்சு. அவ என்ன செய்யிறோம்னு தெரியாமலேயே வாழப்பழத்தை விட்டுட்டு அவங்களோட கைய தன்னோட கால்ல இருந்து பிடிச்சி இழுத்துவிட்டா. அவங்க நரகத்துக்குள்ளாற விழுந்தாங்க.

இந்தக் கிழவியும் அவங்களோட சேர்ந்து விழ ஆரம்பிச்சிட்டா. கிழவிக்குப் படுகோவம். "ஏ கடவுளே நாஞ் செஞ்ச புண்ணியத்துக்காக எனக்குச் சொர்க்கத்தக் கொடுத்த ஆனா இப்ப என்னய நரகத்துக்குள்ளாற தள்ளிட்டீயே. இது நல்லா இருக்கா?"ன்னு கேட்டா.



அதக் கேட்ட கடவுள், "நீ மட்டும் வாழணும்னு நெனச்சதே தப்பு. எப்ப அப்படி நினைச்சியோ அப்பவே நீ சொர்க்கத்த இழந்துட்ட. நாம மட்டும் வாழக் கூடாது. நாம கூட இருக்கறவங்களும் வாழணும். அப்பத்தான் நல்லா இருக்கும். நீ சொர்க்கத்துக்கு வரக்கூடிய நிலையிலும் நீ திருந்தலே. அதனால ஒனக்குக் கிடைக்க வேண்டிய சொர்க்கமும் ஒனக்குக் கிடைக்கல"ன்னு சொல்லிட்டு மறைஞ்சிட்டாரு. கிழவி இதக் கேட்டுட்டு ரொம்ப வருத்தப்பட்டுட்டு நரகத்தை நோக்கிப் போனா. தன்னலத்தோட யாரும வாழக்கூடாது. பொதுநலத்தோடு வாழணும். மத்தவங்களுக்கு எதுவுஞ் நல்லது செய்யாம இருந்தா இப்படித்தான் கிடைக்கிறதும் கிடைக்காமப் போயிரும்...

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1bd.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License