இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

59. செருப்பு நாடாண்ட கதை


யாரையும் இழிவாப் பேசக் கூடாது. அப்படிப் பேசுனா அது எதுலாயவது கொண்டுபோய் விட்டுடும். ஏன்னா உலகத்துல எதுவும் இழிவானது இல்லை. ஒவ்வொரு காலத்துலயும் ஒவ்வொண்ணு மதிப்புப் பெறுது. இதுதான் உண்மை. இதைப் புரிஞ்சுக்காம நாந்தான் பெரியவன் அப்படீன்னு சொல்லிக்கிட்டு மத்தவங்கள இழிவுபடுத்தக் கூடாது. எந்த நிலைமையும் யாருக்கும் எப்பவும் வரலாம். அதனால எல்லாரையும் மதிச்சு நடக்கணும். செருப்பு நாடாண்ட கதை இதைத்தான் விளக்கமாச் சொல்லுது.

இந்த உலகத்தைக் காக்குறவரு திருமால். அவர் எல்லாருக்கும் வைகுண்டத்துல இருந்து வரம் கொடுத்துக்கிட்டு இருந்தாரு. வரம் வேணுங்கற எல்லாரும் வந்து வாங்கிக்கிட்டுப் போனாங்க. வைகுண்டத்துக்கு வந்தவங்க எல்லாரும் போனபிறகு யாராவது வருவாங்கன்னு கொஞ்ச நேரம் இருந்தாரு திருமால். ஒருத்தரும் வரலை.

சரி இனி யாரும் வரமாட்டாங்க நாம கொஞ்சநேரம் கண்ணசருவோம்னுட்டு படுத்தாரு. அதுக்கு முன்னால அவரோட கிரீடத்தை எடுத்து பக்கத்துல வச்சிட்டாரு. அவரோட செருப்பு மட்டும் கீழ கெடந்துச்சு. திருமாலு அசதியில தூங்க அரம்பிச்சாரு.

அப்ப இந்தக் கிரீடம் செருப்பப் பாத்து, ‘‘ஏய் இங்க பாத்தியா என்னைய பகவான் தன்னோட பக்கத்துலயே வச்சிருக்காரு. ஆனா நீயி கீழயே கிடக்கிற. உன்னவிட ஒசந்தவன் நாந்தான். புரிஞ்சிக்கோ?’’ அப்படின்னு சொன்னது.

செருப்பு ஒன்னும் பேசலை. அமைதியா இருந்துச்சு. அது அமைதியா இருந்ததைப் பாத்த கிரீடத்துக்கு தலைக்கனம் ரொம்ப ஏறிப்போயிருச்சு. மறுபடியும் செருப்பப் பாத்து, ‘‘என்ன ஒன்னால எதுவும் பேசமுடியலயா? நீ பேசறதுக்கு என்ன இருக்கு? நாந்தான் பெருமானோட தலையில இருந்து அழகுபடுத்துறேன். ஆனா நீயி கால்ல கிடந்து நல்லா மிதிபடுறே. ம்ம்ம்… என்னோட பெருமை ஒனக்கு எங்க தெரியப் போகுது?”ன்னு கேலிபண்ணி கெக்கபிக்கன்னு சிரிச்சது.

இதப் பாத்த செருப்பு, ‘‘இங்க பாரு நான் பெருமானோட கால்ல மிதிபட்டாலும் அவரோட பாதத்தைப் பாதுகாக்கிறேன். அது எனக்குப் போதும். இதைவிட எனக்கு என்ன வேணும்? எனக்கு எதுவும் வேணாம். ஒனக்குப் பெருமையின்னா அதை நீயே வச்சிக்கோ. ஒனக்குப் பெருமை இருக்குங்கறதுக்காக மத்தவங்களோட மனசப் புண்படுத்தாதே? எல்லாருக்கும் ஒரு காலம் வரும். அதைப் புரிஞ்சிக்கோன்னு’’ சொன்னது.

இதைக் கேட்ட கிரீடம், ‘‘அட இங்கபாருடா கீழ கெடக்கிற பயலுக்கு எத்தன வாய்க்கொழுப்புன்னு? பெருமானோட பாதத்தைப் பாதுகாக்குறாங்களாம்.. ஏய் செருப்பே, பெருமானப் பாக்க வர்றவங்க எல்லாரும் என்னையத்தான் நேருக்கு நேராப் பாக்குறாங்க. ஒன்னைய யாராவது பாக்குறாங்களா? இல்லையே. இதப் புரிஞ்சிக்கோ? எல்லாருக்கும் காலம் வருமாம்ல. ஒண்ணுமில்லாத பயலுக்குப் பேச்சப் பாரு பேச்சன்னு’’ ரெம்பக் கேவலமாப் பேசுனது.


செருப்பு இதைக் கேட்டு, ‘‘ரெம்ப தலைக்கனத்தோட பேசாத. எல்லாருக்கும் என்ன கொடுக்கணும்னு பெருமானுக்குத் தெரியும். என்னப் பொருத்த வரையிலும் நான் சந்தோஷமாவே இருக்கேன். எனக்கு இந்தச் சந்தோஷம் போதும்னு’’ சொல்லிட்டு தேம்பித் தேம்பி அழுதது.

இதையெல்லாம் கேட்டுக்கிட்டே இருந்த திருமாலு மெதுவா ஏந்திருச்சு, ‘‘என்ன கிரீடமே என்னோட தலையில இருக்கேங்கறதுக்காக இப்படிப் பேசலாமா? எல்லாரையும் தூக்கி எறிஞ்சி பேசக்கூடாது. என்னக்கி நீ மத்தவங்கள மதிக்காம இழிவா கர்வத்தோட பேசினியோ அதுக்கான தண்டனைய நீ அனுபவிச்சே ஆகணும். நல்லாக் கேட்டுக்கோ எந்தச் செருப்பை இழிவாப் பேசினியோ அந்தச் செருப்பு இந்த நாட்டையே ஆளப்போகுது. நீயி அந்தச் செருப்போட தலையில இருந்து அழகுபடுத்தப் போற. ஒருவருஷம் ரெண்டு வருஷம் இல்லை பதினாலு வருஷம் நீ இந்தச் செருப்போட தலையில இருந்து அழகுபடுத்தணும். அதுக்கு அப்பறம் நீங்க ரெண்டு பேரும் இங்க வாங்கன்னு’’ சொல்லி கிரீடத்துக்குச் சாபம் கொடுத்தாரு.

அதக் கேட்ட கிரீடம், ‘‘பெருமானே என்னைய மன்னிச்சிடுங்க. நான் ஏதோ புரியாமாப் பேசிட்டேன். இனிமே இந்தமாதிரி நடந்துக்க மாட்டேன்னு’’ சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கிடுச்சு.

செருப்பு பெருமான வணங்கி நின்னுச்சு. பெருமான் அதப் பாத்து எப்பவும் நீ பணிவா இருக்கற. அதனால என்னைக்கும் என்னோட அருள் ஒனக்கு உண்டு. போய்வான்னு’’ சொன்னாரு.


திருமால் இட்ட சாபத்துனால திருமால் இராமாவதாரம் எடுத்தப்ப இராமனோட செருப்ப அரியணையில வைச்சித்தான் பரதன் இராமனோட பிரதிநிதியா இருந்து நாடாண்டான். அரியணையில இருந்த செருப்பு மேல இராமனோட கிரீடம் இருந்து அழகுபடுத்துச்சு. இப்படி பதினாலு வருஷம் செருப்பு அரியணையில இராமனுக்குப் பதிலா இருந்து அயோத்திய ஆண்டுச்சு. அதுக்கு அப்பறம் இராமனாகிய திருமாலப் போயி செருப்பும் கிரீடமும் போயிச் சேந்துச்சு. இதுதான் செருப்பு நாடாண்ட கதை. அதனால யாரையும் நாம மரியாத இல்லாம பேசக் கூடாது. எல்லாரையும் மதிச்சு நடந்துக்கணும்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1bg.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License