இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

60. ஆண்கள் பூரானைக் கொல்வதில்லை...


ஊரித்திரியும் பூச்சி இனங்களுள் பூரானும் ஒன்று. இதனைக் கிராமங்களில் வீடுகளிலோ அல்லது வயல்வெளிகளிலோ கண்டால் கொல்ல மாட்டார்கள். அதிலும் ஆண்கள் அதனைக் கொல்லக் கூடாது. அப்படிக் கொன்றால் பாவம் வந்து சேரும் என்று கூறுவார்கள். பெரும்பாலும் பெண்கள் இதனைக் கொன்று விடுவார்கள். ஏன் ஆண்கள் இந்தப் பூரான்களைக் கொல்வது கிடையாது? இதற்கு ஒரு கதை வழக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.

ஒரு ஊருல புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேரு இருந்தாங்க. புருஷங்காரன் தெனந்தோறும் வயல் வேலைக்குப் போயி நல்லாச் சம்பாதிச்சிக்கிட்டு வந்து கொடுப்பான். பொண்டாட்டிகாரி வீட்டுல இருந்துக்கிட்டு அவனுக்கு வேண்டியதைச் சமைச்சிப் போட்டுக் குடும்பத்தை நடத்திக்கிட்டு வந்தா.

இப்படியே போயிக்கிட்டு இருந்தது. அப்பப் பாத்து பொண்டாட்டிகாரிக்குப் புத்தி தடுமாறிப் போச்சு. என்னன்னா புருஷங்காரன் வயல் வேலைக்குப் போன பின்னாடி பக்கத்து வீடு, அடுத்த வீடுன்னு போயி பேசப் போயிருவா. அப்படிப் பேசி வந்துக்கிட்டு இருக்கையில பக்கத்து வீட்டுக்காரனோட இவளுக்குத் தொடர்பு ஏற்பட்டுப் போச்சு.

இப்படித் தொடர்பு ஏற்பட்டதனால அவளாள குடும்பத்த சரிவர நடத்த முடியல. புருஷங்காரன் கொண்டு வந்து கொடுக்கறதுல பாதிய அவ தன்னோட கள்ளப் புருஷனுக்குக் கொடுத்துருவா. இதனால குடும்பத்துல வழிச்சிக்க தொடைச்சிக்கன்னு வறுமை வந்துருச்சு.

புருஷங்காரன் என்னடா இப்படி வந்துருச்சேன்னு ரெம்ப வெசனப்பட்டான். இன்னும் ரொம்ப ஒழைக்கணும். அப்பத்தான் நாம இதுல இருந்து மீள முடியும்னு நெனச்சி ஒழைச்சான். ஆனாலும் அவனுக்கு வறுமைதான் மேலும் மேலும் பெருகுச்சி. அவனுக்கு ஒண்ணும் புரியல.

பொண்டாட்டிகாரி புருஷனுக்குத் தெரியாமத் தெரியாம தன்னோட கள்ளப் புருஷனுக்கு எல்லாத்தையும் எடுத்து எடுத்துக் கொடுத்துக்கிட்டே இருந்தா. இதுனால வீட்டுல எந்தப் பொருளும் இல்லாமப் போயிக்கிட்டு இருந்துச்சு.


புருஷங்காரனுக்கு என்னமோ வீட்டுல நடக்குதுன்னு பொறிதட்டுச்சு. சரி பொண்டாட்டிகாரிக்கிட்டக் கேப்போம்னு கேட்டான். ‘‘என்னடி இப்படி தட்டுப்பாடு வந்துருச்சே. என்ன காரணம்னு’’ கேட்டான். அதுக்கு அவ, ‘‘நான் என்ன பண்றது. நீயி கொண்டுக்கிட்டு வர்றது வாயிக்கும் வயித்துக்குமே சரியா இருக்குது. நானென்ன யாருக்கிட்டயும் அள்ளியா கொடுத்துக்கிட்டு இருக்கேன்னு’’ பட்டுன்னு சொல்லிட்டா.

புருஷங்காரன் சரின்னு விட்டுட்டு இதுக்குக் காரணத்தைக் கண்டுபிடிக்கணும்னு மெனக்கெட்டான். ஒருநாளு பொண்டாட்டிகாரிக்கிட்ட வேலைக்குப் போறதாச் சொல்லிட்டு வீட்டுக்குள்ளாற பரண்மேல ஏறி ஒளிஞ்சிக்கிட்டான். பொண்டாட்டிகாரி நம்ம புருஷங்காரன் போயிட்டான்னு நெனச்சிக்கிட்டு மொதநா புருஷங்காரன் வாங்கிக்கிட்டு வந்த அரிசியில பாதிய எடுத்துச் சாக்குல கட்டி எடுத்துக்கிட்டு கள்ளப் புருஷங்கிட்ட கொடுக்கிறதுக்காகப் போனா.

புருஷங்காரன் அவ பின்னாலயே அவளுக்குத் தெரியாமப் போனான். பொண்டாட்டிகாரி அவ வச்சிருக்கிற கள்ளப் புருஷங்கிட்ட அரிசியக் கொடுத்துட்டுத் திரும்பி வந்தா. புருஷங்காரனுக்கு எல்லாம் தெரிஞ்சி போச்சு. இப்படித்தான் நம்மளோட பொருளு போகுதுன்னு தெரிஞ்சிக்கிட்டான்.

இவளக் கையுங் களவுமாப் புடிக்கணும்னு நெனச்சிக்கிட்டு வீட்டச் சுத்திச் சுத்தி வந்தான். பொண்டாட்டிகாரிக்கு ஆஹா நம்மளோட கள்ளத் தொடர்பப் புருஷங்காரன் தெரிஞ்சிக்கிட்டான் போலருக்கு. கையுங் களவுமா புடிச்சிட்டான்னா நம்ம கதை அதோகதியாப் போயிடும். இனி இவன விட்டு வைக்கக் கூடாது. இவங் குடிக்கற பால்ல விஷத்தப் போட்டுக் கொன்னுற வேண்டியதுதான் முடிவு பண்ணினா.

புருஷங்காரனுக்குச் சந்தேகம் வராத அளவுக்கு பொண்டாட்டிகாரி கெட்டிக்காரத்தனமா நடந்துக்கிட்டா. ஆனாலும் புருஷங்காரன் அவள நம்பள. ரெம்பக் கவனமா நடந்தான். ஒருநாளு எப்பவும் போல வயலுக்குப் போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வயலுக்குப் போனான்.

பொண்டாட்டிகாரி இவன இன்னைக்கு வெஷம் வச்சிக் கொன்னுப்புடணும்னு முடிவு செஞ்சா. அதுக்காக நல்ல பால வாங்கிக்கிட்டு வந்து நல்லாச் சுண்டச் சுண்டக் காய்ச்சி அதுல அதிகமான வெஷத்தைகலக்கறதுக்காக ரெடியா வச்சிருந்தா.

புருஷனும் வயலுக்குப் போயிட்டு வந்து சாப்பிட வந்தான். அன்னைக்கு அவனுக்குப் புடிச்சதை நல்லா சமைச்சி பொண்டாட்டிகாரி போட்டா. அவனும் அவ சந்தேகப் படாதவாறு நல்லாச் சாப்புட்டான். அவன் சாப்புட்டு முடிச்ச பின்னால அவனுக்குப் பால்ல வெஷத்தைக் கலந்து கொண்டுக்கிட்டு வந்து கொடுத்தா. அவனும் பால் நல்ல கமகமன்னு இருக்கறதப் பாத்துட்டு அதக் கொஞ்ச நேரம் ஆறின பெறகு குடிக்கிறேன்னு பக்கத்துல வச்சிருந்தான்.

அப்படி இருக்கறபோது எங்கிருந்தோ ஒரு பூரான் வேகமா ஊர்ந்து வந்து அவன் குடிக்க வச்சிருந்த பால்ல விழுந்துடிச்சி. அதப் பாத்த புருஷங்காரன் ஆஹா இந்தப் பால்ல பூரான் விழுந்துருச்சேன்னு நெனச்சி அதக் குடிக்காம கீழ ஊத்துனான். அப்ப அவன் வீட்டுல வளத்த பூனை அதைவந்து நக்கிக் குடிச்சது. அப்படிக் குடிச்ச பூனை ஒடனே கொஞ்ச நேரத்துல இறந்து போயிடுச்சி. இதப் பாத்த பொண்டாட்டிகாரிக்குப் படபடன்னு வந்துருச்சு.


புருஷன் அடிச்சே கொல்லப்போறான்னு நெனச்சி உண்மையச் சொல்லிருவோம்னு அழுதுகிட்டே உண்மையச் சொன்னா. அதக் கேட்ட புருஷங்காரன், ‘‘என்னக்கி நீ இப்படி நடந்துக்கிட்டியோ இனிமே இங்க ஏங்கூட நீ வாழக் கூடாது. சொல்லாமக் கொள்ளாம நீ ஒன்னோட அப்பன் வீட்டுக்குப் போயிரு. போறதுக்கு முந்தி என்னோட தாலியக் குடுத்துரு. இந்தப் பூரான்மட்டும் வந்து இந்தப் பால்ல விழுந்து என்னையக் காப்பாத்தலன்னா நான் இன்னேரம் பாலக் குடிச்சிட்டு செத்துருப்பேன்னு’’சொல்லி அவள அடிச்சித் தொரத்திவிட்டுட்டான். இந்தச் சேதி ஊருமுழுக்கப் பரவிடிச்சி. அன்னையில இருந்து இன்னவரைக்கும் யாரும் ஆம்பளைங்க பூரானக் கொல்லமாட்டாங்க. அதத் தூக்கித் தூரப் போட்டுட்டு வந்துடுவாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1bh.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License