இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

63.நன்றி மறந்த மனிதன்


எலி ஏன் வயல்ல இருக்கற நெற்கதிர்களை எல்லாம் அழிக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா? அதுக்கு ஒரு கதை இருக்கு...

ஒரு காலத்துல மனிதர்கள் எல்லாரும் கூட்டங் கூட்டமா வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க... அவங்க உணவுக்காக ஒவ்வொரு நாளும் இடம்விட்டு இடம் மாறிக்கிட்டே இருப்பாங்க. அப்படி இடம் மாறிப் போனாலும் அவங்களுக்கு கால்வயிறும் அரைவயிறும்தான் நிரம்பும். முழுசா வயிறு நிரம்பிப் பசியில்லாம அவங்க இருந்ததுங்கறது இல்லை.

இப்படிப் பசியும் பட்டினியுமா அவங்க உணவத் தேடித் தேடி அலைஞ்சி வாழ்ந்துக்கிட்டிருந்தாங்க. அப்படி உணவு தேடி அவங்க காட்டுல ஒரு நாளு அலைஞ்சிக்கிட்டு இருந்தபோது அன்னைக்குன்னு பாத்து எதுவுமே சாப்பிடறதுக்குக் கிடைக்கல. அதனால அவங்க எல்லாரும் ஒரு பெரிய மரத்தடியில பசி வயித்தக் கிள்ளப் படுத்துக்கிட்டு இருந்தாங்க.

இவங்களோட நிலைமையப் பாத்த ஒரு எலி அவங்களுக்கு எப்படியாவது ஒதவணும்னு நெனச்சது. அந்தக் கூட்டத்துக்குத் தலைவன் மாதிரி இருந்த ஒருத்தனோட பக்கத்துல போயி அவனக் கூப்புட்டு, “ஐயா நீங்கள்ளாம் பசியோடவும் பட்டினியோடவும் இருக்கறது மாதிரித் தெரியுது. நான் ஒங்களுக்கு ஒதவி செய்யலாம்னு பாக்குறேன். என்கிட்டக் கொஞ்சம் நெல்லு இருக்கு. அதனோட விதையத் தர்றேன். நீங்க மண்ணக் கிளறிப் போடுங்க. அதுல இருந்து நெறைய நெல்லு கிடைக்கும். அந்த நெல்ல நீங்க சாப்புடறதுக்கு வச்சிக்கோங்க. நீங்க சாப்பாட்டுக்குக் கஷ்டப்படமாட்டீங்க. ஒரு இடத்துல நெலையா நெலைச்சி இருக்கலாம்”ன்னு சொன்னது.

அதக் கேட்ட அவன் மத்தவங்களயும் எழுப்பி அதச் சொன்னான். அவங்களுக்கும் அது பிடிச்சிருந்தது. எல்லா மனுசனுங்களும் சேர்ந்து அந்த எலிக்கிட்ட, “ஒங்களுக்குப் புண்ணியமாப் போயிரும் எங்களுக்கு அந்த நெல்லக் கொடுங்க”ன்னு கேட்டானுங்க.

அதுக்கு அந்த எலி ஒரு நிபந்தனை விதிச்சது. அந்த மனுசங்களப் பாத்து, “நீங்க எல்லாம் எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடுக்கணும். அது என்னன்னா மனுசங்களான ஒங்கள்ள ஒருத்தரு எறந்துட்டா அவரை பாடையெல்லாம் கட்டித் தாரை தப்பட்டை முழக்கத்தோட அழுது பொலம்பிக் கொண்டு போயி பொதைக்கிறது மாதிரி நானோ என்னச் சாந்தவங்களோ எறந்துட்டா நீங்களும் எங்கள ஒங்களுக்குச் செய்யுறது மாதிரியே செஞ்சி அடக்கம் பண்ணனும் அப்படிச் செய்வீங்களா?”ன்னு கேட்டது.

அதுக்கு அங்க இருந்தவங்க எல்லாரும், “கண்டிப்பா செய்வோம். இது சத்தியம். தயவு செஞ்சி எங்களுக்குக் கொஞ்சம் நெல்லக் குடு ஒனக்குப் புண்ணியமாப் போயிரும்”ன்னு சொல்லி சத்தியம் செஞ்சி கொடுத்தானுங்க.


எலியும் சத்தியத்த வாங்கிக்கிட்டு தன்னோட வளைக்குள்ளாற இருந்த நெல்லுல கொஞ்சத்த அள்ளிக் கொண்டாந்து மனுசங்கக்கிட்ட கொடுத்துச்சு.

மனுசனுங்க அதை வாங்கி எலி சொன்னது மாதிரியேப் பூமிக்குள்ளாப் போட்டு விதைச்சாங்க. நெல்லு நல்லா வௌஞ்சது. அவங்களோட பசியும் போயிருச்சி. அந்த நெல்ல வச்சேத் திரும்பத் திரும்ப விதைச்சி எங்கயும் போகாம ஒரே இடத்துல இருந்து மனுசனுங்க வாழத்தொடங்கினாங்க.

அப்படி இருக்கற நேரத்துல இந்த எலியும் அங்கிட்டு இங்கிட்டு போயிக்கிட்டு இருந்துச்சு. அதுக்கு மனசுக்குள்ளாற இந்த மனுசங்க நமக்கிட்ட செஞ்சி கொடுத்த சத்தியத்தைக் காப்பாத்துவானுங்களா? இல்ல மதிக்காம நடந்துக்குவாங்களான்னு? ஒரு சந்தேகம் வந்துருச்சு. சரி இதச் சோதனை செஞ்சி பாத்துருவோம்னு நெனச்சிக்கிட்டு ஒருநாளு மனுசங்க நெல்லு வெதைச்சிருந்த வயல் பக்கம் போனது.

அப்படிப் போனபோது, அந்த வயலத் தன்கிட்டச் சத்தியஞ் செஞ்சி கொடுத்த மனுசங்கக் கூட்டத் தலைவன் சுத்திப் பாத்துக்கிட்டு வந்தான். அத அந்த எலி பாத்துட்டு, “சரி இவன சோதன பண்ணுறதுக்கு இதுதான் சரியான நேரம்னு நெனச்சிக்கிட்டு, வய வரப்புல அது செத்துப்போனது மாதிரி முண்டாமப் படுத்துக்கிருச்சி.

அப்ப அந்த வழியா மனுசன் வந்தான். அவன் வழியில தனக்கு ஒதவுன எலி செத்துப் போயிக் கிடக்கறதப் பாத்தான். ஒடனே அந்த எலியோட வாலப் புடுச்சி அத ஒரு வீசு வீசி பலங்கொண்ட மட்டும் தூக்கி பக்கத்துல ஓடுன ஆத்துக்குள்ளாற வீசுனான். எலி தொபக்கடீர்னு ஆத்துத் தண்ணிக்குள்ளாற விழுந்துருச்சி.

எலிக்குக் கோபமான்னா கோபம் அப்படி ஒரு கோபம். மெதுவா அந்தத் தண்ணியில இருந்து நீந்திக் கரை சேந்து ஓட்ட ஓட்டமா ஒடியாந்து அந்த மனுசன் முன்னால நின்னுக்கிட்டு, “அடப் பச்சத் துரோகிப் பயலே. எனக்கிட்ட சத்தியஞ் செஞ்சி கொடுத்த மாதிரி நீ நடந்துக்கல. அதனால இனிமே இந்த மனுசங்க எல்லாம் எனக்கு எதிரி. நீங்க வெதக்கிற நெல்ல எல்லாத்தோட வேரை எல்லாம் அறுத்தெறிஞ்சிடுவோம். அதுமட்டுமில்லாம நீ வெளைய வச்சிருக்கற எந்தப் பயிரா இருந்தாலும் அதையெல்லாம் நானும் எங்க எனத்தவங்களும் அத அறுத்து எங்களோட வளைக்குள்ளாற சேத்து வச்சிக்குவோம். இதுதான் நாங்க ஒங்களுக்குக் கொடுக்குற தண்டனை” அப்படீன்னு சொல்லிட்டுப் போயிருச்சு.


அன்னையில இருந்த இந்த எலிங்க தங்களுக்குத் துரோகம் செஞ்ச மனுசனப் பழிக்குப்பழி வாங்குறதுக்காக அவங்களோட வெள்ளாமையை அழிக்கத் தொடங்கிடுச்சிடுங்க. எலிங்க வயல்ல வெளையற நெல்ல கத்தரிச்சிக்கிட்டுப் போயி வளைக்குள்ளாற வைக்கிற ரகசியம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1bk.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License