இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

67.கஷ்டப்பட்டவன் கதை


சில பேரு தன்கிட்ட என்ன இருக்குங்கறத மறந்துட்டு இருப்பாங்க. தனக்கிட்ட என்ன இருக்கு? என்ன இல்லைன்னு அவங்களுக்கேத் தெரியாது. அப்படிப்பட்டவங்க எப்பப் பாத்தாலும் கஷ்டம் கஷ்டம்னு சொல்லிக்கிட்டேக் கஷ்டப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்ககிட்ட இருக்கறதப் பார்த்த மத்தவங்க அவங்களப் பத்தி இழிவாவும் கேவலமாவும் நினைப்பாங்க. இதப்பத்தின கதை ஒண்ணு இந்தப் பக்கம் வழக்கத்துல வழங்கி வருது.

அந்த ஊரு பெரிய ஊரு. அங்க ஒரு பிச்சைக்காரன் ஒருத்தன் இருந்தான். அவன் கையில கன்னங்கரேல்னு ஒரு வரையோடு இருந்துச்சு. அதுலதான் அவன் கடைகடையா ஏறி இறங்கிப் பிச்சை எடுப்பான். இந்த ஓட்டப் பத்தி அவங்கிட்டக் கேட்டாக்க இது என்னப் பெத்த அப்பாரு வச்சிருந்தாரு. அதுக்குப் பெறகு இத நான் வச்சி பிச்சை எடுக்கறேன். இந்த ஓடு எங்க அப்பாவுக்கு எப்படிக் கிடைச்சதுன்னு தெரியாது. வழிவழியா எங்கத் தொழிலு பிச்சை எடுக்கறதுதான். அப்படித்தான் இந்த ஓடு ஏங்கைக்கு வந்துருக்குன்னு பதில் சொல்வான்.

எல்லாரு கடைக்கும் வருவான். கொடுத்தா வாங்கிக்குவான். கொடுக்கலைன்னா பேசாமப் போயிருவான். சந்தைன்னா ஒரு இடத்துல ஓட்ட ஏந்திக்கிட்டு நிப்பான். மழை வந்தாலும் சரி. வெயிலடிச்சாலும் சரி. அப்படியே ஆணி அடிச்சி வச்சமாதிரி சந்தைக்கு நடுவுல ஓட்ட ஏந்திக்கிட்டு நிப்பான்.

சந்தைக்கு வர்ரவங்க போறவுங்க அவனோட வரையோட்டுல ஏதாவது போடுவாங்க. இப்படியே அவனோட காலம் போயிக்கிட்டு இருந்துச்சு. அவன் இப்படி இருந்ததால அங்க இருந்த வியாபாரிங்களுக்கு அவம்மேல ஒரு இனந்தெரியாத பாசமும் பிடிப்பும் ஏற்பட்டுருச்சி. அதனால அவன் கடைக்கு வந்து பிச்சை கேக்குறதுக்கு வரையோட்டை ஏந்துன ஒடனே அவனோட வரையோட்டுல ஏதாவது போட்டுருவாங்க.

அப்படி இருக்கறபோது ஒருநாள் சந்தை கூடினபோது அவனக் காணோம். கடைகளுக்கும் வந்து அவன் பிச்சை எடுக்கல. என்னடான்னு கடைக்காரங்க எல்லாம் அவனப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தாங்க. சந்தை எல்லாம் முடிஞ்சது. அவன ஆளையே காணோம்.

மறுநாளும் அவனக் காணோம். அவனத் தேடிக்கிட்டு அங்க இருந்த அத்தன பேரும் அவன் தங்கி இருக்கற இடிஞ்சி கெடந்த ஒரு கட்டிடத்துக்குள்ளாறப் போனாங்க. அங்க அவன் வாயில நொறைத் தள்ளிச் செத்துக் கிடந்தான். அவன் பிச்சை எடுக்கற வரையோடும் பக்கத்துல கெடந்துச்சு.

அவன் மேல இரக்கப்பட்ட அந்த ஆளுங்க எல்லாரும் அவன அடக்கம் பண்றதுக்கு தூக்கிக்கிட்டு வந்தாங்க. எல்லாரும் சேர்ந்து அவனுக்கு உரிய மரியாதையச் செஞ்சி அவன அடக்கம் பண்ணுனாங்க. பெறகு அவனோட வரையோட்டை அவனோட புதைச்ச எடத்துமேல வைக்கலாம்னு எடுத்தாங்க. அப்பக் கைதவறி அந்த ஓடு ஒரு பெரிய பாறாங்கல்லுல விழுந்துச்சு. விழுந்த ஒடனே அந்த ஓடு ஒடையல.

ஆனா அந்த ஓட்டுல பாசம் மாதிரி படிஞ்சிருந்த கரி அப்படியே தொப்பையாக் கழண்டு விழுந்துச்சு. இப்ப அந்த வரையோடு தங்கம் மாதிரி தெரியத் தொடங்கிடுச்சு.


அதப் பார்த்த அந்த ஆளுங்க அது தங்கமான்னு சோதிச்சுப் பாத்தாங்க. அது தங்கம்னு எல்லாருக்கும் தெரிஞ்சி போயிருச்சு. அவங்களுக்கு ஒரே ஆச்சரியம். அடப்பாவி இவனும் இவனோட பரம்பரையும் தங்ககிட்ட என்ன இருக்குங்கறதையே தெரிஞ்சிக்காம பிச்சை எடுத்தேக் கேவலமாத் திரிஞ்சி செத்துப் போயிட்டாங்களே. இவன நல்லபயன்னு நெனச்சிருந்தோமே. இப்படிப்பட்ட அடி முட்டாளாவும் படு சோம்பேறியாவும் இருந்திருக்கானேன்னு திட்டிட்டு அந்தத் தங்கத்த அரசாங்க கஜானாவுல சேத்துட்டு அந்தப் பிச்சைக்காரனோட அறியாமையையும் முட்டாள் தனத்தையும் சொல்லிச் சொல்லித் திட்டிக்கிட்டுப் போனாங்க.

இந்தப் பிச்சைக்காரன் மாதிரிதான் நாமளும் நமக்கிட்ட இருக்கறது என்னதுங்கறதத் தெரிஞ்சிக்காம நடந்துக்கிட்டு இருக்கறோம். அடுத்தவங்கக்கிட்ட என்ன இருக்குதுங்கறதப் பாக்குறதுக்குத் துடிக்கறமே தவிர நம்மக்கிட்ட என்னென்ன இருக்குங்கறத மறந்துடுறோம். மத்தவங்களப் பார்க்காம நம்மப் பத்தி யோசிச்சா நம்மளோட வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்றதுக்கு இந்தக் கதையை இந்தப் பக்கம் மக்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்க...

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1bo.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License