இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

69.சித்தர் சாமி


சித்தத்தை அடக்கியவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்தச் சித்தர்களைப் பற்றி ஒவ்வொரு ஊருலயும் ஒவ்வொரு விதமாகக் கதைகள் வழங்கி வருகின்றன. சித்தர்கள் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் உள்ளவர்கள். எதிர்காலத்தில் என்ன நடைபெறப் போவதை அறிந்து கூறுவதால் அவர்களை மக்கள் சித்தர் சாமி என்று அழைத்து வணங்கினர்.

ஒரு ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு குடிசையைப் போட்டு சில ஆடுகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரைப் பார்க்க ஊராட்கள் அவ்வப்போது வந்து போவர். அவ்வாறு வருகின்றபோது அந்தச் சாமியார் அவர்களுக்கு பல அறிவுரைகள் வழங்குவார்.

இப்படி இருக்கின்றபோது ஒருநாள் அந்தச் சாமியாருக்கு அந்த ஊர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நடக்கப் போகும் பேராபத்து பற்றி மனதினுள் தோன்றியது. அவர் அதை எப்படியாவது அங்கு வரும் மக்களிடம் சொல்லி எச்சரிக்க வேண்டும் என்று நினைத்தார்.

அதனால் அவர் தன்னைப் பார்க்க வந்த ஊர் முக்கியஸ்தர்களிடம் இந்த ஊரிலும் சுற்று வட்டாரத்திலும் இனி மழை பொழியாது. கடுமையான வறட்சி ஏற்படப் போகின்றது. எப்படியாவது அனைவரும் பிழைத்துக் கொள்வதற்கான வழிகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனாலும் அங்கு வந்தவர்கள் அவர் கூறியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அந்தச் சாமியார் நவதானியங்களை மண்ணோடு சேர்த்துக் குழைத்து தன்னோட குடிசைக்குச் சுவர் வைத்தார். இதைப் பார்த்த அந்த ஊர் மக்கள் அவரோட செயலைப் பார்த்து இந்தச் சாமியார் எதுக்காக இப்படிச் செய்கின்றார். இவருக்குப் பைத்தியம் எதுவும் பிடிச்சிருச்சோ? என்று பல்வேறு விதமாகப் பேசியபடி சென்றனர்.

அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது தனக்குக் கிடைத்த தானியங்கள் அனைத்தையும் மண்ணில் குழைத்துக் குழைத்துக் குடிசையைச் சுற்றிப் பெரிய சுவர் ஒன்று வைத்தார். தான் வளர்த்த ஆடுகளுக்குப் பாலைத் தழையையும் எருக்கஞ்செடிகளையும் மட்டும் கொடுத்து வளர்த்தார்.

அந்த ஆடுகளும் அவர் கொடுத்த பாலைமரத்தின் தழைகளையும் எருக்கஞ் செடிகளையும் தின்று பழக்கப்பட்டு விட்டன. இதைப் பார்த்த அந்த மக்கள் இந்தச் சாமியாரு விவரமில்லாமல் எதையோ செய்கின்றார் என்று வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

அவர் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் இந்த வட்டாரத்தில் கடுமையான பஞ்சம் நிலவப் போகின்றது. எங்காவது சென்று பஞ்சம் பிழைத்துக் கொள்ளுங்கள் என்றார். அவர் கூறியதைக் கேட்டவர்கள் ஒன்றும் கூறாது அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.

அவர் கூறியதைப் போன்றே கடும் பஞ்சம் ஏற்பட்டது. ஆடுமாடுகள் உணவின்றி இறந்து வீழ்ந்தன. அந்த வறட்சியிலும் பாலை மரமும் எருக்கஞ் செடிகளும் செழித்து வளர்ந்தன. அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வேறு வேறு இடங்களுக்குப் பிழைப்பதற்காகச் சென்றனர்.

அவ்வாறு சென்றவர்கள் அந்தச் சாமியாரையும் அழைத்தனர். அவர் நீங்கள் செல்லுங்கள். என்னால் வர முடியாது என்று கூறிவிட்டார். அந்த வட்டாரத்தில் ஒருவரும் இல்லை. வெறும் குடிசைகளும் இறந்து போன எலும்புக் கூடுகள் மட்டுமே கிடந்தன.


ஆனால் அந்தச் சாமியார் மட்டும் எந்தப் பாதிப்புக்கும் ஆளாகாமல் இருந்து வந்தார். தினந்தோறும் அவரது ஆடுகள் வெளியில் சென்று பாலை மரத்து இலைகளையும் எருக்கஞ் செடிகளையும் தின்றுவிட்டு அவரது குடிசைக்கு வரும். அவ்வாறு வரும் ஆடுகளுக்கு உடலில் அரிப்பு ஏற்படும். அப்போது அந்த ஆடுகள் குடிசையின் சுவரில் தங்களது உடம்பைப் போட்டு உரசி அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும்.

ஆடுகள் சுவரை உரசும்போது அதில் இருந்து வரகு சாமை போன்ற சிறுதானியங்கள் உதிர்ந்து விழும். அவற்றையெல்லாம் எடுத்துச் சுத்தப்படுத்தி ஆடுகளிலிருந்து பாலைக் கறந்து அதில் வேகவைத்து சாமியார் உண்டு வந்தார். இதே போன்று தொடர்ந்து செய்து வந்தார்.

அப்போது வானத்தில் தேவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த ஊரைப் பார்த்தார்கள். ஊர் முழுவதும் அழிந்து ஆங்காங்கே எலும்புக் கூடுகள் கிடந்ததைக் கண்டனர். அவ்வாறு வருகின்றபோது இந்தச் சாமியார் இருந்ததையும் பார்த்தனர்.

ஊரில் ஒருவர் கூட இல்லாதபோது இந்தச் சாமியார் மட்டும் எப்படி இங்கு உயிருடன் வாழ்ந்து வருகின்றார். ஆச்சரியமாக இருக்கின்றதே என்று வியந்தனர். அவரைச் சென்று பார்ப்பது என்று தேவர்களில் முதன்மையானவர்களான மும்மூர்த்திகளும் முடிவு செய்தனர்.

அவர்கள் கடுமையான வெயிலடிக்கும் நடுப்பகலில் அந்தச் சாமியாரைத் தேடி அவரது குடிசைக்கு வந்தனர். அவ்வாறு வந்தவர்களைக் கண்ட சாமியார் ஓடோடியும் வந்து அவர்களை வரவேற்றுத் தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தார்.

அவர்கள் தங்களுக்குப் பசிக்கின்றது. ஏதாவது உண்பதற்குக் கிடைக்குமா? என்று கேட்டனர். அதற்குச் சாமியார் சற்று நேரம் இருங்கள் இதோ ஒரு நொடியில் உங்களது பசியைப் போக்குகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் ஆடுகளில் பாலைக் கறந்து கீழே சிதறிக் கிடந்த சிறுதானியங்களைச் சுத்தப்படுத்தி பாற்சோறு தயாரித்து மும்மூர்த்திகளுக்கும் கொடுத்துப் பசியாற்றினார். வந்தவர்கள் அனைவரும் உண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு உறக்கம் வருவதைப் போன்று உணர்ந்தனர். அதைச் சாமியாரிடம் கூறியவுடன் சரி சற்று நேரம் உறங்குங்கள் என்று கூறி அவர்கள் படுப்பதற்கு இடமும் கொடுத்தார். அம்மூவரும் நன்கு உறங்கினர்.

சாமியாருக்கு வந்தவர்கள் யார் என்று தெரிந்து விட்டது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாது இருந்தார். மூவரும் உறங்கி விழித்தனர். அவர்கள் சாமியாரை அழைத்து எவ்வாறு நீங்கள் மட்டும் இவ்வாறு பசியறியாது மகிழ்வோடு இருக்கின்றீர்கள்? என்று கேட்டனர். அதற்கு அந்தச் சாமியார் நடந்தவற்றையெல்லாம் கூறினார்.


அதைக் கேட்ட அம்மூவரும் தாங்கள் யார் என்பதையும் தாங்கள் வந்ததன் நோக்கத்தையும் கூறி தங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அச்சாமியார் இந்த வட்டாரத்தில் மீண்டும் மழை பொழிந்து அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்டார்.

தெய்வங்களும் சென்றன. ஊரில் மழை பொழிந்து பஞ்சம் நீங்கி வளம் கொழித்தது. ஊரைவிட்டுச் சென்ற மக்கள் திரும்பி வந்தனர். ஊர் வளமாவதற்கு இந்தச் சாமியாரேக் காரணம் என்று அறிந்து அவர்கள் அந்தச் சித்தரைப் போற்றினர். இந்தச் சாமியாரே இடைக்காட்டுச் சித்தர் என்றும் போற்றப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1bq.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License