இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

70. மனதில் உறுதியிருந்தால்...


அது ஒரு அடர்ந்த காட்டுப் பகுதி. அந்தக் காட்டுப் பகுதிய ஒட்டி ஒரு சின்ன ஊரு. அந்த ஊருல ஒரு விவசாயி அஞ்சாறு ஆடுகளை வளத்து வந்தாரு. அவரு ஆடுகள நல்லாப் பாத்துக்கிட்டதால அந்த ஆடுகளும் அவருக்கு நல்ல பலன்களைக் கொடுத்தன. அவரு வளத்துக்கிட்டு வந்த ஆடுகள்ள ஒண்ணு குட்டி போட்டுச்சு. அது கிடாக்குட்டி.

அந்தக் கிடாக்குட்டிய அதனோட தாயி ரொம்பப் பாசமா வளத்துக்கிட்டு வந்தது. அந்தக் கிடாக்குட்டிக்கிட்ட அம்மா ஆடு தம்பி நாம இருக்கற இந்த இடத்த விட்டுட்டு வேற எங்கயும் போயிடாத. அப்படிப் போனா நம்மள சிங்கமோ நரியோ அடிச்சே கொன்னுடும். அப்படியே எந்த மிருகத்துகிட்டயாவது மாட்டிக்கிட்டா பயப்பிடாம தந்திரமாத் தப்பிச்சு வரணும்னு சொன்னது.

அந்தக் கிடாக்குட்டியும் அம்மா சொல்லறதக் கேட்டு நடந்துச்சு. கிடாக்குட்டி வளந்து பெரிய ஆடா வந்துருச்சு. அந்தக் கிடாய் வளரவளர அதனோட தாடையில தாடியும் பெரிசா வளந்துச்சு. மத்த ஆடுகளோட தாடிய விட இந்தக் கிடா ஆட்டுக்குத் தாடி கொஞ்சம் பெரிசா இருந்துச்சு.

இப்படியே இருந்துக்கிட்டு இருக்கறப்போ அந்த விவசாயி ஆடுகள மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டுப் போயி வர்றபோது ஒருநாளு காட்டு ஓரமா மேஞ்சிக்கிட்டு இருந்த இந்தக் கிடா பக்கத்துல இருந்த ஓடைத் தண்ணியில தன்னோட மொகத்தப் பாத்துச்சு. அதுக்கே ரெம்ப ஆச்சரியமாப் போயிருச்சு. அடடா நம்ம மொகத்துல எவ்வளவு பெரிய தாடி வளந்து அழகா இருக்கு. இதுமாதிரி யாரோட மொகத்துலயும் இல்லையே. அப்ப நாம பெரியாளுதான்னு நெனச்சிக்கிடுச்சு.

இப்படியே நெனச்சிக்கிட்டே வழிதவறி காட்டுக்குள்ளாறப் போயிடுச்சு. மற்ற ஆடுகள்ளாம் தண்ணியக் குடிச்சிப்பிட்டு விவசாயியோட வீட்டுக்குக் கிளம்பிப் போயிக்கிட்டு இருந்துச்சுங்க. வழிதவறிய கிடாய் வழியத் தேட ஆரம்பிச்சிருச்சு. அப்பப் பாத்துக் கடுமையான மழைபெய்யத் தொடங்கிருச்சு.

மழைபெய்யத் தொடங்குன ஒடனேயே எப்படியாவது மழையில இருந்து தப்பிக்கணும்னு நெனச்ச கிடா வேகவேகமா ஓடி பக்கத்துல இருந்த ஒரு பெரிய குகைக்குள்ளாற போயி ஒக்காந்துக்கிருச்சு. அந்தக் கிடா ஒழிஞ்சது ஒரு பெரிய சிங்கத்துக்குச் சொந்தமான குகை.

மழை வந்ததால சிங்கம் வேட்டையாடறத விட்டுட்டு குகைய நோக்கி வந்துச்சு. அப்ப அதக் கவனிச்ச கிடாய்க்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு. இருந்தாலும் தன்னோட அம்மா சொன்னத மறக்காம தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு தன்னோட கொம்பை குகையோட சுவத்துல போட்டு பரட்டுப் பரட்டுன்னு தேய்ச்சது.

அந்த நேரத்துல அங்க வந்த சிங்கத்தோட காதுல இந்தச் சத்தம் கேட்டுச்சு. சத்தத் கேட்ட சிங்கம் நம்மளோட குகைக்குள்ளாற வேத்து மிருகம் ஒண்ணு வந்துருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு, ‘‘டேய் யார்றா அது மரியாதையா என்னோட குகைய விட்டுட்டு ஓடிப் போயிரு. இல்லைன்னா ஒன்னையக் கொன்னுருவேன்னு சொன்னது’’

அதைக்கேட்ட கிடாய், ‘‘ஹஹ்ஹ்ஹா ஆ.. டேய் அற்பப் பதரே என்னோட அகோரப் பசிக்கு சரியான வேட்டையா நீ வந்துட்டே. நான் யாரு தெரியுமா கடவுளுக்கிட்ட வரம் வாங்கிக்கிட்டு வந்தவன். இந்தக் காட்டுக்கு என்னையக் கடவுள் ராஜாவா அனுப்பியிருக்காரு. வா வந்து என்னோட பசியப் போக்கிடு’ அப்படீன்னு சொல்லி தன்னோட கொம்ப சுவத்துல பரட்டுப் பரட்டுன்னு தேச்சது.


கிடாய் பேசிய பேச்சும் அதனோட கொம்பு தேய்ச்ச சத்தமும் குகையோட சுவத்துல பட்டு எதிரொலிச்சு பெரிய சத்தமா படுபயங்கரமா குகைக்கு வெளியில வந்து கேட்டுச்சு. ஏற்கனவே பசியோட இருந்த சிங்கத்துக்கு இப்ப இந்தக் குரலக் கேட்டவுடனேயே ஆஹா வந்துருக்கவன் நம்மளவிட பெரிய பலசாலியாத்தான் இருப்பான் போல இருக்குன்னு நெனச்சிச் செத்தேன் பொழச்சேன்னு ஓட்ட ஓட்டமாத் திரும்பிப் பாக்காமா ஓடிருச்சு.

அப்படி ஓடுன சிங்கம் அன்னைக்கு ராத்திரி முழுசும் ஒரு மரத்தடியிலேயே படுத்துத் தூக்கிச்சு. அதுக்குச் சரியாத் தூக்கம் வரலை. எந்த நேரத்துலயும் அந்தப் புதுமிருகம் தன்னைத் தாக்க வரலாம்னு நெனச்சிக்கிட்டே இருந்ததால அது அரைகுறையாத்தான் தூங்குச்சு.

மறுநாளு பளபளன்னு பொழுது விடிஞ்சிச்சு. சிங்கம் என்ன செய்யிறதுன்னு அந்த மரத்தடியிலேயே படுத்துக்கிட்டு யோசிச்சு. அப்பதைக்கு அந்தப் பக்கமா ஒரு நரி வந்துச்சு. அது சிங்கம் படுத்துருக்கறதப் பாத்துட்டு, ‘‘என்ன மகாராசா இப்படி குகைய விட்டுட்டு நடுக்காட்டுக்குள்ளாற வந்து மரத்தடியில படுத்துருக்கீங்கன்னு’’ கேட்டது.

அதுக்குச் சிங்கம் நடந்ததை எல்லாத்தையும் சொல்லிச்சு. அதக் கேட்ட நரி, ‘‘மகாராசா நீங்கதான் இந்தக் காட்டுக்கு ராசா. வேற யாரும் இல்லை. ஒங்கள யாரோ ஏமாத்தி இருக்காங்க. நான் போயிப் பாத்துட்டு வர்றேன்னு’’ கௌம்புச்சு.

அதக் கேட்ட சிங்கம், ‘‘டேய் நரியா தயவு செஞ்சு போயி உயிர விட்டுறாதேடா. பேசாம வா நாம ரெண்டு பேரும் பக்கத்துக் காட்டுக்குப் போயி பொழச்சிக்கிறலாம்னு’’ சொன்னது. ஆனா நரி, ‘‘மகாராசா நீங்க பேசாம இருங்க. நான் போயி அது யாருன்னு பாத்துட்டு வர்றேன்னு’’ சொல்லிட்டுக் கௌம்பிப் போச்சு.

அப்படிக் கௌம்பிப் போன நரி குகைக்கிட்ட போயி குகை வாசலைப் பாத்துச்சு. அப்ப குகைக்குள்ளாற போன காலடித்தடத்தைப் பாத்துட்டு, ‘‘அட இது ஊருக்குள்ளாற நாமபோயித் தூக்கிக்கிட்டு வர்ற ஆட்டோட காலடித்தடமால்ல இருக்குது. ஏதோ ஒரு ஆடுதான் இப்படி இங்க பதுங்கிக்கிட்டு இருக்குதுன்னு’’ மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு அந்த ஆட்டைப் பாத்துருவோம்னு மெதுவா குகைக்குள்ளாறப் போயி எட்டிப் பாத்துச்சு. அப்ப அது பெருசா தாடி வளந்த ஆட்டுக்கிடாய்னு தெரிஞ்சிக்கிருச்சு.

அப்பறம் சத்தம்போடா குகைய விட்டு வெளியில வந்த நரி சிங்கத்தப் பாக்குறதுக்காகப் போனது. வேகவேகமாச் சிங்கத்துக்கிட்ட போயி, ‘‘மகாராசா நம்மள ஏமாத்துனது ஒரு ஆடு. அது மொகத்துல ஒரு தாடி வளந்து போயி இருக்கு. மத்தபடி ஒண்ணுமில்லை. அத நான் பாத்துட்டேன். நீங்க வாங்க அந்த ஆட்ட அடிச்சி வெரட்டிடலாம்னு’’ சொல்லி சிங்கத்தக் கூட்டிக்கிட்டுக் குகைக்கு வந்துச்சு.

குகை வாசலுக்கு வர்றபோது சிங்கத்துக்கு ஒதறல் எடுத்துருச்சு. சிங்கம் நரியப் பாத்து, ‘‘டேய் என்னைய வேணுமின்னே நீ கொல்லப் பாக்குற. குகைக்குள்ளாற இருக்கறது கடவுளோட வரம் வாங்குன மிருகம். அத நாம ஒண்ணும் செய்ய முடியாது. நாம இப்படியே திரும்பிப் போயிருவோம் வான்னு’’ கூப்பிட்டது.

அதுக்கு நரி, ‘‘என்ன ராசா பயப்படுறீங்க. நான் முன்னால போறேன். நீங்க பின்னால வாங்க. அப்படியும் ஒங்களுக்குத் பயமா இருந்துச்சுன்னா என்னோட கழுத்துல கயித்தக் கட்டிக்கிடறேன். அத ஒங்களோட கால்ல கட்டிக்கிட்டு எம்பின்னால வாங்கன்னு’’ தைரியம் சொல்லிக் கூட்டி போச்சு.


குகையோட வாசல்ல நின்னு நரி, ‘‘டேய் ஆடே நீ யாருன்னு எங்களுக்குத் தெரியும் தைரியம் இருந்தா ஒடனே வந்துரு. இல்லைன்னா உள்ளாற வந்து நாங்க ஒன்ன தொலைச்சுக்கட்டிருவோம்னு’’ சொன்னது.

இதைப் பாத்த கிடாய், ‘‘ஆஹா இந்த நரிப்பய இப்படிக் கௌம்பி வந்துட்டானே. இவன எப்படியாவது மடக்கி வெளியேத்திட்டு நாம ஊருக்குள்ளாறப் போயிடனும்ணு நெனச்சிக்கிட்டு, ‘‘சபாஷ் நரியாரே! நாம போட்டத் திட்டப்படியே இந்த சிங்கத்த அடிச்சிச் சாப்பிடுறதுக்கு சரியாக் கூட்டியாந்துட்டியே. அப்படியே அந்த சிங்கத்தை விடாமப் பிடிச்சிக்கோ. நான் என்னோட ஆயுதத்தைக் கூர்தீட்டிக்கிட்டு வர்றேன். எனக்கு இன்னைக்கு விருந்துதான். எனக்குக் கிடைக்கிற விருந்துல ஒனக்கும் பங்கு தர்றேன். கவனமா அந்தச் சிங்கத்தைப் பாத்துக்கோ’’ அப்படீன்னு சொல்லிட்டு தன்னோட கொம்பை செவுத்துல பரட்டுப் பரட்டுன்னு தேய்ச்சது.

இந்தச் சத்தம் குகைக்குள்ளாற எதிரொலிச்சி அப்படியே வந்து பெலக்காக் கேட்டது. அதக்கேட்ட சிங்கம், ‘‘அடேய் வஞ்சக நரிப்பயலே நீயி இந்தப் புது மிருகத்தோட சேர்ந்து என்னையக் கொல்றதுக்குத் திட்டம்போட்டுட்டு என்னையக் கட்டி இழுந்தாந்து வேற நிறுத்துறியா.. இனிமே இந்தப் பக்கமே தலைவச்சிப் படுக்கமாட்டேன்டா..ன்னு’’ சொல்லிட்டு வேகவேகமா ஓடுச்சி.

சிங்கத்தோட கால்ல கட்டியிருந்த நரி காடுமேடல்லாம் இழுபட்டு சின்னாபின்னமாயி செத்துப்போயிருச்சு. குகைக்குள்ளாற இருந்த ஆட்டுக்கிடாய் குகையவிட்டு வெளியில வந்து ஊரப்பாத்து ஓடி எப்படியோ அதோட ஆளுகளப் பாத்துருச்சு. பாத்துட்டு தான் எப்படி ஆபத்துல இருந்து தப்பிச்சேன்னு எல்லாருக்கிட்டயும் சொல்லிக்கிட்டே இருந்துச்சு. மனசு தைரியம் இருந்தா அவங்க எப்படியாப்பட்ட இடத்துல இருந்தாலும் ஜெயிச்சுருவாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1br.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License