இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

74. யாருக்கு சொர்க்கம்?


சொர்க்கம் நரகம் குறித்த பல்வேறு நம்பிக்கைகள் மக்களிடையேக் காலங்காலமாக நிலவி வருகின்றது. காலங்கள் மாறினாலும் இந்த சொர்க்கம் நரகம் என்பது குறித்த நம்பிக்கை மாறாமலேயே இருக்கின்றது. இது குறித்த கதை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை வட்டாரத்தில் இது வேறு விதமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அது ஒரு பெரிய ஊர். அதனைச் சுற்றி நிறைய கிராமங்கள் இருந்தன. அந்த ஊருக்குப் பல கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வர். அந்த ஊரில் ஒரு பெரிய கோயில் ஒன்றும் அதன் அருகில் ஒரு மடம் ஒன்றும் இருந்தது. அதில் ஒரு சாமியார் வாழ்ந்து வந்தார்.

அதற்குச் சற்று தள்ளி ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அவள் விலைமகள் ஆவாள். அவள் வீட்டிற்கு எப்போதும் ஆண்கள் வந்த வண்ணம் இருப்பர். அவள் நாள்தோறும் மாலையில் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவாள். அப்போது கோவிலில் அந்தச் சாமியார் அமர்ந்து அங்கு வரும் மக்களுக்கு உபதேசம் வழங்குவார்.

அந்த உபதேசத்தை அந்த விலைமாதும் வந்து அமர்ந்து கேட்டுவிட்டுச் செல்வாள். அந்தச் சாமியார் மிகவும் நல்லவர். அந்த வட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவரும் அனைத்து மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி மக்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்து வந்தார். அதனால் அவர் எதைக் கூறினாலும் அதை மக்கள் அனைவரும் கேட்டு நடந்தனர்.

அவ்வாறு இருக்கின்ற போது, ஒருநாள் அவரிடம் அந்தப் பகுதி மக்கள் வந்து அங்கு இருக்கும் விலைமாதைப் பற்றி குறை கூறினா். அவளால் அங்குள்ள பல குடும்பங்கள் சீரழிவதாகவும் அவளைத் தாங்கள்தான் நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மக்களின் வேண்டுகோளை ஏற்ற அந்தச் சாமியார் மறுநாள் அந்தப் பெண் கோயிலுக்கு வந்த போது அவளைத் தனியாக அழைத்து, ‘‘அம்மா நீ நல்ல வாழ்க்கை வாழக் கூடாதா? ஏன் பிறரது வாழ்க்கையைச் சீரழிக்கும் ஒழுக்கக் கேடான வாழ்க்கையை வாழ்கின்றாய்? நீ உன்னை மாற்றிக் கொண்டுவிடு. பலரின் சாபத்திற்கும் ஆளாகாதே!’’ என்று அறிவுரை கூறினார்.

அவளும் அதைக் கேட்டு, ‘‘சுவாமி நானும் திருந்தி வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கும் இதில் விருப்பமே இல்லை. நான் விட்டுவிடுவதாக இருந்தாலும், மற்றவர்கள் என்னை அதிலிருந்து மீள விடமாட்டேன் என்கிறார்கள். நான் என்ன செய்வது? நான் செய்வது பாவம் என்று எனக்குத் தெரிகிறது. தாங்கள் சொல்கின்றவாறு இனி ஒழுக்கமாக நான் நடந்து கொள்ள முயற்சி செய்கிறேன்’’ என்று கூறிவிட்டுச் சென்று விட்டாள்.

ஆனால் அவளால் தனது தொழிலை விட முடியவில்லை. சாமியாரும் அவளை எப்படியாவது திருத்தி இந்த ஊர்மக்களுக்கு நன்மையைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்கு மனதிற்குள்ளேயே யோசித்து ஒரு திட்டம் தீட்டினார். அதனைச் செயல்படுத்தினால் அந்தப் பெண் தனது ஒழுக்கக் கேடான வாழ்க்கையிலிருந்து திருந்தி விடுவாள் என்று முடிவு செய்து, மறுநாளே அதனைச் செயல்படுத்தினார்.


அவர் தனது மடத்திலிருந்து அவள் வீட்டுக்கு ஒரு ஆண் சென்றால் ஒரு கல்லை எடுத்து மடத்துக்கு அருகில் போடுவார். இவ்வாறே செய்து வந்தார். ஒரு சில நாளில் அங்கு ஒரு பெரிய கல்லாலாகிய குன்றே நிமிர்ந்து நின்றது. சாமியார் அந்தப் பெண்மணியை அழைத்து, ‘‘இதோ பார்த்தாயா? இந்தக் குன்று முழுவது ஓரிரு மாதங்களில் உன்னுடைய வீட்டிற்கு வந்து சென்ற ஆண்களின் எண்ணிக்கையாகும். நீ இனிமேலும் எனது இந்த இழிவான வாழ்க்கையைத் தொடராதே. மற்றவர்கள் ஒழுக்கமாக வாழ்வதற்கு நீ வழிவிட வேண்டும். மற்றவர்களின் பாவ மூட்டைகளை நீ சுமந்து கொண்டு இருக்கின்றாய். உனக்கு இறைவனது அருள் கிட்டாது’’ என்று அறிவுறுத்தி அனுப்பினார்.

அந்தப் பெண்ணிற்கு மிகுந்த மன வருத்தம். நாம் என்ன வேண்டுமென்றா இதனைச் செய்கிறோம். நமக்குச் சற்றும் விருப்பமில்லாமல்தானே இதனைச் செய்கிறோம். ஐயோ நான் பல பாவ மூட்டைகளைச் சுமக்கின்றேனே? இதற்கு விடிவே கிடையாதா?’’ என்று பலவாறு அழுது புலம்பினாள். பின்னர் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளைப் போன்று தனது வீட்டுக் கதவைச் சாத்தினாள்.

பின்னர் தனது பூஜைஅறையில் அகல் விலக்கினை ஏற்றி வைத்து மனமுருகத் தனது பாவங்களை எல்லாம் போக்குமாறு கண்ணீர் விட்டுக் கதறினாள். வெளியில் கனத்த மழை கொட்டத் தொடங்கியது. இடி, மின்னல், காற்று, மழை என்று வெளுத்து வாங்கியது. அப்போது மிகப்பெரிய இடியானது அந்தப் பகுதியில் விழுந்தது. அவ்வாறு விழுந்த இடி சாமியாரின் மடத்தின் மீதும், அந்த விலைமாதின் வீட்டின் மீதும் விழுந்தது.

இருவரும் ஒரே நேரத்தில் இறந்தனர். அப்போது விலைமாதின் உயிரை இறைவனது தூதுவர்கள் வந்து அவளைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றனர். சாமியாரின் உயிரை எமகிங்கரர்கள் வந்து பற்றி இழுத்துக் கொண்டு நரகத்திற்குச் சென்றனர். சாமியாருக்கு மிகுந்த வருத்தமாகப் போய்விட்டது. அவரை எமகிங்கரர்கள் எமதர்மனிடம் இழுத்துச் சென்று நிறுத்தினர். எமதர்மனைப் பார்த்து, ‘‘எமதூதர்களே!! என்னை ஏன் நரகத்திற்கு அழைத்துச் செல்கின்றீர்கள். நான் என்ன தவறு செய்தேன். இறைவனையே நினைத்துக் கொண்டு மக்களுக்கு நன்மைகளைச் செய்த எனக்கு ஏன் இந்த நிலை? ஊரையெல்லாம் கெடுத்தவளுக்கு இறைவனது சொர்க்கமா? இது நீதி இல்லை. எமதர்மனாகிய தாங்கள் இவ்வாறுசெய்யலாமா? இவ்வாறு செய்தால் தர்மநியாயம் குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள்? நான் என்ன தவறு செய்தேன் என்பதையாவது தாங்கள் சொல்லியே ஆகவேண்டும்’’ என்று கேட்டார்.


அதைக் கேட்ட எமதர்மன், ‘‘சுவாமி தாங்கள் ஒழுக்கம் தவறாது, மற்றவர்களுக்கு நன்மையே செய்து வந்தீர்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் சில காலமாக நீங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு என்ன செய்தீர்கள். இறைவனை வணங்கவில்லை. எதைப் பற்றியும் நினைக்கவில்லை. அந்த விலைமாதின் வீட்டிற்கு வரும் ஆட்களையே எண்ணிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் உங்களது கடமையிலிருந்து தவறிவிட்டீர்கள். அவ்வாறு கடமை தவறியதால்தான் இந்த நரகத்திற்கு உங்களை அழைத்து வரவேண்டியதாகிவிட்டது. உங்களது உள்ளத்தில் இறைவனுக்குப் பதில் அந்த விலைமாதே ஆக்கிரமித்திருந்தாள். அதைத் தாங்கள் உணரவில்லை. அதனால்தான் இந்தத் தண்டனை. ஆனால் அவள் தான் செய்வது தவறு என்பதை உணர்ந்து மனதார இறைவனை வேண்டினாள். அவள் தனது பாவங்களைப் போக்க வேண்டும் என்று நாள்தோறும் மன்றாடினாள். அவளது உள்ளத்தில் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் அவள் சொர்க்கத்திற்குச் சென்றாள். இருக்கின்ற இடம் வேறாக இருக்கலாம். ஆனால், நினைவுதான் மிகவும் முக்கியம். நீங்கள் உயர்ந்த இடத்தில் இருந்தீர்கள். ஆனால் உங்களது எண்ணம் முழுக்க முழுக்க அவளைச் சுற்றியே இருந்தது. அதனால்தான் இந்த நிலை ஏற்பட்டது’’ என்று கூறியவுடன் சாமியார் தனது தவற்றை உணர்ந்து வருந்தினார்.

எண்ணம் போல வாழ்வு. நாம் எங்கு இருக்கின்றோம் என்பது முக்கியமல்ல. நாம் எந்த எண்ணத்தோடு வாழ்கிறோம்? என்பதுதான் மிகவும் முக்கியம். நாம் எந்த நிலையிலும் நமது கடமையிலிருந்து தவறக் கூடாது. அவரவர் கடமைகளை அவரவர் செய்ய வேண்டும் என்பதற்கு இக்கதை இவ்வட்டாரத்தில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1bv.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License