இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

3. பறக்கும் மரம்


ஆ​சையில்லாத மனித​னை ஒலகத்துல பாக்க​வே முடியாது. அப்படி ஆ​சை​யே இல்லாதவனா ஒருத்தன் இருந்தான்னா அவன்தான் ஞானியாவான். ஆ​சையும் அள​வோட இருக்கணும். அளவுக்கு மிஞ்சி ஆ​சைப்பட்டா வாழ்க்​கையில உள்ளதும் இல்லாமப் ​போயிடும்.

ஒரு ஊர்ல நல்லசாமி கந்தசாமின்னு ​ரெண்டு ​பேரு வாழ்ந்தாங்க. இவங்க ​ரெண்டு​பேரும் அண்ணன் தம்பிக. அண்ணன் தன்​னோட ​பேருக்கு ​நே​ரெதிரா இருந்தான். ஆனா தம்பி​யோ ​ரொம்ப நல்லவனா இருந்தான். அவங்க அப்பா இறக்கற​ போது தன்​னோட மூத்தமகனப் பார்த்து, “​டேய் ​பெரியவ​னே, இருக்கற ​சொத்த சமமாப் பிரிச்சு நீ ஒரு பாதியும் ஓந்தம்பிக்கு ஒருபாதியும் ​​கொடுத்துச் சந்​தோஷமா இரு” அப்படீன்னு ​சொல்லிட்டு எறந்துட்டாரு.

நல்லசாமி தன்​னோட அப்பா ​சொன்னது மாதிரி நடந்துக்கல. அப்பா ஒனக்கு ஒண்ணுங் ​கொடுக்கக் கூடாதுன்னு ​சொல்லிட்டாரு. ​போனாப்​போவுது ​ரெண்டு வீடு இருக்குல்ல... நீ ஒரு வீட்டுல இருந்துக்க... நானு ஒரு வீட்டுல இருந்துக்க​றேன். மத்த ​சொத்துல ஒண்ணுகூட ஒனக்குக் ​கெ​டையாது” அப்படீன்னு ​சொல்லிட்டான்.

தம்பிகாரன் அண்ணன் ​சொல்றதக் ​கேட்டு அப்படி​யே நடப்பதற்கு ஒத்துக்கிட்டான். ​தெனந்​தோறும் காட்டுக்குள்ளாறப் ​போயி மரத்​தை ​வெட்டி ஊருக்குள்ளாறக் ​கொண்டு வந்து வித்துட்டு அதுல வர்ற காசவச்சி சாப்பிட்டுக்கிட்டு வாழ்ந்தான் தம்பி கந்தசாமி. கடு​மையா ஒ​ழைச்சான். இருந்தாலும் அவன் அப்பா​ மே​லே​யோ தன்​னை ஏமாத்தின அண்ணன் ​மே​லே​யோ ​கோபப்பட​லை. ஆனா அண்ணன்காரன் ​சொகுசா வாழ்ந்தான். தம்பி கஷ்டப்படுறா​னேன்னு அவன் கவலப்பட​லை.

கந்தசாமி ​தெனமும் ​கோடலிய எடுத்துக்கிட்டுப் ​போயி ​வெறகு ​வெட்டிவித்துக் குடும்பத்த நடத்திக்கிட்டு வந்தான். ஒருநாளு கந்தசாமி ​​வெறகு ​வெட்டுறதுக்காக ​கோடாலி​யை எடுத்துக்கிட்டு காட்டுக்குப் ​போனான். ஒவ்​வொரு மரமாப் பாத்துக்கிட்​டே ​போனான். ​வெட்டுற மாதிரி ஒருமரமும் அகப்பட​லை.

​ பொழு​போயிக்கிட்​டே இருந்துச்சு. அவனுக்குக் கவ​லையாப்​போச்சு. என்னடா இன்​னைக்கு இப்படிச் ​சோத​னையா இருக்குன்னு ​நெனச்சிக்கிட்டு கவ​லையா இருந்துச்சு. ​ரொம்பக் க​ளைப்பா இருந்ததால ஒரு மரத்தடியில ​போயி ​கொஞ்ச​நேரம் ஒக்காந்துருந்தான். அவனுக்குத் தண்ணித் தாகம்​வேற எடுத்தது. அவன் அந்த மரத்துல ஏறி பக்கத்துல எங்கயாவது குளமிருக்கான்னு பார்த்தான். ஆனா ஏதும் அவனுக்குத் ​தென்பட​லை. அப்படி​யே மரத்து​மே​லே​யே இருந்துட்டான். ​பொழுது சாஞ்சிருச்சு. அசதியில அவன் தூங்கிட்டான். அப்ப அவ​னோட காதுல யா​ரோ ஒருத்தரு ​பேசற மாதிரி இருந்துச்சு. அவனுக்கு ஆச்சரியம் திடீர்னு கண்ண முழிச்சிப் பாத்தான் ஒருத்தருமில்​லை. அப்ப யா​ரோ அவனக் கூப்புடுறது மாதிரி ​தெரிஞ்சது.

அந்த மரந்தான் அவனக் கூப்பிட்டது. “என்னப்பா கவ​லை​யோட பாக்குற... நான்தான் நீ ஏறி இருக்குறயில்ல. அந்த மரந்தான் ​பேசு​றேன். ஒன்னப் பாத்தா பாவமா இருக்குது. நான் பறக்குற மரம். ஒனக்கு ஒதவி ​செய்யலாம்னு ​நெனக்கி​றேன். ஒனக்கு என்ன ​வேணுமின்னு ​கேளு”. அப்படீன்னு ​சொன்னிச்சு. அவனுக்கு என்னத்தக் ​கேக்குறதுன்​னே ​தெரிய​லே. அவ​னோட நி​லை​மையப் பாத்துப் பரிதாபப்பட்ட மரம் அவங்கிட்ட, “பறக்கும் மர​மே பற அப்படீன்னு ​சொல்லு. நான் பறந்து ​போயி பு​தையல் இருக்கற இடத்துல ஒன்ன விட்டுட​றேன். நீ ​வேணுங்கறத எடுத்துக்கிட்டு என்​னோட கி​ளையில ஒக்காந்துக்க. நான் ஒனக்கிட்ட ​சொன்னது மாதிரி மறுபடி ​​சொல்லு. அப்பறம் நீ எங்க ​போகணும்னு ​சொல்லு அந்த இடத்துல ​கொண்டு​போயி விட்டுட​றேன்” அப்படீன்னு ​சொன்னது.

சரின்னு அவனும் மரம் ​சொன்னது மாதிரி​யே கி​ளைய நல்லாப் புடிச்சுக்கிட்டு, “பறக்கும் மர​மே பற” அப்படீன்னு ​சொன்னான். மரம் ​வேகமாப் பறக்க ஆரம்பிச்சிருச்சு. கந்தசாமி பயத்துல கண்ண மூடிக்கிட்டான். ​ரெம்ப ​நேரமாப் பறந்துக்கிட்டுருந்த மரம் திடீர்னு ஒரு இடத்துல நின்னுச்சு. அந்த மரம் நின்ன எடத்தப்பாத்த பளபளன்னு மின்னுச்சு. மரத்தவிட்டுக் கீழ எறங்கிப் பாத்தான் கந்தசாமி.

தங்கம் ​வைரம் ​வைடூரியம் நிரம்பிக் கிடந்துச்சு. அவன் அதுகளக் ​கொஞ்சம் அள்ளி ​தெனந்​தோறும் அரிசிவாங்கக் ​கொண்டு​போற ​பையில ​​ரொப்பிக்கிட்டு மரத்துல ஏறி பறக்கும் மர​மே பற. என்னய என்​னோட வீட்டுக்கிட்ட விட்டுறுன்னு ​சொன்னான். மரமும் பறந்து​போயி கண்ணி​மைக்கிற ​நேரத்துல அவ​னோட வீட்டுக்கிட்ட விட்டுருச்சு.

அவன் வந்த​நேரம் இருட்டு ​நேரம். அவன் வீட்டுக்குள்ளாறப் ​போயி அவன் ​பொண்டாட்டிக்கிட்ட ​கொடுத்தான். அவளுக்கு ​ஆச்சரியம்னா ஆச்சரியம். எப்படிக் கிடச்சதுன்னு அவ ​கேட்டா. அவன் நடந்த​தெல்லாத்​தையும் ​சொன்னான். மறுநாளு டவுனுக்குப் ​போயி ​வைரத்​தை வித்துட்டு ​வேணுங்கறத வாங்கிக்கிட்டு வந்தான்.

​கொஞ்ச நாள்ல கந்தசாமி அண்ணனவிட ​பெரிய அளவுல வந்துட்டான். அவங்கிட்ட ஒதவின்னு வந்தவங்க எல்லாருக்கும் ​கொடுத்து ஒதவுனான். தம்பி​யோட வளர்ச்சியக் கண்ட அண்ணனுக்குப் ​பொறா​மை வளந்துக்கிட்​டே இருந்துச்சு. அவ​னோட ​பொண்டாட்டிக்கு அதுக்கு​மேல ​பொறா​மை. எப்படி இப்படி ​பெரிய பணக்காரன ஆனான்னு ​​தெரிஞ்சிக்கிட்டு வாங்க அப்படீன்னு புருஷனப் பாத்து நச்சரிச்சிக்கிட்​டே இருந்தா.



நல்லசாமியும் ​பொண்டாட்டி​யோட நச்சரிப்புத் தாங்காம தம்பிக்கிட்டப் ​போயி, “தம்பி ஒனக்கு எப்படி இவ்வளவு பணம் ​கெடச்சது. அந்த ரகசியத்தச் ​சொல்லு. நீயி ​சொல்லாட்டி நான் ​செத்துப்​போயிரு​வேன்” அப்படீன்னு ​​சொன்னான்.

அண்ணன் ​செத்துப் ​போயிரு​வேன்னு ​சொன்னதால எறக்கப்பட்ட தம்பி எல்லாத்​தையும் ​வெவரமாச் ​சொன்னான். அதக்​கேட்டுக்கிட்டுப் ​போன நல்லசாமி தன்​னோட ​பொண்டாட்டிக்கிட்டப் ​போயி நடந்ததச் ​சொன்னான். அவளும் நாலஞ்சு சாக்குகள எடுத்துக் ​கொடுத்து ஒரு ​கோடாலி​, தூக்குச் சட்டியில ​கொஞ்சம் ​சோறு தண்ணி எல்லாத்​தையும் எடுத்துக் ​கொடுத்து அவனப் ​போயி ​பொ​தையல எடுத்துக்கிட்டு வான்னு அனுப்பினா.

நல்லசாமியும் ​வேக​வேகமாப் ​போனான். தம்பி ​சொன்னமாதிரி​யே காட்டுக்குள்ளாறப் ​போயி தம்பி ​சொன்ன அ​டையாளத்​தை வச்சி அந்த மரத்தக் கண்டுபிடிச்சான். ​கொண்டு​போன சாப்பாட்ட அந்த மரத்தடியில வச்சிச் சாப்பிட்டான். பிறகு ​பொழுது​போன ​நேரத்துல அந்த மரத்துல ஏறி, “பறக்கும் மர​மே பற. ​பொ​தையல் இருக்கற இடத்துல ​கொண்டு​போயிவிடு” அப்படீன்னு ​சொன்னான். மரமும் பறந்துச்சு..நல்லசாமி கண்ண மூடிக்கிட்டான். அவன் கண்ணத் ​தெறந்த​போது பு​தையல் இருக்கற இடத்துல அந்த மரம் ​கொண்டு​போயி விட்டுச்சு. அவனுக்கு ​ரெம்பச் சந்​தோஷம். அவன் மரத்தவிட்டு எறங்கிக் ​கொண்டு​போன சாக்குகள்ள ​தங்கம் ​வைரம் எல்லாத்​தையும் அள்ளிப் ​போட்டு ​ரொப்பினான். அவனால தூக்க முடியல. ​மெதுவா எல்லாத்​தையும் நகத்தி எடுத்து மரத்துக்கிட்டக் ​கொண்டு​போனான். அவனுக்குத் த​லைகாலு புரியல.

அவன் மரத்தப் பற பறன்னு ​சொன்னான். மரம் பறக்கல. அவனுக்கு தம்பி​சொல்லிக் ​கொடுத்த மந்திரம் மறந்து ​போயிருச்சு. மரத்தப் புடுச்சிக்கிட்டு. மர​மே பற. பறன்னு கதறுனான். ஆனா ​நேரம் ​போயிக்கிட்​டே இருந்துச்சு. மரம் பறக்கல.

நல்லசாமிக்குப் பயமாப் ​போயிருச்சு. அழுதான். கதறுனான். அவன் ​செஞ்ச தப்​பெல்லாம் ​நெனச்சு ​நெனச்சு அழுதுகிட்​டே இருந்தான். அப்பத் திடீர்னு மரம் ​பேசத் ​தொடங்கிச்சு. “​டேய் ​பேரா​சைக்காரா! ஓந்தம்பி நல்லவன். அவன ஏமாத்தி அவன் ​சொத்தப்பூராம் எடுத்துக்கிட்டு அவன ஏமாத்துனதுமில்லா. அவன் நல்லா இருக்கறது ஒனக்குப் புடிக்காம ​பேரா​சைப்பட்டு இங்க வந்து இப்ப நல்லா மட்டிக்கிட்ட. இனி​மே இங்கருந்து நீ தப்பிக்க முடியாது. இங்​கே​யே ​கெடந்து சாவு... நீ ​செஞ்சதப்புகளுக்கு இதுதான் தண்ட​னை...” அப்படீன்னு ​சொல்லிட்டு மரம் பறந்து ​போயிருச்சு. ​பேரா​சைப்பட்ட நல்லசாமி அங்க​யே ​கெடந்து ​செத்துப்​போயிட்டான்.

கந்தசாமிக்கு விவரம் ​தெரிஞ்சு அண்ணனத் ​தேடினான். காண​லை. அண்ண​னைக் கண்டுபிடிக்கறதுக்காகப் பறக்கற மரத​தையும் ​தேடினான். ஆனா அந்தப் பறக்கற ​தெய்வீக மரம் அந்தக் காட்டுல​யே இல்ல. அவன் விதிய ​நொந்துக்கிட்டு வந்து விவரத்த தன்​னோட அண்ணிகாரிக்கிட்ட ​சொல்லிட்டு கவலப்படாம இருக்கச் ​சொன்னான். கந்தசாமி எல்லாருக்கும் ஒதவியா இருந்து நல்லா வாழ்ந்தான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1c.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License