இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

79. கொடுக்குறதைக் கொடுத்தா...


பழக்கம் வழக்கமாக மாறும். அப்படி மாறிடுச்சுன்னா அதை மாத்தறது கொஞ்சம் கஷ்டம். இது தொடர்பான ஒரு கதை இந்த வட்டாரத்துல வழக்கில் வழங்கப்பட்டு வருது.

அது ஒரு பெரிய கிராமம். அதுல தோப்புக்குள்ளாற ஒரு வீடு. அந்த வீட்டுல அப்பா, அம்மா, அவங்களோட மக ஒருத்தி, வயதான கிழவன் கிழவி, அவங்களோட மகன் என எல்லாரும் ஒற்றுமையா இருந்து வந்தாங்க. அவங்க எல்லாரும் ஆளுக்கொரு வேலையாப் பாத்து நல்லா சந்தோஷமா இருந்தாங்க.

அவங்க தினந்தோறும் வயல்ல வேலை செஞ்சிட்டு வந்து சாப்பிட்டு சீக்கிரமே படுத்துட்டு மறுபடியும் காலையில வெகு சீக்கிரமா எழுந்து மறுபடி அன்றைய வேலையச் செய்யத் தொடங்கிடுவாங்க. ஆனா அவங்களோட மக மட்டும் எல்லாரும் எழுந்த பின்னாலயும் தூங்கிக்கிட்டே இருப்பா. அவங்களும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டாங்க. அவளும் திருந்துறது மாதிரியே தெரியல.

இதுனால அம்மாகாரிக்கு மக மேல ரொம்பக் கோபங் கோபமா வந்தது. அவ வெளியில கெடந்த வௌக்கு மாத்த எடுத்துக்கிட்டு வந்து ரெண்டு சாத்து சாத்துனா. அந்த அடியப் பொறுத்துக்க மாட்டாத மக அலறி அடிச்சிக்கிட்டு எழுந்து வேலையப் பாக்க ஆரம்பிச்சிட்டா.

இதேமாதிரி அம்மாகாரி மகள எழுப்பையில எழுந்திரிக்கலன்னா வௌக்குமாத்தால ரெண்டு போடு போடுவா. அந்த அடிய வாங்குன ஒடனேயே மககாரி எழுந்திருச்சி வேலைகளப் பாக்கத் தொடங்கிடுவா. இப்படியே மக எழுந்திரிக்காட்டி ஆத்தாகாரி வௌக்க மாத்துல அடிக்கிறதும் மக எழுந்து வேலையப் பாக்குறதுமா நடந்துக்கிட்டே இருந்துச்சு.

இது தொடர்ந்து நடந்ததால வழக்கமாகிப் போச்சு. ஆத்தாகாரி வௌக்குமாத்தால அடிச்சாத்தான் அவ எதுக்கா இருந்தாலும் போவா. இல்லாட்டி எங்கயும் போயி ஒரு வேலையையும் செய்ய மாட்டா. ஆத்தாகாரி அடிக்கிறதும். மககாரி அடிய வாங்கிக்கிட்டு வேலை செய்யிறதுமா ஆகிப்போயிருச்சு.

ஒருநாளு இவங்க வீட்டுக்கு விருந்தாளு வந்தாங்க. அது ஆத்தாகாரியோட நாத்தனார். அவ அண்ணன் மகள எப்படியாவது தன்னோட மகனுக்குப் பேசி முடிச்சிரணும்னு வந்தா. அண்ணன் மகளும் அத்தை அத்தைன்னு நல்லா ஒட்டிக்கிட்டா. அத்தைக்கு விதவிதமாச் சமைச்சு விருந்து வச்சாங்க.

மறுநாள் காலையில மகள ஆத்தாகாரி தண்ணிக்குப் போகச் சொன்னா. ஆனா மக போகாம பேசா ஒக்காந்துருந்தா. என்னடா மக போகா இருக்காளேன்னுட்டு ஆத்தாகாரி மக கிட்டக்கப் போயி, “ஏத்தா ஏன் தண்ணிக்குப் போகச்சொன்னா போகமா இருக்க. குடிக்கக் கொஞ்சங்கூட தண்ணியில்ல. போயி ஒரு கொடந் தண்ணி எடுத்துக்கிட்டு வா”ன்னு சொன்னா.

அதைக்கேட்ட மககாரி, “நான் போகமாட்டேன். நீ கொடுக்கறதக் கொடுத்தாத்தான் நான் போவேன்”னு சொல்லிட்டுப் பேசமா ஒக்காந்து இருந்தா. ஆத்தாகாரிக்குக் கோபமான கோபம். விருந்தாளுக வந்துருக்கற போது எப்படி மகள வௌக்கமாத்தால அடிக்கிறதுன்னு புரியல. விருந்துக்கு வந்துருக்கிற நாத்துனாகாரி முன்னாலயா மகள வௌக்கு மாத்தால அடிக்கிறதுன்னு நெனச்சிக்கிட்டு, “இன்னக்கி முடியாதுப்பா. நாளக்கிச் சேத்து வச்சிக்கலாம் இப்பப் போப்பா”ன்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டா.

ஆனா மககாரி பிடிவாதமா போகமாட்டேன்னு வம்படியா ஒக்காந்தே இருந்தா. இதப் பாத்த அத்தைகாரி, “ஏன் அண்ணமுண்டி நீதேன் அவ கேக்குறதக் கொடுத்தான் என்ன? அப்படி என்னதான் கேட்டா. அவ கேக்குறதக் குடுத்தா என்ன குடியா முழுகிப் போயிருது. சும்மா கொடு. நாங்கள்ளாம் எதுவும் சொல்லமாட்டோம்”னு சொன்னா.

அதக் கேட்ட ஆத்தாகாரி, “நாத்தனாரே எம்மக கொடுக்கறதக் கொடுத்தாத்தான் குடங்கொண்டு தண்ணிக்குப் போவா. ஆனா அவ கேக்குறத இப்பக் கொடுக்க முடியாது. நாளக்கித்தான் கொடுக்க முடியும்”னு சொன்னா. அதக்கேட்ட அத்தைகாரி, “என்ன அண்ணமுண்டி இப்படி இருக்கறீங்க. நீங்க கொடுக்க முடியலன்னா அவ கேக்குறத நான் எம்மருமவளுக்குக் கொடுக்கட்டுமா”ன்னு கேட்டா.

இதைக் கேட்ட ஆத்தாகாரிக்கு ரெம்ப தர்மசங்கடமாப் போயிருச்சு. சே... போயும் போயும் நம்ம மக நாத்துனாகாரிக்கிட்டயா அடிபடணும்னு நெனச்சிக்கிட்டு, நாமளே வீட்டுக்குள்ளாறக் கூட்டிக்கிட்டுப் போயிக் குடுத்துருவம்”னுட்டு, “இல்லை நாத்துனா நானே கொடுத்துடறேன். எதுக்கு ஒங்களுக்குச் சிரமம்”னு சொல்லிட்டு மகள வீட்டுக்குள்ளாறக் கூட்டிக்கிட்டுப் போயி வௌக்கு மாத்தால ரெண்டு குடு குடுத்து தண்ணிக்குப் போகச் சொன்னா.


அடிய வாங்குன மககாரி சந்தோஷமா குடத்த எடுத்துக்கிட்டுத் தண்ணிக்குப் போனா. இதப் பாத்த அத்தைகாரி மககாரியக் கூப்பிட்டு, “இந்தாத்தா, ஒங்கம்மா ஒனக்கு மட்டும் ரகசியமா என்னமோ குடுத்தாளே, அப்படி என்னதான் குடுத்தா. அதச் சொல்லிட்டு எனக்குங் கொஞ்சங் குடுத்துட்டுப் போ”ன்னு சொன்னா.

அதக் கேட்ட மககாரி, “அத்தை எனக்கு அதைச் சொல்லறதுக்கு நேரமில்லை. நீங்களே என்னோட அம்மாகிட்ட கேட்டு வாங்கிக்கிடுங்க நான் தண்ணிக்குப் போறேன்”னு சொல்லிட்டு குடத்தத் தூக்கிக்கிட்டு குளத்துப்பக்கம் போனா.

திண்ணையில இருந்த நாத்துனாகாரி, ஆத்தாகாரியக் கூப்பிட்டு, “ஏன் அண்ணமுண்டி ஒம் மவளுக்கு மட்டும் ரகசியமாக் கொடுத்தியே. நானும் இந்த வீட்டுல பொறந்த ஒரு மகதான எனக்குங் கொஞ்சம் கொடு”ன்னு விடாப்பிடியாக் கேட்டா.

இதக் கேட்ட ஆத்தாகாரிக்கு ரொம்ப தர்ம சங்கடமாப் போயிருச்சு. என்னடா நம்ம நாத்துனாகாரி இப்படிக் கேக்குறா. எப்படி அவளுக்கு வௌக்கு மாத்தடி கொடுக்க முடியும்னு நெனச்சிக்கிட்டு, “நாத்தனாரே, எம்மவளுக்குக் கொடுக்கிறத எல்லாம் ஒங்களுக்குத் தரமுடியாது. பேசாம இருங்க”ன்னு சொன்னா.

இப்படி ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கயில அப்பங்காரன் வந்தான். வந்தவன் பொண்டாட்டியப் பாத்து, “ஏன்டி ஏந் தங்கச்சி கேக்குறதத்தான் கொடுத்தாத்தான் என்ன? ஏம் பிடிவாதம் பிடிக்கிற? பேசமாக் கொடுத்துரு”ன்னு சொன்னான்.

ஆத்தாகாரிக்கு ஒண்ணும் புரியல. என்னடா நம்ம வீட்டுக்காரருகூட தெரிஞ்சிக்காமப் பேசறாருன்னு நெனச்சிக்கிட்டு புருஷங்கிட்ட மறைமுகமா, “இந்தப் பாருங்க தெனைக்கும் நம்ம மகளுக்கு நாம குடுக்கறத ஒங்க தங்கச்சி தனக்கும் குடுங்கன்னு கேட்டுக்கிட்டு இருக்குறாங்க. நானு எப்படி கொடுக்க முடியும்”னு சொன்னா.

அதைக் கேட்ட புருஷங்காரன் புரிஞ்சிக்கிட்டான். அவனும் தன்னோட தங்கச்சிக்கிட்ட “அத ஒனக்குக் குடுக்கமாட்டாம்மா எம்பொண்டாட்டி. எப்பவும் ஒம் மருமக குடுக்கறதக் குடுத்தாத்தான் குடங்கொண்டு தண்ணிக்குப் போவாம்மா. அதத்தான் இவ செஞ்சிருக்கா. அதப் போயி எனக்கு வேணும்னு அடம்பிடிக்கிறியே”ன்னு கேட்டான்.

அதக் கேட்ட அவனோட தங்கச்சி, “ஏன் அண்ணமுண்டி, இப்படி பிடிவாதமா இருக்கற. எம்மருமவளுக்குக் குடுத்தத்தைக் கொடுத்தாத்தான் நான் ஒம் வீட்டுல இனி சாப்புடுவேன்”னு ஒப்பாரி வச்சா. ஆத்தாகாரிக்கு ஒன்னும் புரியல. என்ன பண்றதுன்னு புருஷங்காரனப் பாத்தா. அவன் சரி குடுங்கறது மாதிரி தலையசைச்சான்.


புருஷங்காரன் சொன்ன ஒடனே பொண்டாட்டிகாரி, “நாத்துனா வாங்க வீட்டுக்குள்ளாற...”ன்னு கூட்டிட்டுப் போனா. போனவா நாத்துனாவப் பாத்து, “என்ன நாத்துனா ஒனக்கும் குடுக்குறதக் குடுக்கணுமாக்கும். அப்பறம் நாங் குடுத்த ஒடனே கோபப் படக்கூடாது”ன்னு சொல்லிட்டு வௌக்கு மாத்த எடுத்துக்கிட்டு வந்து நாலு போடு போட்டா. அடி பொறுக்க மாட்டாத நாத்துனாகாரி, “ஐயையோ இதுதானா குடுக்குறது. இதுபோதும். இனிமே எஞ்ஜெம்மத்துக்கும் கேக்கமாட்டேன்”னு சொல்லிட்டு பேசாம வெளியில வந்தா.

அதப் பாத்த அண்ணங்காரன், “ஏப்பா ஒங்க அண்ணமுண்டி கொடுத்தத நல்லா வாங்கிக்கிட்டியா. இனிமே குடு குடுன்னு கேக்கமாட்டியில்ல”ன்னு கேட்டான். அதக்கேட்ட நாத்துனாகாரி கெளுற முழுங்குன பூனை மாதிரி முழிச்சா. இந்தக் கதைய இன்றைக்கும் சொல்லிச் சொல்லி சிரிப்பாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1ca.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License