இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

80. அப்பாவுக்கு நல்ல பேரு...!


உலகத்தில் இருக்கின்ற மக்கள் தங்களைக் காப்பதற்கு நல்லவன் வருவானா? அவன் எப்போது வருவான்? என்று ஏங்கிக் கொண்டே இருக்கின்றனர். தற்போது இருப்பவரைவிட ஒரு நல்லவன் வந்து நாட்டினை ஆண்டால் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று நினைக்கின்றனர். ஆனால், அடுத்து வருபவன் முன்னால் இருந்தவனே பரவாயில்லை என்று கூறுமாறு நடந்து கொள்கிறான். இதுதான் உலக நடைமுறையாக இருக்கின்றது. சரி நல்லவன் வந்து ஆள்கிறான் என்று வைத்துக் கொண்டால், அது பலருக்கும் பிடிக்காமல் போய் மீண்டும் பழைய நிலையேத் தொடர்கின்றது. இந்த நிகழ்வுகள் உலகமெங்கும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இது பற்றிய கதை ஒன்று புதுக்கோட்டை வட்டாரத்தில் மக்களிடையே வழங்கி வருகின்றது.

அது ஒரு பெரிய கிராமம். கோவில், குளம், பள்ளி என்று அழகான ஊர். அந்த ஊரின் எல்லைப்புறத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அது வழிக்போக்கர்கள் தங்கிச் செல்லுமிடமாகவும், ஊர்க்காரர்கள் தங்கி இளைப்பாறும் இடமாகவும் இருந்தது.

அந்த ஆலமரம் பறவைகளுக்கும் சின்னஞ்சிறு உயிரினங்களுக்கும் புகலிடமாகவும் இருந்தது. அந்த ஆலமரத்தில் ரெண்டு காகம் கூடு கட்டி வாழ்ந்து வந்ததுங்க. அந்தக் காகங்களுக்கு ஒரு குஞ்சு. அத ரெண்டு காகமும் பாசத்தோடு வளர்த்தது.

ஆனாலும் இந்த ஆண்காகத்துக்கு ஒரு கெட்ட வழங்கம் இருந்தது. அந்த ஆலமரத்து நிழல்ல வெயிலுக்காக வந்து தங்குறவங்க மேலே வேணுமின்னே எச்சம் பேண்டு விட்டுரும். அவங்க ஆலமரத்தின் எந்தப் பக்கம் ஒக்காந்தாலும் இந்தக் காகம் இப்படியேச் செய்யும். இதனால அங்க வர்றவங்க எல்லாரும் இந்தக் காகத்தை, “பாழாப் போன காக்கை ரொம்ப மோசம் பண்ணுதே. எப்பப் பாத்தாலும் எங்ஙன இருந்தாலும் ஆளுமேலேயே வந்து எச்சம் போட்டுட்டுப் போகுதே. இதை ஒரு வழி பண்ணணும்”னு சொல்லிக்கிட்டே போவாங்க. இருந்தாலும் அந்தக் காகத்தை அவங்களால ஒண்ணும் பண்ண முடியல.

வெயிலோட தாக்கத்துல இருந்து தப்பிக்கிறதுக்கு அவங்க அந்த ஆலமரத்தை நாடி வரவேண்டியதா இருந்தது. இப்படியேப் பல வருஷம் ஓடிப் போச்சு. ஆனா அந்த ஆண் காகம் மட்டும் தன்னோட பழக்கத்தை மாத்திக்கவே இல்லை.

அப்படி இருக்கறபோது, அந்தக் காகத்தோட மகன் வளர்ந்து பெரிய காகமா மாறிட்டான். ஆண் காகம் தன் மகன் காகத்து மேல ரொம்பப் பிரியமா இருந்துச்சு. ஒரு நாளு ஆண்காகத்துக்கு தீடீர்னு உடம்புக்கு முடியாமப் போயிருச்சு. சாகப் பொழைக்கக் கிடந்த ஆண் காகம் தன்னோட மகன் காகத்தைக் கூப்பிட்டு, “மகனே நான் சாகப் போறேன். அதப்பத்தி நான் கவலைப் படல. ஆனா எனக்கு ஒரு வருத்தம். அத நீதான் போக்கணும்”னு சொன்னது.

அதைக் கேட்ட மகன் காகம், “அப்பா ஒங்களோட வருத்தத்தைப் போக்குறது என்னோட முதல் கடமை. நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க நான் செய்யறேன்”னு சொன்னது.

அதுக்கு அப்பா காகம், “மகனே இந்த வட்டாரத்துல இருக்குறவங்க எல்லாரு மேலேயும் நான் எச்சம் போட்டு அவங்கள அசிங்கப்படுத்தியதால எல்லாரும் என்னைக் கேவலமாப் பேசுறாங்க. எனக்கு ரொம்ப கெட்டபேராப் போயிருச்சு. எனக்கு இருக்கிற கெட்ட பேர நீதான் போக்கணும். எனக்கு நல்ல பேர எடுத்துக் கொடுப்பியா?” அப்படீன்னு கேட்டது.

அதுக்கு மகன் காகம், “கண்டிப்பா ஒங்களுக்கு நல்ல பேர எடுத்துக் கொடுப்பேன். ஒங்கள நல்லவருன்னு இந்த வட்டாரத்துல இருக்குற மக்கள் எல்லாரும் பேசற மாதிரி ஆக்கிடுறேன்”னு சொன்னது. அதைக் கேட்ட அப்பா காகம் நிம்மதியாச் செத்துப் போயிருச்சு.


மறுநாளிலிருந்து மகன் காகம் அப்பா நல்லவருன்னு ஊருல இருக்கறவங்க எல்லாரையும் பேச வைக்க என்ன செய்யலாம்னு யோசிச்சது. அப்படி யோசிச்சி ஒரு முடிவுக்கு வந்தது.

அன்றையிலிருந்து தான் எடுத்த முடிவை செயல்படுத்த நினைச்சது. நிழலுக்கு ஒதுங்கிய மக்கள் மேல எச்சம் போடாம இருந்தது. அதைப் பாத்த மக்கள் அப்பா இங்க ஒரு காகம் இருந்து நம்ம மேல பீயைப் பேண்டுக்கிட்டு இருந்துச்சு. இப்ப அதக் காணோம். அப்படீன்னு மரத்தை நிமிர்ந்து பார்த்தாங்க. அப்ப வாயைத் திறந்து கொட்டாவி விட்டாங்க. அப்பப் பாத்து மகன் காகம் சரியா அவங்களோட வாயில எச்சத்தைப் போட்டது.

அதப் பாத்தவங்க, “அட நாசமாப்போற காக்கையே, இதுக்கு முந்தின காகம் எங்கமேலதான் எச்சம் போட்டது. ஆனா நீ எங்களோட வாயிலேயே எச்சத்தைப் போடுறியே. உன்னைவிட அந்தக் காகமே நல்லது. நீ ரொம்ப மோசம்” அப்படீன்னு பேசுனாங்க.

மகன் காகம் அதே மாதிரி தொடர்ந்து செஞ்சிக்கிட்டு வந்ததால, அதோட அப்பாவை எல்லாரும் ரொம்ப நல்ல காகம்னு பேசத் தொடங்கினாங்க. மகன் காகம் அப்பா காகத்துக்கிட்ட கொடுத்த வாக்கக் காப்பாத்திட்டோம்னு ரெம்ப சந்தோஷப்பட்டது.


இதை விளக்குறதுக்கு ஒரு பழமொழி ஒன்று உள்ளது.

“அப்பங் கெணத்தச் சுத்திப் பேண்டான். மகனோ கெணத்துக்குள்ளயே பேண்டானாம்” என்பதே அப்பழமொழி.

இந்தக் கதை எல்லாக் காலத்துலயும் பொருந்தி வரக் கூடிய கதையாக இருப்பதை எல்லாரும் உணரலாம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1cb.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License