இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

81. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை


கிராமங்கள்ல பெரியவர்கள் பேசுகின்ற போது ‘‘அட அஞ்சுக்கு ரெண்டு பழுதில்ல. சும்மா போவியா’’ என்று கூறுவதைப் பார்க்கிறோம். எதற்காக இப்படிக் கூறுகின்றனர்? ஏன் அடிக்கடி கூறுகின்றனர்? என்பதற்குப் பலருக்கும் விடை தெரியாது. ஏதோ பெரியவர்கள் கூறுகின்றனர் என்று கேட்டுக் கொண்டு போய்விடுகின்றனர். இதைப் பற்றி புதுகை வட்டாரத்தில் ஒரு கதை வழங்கி வருகின்றது.

கிராமத்துல ஒருத்தர் பால்மாடு வாங்குறதுக்காக மாட்டுச் சந்தைக்குப் போனார். நல்லா பால் தரக்கூடிய மாடாப் பார்த்து வாங்கணும்னு சந்தைக்குள்ளாறப் போயி மாடுகளப் பார்த்துக்கிட்டு வந்தாரு. கன்னு போடற நிலையில இருக்கற மாடுகளாப் பார்த்துக்கிட்டு விசாரிச்சிக்கிட்டு வந்தாரு.

அவரு விசாரிக்கிறதப் பார்த்த ரெண்டு ஏமாத்துப் பேர்வழிகள் அவர மடக்கி தாம் வச்சிருக்கிற மாட்டை வித்துடணும்னு நெனச்சாங்க. மாடு வாங்க வந்தவரு அவங்களோட மாட்டைப் பாத்தாரு.

மாட்டைப் பாத்தவருக்கிட்ட அவங்க, “ஐயா இந்த மாடு இப்பத்தான் கன்னு போட்டுருக்கு. ஒரு நாளைக்கு அஞ்சு படி (இக்காலத்தில் அஞ்சு லிட்டர்) பாலு கொடுக்கும். நீங்க நல்லாத் தீனி போட்டுக் கவனிச்சிங்கன்னா கூட ஒரு படி பாலு கொடுக்கும். வாங்கிக்கோங்க” அப்படீன்னு சொன்னாங்க.

அவரும் மாட்டச் சுத்திச் சுத்தி வந்து பாத்தாரு. அவரு அவங்களப் பாத்து, “என்ன வெலை சொல்றீங்க”ன்னு கேட்டாரு.

அதுக்கு, “இந்த மாட்டை பத்தாயிரம் ரூபாய்க்கு விக்கலாம்னு நெனைக்கிறோம். ஒங்களப் பாத்தா நல்லவராத் தெரியரீங்க. ஒங்களுக்கு ஆறாயிரத்துக்குத் தரலாம்னு நெனைக்கிறோம்”னு சொன்னாங்க.

மாடு வாங்க வந்தவருக்கு அட நல்ல கொறச்ச விலைக்கு மாட்டைத் தர்றாங்களேன்னு மனசுக்குள்ளேயே சந்தோஷப்பட்டுக்கிட்டு இன்னும் கொறைச்சுக் கேப்போம்னு, “என்கிட்ட அவ்வளவெல்லாம் பணமில்லை. இன்னும் கொஞ்சம் கொறைச்சிக் கொடுத்தீங்கன்னா நான் வாங்கிக்குவேன்”னு சொன்னாரு.

அதுக்கு அவங்க, “சரி நீங்க எவ்வளவுக்குத்தான் கேக்குறீங்க. ஒங்க மதியச் சொல்லுங்க”ன்னு கோட்டாங்க. அவரும், “அஞ்சாயிரம்தான் என்னோட மதி. மாட்டத் தர்ரீங்களா”ன்னு கேட்டாரு. அவங்களுக்கும் சரி இவந்தலயில இந்த மாட்டக் கட்டிருவோம்னு, “சரிசரி நீங்க இப்படிக் கேக்குறதால நாங்க ஒங்களுக்கு மாட்டை விக்கிறோம்”னு சொன்னாங்க.

மாட்டை வாங்குறவரு, “இந்த மாடு கண்டிப்பா அஞ்சுபடி பாலு கொடுக்குமுல்ல. ஒங்கள நம்பலாமா? என்னைய ஏமாத்லைல்ல”ன்னு கேட்டாரு. அதுக்கு, “இங்க பாருங்கய்யா நாங்க பக்கத்தூருதான். நாங்க பொய் சொல்ல மாட்டம். வேணுமின்னா பக்கத்துல நிக்கிற இவரை சாட்சியா வச்சிக்கிடுவோம். இந்த மாட்டை வாங்கிக்கிட்டுப் போங்க. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லையா”ன்னு சொன்னாங்க.


மாடு வாங்குறவரும், “நெசமா இந்த மாடு நல்லா பாலு கொடுக்குமாய்யா”ன்னு வற்புறுத்திக் கேட்டாரு. அதுக்கு மாட்டை விக்கிறவங்களும், “நாங்கதான் சொல்லிட்டோமோ அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லைன்னு. நல்லா வாங்கிக்கிட்டுப் போங்க. ஏதாவது ஒன்னுன்னா எங்கள வந்து கேளுங்க”ன்னு அப்படி இப்படின்னு சொல்லி அவருக்கிட்ட மாட்டை வித்துட்டுப் பணத்தை வாங்கிக்கிட்டுப் போயிட்டாங்க.

மாட்ட வாங்குனவரும், “அந்தாளுங்க நல்லா ஏமாந்துட்டாங்க. அஞ்சுபடி பாலுகறக்கற மாட்ட எவனாவது அஞ்சாயிரத்துக்குத் தருவானுகளா? முட்டாப் பயலுங்க”ன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டு மாட்டையும் கன்னுக்குட்டியையும் ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டாரு.

வந்தவரு மாட்டுக்கு நல்லா தீனியப் போட்டுக் கவனிச்சாரு. மறுநாள் காலையில மாட்டுல பால் கறந்தாரு. பால் கறந்தா அவருக்கு அதிர்ச்சியா ஆயிருச்சு. ஒரு ஒழக்குத்தான் அவரால கறக்க முடிஞ்சது. “என்னடா இது அஞ்சுபடி பாலு கறக்கலாம்னு சொன்னாங்க. ஒரு ஒழக்குப் பாலுகூடக் கிடைக்கல. ஒருவேலை நாம இன்னும் நல்லாத் தீனி போடல போல இருக்கு. சரி நல்லா தீனியப் போட்டுப் பாலக் கறந்து பாப்போம்னு’’ நெனச்சிக்கிட்டு மாட்டுக்குப் பருத்திக் கொட்டை, புண்ணாக்குன்னு பலமாக் கவனிச்சாரு.

மாடு நல்லாத் தின்னுச்சு. ஆனா அவரு ஒழக்குப் பாலுக்கு மேல கிடைக்கல. அதனால ரெம்ப மனசுக்கு கஷ்டமாப் போயிருச்சு. அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாவும் வந்தது. என்னடா செய்யிறதுன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தாரு. ரெம்ப யோசிச்ச பிறகு பஞ்சாயத்து வச்சித்தான் ஆகணும்னு முடிவு செஞ்சி தன்னோட ஊரு ஆட்களக் கூட்டிக்கிட்டு பக்கத்து ஊருக்கு மாடு கொடுத்தவங்களத் தேடிப் போயி பஞ்சாயத்து வச்சாரு.

பஞ்சாயத்துல நடந்ததை எல்லாரும் விசாரிச்சாங்க. விசாரிச்சவங்க, “என்னயா சொல்றீங்க. நீங்க பொய் சொல்லித்தான மாட்ட இந்தாளுக்கிட்ட வித்துருக்கீங்க. அதனால மாட்ட வச்சிக்கிட்டு அவருக்கிட்ட பணத்தைத் திருப்பிக் கொடுத்திடுங்க”ன்னு சொன்னாங்க.

அதுக்கு மாட்ட வித்தவங்க, “ஐயா நாங்க உண்மையத்தான் சொன்னோம். அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமக் கெடைக்கும் அப்படீன்னு சொல்லித்தான் மாட்டைக் கொடுத்தோம். இது மாட்டை வாங்குனவருக்கும் தெரியும். அதுக்குச் சாட்சி அவரு ஊருக்காரரும் கூட இருந்தாரு. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமக் கிடைக்குதா இல்லையான்னு அவரக் கேளுங்க”ன்னு சொன்னாங்க.

பஞ்சாயத்தாருங்க, ”என்னய்யா அவங்க சொல்றது உண்மையா? அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாம மாடு கொடுக்குதாய்யா? ஏய்யா சொல்லுயா” அப்படீன்னு கேட்டாங்க.

அதுக்கு மாட்டை வாங்குனவரு, ”எனக்கொண்ணும் புரியலைங்க. நான் வாங்குறபோது அஞ்சுபடி பாலு கறக்கும். அப்படியே இல்லன்னாலும் அஞ்சுக்கு ரெண்டு பழுதிருக்காதுன்னு திரும்பத் திரும்பச் சொன்னாங்க. சரின்னுட்டு புரியாம மாட்டை வாங்கிக்கிட்டு வந்துட்டேன். அந்த அஞ்சுக்கு ரெண்டுங்கறது எனக்குப் புரியல. அதை நான் அவங்ககிட்ட கேக்கவும் இல்லை. இத நீங்க அவங்களுக்கிட்டக் கேட்டுச் சொல்லுங்க”ன்னு சொன்னாரு.

பஞ்சாயத்தாருங்க மாட்டை வித்தவங்கக்கிட்ட, “அது என்னய்யா அஞ்சுக்கு ரெண்டு பழுதில்ல. அஞ்சுபடி பாலு கிடைக்கலன்னா ரெண்டு படி பாலாவது கிடைக்கும்கிறதா? இல்ல வேற அர்த்தமா? சொல்லுங்க” அப்படீன்னு கேட்டாங்க.


மாட்ட வித்தவங்க, “அது வந்துங்கய்யா, பாலு, மோரு, நெய்யி சாணம், கோமேயம் இதுதாங்கய்யா அஞ்சுங்கறதுக்குப் பொருள். இதுல மொதல்ல இருக்கற மூணு கிடைக்காட்டியும் பின்னால இருக்கற ரெண்டு குறையில்லாமக் கிடைக்கும்யா. இதைத்தான் நாங்க திரும்பத் திரும்ப சொன்னோம். அத மாடு வாங்குனவரு சரியாப் புரிஞ்சிக்கலை. அஞ்சுபடி பால் கிடைக்கலைன்னாலும் சாணமும் கோமேயம் (மாட்டோட மூத்திரம்) ரெண்டும் நிச்சயம் அட்டியில்லாமக் கிடைக்கும்னு சொன்னோம். நாங்க பொய் சொல்லலை. உண்மையச் சொல்லித்தான் வித்தோம்”னு சொன்னாங்க.

அதக் கேட்ட பஞ்சாயத்தாருங்களால ஒண்ணும் பேச முடியல. மாட்ட வாங்குனவரும் சரி நாம அவங்கள ஏமாத்தலாம்னு நெனச்சோம் ஆனா நாம ஏமாந்துட்டோம்னு நெனச்சிக்கிட்டு ஒண்ணும் பேசாம திரும்ப ஆளுகளோட வீட்டுக்குக் கிளம்பிட்டாரு.

அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லைங்கற பழமொழிக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்குங்கறத இந்தக் கதை நமக்குச் சொல்லுது. ஏமாத்தவும் கூடாது ஏமாறவும் கூடாதுங்கற கருத்தையும் இந்தக் கதை நமக்கு எடுத்துரைக்கிறது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1cc.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License