இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

87. நம்பியவர்களே துரோகம் செய்தால்...?


மனிதன் எதன் மீதாவது நம்பிக்கை வைத்தல் வேண்டும். யாரையும் நம்பாமல் வாழமுடியாது. ஆனால், நாம் நம்பியவர்கள் நமது நம்பிக்கைக்கு உரியவர்களாக இருத்தல் வேண்டும். அவர்கள், நமது நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டால் நமது மனம் மிகவும் புண்படும். நாம் நம்பியவர்களே நமக்குத் துரோகம் செய்தால் நாம் யாரை நம்பி ஒரு செயலில் இறங்க முடியும்? யாரிடமும் நாம் கூறமுடியாது. பேசாமல் அமைதி காப்போம். இதுதான் இயற்கை. இது குறித்த கதை ஒன்று வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது.

இராமன் காட்டுக்கெல்லாம் போய், பின்னர் இலங்கைக்குப் போய் இராவணனையும் அழித்துவிட்டுச் சீதையை மீட்டு அயோத்திக்கு வந்து அரியணையில் அமர்ந்து நல்லாட்சி செய்தார். இராமரோட ஆட்சியில் எல்லா உயிர்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.

யாரும் எந்தக் கஷ்டமும் படலை. நாடே செழிப்பா இருந்துச்சு. அப்படி இருக்கறபோது. கங்கைக் கரையில ஒரு தவளை வாழ்ந்துக்கிட்டு இருந்துச்சு. அது இராம நாமத்தைச் சொல்லிக்கிட்டே கங்கையிலக் குதிச்சு வெளையாடும். அதுக்குப் பெறகு கரையோரத்துல இருக்குற மரத்தடியில மண்ணுக்குள்ள போயி ஒக்காந்துக்கிட்டு இராமனையே நெனச்சிக்கிட்டு இருக்கும்.

இராமனை நெனக்கிறதுல அந்தத் தவளைக்கு அப்படியோரு மகிழ்ச்சி. இப்படியே நாள் போயிக்கிட்டு இருந்துச்சு. தவளை என்னைக்காவது ஒருநாள் நாம போயி இராமரைப் பாக்கணும்னும் நெனச்சிக்கிட்டு இருந்துச்சு. ஆனா அதால நாட்டுக்குள்ளாறப் போக முடியாது. இருந்தாலும் கூட அதுக்கு ஒரு நம்பிக்கை. கண்டிப்பா என்றைக்காவது ஒரு நாள் இராமனைப் பாத்துடலாம்னு தவளை நம்பிக்கையோட இருந்துச்சு.

ஒரு நாள் இராமன் கங்கையாற்றில் குளிப்பதற்காக வந்தாரு. வந்தவரு அந்தத் தவளை மண்ணுக்குள்ளாற இருக்குற இடத்துல தன்னோட கோதண்டத்தை ஊன்றி வச்சாரு. அப்ப அந்த மண்ணுக்குள்ள இருந்த தவளை மேல அந்தக் கோதண்டம் குத்திருச்சு. ஆனால், தவளை கத்தலை.

மண்ணுக்குள்ளாற இருந்து தலையக் கொஞ்சம் சிரமப்பட்டு வெளிய எட்டிப் பாத்துச்சு. இராமன் வேகமா கங்கையாத்துல குளிக்கப் போனாரு. அந்தத் தவளை இராமனோட முகத்தைப் பாத்துருச்சு. அதுக்குச் சந்தோஷம் தாங்க முடியல. ஆஹா யாரைப் பாக்கணும் பாக்கணும்னு நெனச்சோமோ அவரே வந்துட்டாரு. அவரோட முகத்தையும் பாத்துட்டோம். இனிமே நமக்கு என்ன கவலைன்னு அமைதியா மண்ணுக்குள்ளறயே குற்றுயிரும் குறை உயிருமாக் கெடந்துச்சு.

கங்கையாத்துல இறங்குன இராமர் நல்லா ஆசை தீர நீந்திக் குளிச்சி முடிச்சிட்டுக் கரையேறுனாரு. துணிகளைப் பிழிஞ்சி கட்டிக்கிட்டு அரண்மனைக்குப் போகலாம்னு தன்னோட கோதண்டங்கற வில்லை எடுத்தாரு. அப்ப அந்த வில்லோட நுனியில இரத்தக் கறை படிஞ்சிருந்தது.

இராமருக்கு அதிர்ச்சியாயிருச்சு. என்னடா இது எதுவுமே இல்லாத இடத்துல வில்லை ஊன்றி வச்சிட்டுக் குளிக்கப் போனோம். ஆனா அதனோட நுனியில இரத்தம். இது எப்படி வந்துச்சு அப்படீன்னு நெனச்சிக்கிட்டு கீழ குனிஞ்சு அந்த எடத்தை விரலாலக் கிளறிப் பாத்தாரு.

அப்ப அந்தத் தவளை உயிரோட போராடிக்கிட்டுக் கெடந்தது. அந்தத் தவளைய எடுத்து வெளியில போட்டுட்டு, “தவளையே நான் வில்லை ஊன்றிய போது அது உன்னோட ஒடம்புல பட்டுருக்கும்ல அப்ப நீ கத்தலாம்ல. பாம்போ வேற எதுவோ ஒன்ன பிடிக்க வர்றபோது மட்டும் கத்துறியில்ல. அதுமாதிரி இப்பவும் கத்தியிருக்கக் கூடாதா. நான் ஒடனே வில்லை எடுத்துருப்பேன்ல. ஏன் நீ கத்தமா பேசாம இருந்துட்ட?” அப்படீன்னு கேட்டாரு.


அதுக்குத் தவளை, “சுவாமி நான் ஒங்களையே நெனச்சிக்கிட்டு இருந்தேன். யாராவது என்னைத் தாக்க வந்தா ஒங்கள நெனச்சிக் கத்துவேன். அப்ப நீங்க என்னையக் காப்பத்திடுவீங்க. ஆனா என்னையக் காப்பாத்தக் கூடியவராகிய நீங்களே ஏம்மேல வில்லத் தெரியாம ஊன்றபோது நான் யாரைப் போயிக் கூப்புடுவேன். அதுமட்டுமில்லாம நான் ஒங்களை ரெம்ப நாளா பாக்கணுமின்னு காத்துக்கிட்டே இருந்தேன். ஆனா முடியல. இப்பத் திடீர்னு நீங்க வந்துட்டீங்க. என்னோட முதுகுல ஒங்களோட வில்நுனி பட்டதும் நான் மண்ண விட்டு எட்டிப் பாத்தேன். நான் யாரைப் பாக்கணும்னு நெனச்சேனோ அவரே நேர்ல வந்துட்டாரு. ஒங்களப் பாத்த பிற எனக்குப் பேச்சே வரல. என்ன பேசுறதுன்னும் எனக்குத் தோணல அதுதான் நான் கத்தலை”ன்னு சொல்லிட்டுக் கண்ண மூடிருச்சு.

இறந்துபோன தவளைய நெனச்சு இராமர் கண்ணீர் விட்டாரு. தெரியாம நாம ஒரு உயிரோட இறப்புக்குக் காரணமாயிட்டோமேன்னு வருத்தப்பட்டாரு. அந்தத் தவளைய எடுத்து அதுக்கு மரியாதை செஞ்சு மண்ணுக்குள்ளாறப் பொதைச்சாரு. அதுக்கு மோட்சத்தையும் கொடுத்தாரு. தெரிஞ்சோ தெரியாமலோ நாம பிறரோட துன்பத்துக்குக் காரணமா இருக்கக் கூடாது. நம்மை நம்புனவங்களோட நம்பிக்கைக்குத் துரோகம் பண்ணக் கூடாது. அப்படி நாம நம்புனவங்க நமக்குத் துரோகம் செஞ்சா அதை வெளியில சொல்ல முடியாதுங்கறதை இந்தக் கதை நமக்குச் சொல்லுது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1ci.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License