இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

88. ஐயா வணக்கமுங்க...!


எப்போதும் மனிதனை மதித்தல் வேண்டும். அவனிடம் இருக்கும் பணம், பொருள், நிலம், ஆடை, அணிகலன்களுக்காக மனிதனை மதித்தல் கூடாது. எதுவுமே இல்லை என்றாலும் அவன் மனிதன் என்பதற்காகவாவது ஒருவனை மதித்தல் வேண்டும். அவ்வாறு மதித்து நடவாமல் இருப்பின் அது மனிதத் தன்மையே இல்லை. இது தொடர்பாக ஒரு கதை வழக்கில் வழங்கப்படுகின்றது.

ஒரு ஊரில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வறுமை வாய்ப்பட்டவன். கிடைத்த கூலி வேலையைச் செய்து அவன் குடும்பத்தை நடத்தி வந்தான். கந்தாலடையையே அவன் அணிந்திருந்தான். நாள்தோறும் அவன் ஏதாவது வேலை கிடைக்கின்றதா என்று ஒவ்வொருவராகத் தேடிப் போய் வேலை கேட்டுப் பெற்று வேலை செய்துவிட்டு கிடைத்த கூலியை வைத்துக் கொண்டு காலந்தள்ளி வந்தான்.

அவனை யாரும் அந்த ஊரில் மதிப்பதே இல்லை. அவனிடம் பணமோ, பொருளோ இல்லாததால் யாரும் அவனை ஒரு பொருட்டாக மதிப்பதோ தங்களது வீடுகளில் நடக்கும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதோ கிடையாது.

அவனுக்கும் மனம் வருத்தமாக இருந்தது. நம்மை ஒருத்தரு கூட இந்த ஊரில் மனிதனாக மதிக்கவில்லையே என்று மனதிற்குள் மறுகினான். இதை யாரிடமும் அவன் சொல்லவில்லை. ஆண்டவன் நம்மை இப்படிப் படைத்துவிட்டானே என்று நினைத்துக் கொண்டு, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வந்தான்.

இவனுடைய நிலையைப் பாத்த இறைவன் இவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்து அவன் வயல்ல வேலை செய்யிறபோது பானை நெறைய தங்கக் காச புதையலா அவன் கண்ணுல படறமாதிரி செஞ்சாரு. அவன் வயல்ல மண்ணக் கொத்திக்கிட்டு இருக்கிறபோது டங்குன்னு ஒரு சத்தம் கேட்டது. அவன் என்னன்னு தோண்டிப் பாத்தான். அப்படிப் பாத்தபோது பானை நெறையத் தங்கக் காசா இருந்தது. அவன் சுத்தும்முத்தும் பாத்துட்டு அப்படியே வீட்டுல இருந்து கொண்டுக்கிட்டு வந்த கடகப் பொட்டிக்குள்ளாற அந்த வெங்கலப் பானைய வச்சு அதுக்குமேல வெறகுக் குச்சிகளயும் புல்லையும் போட்டு மறைச்சி வீட்டுக்கு யாருக்கும் தெரியாமக் கொண்டு வந்தான்.

வந்தவன் கொஞ்சம் கொஞ்சமா அந்தத் தங்கக் காசுகளை வித்து காடுகரைன்னு வாங்கினான். ஊருக்குள்ளேயே பெரிய வீடாக் கட்டினான். புதுப் பணக்காரன ஆயிட்டான். எல்லாரும் வியப்போட பாத்தாங்க. எப்படிடா இவன் பெரிய பணக்காரனா ஆனான்னு குழம்பிப் போயிட்டாங்க. ஆனா அவங்கிட்ட கேக்குறதுக்கு அவங்களால முடியல.

அதுவரைக்கும் அவன மதிக்காத அந்த ஊருக்காரவங்க அவனோட வளர்ச்சியப் பத்துட்டு வாயடைச்சிப் போயி அவனுக்கு மரியாதை கொடுக்க ஆரம்பிச்சாங்க. அவனப் பாத்த ஒடனேயே ஐயா வணக்கமுங்க அப்படீன்னு சொல்வாங்க. அவன் பதிலுக்கு வணக்கம் சொல்லாம அவங்களப் பாத்து, ‘நான் போயிச் சொல்கிறேன்னு’ சொல்லுவான்.

யாரு அவனுக்கு வணக்கம் சொன்னாலும், அவன் அவங்களுக்குப் பதில் வணக்கம் சொல்லாம நான் போய்ச் சொல்கிறேன்னே சொல்லிக்கிட்டு இருந்தான்.


எல்லாருக்கும் அவம்மேல கோபங்கோவமா வந்துச்சு. என்ன திமிரு இவனுக்கு. பணம் கண்ணை மறைக்குது. இல்லைன்னா நாம வணக்கம்னு சொல்றதுக்குப் பதில் வணக்கம் சொல்லாம நான் போய்ச் சொல்கிறேன்னு சொல்வானான்னு பலவாறு பேசினார்கள். அவன் பைத்தியக்காரன் என்று ஏசினார்கள். இதெல்லாம் அவன் காதில் விழுந்தாலும் அவன் தன்னோட பழக்கத்தை மாத்திக்கிறதா இல்லை.

அவன் வீட்டுக்கு வந்த பின்னால கால் கையெல்லாம் கழுவிக்கொண்டு பூசை அறையைத் திறந்து அங்க உள்ள பணப்பெட்டியை எடுத்து அதைத் திறந்து வைத்துக் கொண்டு முணுமுணுன்னு முணுமுணுப்பான். வீட்டில் இருந்த அவன் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. ஊரில் உள்ளவர்கள் அவனைப் பற்றி ஏளமாகவும், இளக்காரமாகவும் பேசியதைக் கேட்டுவிட்டு ஏன் நம் வீட்டுக்காரர் இப்படி நடந்து கொள்கிறார். ஒருவேளை இவருக்கு புத்திகித்தி பேதலிச்சிப் போச்சான்னு நெனச்சிக்கிட்டே அவன் செய்யறதை எல்லாம் கவனமாப் பாத்தா.

அவன் பூஜைஅறையைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்து என்னமோ முணுமுணுப்பதைத் தினந்தோறும் பாத்தவளுக்கு சரிசரி ஊருக்காரவுக சொல்றதுமாதிரி நம்ம புருஷனுக்கு புத்திதான் பேதலிச்சு போச்சு போல இருக்குன்னு நெனச்சிக்கிட்டு பெட்டியப் பாத்து முணுமுணுத்தவங்கிட்ட போயி ஏங்க என்னங்க இப்படி பெட்டியத் திறந்து வச்சிக்கிட்டுப் பேசிக்கிட்டு இருக்குறீங்க. ஒங்களுக்கு ஏதாவத ஆயிருச்சா. அப்படி என்னதான் பெட்டியத் திறந்து வச்சிக்கிட்டுப் பேசுறீங்கன்னு? கோபமாக் கேட்டா.

அதுக்கு அவன், “நாம ஏழையா இருந்தபோது யாரும் நம்மை மதிக்கலை. என்னோடு பேசுவதற்கே தயங்கினாங்க. நானே வலியச்சென்று பேசினாலும் அவங்க என்னைய ஒரு மனுஷனாவே மதித்துப் பதில் சொல்லமாட்டாங்க. ஏன் அவங்க வீட்டுல நடக்குற விசேஷங்களுக்குக் கூட நம்மளக் கூப்புட மாட்டாங்க. அப்படி இருந்தவங்க இப்ப எங்கிட்ட கொஞ்சம் பணம் வந்துருச்சுங்கறதுக்காக போற வார எடத்துல எல்லாம் என்னையக் கண்டா குனிஞ்சு வணக்கம் சொல்றாங்க. அது உண்மையிலேயே எனக்குச் சொன்ன வணக்கம் இல்லை. என்கிட்ட இருக்குற காசு பணத்துக்காக சொல்ற வணக்கம். அதனால எங்கிட்ட சொன்ன வணக்கத்தை எங்கிட்ட இருக்குற பணத்துக்கிட்ட போயிச் சொல்றேன்னு சொல்லிட்டு அவங்க சொன்ன வணக்கத்தை வீட்டுக்கு வந்து பணப்பெட்டியத் தொறந்து, இன்னக்கி கருப்பையா ஒனக்கு வணக்கம் சொன்னாரு, சுப்பையா வணக்கம் சொன்னாருன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். என்கிட்ட சொன்ன வணக்கத்தை நான் போயிச் சொல்றேன்னு சொல்லிட்டு என்னோட பணத்துக்கிட்ட வந்து சொல்றேன். இப்பப் புரிஞ்சதா நான் ஏன் அப்படிச் சொல்றேன்னு” என்று கூறினான்.


புருஷனோட விளக்கத்தக் கேட்டவுடனே மனைவி அசந்து போயிட்டா. அட உண்மையிலேயே நம்ம வீட்டுக்காரரு சொல்றது சரிதான். இந்த உலகத்துல மனிதன் என்பதற்காக ஒருத்தர மதிக்கிறதவிட அவருக்கிட்ட இருக்குற பணத்தையும் பதவியையும் பார்த்துத்தான் பழகி மதிப்புக் கொடுக்குறாங்கன்னு நெனச்சிக்கிட்டா. அவளுக்குத் தன்னோட வீட்டுக்காரரு மேல ரொம்ப மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுச்சு. பணத்துக்காகவோ பதவிக்காகவோ ஒருத்தரு கூட பழகக் கூடாதுங்கறத இந்தக் கதை நமக்குச் சொல்லுது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1cj.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License