இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​ சேதுராமன்

91.முதலைக்கொரு நியாயம்


எப்போதும் நல்லவங்களுக்கு உதவி செய்யறதுதான் நல்லது. கெட்டவர்களுக்கு உதவி செய்தால் அது கெடுதலையேத் தரும். கெட்டவர்கள் தங்களுக்கு உதவி செய்தவர்களை உடனே மறந்து அவர்களை அழிக்கவே முற்படுவர். அதனால் கெட்டவர்களுக்கு உதவக் கூடாது. இது குறித்த கதை ஒன்று இவ்வட்டாரத்தில் வழக்கத்தில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மிகப் பெரிய காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் பல மிருகங்கள் வசித்தன. அந்தக் காட்டுக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு கிராமங்கள் இருந்தன. கிராம மக்கள் அந்தக் காட்டக் கடந்துதான் எந்த வேலைக்காக இருந்தாலும் போகணும்.

அந்தக் காட்டக் கடக்கறபோது அந்தக் கிராம மக்களுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கும். இருந்தாலும் மனசத் திடப்படுத்திக்கிட்டு அவங்க ரெண்டு மூணுபேராச் சேர்ந்தே போவாங்க. அந்தக் காட்டக் கடந்து போயி அவங்களோட வயல்ல வேலை செஞ்சிட்டு வருவாங்க. இப்படி இருக்கறபோது அந்த வழியாகத் தன்னோட கிராமத்துக்கு ஒரு சிறுவன் போயிக்கிட்டு இருந்தான்.

அப்பப் பாத்து பாதை ஓரத்துல இருந்து, “தம்பி, தம்பி… என்னையக் காப்பாத்து”ன்னு ஒரு குரல் கேட்டது. என்னடா இது காட்டுக்குள்ளாற இருந்து நம்மைக் கூப்பிடறதுன்னு நெனச்சிக்கிட்டு குரல் வந்த திசையப் பாத்தான். அங்க ஒரு முதலை வேடனுடைய வலையில சிக்கிக்கிட்டு இருந்தது.

அவன் ஐயோ பாவம்னு நெனச்சிக்கிட்டு அதன் பக்கம் போனான். அவனப் பாத்த முதலை, “தம்பி வேடன் விரிச்சிருந்த வலையில நான் தெரியாம வந்து சிக்கிக்கிட்டேன். என்னைய இந்த வலையில இருந்து காப்பாத்திடு. ஒனக்குக் கோடிப் புண்ணியம் உண்டாகும்”னு கெஞ்சிக் கேட்டது.

அதக் கேட்ட அந்தச் சின்னப் பையன், “நான் ஒன்னைக் காப்பாத்தினா நீ என்னைய தின்னுடுவே. அதனால எனக்குப் பயமா இருக்கு. நான் ஒன்னைய வலையில இருந்து விடுவிக்க மாட்டேன்”னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பப் பார்த்தான்.

அதப் பாத்த அந்த முதலை, “தம்பி, தம்பி போயிடாதேப்பா. ஒன்னக் கெஞ்சிக் கேட்டுக்குறேன். என்னோட உசிரக் காப்பாத்தப் போற ஒன்னைய நான் திம்பனா. ஒன்னைய சத்தியமா திங்கமாட்டேன். என்னைய இந்த வலையில இருந்து காப்பாத்திடு”ன்னு மனச உருக்கற மாதிரி அந்தப் பையனப் பார்த்துக் கேட்டது.

அந்த முதலையோட கெஞ்சலைப் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்தப் பையன் முதலை மீது இரக்கப்பட்டு சரி காப்பாத்துவோம். ஆனா அந்த முதலைக்கிட்ட சத்தியம் வாங்கிக்கிருவோம்னு நெனச்சிக்கிட்டு, “சரி முதலையே ஒன்னைய நான் காப்பாத்துறேன். ஆனா நீ என்னையத் திங்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடுக்கணும். அப்படிச் சத்தியம் பண்ணிக் கொடுத்தாயானால் உன்னைக் காப்பாத்துவேன்”னு சொன்னான்.

அதக் கேட்ட முதலை, “சத்தியமா ஒன்னை ஒண்ணுஞ் செய்ய மாட்டேன். என்னையக் காப்பாத்து. என்னைய நம்பு” அப்படீன்னு சொல்லி சத்தியம் செஞ்சது.

முதலை சத்தியம் செஞ்ச ஒடனே அந்தப் பையன் மெதுவாப் போயி வலையில இருந்து முதலையை விடுவித்தான். வெளியில வந்த முதலை ஒடனே ரொம்ப சந்தோஷப்பட்டு, அவனோட காலை கெட்டியாப் புடிச்சிக்கிடுச்சு. அந்தப் பையன், “நன்றி கெட்ட முதலையே எனக்கு நீ சத்தியம் செஞ்சு கொடுத்தாயல்லவா? அந்தச் சத்தியத்த மீறி என்னையக் கொன்று தின்னப் பாக்குறியே. இது ஒனக்கே நல்லா இருக்கா? இது நியாயமா?” அப்படீன்னு கேட்டான்.


அதக் கேட்ட முதலை, “தம்பி தப்பிக்கிறது வரைக்கும் தான் எனக்கு நியாயம் தர்மம் எல்லாம். நான் தப்பிச்சிட்ட பிறகு நியாயம் தர்மம் எல்லாம் கிடையாது. புரிஞ்சதா?” அப்படீன்னு சொல்லிட்டு அவனத் திங்கறதுக்குத் தொடங்கியது.

அதைக் கண்ட அந்தச் சிறுவன், “என்னையத் திங்கறத நிறுத்து. இந்தக் காட்டுல இருக்கிற யாருக்கிட்டயாவது நீ செய்யிறதப் பத்திக் கேட்போம். அவங்க நீ செய்யிறது சரின்னு சொன்னாங்கன்னா அதுக்கு அப்பறமா என்னையத் தின்னு”ன்னு சொன்னான்.

முதலையும், “சரி நீ சொல்லறது மாதிரி செய்வோம். இந்தக் காட்டுக்குள்ளாற யாரு வராங்களோ அவங்கக்கிட்ட கேட்போம்”னு சொன்னது.

அப்பப் பார்த்து அந்தப் பக்கமா ஒரு முயல் ஒண்ணு வந்தது. அப்படி வந்த முயலப் பாத்து அந்தச் சிறுவன் இந்த முதலை செஞ்சதைப் பத்திக் கேட்டான். அதுக்கு முயல் எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு.

இப்படியே நாய், கொக்கு, கரடி எல்லாம் சொல்லிட்டுப் போயிடுச்சுங்க. இந்தப் பையன் நாம உதவி செய்யப் போயி இப்படி உபத்திரவத்துல மாட்டிக்கிட்டமேன்னு வருத்தப்பட்டு அழத்தொடங்கினான். அப்பப் பார்த்து ஒரு நரி அந்தப் பக்கமா வந்துச்சு. அந்த நரியப் பார்த்த அந்தச் சிறுவன், “அண்ணே நரியண்ணே... இந்த முதலைக்கு நான் உதவி செஞ்சேன், உதவி செஞ்ச என்னைய இந்த முதலை கொல்லப் பார்க்குது. இது நியாயமா? நீங்களே இதுக்கு ஒரு தீர்ப்பச் சொல்லுங்க”ன்னு சொல்லிட்டு அழுதான்.

அதுக்கு நரி முதலையப் பாத்து, “சரி அந்தப் பையன் சொல்லிட்டான். நீ ஒன்னோட நியாயத்தைச் சொல்லு. அதுக்குப் பிறகு நான் தீர்ப்பச் சொல்றேன்”னு சொன்னது.

அதக் கேட்ட முதலை, “நான் இந்த வலைக்குள்ளாற அகப்பட்டுக்கிட்டேன். என்னைய இந்தப் பையந்தான் வலையில இருந்து மீட்டான். எனக்குப் பசியா இருந்துச்சு. அதனால இவனக் கொன்னு சாப்பிடறதுக்காக அவனக் கவ்விப் பிடிச்சிட்டேன். பசியால வருந்துர நான் இவனச் சாப்பிடலாம்ல. இதுல என்ன தப்பு இருக்கு”ன்னு கேட்டது.

முதலை அநியாயமா இந்தச் சிறுவனை ஏமாத்திக் கொல்லப் பாக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்ட நரி, “அப்படியா. இந்தச் சின்னப் பையன் ஒன்னைய எப்படிக் காப்பாத்தினான்னு நான் எப்படி நம்புறது. நீ எப்படி இந்த வலைக்குள்ளாறக் கிடந்த நீ அவன விட்டுட்டு இந்த வலைக்குள்ளாற போயி முன்ன இருந்தது மாதிரி இரு. அதைப் பாத்துட்டு நானே ஒன்னைய வலையில இருந்து விடுவிச்சிட்டு இந்தப் பையன நீ திங்கறதுக்காகத் தருவேன்”னு சொன்னது.

இதக் கேட்ட முதலை, “சரி நரியாரே நீங்க சொல்லறதக் கேக்குறேன். ஆனா இந்தப் பையன விட்டுறாதீங்க”ன்னு சொல்லிட்டு முன்ன எப்படி வலையில இருந்ததோ அதுமாதிரி வலைக்குள்ளாறப் போயி மாட்டிக்கிருச்சு. இனி முதலையினால வெளியில வரமுடியாதுண்ணு நெனச்சி நரி அநதப் பையனப் பாத்து, “தம்பி கெட்டவங்களுக்கெல்லாம் எப்பவும் உதவி செய்யாதே. கெட்டவங்க எப்பவும் நன்றியோட நடக்கமாட்டாங்க. நன்றிய மறந்துடுவாங்க. இனிமே யோசிச்சி யாருக்கு உதவி செய்றதுனாலும் உதவி செய்யி. தப்பிச்சுப் போயிடு”ன்னு சொல்லிட்டு காட்டுக்குள்ளாற ஓடிப் போயிருச்சு.


அந்தச் சிறுவனும் நரிக்கு நன்றி சொல்லிட்டு ஓட்ட ஓட்டமா தன்னோட கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தான். அப்படிப் போனவன் அங்க இருந்தவங்கக்கிட்ட நடந்ததை எல்லாத்தையும் சொல்லி ஆட்களக் கூட்டுக்கிட்டு வந்து வலைக்குள்ளாறக் கிடந்த முதலையைக் கொன்னுட்டான். நன்றி கெட்ட முதலையும் செத்துப் போயிடுச்சு.

கெட்டவங்க அவங்களுக்குத் தகுந்த மாதிரிதான் நியாயம் பேசுவாங்க. அவங்க ஒருக்காலும் தன்னலத்தை விட்டுக் கொடுக்கமாட்டாங்க. நன்றியுணர்வும் அவங்கக்கிட்ட இருக்காது. இதைச் சொல்லுறதுக்காக இந்தக் கதையச் சொல்லுவாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1cm.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License