இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​ சேதுராமன்

93.ஆண்டவன் கணக்கு


இந்த உலகத்தில் இருக்கறவங்க அத்தனை பேரும் தான் கணக்குப் போட்டா தப்பாது. என்னோட கணக்குச் சரியா இருக்கும்னு அடிச்சிச் சொல்வாங்க. ஆனா யாரு கணக்குத் தவறுனாலும் தவறும், ஆண்டவன் கணக்கு மட்டும் தவறாது. நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குதுன்னு சொல்வாங்க. ஆண்டவன் யாருக்கு எப்ப எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுன்னு தெளிவா ஒரு கணக்கு வச்சிருக்காரு. அவரு போட்ட கணக்குத் தப்பாது. இது பற்றிய ஒரு கதை இந்த வட்டாரத்துல வழங்கி வருது.

ஒரு ஊரில் பெரும் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் நல்லவர். தன்னுடைய செல்வத்தைக் கொண்டு பசி என்று வருவோர்க்கெல்லாம் நாள்தோறும் அறுசுவை உணவு படைத்தார். அங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில் மக்கள் வந்து உணவு உண்டு பசியாறிச் சென்றனர்.

நிறையப் பேருக்குச் சமைக்க வேண்டியிருந்ததால் அவருக்குச் சொந்தமான திறந்தவெளியை அவர் பயன்படுத்தி அனைவருக்கும் உணவினை அளித்து வந்தார்.

அந்த ஊரில் மட்டுமல்லாமல் அனைத்து ஊர்களிலும் அவரைப் பற்றி மக்கள் புகழ்ந்து பேசினர். அவர் வழங்கிய உணவை உண்டு அவரை வாழ்த்திச் சென்றனர். அவரது புகழ் எங்கும் பரவியது.

இப்படி இருக்கறபோது, ஒருநாள் அவரு சமையற்காரங்களை வச்சி சமைச்சிக்கிட்டு இருந்தாரு. அப்பப் பாத்து ஒரு பருந்து உசுருள்ள ஒரு நாகப் பாம்பைக் கவ்விக்கிட்டு மேல பறந்தது. அப்ப அந்தப் பாம்பு வலி பொறுக்க முடியாம விஷத்தைக் கக்கியது. அந்த விஷம் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாருலயும் சாப்பாட்டுலயும் விழுந்துருச்சு.

விஷம் விழுந்ததை யாரும் கவனிக்கல. சாப்பிட வந்தவங்களுக்கெல்லாம் சாப்பாட்டப் பரிமாறினாங்க. எல்லாரும் சாப்பிட்டாங்க. ஆனா சாப்பிட்ட உடனேயே எல்லாரும் மயங்கி விழுந்து செத்துப் போயிட்டாங்க. பணக்காரரு ரெம்ப வருத்தப்பட்டாரு. ஆண்டவனே! இப்படி நடந்துருச்சேன்னு ஆண்டவங்கிட்ட கண்ணீர் மல்க வேண்டிக்கிட்டு அழுதாரு.

ஊருல உள்ளவங்க எல்லாரும் வந்து, ‘‘ஐயா கவலைப் படாதீங்க. நீங்க நல்லதுதான் செய்துக்கிட்டு வந்தீங்க. ஒங்க மேல எந்தவிதமான தவறும் இல்லை. இது ஏதோ விதியோட வேலை. இதுனால ஒங்களுக்கு எந்த ஒரு தீங்கும் வராது. நீங்க எப்பவும் போல அனைவருக்கும் அன்னதானம் செய்ங்க’’ அப்படீன்னு சொன்ன உடனே அந்தப் பணக்காரரும் மனசத் தேத்திக்கிட்டு மீண்டும் தன்னோட அன்னதானப் பணியைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினாரு.

இது இப்படி இருக்கயில எமலோகத்துல ஒரு குழப்பம் வந்தது. எமனுக்கு இந்தப் பாவத்தை யாரு கணக்குல வரவு வைக்கிறதுன்னு புரியல. எமன் ஒடனே சித்திரபுத்திரனக் கூட்டிக்கிட்டு சிவபெருமான்கிட்டப் போனாரு. எமனப் பாத்த சிவன், ‘‘என்ன எமனாரே என்னைத் தேடி வந்த காரணம் என்ன?’’ அப்படீன்னு கேட்டாரு.


அதுக்கு எமன் நடந்தைதைச் சொல்லி, ‘‘ஐயனே இவ்வளவு பேரு இறந்ததுக்கு யாரு காரணம். இந்தக் பாவத்தை யாரு கணக்குல வைக்கிறது? அன்னதானம் செய்த பணக்காரரு மேலயா? அல்லது சமைச்ச சமையல்காரங்க மேலயா? அல்லது சோத்தப் பரிமாறினவங்க மேலேயோ? எனக்கு இத யாரு பேருல கணக்கு வைக்கிறதுன்னு தெரியல. அதனால மத்த கணக்கெல்லாம் அப்படி அப்படியே நிக்குது. அதனால தாங்கள் தான் இதுக்கு வழிகாட்டணும்”னு சொன்னார்.

அதைக் கேட்ட சிவபெருமான், ‘‘எமனே! கொஞ்சம் பொறு யாருபேருல இந்தப் பாவக் கணக்கைச் சேக்குறதுன்னு கொஞ்ச நாள்ல நானே ஒனக்குச் சொல்லிடறேன். அதனால கவலைப்படாம போ”ன்னு சொல்லி அனுப்புனாரு.

கொஞ்ச நாள் சென்றது. ஒருநாள் நாலஞ்சு சாமியாருக அன்னதானம் செய்யிற அந்தப் பணக்காரரோட ஊருக்கு வந்தாங்க. அவங்க வாரம் ஒரு முறைதான் சாப்பிடுவாங்க. அவங்க அந்த ஊருக்கு வந்த நாள் ஏழாவது நாள். விரதம் விட்டுச் சாப்பிடுகின்ற நாள்.

அந்தச் சாமியாருங்க நால்வரும் நன்றாகக் குளித்துவிட்டு பசியோட அந்த ஊருல சோறு கிடைக்குமான்னு பாத்துக்கிட்டே வந்தாங்க. அப்ப அந்த ஊருல ஒரு மரத்தடியில ஒரு கிழவி ஒருத்தி ஒக்காந்துக்கிட்டு இருந்தா. அந்தச் கிழவியப் பாத்த அந்த சாமியாருங்க, ‘‘அம்மா, நாங்க வாரம் ஒருமுறை சாப்பிடுற வழக்கம் உள்ளவங்க. இன்றுதான் நாங்க சாப்பிடுற நாள். இந்த ஊருல எங்க சாப்பாடு கிடைக்கும்? சொல்லு”ன்னு கேட்டாங்க.

அதைக் கேட்ட அந்தக் கிழவி, ‘‘ஐயா அதோ பாருங்க ஒரு பெரிய கொட்டகை தெரியுது அங்க போங்க நல்ல அறுசுவையோ ஒரு பெரிய பணக்காரரு சபாப்பாடு போடுறாரு. போயிச் சாப்பிடுங்க. அதோடு மட்டுமில்லாம கொஞ்ச நாளுக்கு முன்னால அவரு போட்ட சாப்பாட்ட சாப்பிட்டு ஆயிரக் கணக்குல செத்துப் போயிட்டாங்க. ஆனா இப்ப எல்லாரும் போயிச் சாப்பிடுறாங்க. நீங்க போயிச் சாப்பிடுங்க”ன்னு சொல்லி அனுப்பினாள்.

சாமியாருங்க ரொம்ப நன்றின்னு சொல்லிட்டு அங்க போயி சாப்பிடப் போயிட்டாங்க. அப்ப இதைப் பாத்த ஆண்டவனான சிவன், எமனக் கூப்பிட்டு நீ முன்னால ஒரு பாவக் கணக்கப் பத்தி சொன்னியில்ல. அந்தக் கணக்க இந்தக் கிழவியின் பாவக் கணக்குல சேத்துரு”ன்னாரு.

அதக் கேட்ட எமன் ஆடிப் போயிட்டாரு.

‘‘சுவாமி அது எப்படி அந்தக் கிழவியோட பாவக் கணக்குல சேக்குறது?”ன்னு கேட்டாரு.


அதுக்கு ஈசன், ‘‘எமனே உதவி செய்யறவங்களுக்கு உபத்திரவம் செய்யக் கூடாது. நல்லது செய்யிறவங்களுக்கு உதவி செய்யலைன்னாலும் உபத்திரவம் செய்யக் கூடாது. இல்லாதது பொல்லாததுன்னு எதை வேணுமனாலும் சும்மா சொல்லக் கூடாது. அடுத்தவங்களப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொன்னா மத்தவங்களோட பாவக் கணக்கு அடுத்தவங்களப் பத்தி பொறணி பேசுனவங்களோட கணக்குள சேந்துரும். அதுமாதிரிதான். இதுவும்”னு சொன்னாரு. ஆண்டவனோட கணக்கக் கேட்ட எமனுக்கு ஆஹா இப்படியான்னு நெனச்சிக்கிட்டு இந்தப் பாவக் கணக்கினை அந்தக் கிழவி பேருல எழுதி வச்சிட்டு கணக்க முடிச்சாரு.

நாம ஒரு கணக்குப் போட்டா, அத மாத்தி ஆண்டவன் ஒருகணக்கைப் போடுறான். நாம போட்ட கணக்குத் தவறிடுது. ஆனா ஆண்டவன் போடுற கணக்கு தவறவே தவறாது. யாருக்கு என்ன கொடுக்கணுமோ அதத் தெளிவாக் கொடுத்துருவான். இக்கதை இன்னமும் இந்த வட்டாரத்துல வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1co.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License