இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​ சேதுராமன்

97.தாயின் அன்பு


உலகத்தில் மிகவும் உயர்ந்தது எதுன்னு கேட்டா அனைவரும் கண்ணை மூடிக்கிட்டுச் சொல்வாங்க தாயின் அன்புதான் உயர்ந்தது என்று. இந்தப் பூமிய விட உயர்ந்தவர் நம்மைப் பெற்ற தாய். அதனால்தான் இறைவன் உயிர்களைப் படைத்துவிட்டு தனக்குப் பதிலாகத் தாயை, அந்த உயிரைக் காப்பதற்காக பக்கத்திலேயே வைத்தார் என்பர். இந்த உலகத்தில் தன்னலமில்லாதது, பிறருக்காக வாழ்வது எல்லாமே தாயின் அன்புதான். இந்தத் தாயின் அன்பிற்கு ஈடு இணை இந்த உலகத்திலேயே இல்லை என்று சொல்லலாம். இதனை விளக்கும் வகையில் ஒரு கதை வழக்கத்தில வழங்கி வருகின்றது.

ஊருல பெரிய பண்ணையாரு ஒருத்தரு இருந்தாரு. அவருக்கு எல்லாம் இருந்தது. ஆனால், குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அவர்கள் வேண்டாத தெய்வமில்லை. போகாத கோவில் இல்லை. அவர்களது வேண்டுதலுக்கு மனம் இரங்கிய இறைவன் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அருள் செய்தார்.

அவர்களும் அந்தக் குழந்தையை நன்றாக வளர்த்தார்கள். குழந்தைக்கு ஒண்ணரை வயது ஆனது. அந்த ஊரில் ஒரு வழக்கம் ஒன்று இருந்தது. எந்த வீட்டுக்கும் தண்ணீர் தேவையென்றால் அந்த வீட்டில் உள்ள பெண்கள்தான் குளத்திற்குச் சென்று எடுத்து வரவேண்டும். அப்படி ஒரு வழக்கம். அதனால் பண்ணையாரோட மனைவி குழந்தையைத் தொட்டில்ல போட்டுத் தூங்க வச்சிட்டு தண்ணி எடுப்பதற்காக குடத்தை எடுத்துக்கிட்டு குளத்துக்குப் போனா.

குளம் பண்ணையார் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்துல இருந்தது. அதனால வேக வேமாக போயி பண்ணையார் மனைவி தண்ணி தூக்கப் போனா. அவ குளத்துல தண்ணி எடுத்துக்கிட்டு வீட்டுக்குவந்து பாத்தா அவளோட குழந்தை பாம்பு கடிச்சி நுரைத்தள்ளி தொட்டில்ல இறந்து போயிக்கிடந்தது.

இறந்து கிடந்த மகனைப் பார்த்த பண்ணையார் மனைவி குய்யோ முறையோ என்று கீழே விழுந்து புரண்டு புரண்டு அழுதாள். அவள் இறைவனைப் பார்த்து இந்த வயசிலேயே என்னோட மகன எப்படி எமன் கொண்டு போனான். தெய்வமே உன்னோட அருளாளதான ஏம்புள்ள பொறந்தான். இப்படி அற்ப ஆயுசுல பாம்பு கடிச்சி இறந்து போனானே! நான் என்ன செய்யிறது’’ அப்படீன்னு பொலம்பிக்கிட்டே தலைவிரி கோலமாக் கால்போன போக்குல ஓடுனா.

அந்த ஊரு எல்லையில ஒரு கிணறு இருந்தது. அதுக்கிட்ட வந்து அழுதா. அப்ப அந்தக் கிணறு சொன்னது, ‘‘அம்மா அழாதே. ஒம்பிள்ளையோட உயிரை எமன் கொண்டுக்கிட்டுப் போயிட்டான். நான் வறண்டு போயி இருக்கேன். நீ உன்னோட கண்ணீரால என்னைய நிரப்புனா எமன் போன வழியச் சொல்றேன். அந்த வழியில போயி நீ எமனுக்கிட்ட இருந்து ஒன்னோட பிள்ளைய மீட்டுக்கிட்டு வரலாம்னு’’ சொன்னது.

அதக் கேட்ட பண்ணையாரோட மனைவி தன்னோட கண்ணீரால அந்தக் கிணத்தை நிரப்பினா. கண்ணீர் வழிந்து அந்தக் கிணறு நிரம்புன ஒடனே அந்தக் கிணறு இங்க இருந்து நீ நேராப் போ அங்க ஒரு கள்ளியஞ்செடி ஒண்ணு இருக்கும். அதுக்கிட்ட நீ போயிக் கேட்டா அது உனக்கு வழி சொல்லும். போன்னு’’ சொன்ன ஒடனே பண்ணையாரோட மனைவி வேகவேகமா ஓடுனா.


கொஞ்சதூரம் போனவுடனே அந்தக் கிணறு சொன்ன கள்ளியஞ்செடி வந்தது. அதுக்கிட்டப் போயி, ‘‘ஏ கள்ளியஞ்செடியே எம்பிள்ளையோட உசிர எமன் கொண்டுக்கிட்டுப் போயிட்டான். எனக்கு இருக்குறது ஒத்தப்பிள்ளை. அதனோட உசிர மீட்கணும். நீதான் எனக்கு உதவி செய்யணும்னு’’ அழுதுக்கிட்டே கள்ளிக்கிட்ட கேட்டா.

அவ அழுததப் பாத்த கள்ளி, ‘‘அம்மா அழாதே, நீ உன்னோட குழந்தையை எப்படிக் கட்டிப்புடுச்சி முத்தங் கொடுப்பியோ அதேமாதிரி என்னையக் கட்டிப்பிடிச்சி முத்தங் கொடு நான் எமன் போன வழியச் சொல்றேன்னு சொன்னது.

பண்ணையாரு மனைவி எதைப் பத்தியும் கவலைப் படாம சட்டுன்னு கள்ளியஞ்செடியக் கட்டிப்புடுச்சி குழந்தைக்குக் கொடுக்குற மாதிரி முத்தமுங் கொடுத்தா. அவளோட ஒடம்பு முகம் எல்லாம் முள்ளுக் குத்தி இரத்தம் வழிஞ்சது.

கள்ளிச்செடி பண்ணையாரு மனைவியப் பாத்து, ‘‘அம்மா அழாதே, நீ இடதுபக்கமாப் போனியின்னா எமன் போன பக்கம் நீ போயி ஒன்னோட குழந்தை உசிர மீட்டுடலாம். அங்க ஒரு கழுகு இருக்கும் அந்தக் கழுகு ஒனக்கு உதவி செய்யும். கவலைப்படாம போயிட்டுவா’’ அப்படீன்னு சொன்னது.

பண்ணையாரு மனைவி அந்தக் கள்ளிச்செடிக்கு நன்றி சொல்லிட்டு, அழுதுகிட்டே இடது பக்கமாப் போனா. கொஞ்ச தூரம் இடது பக்கம் போன ஒடனே ஒரு பெரிய மலைக்கழுகு ஒண்ணு அங்க இருந்த மரத்துல ஒக்காந்து இருந்துச்சு. கண்ணீருங் கம்பலையுமா வந்த பண்ணையாரோட மனைவியைப் பாத்து, ‘‘அம்மா அழாதே! நீ ஏன் இப்படி அழுதுகிட்டேப் போறே! என்னன்னு சொன்னா என்னாலான ஒதவிய நான் செய்வேன்”னு சொன்னது.

கழுகு சொன்னதைக் கேட்ட பண்ணையாரு மனைவி, ‘‘ஏங் குழந்தையின் உயிர எமன் புடிச்சிக்கிட்டுப் போயிட்டான். அந்த எமன் கிட்ட இருந்து என்னோட குழந்தையோட உசிர மீட்கணும். அதுக்காகத்தான் போயிக்கிட்டு இருக்கேன்”னு சொன்னா

அதக் கேட்ட கழுகு, ‘‘அம்மா எனக்கு ரெண்டு கண்ணும் தெரியாது. ஒன்னோட ரெண்டு கண்ணையும் தந்தியின்னா நான் எமன் இருக்குற எடத்த சொல்லுவேன். நீ தர்ரியா?’’ அப்படீன்னு கேட்டது.

அதுக்கு அந்தப் பண்ணையாரோட மனைவி சரி தர்றேன். நீ எமன் போன வழியச் சொல்லு”ன்னு சொல்லிட்டுத் தன்னோட கண்கள் ரெண்டையும் தோண்டி எடுத்து அந்தக் கழுகுக்கிட்ட கொடுத்தா.

கண்களை வாங்கிக்கிட்ட கழுகு, ‘‘அம்மா இங்க இருந்து பதினஞ்சாவது அடி தூரத்துல எமன் இருக்கான் அங்க போயி ஓங் குழந்தையோட உயிரை மீட்டுக்க”ன்னு சொன்னது.

பண்ணையாரு மனைவி அந்தக் கழுகுக்கு நன்றி சொல்லிட்டு, கண்கள்ள ரத்தம் ஒழுக ஒழுக, மெதுவா ஒவ்வொரு அடியா வச்சி நடந்து போனா. பதினஞ்சாவது அடிவந்த ஒடனே ஒரு குரல் கேட்டது, ‘‘ஏம்மா நீ எங்க வந்த. இந்த இடத்துக்கு யாரும் சாமானியமா வரமுடியாதே? நீ ஏன் வந்த. வந்த காரணத்தைச் சொல்லு’’ அப்படீன்னு சொன்னாரு.

எமன் கூறியதைக் கேட்ட பண்ணையாரு மனைவி, ‘‘ஐயா தர்மதுரை என்னோட குழந்தையின் உயிரை எடுத்துக்கிட்டு வந்துட்டீங்க. ஏங குழந்தையைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. அந்தக் குழந்தை தெய்வத்தோட அருளாள பிறந்தது. அதத் திருப்பிக் கொடுங்க”ன்னு கேட்டா.

அவளோட நிலைமையைப் பாத்து இரக்கப்பட்ட எமன், ‘‘அம்மா கவலைப்படாதே, இதோ இங்க ஒரு மலர்த்தோட்டம் இருக்கு. இந்த மலர்களெல்லாம் நான் பிடிச்சிக் கொண்டு வந்த கொழந்தைங்க. இந்தத் தோட்டத்துக்குள்ளாறப் போயி பத்து நிமிஷத்துக்குள்ளாற ஒன்னோட குழந்தையக் கண்டுபிடிச்சிக் கூட்டிக்கிட்டுப் போயிடு. அப்படி நீ கண்டுபிடிக்க முடியலைன்னா ஒன்னோட குழந்தையை எந்தக் காலத்துலயும் பாக்க முடியாது”ன்னு சொல்லிட்டாரு.

பண்ணையாரு மனைவி சரின்னு எமங்கிட்ட சொல்லிட்டு கைகளால தட்டுத்தட்டா தடவிக்கிட்டே போயி ஆறாவது வரிசையில ஏழாவதா இருந்த ஒரு மலரைப் போயித் தொட்டா. அவ தொட்ட ஒடனே அந்த மலர் குழந்தையா மாறி அம்மான்னு கத்திக்கிட்டே ஓடிவந்து அவளக் கட்டிப் பிடிச்சிக்கிருச்சு.

அதப் பாத்த எமன், ‘‘என்னடா இது நாம சொன்ன கொஞ்ச நேரத்துலயே அவ குழந்தையக் கண்டுபிடிச்சிட்டா? எப்படிக் கண்டுபிடிச்சா?”ன்னு ஆச்சரியப்பட்டார்.

பண்ணையாரோட மனைவிய அழைச்சி, ‘‘ஏம்மா இந்த மலர்த்தோட்டத்துக்குள்ள லட்சக்கணக்கான மலர்கள் இருக்கு. இதுல எப்படி ஒன்னோட குழந்தையை மட்டும் கண்டுபிடிச்சே?”ன்னு கேட்டாரு.


அதுக்கு அந்தப் பண்ணையாரோட மனைவி, ‘‘ஐயா, என்னோட குழந்தையோட வாசனை எனக்குத் தெரியும். அந்த வாசனையே என்னைய அதுக்கிட்ட கொண்டு போயிருச்சு. அதனாலதான் நான் என்னோட குழந்தையை ஒடனே கண்டுபிடிச்சேன். தாய்க்குத்தான் தெரியும் தன்னோட குழந்தையைப் பத்தி’’ அப்படீன்னு சொன்னா

அவளோட தியாக உள்ளத்தைப் பார்த்த அந்த எமன், அவளுக்கு இழந்த பார்வையையும் எந்தவிதமான காயமில்லாத உடலையும் கொடுத்துட்டு மறஞ்சிட்டாரு. பண்ணையாரு மனைவி தன்னோட குழந்தையை அழைச்சிக்கிட்டு தன்னோட வீட்டுக்குப் போயி மகிழ்ச்சியா வாழ்ந்து வந்தா.

தாயோட அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்தக் கதை உள்ளது. தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை என்பதற்கு இந்தக் கதையை உதாரணமாச் சொல்லலாம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1cs.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License