இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​ சேதுராமன்

98.மூன்று தேங்காய்கள்


உலகம் நல்லவங்களையும் கெட்டவங்களையும் கொண்டு அமைந்துள்ளது. இதில் நல்லவங்க உள்ளதால் உலகம் இன்றும் இருக்கின்றது. கெட்டவங்க எப்போதும் சுயநலத்தோடு இருப்பாங்க. அவங்க எப்போது பார்த்தாலும் தங்களைப் பற்றியே நினைச்சிக்கிட்டு இருப்பாங்க. மற்றவங்களை கடுகளவுகூட நம்ப மாட்டாங்க. இப்படி இருக்கக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக ஒருகதை இப்பகுதியில் வழங்கி வருகின்றது.

ஒரு ஊருல ஒருத்தன் இருந்தான். அவனுக்குப் பகீரதன் போல தவம் இருந்து இறைவனைப் பார்த்து வரம் வாங்கிக்கிட்டு வரணும்னு நினைத்தான். அதனால அவன் காட்டுக்குள்ளாறப் போயி ஒத்தைக் கால்ல நின்னு தவம் இருக்கத் தொடங்கினான்.

ஒரு நாளாச்சு. ரெண்டு நாளாச்சு. மூனாவது நாளு. திடீர்னு அவன் முன்னால ஈஸ்வரனே வந்து நின்னுட்டாரு. அவனுக்கு வந்தது யாருன்னு தெரியல. வந்த ஈஸ்வரன், ‘‘மகனே உனக்கு என்ன வேண்டும்? கேள். நீ கேட்பதைத் தருகிறேன். எதற்காக நீ தவம் இருக்கின்றாய்?’’ அப்படீன்னு கேட்டாரு.

அவனுக்கு ஒன்னும் புரியல. என்னடா இது திடீர்னு ஒரு ஆளு கடவுள் வேஷம் போட்டுக்கிட்டு வந்து முன்னால நிக்கிறான். ஆயிரம் வருஷம் தவம் இருந்தாத்தானே கடவுளு வருவாருன்னு சொல்வாங்க. இப்ப மூனுநாளுக்குள்ளேயே கடவுள்னு சொல்லிக்கிட்டு ஒருத்தரு வந்து நிக்கிறாரு. இது உண்மையில்ல. இதுல ஏதோ சூது இருக்குன்னு நெனச்சிக்கிட்டு, ஈஸ்வரனப் பார்த்து, ‘‘ஐயா ஒன்னையக் கும்புடுறேன். நீ கடவுள் இல்லே. நான் கடவுளை நினைச்சு, கடவுளைப் பாக்குறதுக்காகத் தவம் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். தயவு செஞ்சு என்னோட தவத்தைக் கெடுத்துப்புடாதே. பேசமாப் போயிருன்னு’’ சொன்னான்.

ஆனாலும் கடவுள் அவன விடல. ‘‘மகனே! நான் சொல்றதக் கேளு. இந்தப் பக்கமா போயிக்கிட்டு இருந்தேன். நீ ஒத்தக் கால்ல நின்னு தவம் செய்யிறதப் பாத்துட்டு, ஒன்ன ரொம்ப காலம் காக்க வைக்கக் கூடாதுங்கறதுக்காக நான் இப்ப வந்துட்டேன். ஒனக்கு வரம் கொடுக்காம என்னால போக முடியல. ஒனக்கு வேண்டியதைக் கேளு நான் தந்துட்டுப் போயிடறேன்னு’’ சொன்னாரு.

இதைக் கேட்ட அந்த ஆளுக்குச் சிரிப்பு வந்துட்டுது. ‘‘ஐயா என்னத் தொந்தரவு படுத்தாதே. நான் கடவுளப் பார்க்கணும். உன்னையப் பார்த்தா கடவுளாத் தெரியல. நாடகம் நடிச்சிட்டு வேஷத்தக் கலைக்காமல் அப்படியே ஓடி வந்துருக்கற மாதிரித் தெரியுது. பேசமாப் போயிருன்னு எனக்கு வரமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்’’ என்று சொன்னான்.


கடவுளுக்குச் சிரிப்பு வந்துருச்சு. அட என்னடா இது. இவன் நம்மள எவ்வளவு சொல்லியும் நம்ப மாட்டங்கறன். முட்டாப்பயலா இருக்கான். பாவம் இவனுக்கு ஏதாவது கொடுப்போம்னு நெனச்சார். அவனப் பார்த்து, ‘‘மகனே! என்னைய நீ நம்ப மாட்டங்கற. பராவாயில்லை. நான் யாருக்காவது காட்சி கொடுத்துட்டா அவங்களுக்கு எதாவது கொடுக்காமப் போகமாட்டேன். நீ வரம் வேண்டாம்னு சொன்னாலும் நான் கொடுக்காமப் போகமாட்டேன். ஒனக்கு என்ன வேணும்னு கேளு நான் தர்ரேன்னு’’ வற்புறுத்திக் கேட்டாரு.

அப்பவும் அந்த ஆளு கடவுள் சொல்றத நம்பாம, ‘‘என்னய்யா என்னோட தவத்தக் கலைக்கப் பாக்குறே. எனக்கு வரமும் வேணாம். ஒண்ணும் வேணாம். இங்க நின்னுக்கிட்டு இருக்காதே. பேசாமப் போயிரு”ன்னு கோபமாக் கத்துனான்.

ஆனாலும் இறைவன் அவனப் பாத்துச் சிரிச்சிக்கிட்டு இந்தக் காலத்துலயும் இப்படி ஒருத்தன் இருக்கானேன்னு வருத்தப்படாரு. இருந்தாலும் அவனுக்கு வரங்கொடுக்காமப் போகக்கூடாதுன்னு நெனச்சிக்கிட்டு, அவங்கிட்ட மூணு தேங்காயக் கொடுத்து, ‘‘மகனே! இந்தத் தேங்காய் சக்தி வாய்ந்ததேங்காய். நீ என்ன நெனச்சிக்கிட்டு இதை ஒடைக்கிறியோ அது ஒடனே நடக்கும். ஒனக்கு என்ன தேவையோ அதை நினைச்சிக்கிட்டு இதுல ஒன்ன ஒடைச்சிரு. இந்த மூணு தேங்காய்களையும் வைத்துக்கொள்’’ என்று கூறி அவற்றை அவனிடம் கொடுத்துவிட்டுக் கடவுள் போய்விட்டார்.

மூணு தேங்காய்களையும் வாங்கியவனுக்கு ஒண்ணும் புரியல. சரி கொடுக்கிறார், வாங்கிக் கொள்வோம் என்று வாங்கிக் கொண்டான். பிறகு மூணு தேங்காய்களையும் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போனான். வீட்டுக்குப் போன ஒடனே ஒரு அறைக்குள்ள போயி கதவ நல்லாச் சாத்தித் தாப்பாப் போட்டுக்கிட்டு மூணு தேங்காய்களையும் தன்னோட முன்னால வச்சிக்கிட்டான். அப்படித் தேங்காயை வச்சவனுக்கு வந்தது கடவுளா? இல்லை வேஷம் போட்டுக்கிட்டு வந்தவனா என்ற சந்தேகம் வலுத்துருச்சு.

சரி சோதனை செஞ்சு பாப்போம்னு நெனச்சிக்கிட்டே இருந்தான். ஒண்ணும் அவனுக்குத் தோணலை. எப்படி வந்தவன் கடவுள்தான்னு உறுதியா நம்புறதுன்னு குழம்பிக்கிட்டே இருந்தான். திடீர்னு அவனுக்கு ஒரு யோசனை வந்தது. நம்ம மூக்கு சின்னமா இருக்கு. அதைப் பெரிசா ஆக்க நெனப்போம் அப்படி மூக்குப் பெரிசாயிடுச்சின்னா வந்தது கடவுள்தான்னு உறுதியாத் தெரிஞ்சுடும்னு முடிவுபண்ணிக்கிட்டான்.

பிறகு கண்ணை மூடிக்கிட்டுத் தேங்காய எடுத்து எனக்கு மூக்குப் பெரிசா ஆகணும்னு நெனச்சுக்கிட்டு ஒடைச்சான். தேங்காய் ஒடைஞ்சது. ஒடனே அவனோட மூக்கு கிடுகிடுன்னு வளந்து வீட்டுச் சுவத்தைப் போயி தொட்டது.

அதப் பாத்தவன் மிரண்டு போயிட்டான். ஆஹா வந்தது கடவுள்தான். இது தெரியாமப் போயிருச்சே. இப்ப மூக்குவேற இப்படித் தெரியாத்தனமா பெரிசாயிடுச்சே. எல்லாரு மத்தியிலயும் எப்படிப் போறது. அசிங்கமாப் போயிருச்சேன்னு ரொம்ப வருத்தப்பட்டான்.

அப்ப அவன் கண்ணுல கடவுள் கொடுத்த தேங்காய் கண்ணுல பட்டுச்சு. அவன் ரெண்டாவது தேங்காய எடுத்து கொஞ்சங்கூட நிதானமில்லாம வேகமா ஒடச்சி என்னோட மூக்கு சின்னதாப் போயிடணும்னு நெனச்சான். அப்படி நெனச்சிக்கிட்டே தேங்காய ஒடச்சதுனாலே அவனோட மூக்கு ரெம்பச் சின்னதா ஆகி உள்ளுக்குள்ள ஓடிப் போயிருச்சு. இப்ப மூக்கு இருந்த இடத்துல ரெண்டு துவாரம் மட்டும் இருந்தது. அப்படியே தன்னோட முகத்தைக் கண்ணாடியில பாத்தான். கர்ணகடூரமா இருந்தது. அவன் முகத்தை அவனாலேயேப் பார்க்கச் சகிக்கவில்லை.

அவனுக்கு ரொம்ப மனசு கஷ்டமாப் போயிருச்சு. அடடா நம்ம மூக்கு இப்படி ரொம்பரொம்பச் சின்னமாப் போயிடுச்சேன்னு கவலைப்பட்டவன், இப்ப என்ன செய்யிறதுன்னு யோசிச்சுக்கிட்டே இன்னொரு தேங்காயப் பாத்தான். சரி அதையும் ஒடச்சாத்தான் நம்ம மூக்கச் சரிபண்ண முடியும்னு முடிவு பண்ணிக்கிட்டான்.

மூணாவது தேங்காய எடுத்து என்னோட மூக்கு எப்போதும்போல இருக்கணும்னு நெனச்சிக்கிட்டே ஒடச்சான். தேங்காய் ஒடஞ்ச உடனே அவனோட மூக்கு எப்போதும் போல ஆயிடுச்சு. அதைக் கண்ணாடியில பார்த்த ஒடனேதான் அவனுக்கு உயிரே வந்துச்சு.


அப்புறந்தான் அவன் வந்தது ஆண்டவன். நாம அவநம்பிக்கை பட்டதாலயும், நம்மளோட சுயநலத்தாலயும் கிடைச்ச வாய்ப்பத் தவறவிட்டுட்டோமே. ஐயோ நல்ல வாய்ப்பு இப்படிப் போச்சேன்னு ரொம்ப ரொம்ப வருத்தப்பட்டான்.

சுயநலத்தோட அவநம்பிக்கையோட எதையும் நெனைக்கிறதோ மத்தவங்களப் பாக்குறதோ தவறு. அப்படிப் பார்த்தா நம்மை நாடி வர்ற நல்ல வாய்ப்புகளும் இப்படி வீணாத்தான் போயிடும். மனிதன் சுயநலமில்லாம இருக்கணுங்கறத இந்தக் கதை நமக்குத் தெளிவாச் சொல்லுது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1ct.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License