இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​ சேதுராமன்

101.பாவத்தின் தந்தை யார்?


நமக்குத் தேசத் தந்தை, அறிவியலின் தந்தை பற்றித் தெரியும் பாவத்தின் தந்தை பற்றித் தெரியுமா? பாவத்தின் தந்தை குறித்த கதை ஒன்று இந்த வட்டாரத்தில் வழங்குகின்றது.

ஒரு ராஜாவுக்கு அரசவையில இருக்கின்ற போது திடீர்னு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அவர் பக்கத்தில் இருந்த தன்னோட அமைச்சரைப் பார்த்து, ‘‘அமைச்சரே பாவத்தின் தந்தை யார்?’’ ன்னு கேட்டார்.

அதைக் கேட்ட அமைச்சர் ஆடிப்போயிட்டார். மூத்த அமைச்சரான அவர் மற்ற அமைச்சர்களைப் பார்த்து, அரசர் கேட்ட கேள்விக்கு என்ன பதில்னு கேட்டார்.

அங்க இருந்த அமைச்சர்களுக்கு இதற்குப் பதில் தெரியலை. மௌனமா அமைதியா இருந்தாங்க. பதில் எதுவும் சொல்லலை. அரசருக்குக் கடுமையான கோபம்.

அவரு மூத்த அமைச்சரப் பார்த்து, ‘‘இங்க பாருங்க அமைச்சரே பாவத்தின் தந்தை யாரு?ன்னு எனக்குப் பதில் தேவை. அதை நாளைக்குள் நீங்க சொல்லிடணும். அப்படிச் சொன்னா உங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகத் தருவேன். அப்படீன்னு சொல்லிட்டு அவையை விட்டுட்டு வெளியப் போயிட்டாரு.

மூத்த அமைச்சருக்கு ஒண்ணும் புரியலை. மற்ற அமைச்சர்கள் எல்லாரும் மௌனமாத் தலையைக் குனிஞ்சவாறே போயிட்டாங்க.

மூத்த அமைச்சர் மனசுல குழப்பத்தோட வீட்டுக்கு வந்தாரு. அவரால வீட்டுல இருக்க முடியல. பேசாம இந்த வினாவுக்கு யாருக்கிட்டயாவது விடை தெரியுமான்னு கேட்போம். அப்படீன்னு விட்டை விட்டு வெளியில வந்து ஒவ்வொரு இடமா யாராவது இந்த கேள்விக்குப் பதில் சொல்லறவங்க இருக்காங்களான்னு பார்த்தாரு. யாரும் இல்லை.

தெருவுல அமைச்சர் வெகுநேரம் நின்னுகிட்டு இருந்தாரு. நேரம் போயிக்கிட்டே இருந்தது. அவருக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல. அப்போது தெருவழியா அந்த நகரத்துல இருந்த தாசி (விலைமகள்) ஒருத்தி வந்தாள். அவள் தெருவுல அமைச்சர் நிற்பதைப் பார்த்துட்டு, “ஐயா எதுக்காக இங்க நின்னுகிட்டு இருக்குறீங்க?”ன்னு கேட்டா.

அதுக்கு அவர், “பாவத்தின் தந்தை யாரு? அப்படீங்கற கேள்விக்குப் பதில் தெரியணும். யாராலயும் இந்தக் கேள்விக்குப் பதிலைச் சொல்ல முடியல. அதுதான் யோசிச்சிக்கிட்டு நிக்குறேன்” அப்படீன்னாரு.

அதக் கேட்ட தாசி, “நான் அந்தக் கேள்விக்குப் பதிலைச் சொல்றேன். நான் குடியிருக்கிற தெருவுல வந்து நின்னுங்க’’ன்னு சொன்னாள்.

அமைச்சருக்குத் தயக்கம். தாசி குடியிருக்கிற தெருவுல போயி நின்னா கேவலமாப் பார்ப்பாங்களே என்ன செய்யறதுன்னு யோசிச்சாரு. அவரோட தயக்கத்தைப் பார்த்த தாசி, ‘‘ஐயா நீங்க தயங்க வேண்டாம். நான் ஒங்களுக்கு ஐந்நூறு பொற்காசுகள் தர்றேன். ஒங்கள நான் குடியிருக்கிற தெருவுலதான நிக்கச் சொல்றேன். எதுக்கு இதுக்காக நீங்க தயங்குறீங்க”ன்னு கேட்டாள்.


அவள் கூறியதைக் கேட்ட அமைச்சர், “என்ன தெருவுலதான வந்து நிக்கச் சொல்றா, அதோட மட்டுமில்லாம ஐந்நூறு பொற்காசு வேற தர்றேன்னு சொல்றா. ஏற்கனவே அரசர் ஆயிரம் பொற்காசு தர்றேன்னு சொல்லிருக்காரு. மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு பொற்காசு கிடைக்கறத ஏன் விடணும்னு நெனச்சிக்கிட்டு அந்தத் தாசி குடியிருக்கிற தெருவுல போயி நின்னாரு.

அந்தத் தாசி பெரிய பணக்காரி. அவள அரசருக்கும் அந்த நகரத்தில இருக்குறவங்களுக்கும் நல்லாத் தெரியும். அமைச்சர் தான் குடியிருக்கிற தெருவுல நிக்கறதைப் பாத்த அந்தத் தாசி, ‘‘ஐயா என்னோட வீட்டு வாசல்ல வந்து நின்னா நான் ஒங்களோட கேள்விக்குப் பதிலைச் சொல்றேன்”னு சொன்னா.

அமைச்சர் யோசிச்சாரு. தாசியோட வீட்டு வாசல்ல போயி நின்னா நம்மலப் பத்தி இந்த மக்கள் என்ன நெனப்பாங்கன்னு மனசுக்குள்ள மறுகினாரு. அவரோட மனநிலையக் கவனிச்ச அந்தத் தாசி, “ஐயா நான் என்ன உங்க என்னோட வாசல்லதான நிக்கச் சொல்றேன். வேற ஒண்ணும் சொல்லலைல. நீங்க என்னோட வாசல்ல வந்து நின்னா ஒங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் தர்றேன். வாங்க”ன்னு சொன்னாள்.

அமைச்சருக்கு வியப்பு. நமக்குச் சும்மாவே ஆயிரம் பொற்காசுகள் கிடைக்குதே. அதையேன் வேண்டாம்னு சொல்லணும்னு நினைச்சிக்கிட்டு தாசி வீட்டு வாசல்ல போயி நின்னாரு.

அதைப் பார்த்த தாசி, “ஐயா நீங்க என்னோட படுக்கை அறைக்குள்ளாற வந்து நின்னா ஒங்களோட கேள்விக்குப் பதிலச் சொல்றேன்”னு சொன்னாள்.

அமைச்சர் தயங்கினாரு. அதைப் பார்த்த தாசி, “ஐயா படுக்கை அறைக்குள்ளாறதான வரச்சொன்னேன். வேற எதுவும் சொல்லலைல. நீங்க அப்படி வந்து நின்னா ஒங்களுக்கு ஆயிரத்தைந்நூறு பொற்காசுகள் தர்றேன். வாங்க”ன்னு சொன்னாள்.

அமைச்சரோட மனசுக்குள்ள மகிழ்ச்சி. அட அரசர் தர்ற ஆயிரத்தோட இதையும் சேர்த்தா மொத்தம் இரண்டாயிரத்து ஐந்நூறு பொற்காசுகள் கிடைக்குதேன்னு நினைச்சிக்கிட்டு தாசியோட படுக்கை அறைக்குள்ளாறப் போயி நின்னாரு.

அதைப் பார்த்த தாசி, “அமைச்சரே நீங்க இந்தப் படுக்கையில வந்து படுத்து என்னோட மடியில தலைய வச்சுப் படுத்தீங்கன்னா ஒங்களோட கேள்விக்குப் பதிலச் சொல்றேன்”னா, அதைக் கேட்ட அமைச்சருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அமைச்சரோட நிலையைக் கவனித்த தாசி, “ஐயா என்னோட மடியிலதான் தலை வச்சிப் படுக்கச் சொன்னேன். வேற எதுவும் செய்யச் சொல்லலைல. நீங்க தலைவச்சிப் படுத்தீங்கன்னா ஒங்க கேள்விக்குரிய பதிலயும் சொல்வேன். ஒங்களுக்கு இரண்டாயிரம் பொற்காசுகளையும் தருவேன்”னு சொன்னாள்.

அதைக் கேட்ட அமைச்சருக்கு மனசுக்குள்ள மத்தாப்பு மாதிரி மகிழ்ச்சி. அரசர் தர்ற ஆயிரத்தோட இதையும் சேர்த்தா நமக்கு மூவாயிரம் பொற்காசுகள் கிடைக்குதேன்னு நினைச்சிக்கிட்டு தாசியோட மடியில தலைவச்சிப் படுத்தாரு.

அவரு படுத்த உடனே கேள்விக்குரிய பதிலைக் கேட்டாரு. அவரைப் பார்த்த தாசி, “ஐயா பாவத்தின் தந்தை பேராசை”தான்னு பதிலைச் சொன்னாள்.


அமைச்சர் அவளப்பாத்து, “அது எப்படி?”ன்னு கேட்டாரு.

அதுக்கு அவள், “ஐயா நான் ஒங்களுக்குப் பொற்காசுகளத் தர்றேன்னு சொன்ன உடனேயே எல்லாத்தையும் மறந்துட்டு என்னோட படுக்கையறைக்கே வந்துட்டீங்க. ஒங்கள இங்க வரவச்சது நான் தற்றேன்னு சொன்ன பொற்காசுகள்தான். அந்தக் காசுகள் மேல உங்களுக்கு ஏற்பட்ட பேராசையாலதான் நீங்க என்னோட மடியில தலைவச்சிப் படுத்தீங்க”ன்னு சொன்னாள்.

அதைக் கேட்ட அமைச்சருக்கு வெட்கமாப் போயிருச்சு.

நாம இந்த நாட்டோட அமைச்சருங்கறதை விட, இந்தத் தாசி கொடுக்கறேன்னு சொன்ன இரண்டாயிரம் பொற்காசுகளுக்காகத்தானே நாம இவ சொன்னதையெல்லாம் செஞ்சோம்னு நெனச்சிக்கிட்டு இந்த உண்மைய தனக்கு மனசுல பதியும்படி சொன்ன தாசிக்கு நன்றியச் சொல்லிட்டு வந்தாரு.

பேராசைதான் நம்மை தவறான பாதையில போக வைக்குது. அதனால பாவம் சேருது. ஆகப் பாவத்தின் தந்தை பேராசை. பேராசைப் படக்கூடாது என்பதை இந்தக் கதை நமக்குச் சொல்லுது. இந்தக் கதை இப்பவும் இந்த வட்டாரத்துல வழங்கி வருது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1cw.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License