இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

4. வந்தான்... ​போனான்...!


ஒரு ஊருல ஒரு அப்பா அம்மா இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ​பையன் இருந்தான். அவன் யாருக்கும் அடங்காம இருந்தான். அப்பா அம்மா ​பேச்​சைக் ​கேக்காம இருந்தான். ​பொய்யி ​நெ​றையப் ​பேசுவான். தங்க​ளோட மகன் இப்படி இருக்கறா​னேன்னு ​ரொம்பக் கவ​லைப் பட்டாங்க அவங்க. இந்தப் பய ​தெனந்​தோறும் எங்கயாவது ​போயி வம்பிழுத்துக்கிட்டு வந்து நிப்பான். இவனால் இவங்களுக்கு ​ரெம்பத் ​தொந்தராவப் ​போச்சு. அவங்களும் ​சொல்லிச் ​சொல்லிப் பாத்தாங்க. அந்தக் கவ​லையில​யே அவங்களுக்கு முடியாமப் ​போயிருச்சு.

ஒரு நா அவங்க இந்த ஒலகத்த விட்​டே ​போயிட்டாங்க. இவன் அனா​தையாயிட்டான். அவ​னோட அப்பா அம்மா இல்லாத நி​லையிலும் அவன் திருந்தல. அவன் எதப்பத்தியும் கவலப் படல. அவனால அந்த ஊருல உள்ளவங்களுக்குப் ​பெரிய ​தொந்தரவா இருந்துச்சு. அவன என்ன பண்றதுன்னு அவங்களுக்கு ஒண்ணு​மே புரியல.

ஒரு நா அந்த ஊருக்காரவுக எல்லாரும் ஒண்ணு கூடுனாங்க. ஒவ்​வொரு நாளும் இந்தப் பய​லோட ​​சேட்​டை அதிகமாப் ​போச்சு... அவன என்ன ​செய்யிறது. அவன இந்த ஊரவிட்​டே விரட்டணும். ஏதாவது ​யோச​னை ​சொல்லுங்க. அப்படீன்னு ஒவ்​வொருத்தரும் ​பேசுனாங்க.

ஆளுக்கு ஒரு ​​யோச​னை​யாச் ​சொன்னாங்க. அ​தெல்லாம் ஒத்துவர்ற மாதிரி ​தெரியல. ஊருத் த​லைவரு ஒரு ​யோச​னை ​சொன்னாரு. இவன நம்ம ஊருக்கு ​வெளியில ஓடுற ஆத்துல ​கையக் காலக் கட்டிப் ​போட்டுரு​வோம். தண்ணி​யோட தண்ணியா இவன் ஒழிஞ்சி ​போகட்டும்ன்னு ​யோச​னை ​சொன்னாரு.

அவரு ​சொல்றது நல்லதா இருந்ததால அ​தை அத்த​னை ​பேரும் ஏத்துக்கிட்டாங்க. அவங்க எல்லாருமாச் ​​சேந்து அந்தப் பயலப் புடிச்சு ​கையக் காலக் கட்டி ஆத்துக்குள்ளாறக் ​கொண்டு​போயிப் ​போட்டுட்டு வந்துட்டாங்க. ஆத்துத் தண்ணியில அடிச்சிக்கிட்டுப் ​போன அந்தப் பய, “ஒரு ஆளு ​சோறு திம்​பேன், பத்தாளு ​வே​லை பாப்​பேன். என்னய யாராவது காப்பாத்துங்க... ஒரு ஆளு ​சோறு ​திம்​பேன்... பத்தாளு ​வே​லைபாப்​பேன்...” அப்படீன்னு ​சொல்லிக்கிட்​டே மிதந்துக்கிட்டுப் ​போனான்.

ஆறு பல ஊரத்தாண்டி ​போயிக்கிட்டிருந்துச்சு. அத்துல இந்தப் பய ​போயிக்கிட்டு இருந்தான். அந்த ஆறு வயக்காட்டு வழியப் ​போயிக்கிட்டிருந்துச்சு. அப்ப ஆத்துப்பக்கம் வந்த ஒரு ​வெவசாயி அவன் ​சொல்றதக் ​கேட்டுட்டு அடாடா ஒரு ஆளு சாப்பாட்டச் சாப்புட்டு பத்தாளு ​வே​லையப் பாப்பானாம்ல... பராவாயில்​லை​யே... நாம இவனக் காப்பாத்தி ​வே​லைக்கு வச்சிக்கிட்டா நமக்கு லாபமில்லன்னு நி​னைச்சி அவனக் காப்பாத்தித் தன்​னோட வா​ழைத் ​தோட்டத்துக்கு அ​ழைச்சி வந்தான் அந்த வெவசாயி.

தன்​னோட ​தோட்டத்துக்குப் ​போனவுட​னே அவனுக்குச் ​சோத்தப் ​போட்டுச் சாப்புடச் ​சொல்லிட்டு, “ஏம்பா ஒம்​பேரு என்னப்பா” அப்படீன்னு ​கேட்டாரு. அவனும், “என்​னோட ​பேரு ​தோலு இருக்கச் ​சொள முழுங்கி” அப்படீன்னு ​சொன்னான்.

வாழத்​தோட்டக்காரனுக்கு ஆச்சரியமாப் ​போச்சு. அந்தப் பயலப் பார்த்துத் ​தோட்டக்காரன், “ஏம்பா ஒனக்கு அப்பா அம்மா யாருமில்லயா?”ன்னு ​கேட்டாரு. அவன், “நானு யாருமில்லாத அனா​தைங்க. நீங்க ​தர்ற ​சோத்தத் தின்னுட்டு இங்க உள்ள ​வே​லையப் பாத்துக்கு​றேன்” அப்படீன்னு ​சொன்னான்.

அதுக்குத் ​தோட்டக்காரன், “அப்பா ​தோலு இருக்கச் ​சொளமுழுங்கி... நீ கவலப்படாத... நானு ஒன்ன நல்லாப் பாத்துக்க​றேன். நீயி இந்த வா​ழை மரங்களுக்குத் தண்ணியப் பாச்சிட்டுப் பத்திரமாப் பாத்துக்க...” அப்படீன்னு ​சொன்னான். அந்தப் பயலும் சரின்னு ​சொல்லிட்டு அங்க​யே ​வே​லைபாத்துக்கிட்டு இருந்தான்.

வா​ழை மர​மெல்லாம் நல்லாப் பழுத்துத் ​தொங்கிச்சி... ​தோட்டக்காரன் ​தோலுருக்கச் ​சொளமுழுங்கியப் பாத்து, “​டேய் தம்பி நான் வீட்டுக்குப் ​போயி ஒனக்குச் ​​சோறு வாங்கிட்டு வர்​றேன்... யாரும் களவாண்டு ​போகாமா வா​ழைத்​ ​தோட்டத்​தைப் பத்திரமாப் பாத்துக்க...” அப்படீன்னு ​சொல்லிட்டு வீட்டுக்குப் ​போயிட்டான்.

இந்தப் பயலால பழுத்த பழங்க​ளைப் பாத்துக்கிட்டுச் சும்மா இருக்க முடியல. பழத்​தைத் திங்கணும்​போல அவனுக்கு இருந்துச்சு. அவன் ஒட​னே எல்லாப் பழத்​தையும் தின்னுட்டு ​தோலுக்குள்ளாற களிமண்ண அமுக்கி வச்சிட்டுப் ​பேசாம நல்லவன் மாதிரி ஒக்காந்து இருந்தான்.



​கொஞ்ச ​நேரம் கழிச்சி வந்த ​​தோட்டக்காரன் அவனுக்குச் சாப்பாட்டக் ​கொடுத்துட்டு வா​ழைப் பழத்​தைச் சாப்பிட்டுப் பாப்​போம்னு ​போயிப் ஒரு பழத்​தைப் பிச்சிச் சாப்பிடப்​போனான். ஒ​ரே சவதியா இருந்துச்சு. அப்படி​யே எல்லாப் பழத்​தையும் பிச்சிப் பிச்சிப் பாத்தான் எல்லாப் பழங்களும் களிமண்ணா இருந்துச்சு... ​தோட்டத்துக்காரனுக்குக் ​கோபங்​கோபமா வந்துச்சு.

​கோபத்​தோட​போயி அந்தப் பயல நலு அ​றைவிட்டு, “ஏண்டா இப்படிப் பண்ணி​னே... ஒன்​னய எப்படிப் பாத்துக்கிட்​டேன். இப்படிப் பண்ணிட்டி​யே...” அப்படீன்னு அவனப் பார்த்துக் ​கேட்டான். அதுக்கு அந்தப் பய, “நான்தான் அப்​போ​தே ​சொல்லிட்ட​னே... ​எம்​பேரத் ​தோலு இருக்கச் ​சொள முழுங்கி அப்படீன்னு... ​தோலு மட்டும் இருக்குல்ல ​சொளய, பழத்​தை நாஞ்சாப்புட்டுட்​டேன்... நாந்தான் உண்​மையச் ​சொல்லிட்​டேன்... அப்பறம் ஏன் நீங்க என்ன அடிக்கறீங்க” அப்படீன்னு திரும்பக் ​கேட்டான்.

அந்தத் ​தோட்டக்காரனுக்கு ஒண்ணும் புரியல. இந்தப் பயல எங்கிருந்து வந்தா​னோ அங்​கே​யே விட்டுடணும் அப்படீனு ​நெனச்சி ஒட​னே அவனப் புடுச்சு காலக் ​கையக் கட்டி ஆத்துல​யே விட்டுட்டான்.

அந்தப் பயலும் எதற்கும் கவலைப்படாமல் “ஒரு ஆளு ​சோறு திம்​பேன். பத்தாளு ​வே​லைபாப்​பேன்... ஒரு ஆளு ​சோறுதிம்​பேன் பத்தாளு ​வே​லை பார்ப்​பேன்...”அப்படீன்னு ​சொல்லிக்கிட்​டே ஆத்​தோட ​போயிககிட்​டே இருந்தான். ​வெகுதூரம் அவன் ​ஆத்​தோட​வே ​போயிக்கிட்டிருந்தான். அப்பப் பாத்து ​நெல்லு வயலுக்குச் ​​சொந்தக்காரன் ஒருவன் வந்து அவனக் காப்பாத்தி கூட்டிக்கிட்டுப் ​போனான்.

அப்படிக் கூட்டீக்கிட்டுப் ​போனவன். ​அந்தப் பயலுக்கிட்ட ஓம்​பேரு என்னன்னு! ​கேட்டான். அதுக்கு, “ஏம்​பேரு ​போரச் சுத்திப் ​பொறிப் ​பொறுக்கி” அப்படீன்னு ​சொன்னான். அந்த ​நெல்லு வயலுக்காரன் ​ரொம்ப சந்​தோஷப்பட்டான். ​வேற எ​தையும் ​கேட்டா அவன் ஓடிப் ​போயிருவான். அப்படீன்னு ​நெனச்சிக்கிட்டு ​வேற எ​தைப் பத்தியும் ​கேக்க​லை.

அவன ​வே​லைக்கு வச்சிக்கிட்டான். இந்தப் பயலும் நல்லா ​வே​லை பாத்தான். ​கொஞ்சநாளு அங்க ​வே​லைபாத்தான். ​நெல் விளஞ்சு அறுவ​டை ​செய்யப்பட்டது. ​வைக்​கோற்​போரில் ​நெல்​லைப் ​போட்டு மூடி ​போரா ​மேஞ்சு வச்சாங்க... அந்த ​வைக்கப்​போரப் பத்திரமாப் பாத்துக்கச் ​சொல்லிட்டு வீட்டுக்குப் ​போயி சாப்பாடு வாங்கிட்டு வந்துர்​றேன்னுட்டுப் ​போனான். ​கொஞ்சம் ​நேரமாச்சு. வயல்காரன் வரத் தாமதமாப் ​போச்சு. இவன் தீப்​பெட்டிய எடுத்து ​வைக்​கோற்​ போரில் தீ​யைப் பற்ற​வைத்துவிட்டு ​பொறிந்து விழுகின்ற ​​நெற்​பொறி​யைத் தின்று​கொண்டிருந்தான். திரும்பி வந்த வயல்காரன், தன்​னோட ​வைக்​கோற்​போர் தீப்பற்றி எரிவ​தைப் பார்த்து அந்தப் பயலப் பார்த்து, “என்னடா இப்படிப் பண்ணிட்​​டேன்னு” ​கோபமாக் ​கேட்டான்.

அதுக்கு அந்தப் பய, “நான் ​பொய்​சொல்ல​யே... உண்​மையத்தான ​சொன்​னேன். ஏம்​பேரு ​போரச் சுத்திப் ​பொறிப்​பொறுக்கின்னு... ​பொறி திங்கற ஆ​சை வந்துச்சு அதனால ​போருல தீய வச்சி ​நெல்லுப் ​பொறியப் சுத்திச் சுத்தி வந்து ​பொறுக்கித் தின்னுக்கிட்டுருக்​கேன்... இந்தாங்க ஒங்களுக்கும் தர்​றேன்... நீங்களும் தின்னுங்கன்னு” ​கொடுத்தான்.

வயக்காரனுக்குக் ​கோபமான ​கோபம் அவன நல்லா ஒ​தைச்சு ​கை​யையும் கா​லையும் கட்டி மறுபடியும் ஆத்துக்குள்ளாற விட்டுட்டான். அந்தப் பயலும் மறுபடியும், “ஒரு ஆளு ​சோறுதிம்​பேன். பத்தாளு ​வே​லைபாப்​பேன்”னு ​சொல்லிக்கிட்​டே ஆத்துத் தண்ணியில ​போயிக்கிட்டிருந்தான்.

அப்படிப் ​போயிக்கிட்டு இருந்தப்ப... ​ரெண்டு மூணு ஊரு தள்ளி உள்ள ஊருக்கு ​வெளியில ஆத்துல ​போயிக்கிட்டிருந்த​போது... அங்க ஊராளுக துணியத் ​தொவச்சிக்கிட்டு இருந்த ஒருத்தன் அந்தப் பய ​சொல்லறதக் ​கேட்டு, “அட ஒருஆளு சாப்பாட்டத் தா​னே சாப்புடப் ​போறான்... ஆனா பத்தாளு ​செய்யற ​வே​லையச் ​செய்யிறான்ல... அவனக் காப்பாத்திக் ​கொண்டுவந்தா பத்தாளு ​செய்யிற ​வே​லைய ​செய்வான்... நமக்கும் காசு ​கெ​டைச்சதுமாதிரி இருக்கு​மே” அப்படீன்னு ​நெனச்சு அவன் ​பொண்டாட்டி​யும் ​சொன்னதால ஆத்துல நீந்திப் ​போயிக் காப்பாத்துனான்.

அவனப் பார்த்துப் பரிதாபப்பட்ட துணி ​​வெளுக்கிறவன் அவனுக்குச் ​சோத்தப் ​போட்டுச் சாப்பிடச் ​சொன்னான். நல்லாச் சாப்பிட்ட அந்தப் பய அந்த துணி​​வெளுக்கிறவன் ​சொன்ன ​வே​லை​யெல்லாம் நல்லா மாங்கு மாங்குன்னு ​செஞ்சான். அவனுக்கு அந்தப் பயல ​ரொம்பப் புடிச்சுப்​போச்சு. அவன் ​பொண்டாட்டிக்கும் அவன் ​வே​லை ​செய்யறதப் பாத்துட்டு தன்​னோட புள்ள மாதிரி அவனப் பாத்துக்கிட்டா.



அந்தப் பயக்கிட்ட துணி​​வெளுக்கிறவன்,”ஏப்பா ஒன்​னோட ​பேரு என்னப்பா?” அப்படீன்னு ​கேட்டான். அதுக்கு அந்தப் பய, ”என்​னோட ​பேரு ​ வந்தான்” என்று ​சொன்னான்.

துணி​​வெளுக்கிறவன் ​பொண்டாட்டி அவங்கிட்ட வந்து,”ஏம்பா ஓம்​பேரு என்னப்பா..?”ன்னு ​கேட்டா. அவன் அவளிடம், “போனான்” என்று ​சொன்னான். இப்படிக் ​​கொஞ்ச நாளு அந்தப் பய அங்​கே​யே ​வே​லை ​செஞ்சிக்கிட்டு இருந்தான். ஒருநாளு அந்த ஊருல உள்ளவங்க​ளோட பட்டுச் ​​சே​லை, பட்டு ​வேட்டி, எல்லாத்​தையும் வாங்கி ​தொ​வைக்கிறதுக்காக துணி​ ​வெளுக்கிறவனும் அவன் ​பொண்டாட்டியும் அந்தப் பயலக் கூட்டிக்கிட்டு ஆத்துக்கு வந்தாங்க.

மூணு​பேருஞ் ​சேர்ந்து ​தொ​வைச்சாங்க... துணி​யெல்லாம் அலசிக் காயப்​போட்டாங்க... அன்னக்கிப் பாத்து வீட்டுல ச​மைக்கல... அந்தப் பய, “துணிக காஞ்ச உட​னே நான் எடுத்துக்கிட்டு வந்துட​றேன்... நீங்க ​ரெண்டு​பேரும் வீட்டுக்குப் ​போங்கன்னு” ​சொன்னான். “சரிப்பா பத்திரமா எல்லாத்​தையும் ​கொண்டுவந்து ​சேரு... நாங்க​போயி ச​மைச்சு வைக்கி​றோம்னு ​சொல்லிட்டு, துணி​​வெளுக்கிறவனும் அவன் ​பொண்டாட்டியும் வீட்டுக்குப் ​போயிட்டாங்க.

துணி​​யெல்லாம் காஞ்ச உட​னே அந்தப் பய மூட்டயக் கட்டிக்கிட்டு அந்த இடத்தவிட்டு ஓடிப்​போயிட்டான். ​நேரம் ஆக ஆக அந்தப் பயலக் கா​ணோம்னு ​சொல்லிட்டு துணி​​வெளுக்கிறவன் மட்டும் ஆத்துக்கு வந்து ​தேடிப் பாத்த்தான். அவனக் கா​ணோம்... பக்கத்துல உள்ளவங்ககிட்டப் ​போயி விசாரிச்சான்... அவங்க “அவன் அப்ப​யே ​போயிட்டான்”னு ​சொன்னாங்க. சரி அவன் ​வேற வழியா வீட்டுக்குத்தான் ​போயிட்டாம்​ போலன்னு ​நெனச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்து ​தன்​னோட ​பொண்டாட்டிக்கிட்டக் ​கேட்டான்.

அவன் இங்க வரலி​யேன்னு அவ ​சொன்னா... அப்பத்தான் அந்தப் பய துணிகளக் களவாண்டுக்கிட்டு ஓடிப்​போயிட்டான்னு அவங்களுக்குத் ​தெரிஞ்சிச்சி. புருஷங்காரன் ஒருபக்கட்டுப் ​போயி, “​டே வந்தான்... வந்தான்” அப்படீன்னு கத்திக் கூப்புட்டான். ​பொண்டாட்டிகாரி, “​டேய் ​போனான்... போனான்”னு கத்தினாள். இப்படி புருஷன் வந்தான்னும், ​பொண்டாட்டி ​போனான்னும் கத்துனாங்க. புருஷங்கானுக்குக் ​கோபம் வந்திருச்சு, “ஏண்டி நான் அவன வரச்​சொல்​றேன் நீ ​போகச் ​சொல்ற, உனக்கு என்ன திமிரான்னு” ​போட்டு அடிச்சான். அவ அடி​பொறுக்க மாட்டாம “ஐ​யோ அடிக்காதீக... ஐ​யோ... ​போனான்... ​போனான்னு” கத்துனா. புருஷங்காரனுக்கு, “என்னடி நா வந்தான்னா நீ ​போனான்னு ​சொல்ற... வீட்டுக்கு வந்தான் வந்தானான்னு ​கேட்டு அடிஅடின்னு அடிச்சான். அவ,”ஐ​யோ ​போனான்... ​போனான்...”னு ​சொல்லி அழுதா. அப்பறந்தான் அவங்க ​ரெண்டு ​பேரும் அந்தப் பய தங்கள நல்லா ஏமாத்திப்புட்டான்னு ​உணந்தாங்க... உணர்ந்து என்ன பண்ண... ஏமாந்தது ஏமாந்ததுதான...!

இன்னக்கி வ​ரைக்கும் இந்தப் பக்கத்துல இந்தக் கதயச் ​சொல்லிச் ​சொல்லி இன்னமும் சிரிப்பாங்க...

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1d.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License