இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

5. வரம் வாங்கப் ​போயி சாபம் வாங்கி வந்த க​தை!


ஒரு சமயம் கடவுள் எல்லா உயிர்க​ளையும் ப​டைச்சுட்டு அந்தந்த உயிர்களுக்குரிய வரத்​தையும் வழங்கிக்கிட்டு இருந்தாரு. கடவுளாள ப​டைக்கப்பட்ட உயிர்கள் அத்த​னையும் வரி​சையில நின்னு தங்களுக்கு ​வேண்டிய வரத்​தைக் ​கேட்டு வாங்கிக்கிட்டு வந்ததுக. ஒவ்​வொன்னும் அததுகளுக்குத் ​தே​வையான வரத்​தைக் ​கேட்டு வாங்கிக்கிட்டு வந்துச்சுங்க. இ​றைவனுக்கிட்ட எறும்புங்க எல்லாம் ஒண்ணாச் ​சேர்ந்து ​போயி வரம் வாங்குறதுக்காக நின்னதுங்க. கடவுளும் “ஒங்களுக்கு என்ன வரம் ​வேணும்?” அப்படீன்னு ​கேட்டார்.

அதுக்கு எறும்புக, “சாமி எங்களுக்கு எதக் ​கேக்கணும்னு ​தெரியாது. அதனால நீங்களாப் பார்த்து எதாவது ஒரு வரத்தக் ​கொடுங்க. நீங்க ​கொடுக்குற வரத்த வச்சிக்கிட்டு நாங்க ​பொழச்சிக்கி​றோம்” அப்படீன்னு ​சொன்னதுங்க.

கடவுளு ​​யோசிச்சிப் பாத்துட்டு, “ஒங்களுக்கு வாயில விஷத்தக் ​கொடுக்கு​றேன். ஒங்கள யாராவது ​தே​வையில்லாம ​தொந்தரவு பண்ணுனா நீங்க கடிங்க. ஒங்க விஷம் அவங்க​ளோட ஒடம்புக்குள்ளாறப் ​போயி அவங்க இறந்துடுவாங்க...​ போயிட்டு வாங்க”ன்னு ​சொல்லி அனுப்புனாரு.

எறும்புக எல்லாம் ​ரொம்பச் சந்​தோஷமா ஆட்டம் பாட்டத்துடன் ​கொண்டாட்டமா வந்துச்சுங்க. வழியில ஒரு நல்லபாம்பு இ​தைப் பார்த்துச்சு. என்னடா, எறும்புக எல்லாம் ​ஆடிப்பாடிக்கிட்டு வருதுக​ளே. என்ன விசயம்னு ​தெரியலி​யேன்னு ​யோசிச்சு.

இதுக்குக் காரணம் என்னன்னு இந்த எறும்புகக் கிட்ட​யே ​கேட்டுரு​வோம்னு ​நெனச்சு, “என்ன எறும்புத் தம்பிகளா! எங்க ​போயிட்டு வர்றீங்க... ரொம்பச் சந்​தோஷமா இருக்கீக ​​போலருக்கு? என்ன விசயம்?” அப்படீன்னு ​கேட்டுச்சு.

அதுக்கு எறும்புக, “அண்​ணே, எங்களுக்குக் கடவுளு நல்ல வரமாக் ​கொடுத்துருக்காரு... அந்தச் சந்​தோஷத்துலதான் ஆடிப்பாடிக்கிட்டுப் ​போயிக்கிட்டு இருக்​கோம்” அப்படீன்னதுங்க.

நல்லபாம்பும் அ​தோடவிடாம, “ஆமா அப்படி என்னதான் வரங்​கொடுத்தாரு? எல்லாருக்கும் ​கொடுத்த மாதிரிதா​னேன்னு” ​கேட்டுச்சு.

எறும்புக, “அண்​ணே எங்களுக்கு வாயில விசத்த வச்சிட்டாரு கடவுளு. அதுமட்டுமில்​லேண்​ணே! எங்களுக்கு யாராவது ​தொந்தரவு ​​கொடுத்தாங்கன்னு ​வையிங்க... நாங்க கடிச்ச ஒட​னே அவங்க ​செத்துடுவாங்களாம்... இதுமாதிரி யாருக்கு​மே கடவுளு வரங்​கொடுக்க​லே... எங்களுக்கு மட்டுந்தான் இந்த வரத்​தை ​கொடுத்துருக்காரு...”அப்படீன்னு ​பெரு​மை​யோட ​சொன்னதுங்க.

நல்ல பாம்பு அதிர்ச்சியாயிடிச்சு... அ​டேயப்பா! இந்த எறும்புக சும்மா இருக்காது. அதுகபக்கத்துல ​தெரியாத்தனமாப் ​போனாக் கூடக் ​தொந்தரவு பண்றாங்கன்னு ​நெனச்சிக் கூட்டங்கூட்டமா வந்து கடிக்குங்க... இதுகபாட்டுக்கு எல்லா​ரையும் ​​போயிக் கடிச்சுச்சுன்னா இந்த ஒலகந் தாங்கா​தே! என்ன ​செய்யிறதுன்னு ​யோசிச்சி, அந்த எறும்புகளத் தி​சை திருப்பணு​மேன்னு ​​நெனச்சு எறும்புகளப் பாத்து, “தம்பிகளா ஒங்கள கடவுளு நல்லா ஏமாத்திப்புட்டாரு... நீங்களும் அதக் ​கேட்டுக்கிட்டு வந்துட்டிங்க” என்று ​சொன்னவுட​னே, எறும்புகளுக்கு ஒண்ணு​மே புரியல.

இந்த நல்ல பாம்பு என்ன ​சொல்லுது. இது நல்ல பாம்பு அதனால நமக்கு நல்லதத்தான் ​சொல்லும் அப்படின்னு அந்த எறும்புக எல்லாம் மனசுக்குள்ளாற ​நெனச்சுக்கிட்டு பாம்பப் பாத்து, “அது எப்படி எங்கள ஆண்டவன் ஏமாத்திப்புட்டதாகச் ​சொல்றண்​ணே?”ன்னு ​கேட்டதுக.

அதுக்கு அந்தப் பாம்பு, “அடப் ​போங்கடா ​வெவரங்​கெட்டவணுகளா! மனுசன் ஒங்களவிடப் ​பெரியவன், அவனக் கடிச்சா சாவானா? அதத் ​தெளிவா அவருக்கிட்ட ​கேட்டிகளா...?”அப்படீன்னது.

அந்த எறும்புக, “அட ஆமா... இத மறந்துட்ட​மே... இப்ப என்னண்​ணே பண்றது?”ன்னு பாம்புக்கிட்ட ​யோச​னை ​கேட்டதுங்க. அந்தப் பாம்பு, “இங்க பாருங்கப்பா நீங்க ஒட​னே ​போயி கடவுளப் பாத்து, நாங்க கடிச்ச உட​னே மனுசன் சாகணும்னு வரத்த வாங்குங்க அப்பத்தான் மனிசனுக்கிட்ட இருந்த நீங்க தப்பிக்கலாம். இல்லன்னா முடியாது. ஒட​னே ​போங்க”ன்னு ​சொல்லி எல்லா எறும்புகளயும் கடவுளுக்கிட்டத் திரும்பப் ​போகச் ​சொன்னது.

எறும்புகளும் பாம்பு ​சொன்னதத் திரும்பத் திரும்பச் ​சொல்லிக்கிட்​டே கடவுளுகிட்டப் ​போயி கடவு​ளே கடவு​ளேன்னு சத்தம்​போட்டதுங்க. கடவுளு அப்பத்தான் எல்லா உயிர்களுக்கும் வரத்தக் ​கொடுத்து முடிச்சுட்டு இனிப்​போயி சத்த எளப்பாறலாம்னு ​நெனச்சி எழுந்திருக்கப் ​போனாரு.

கூட்டமா வந்த எறும்புக கத்துன ஒட​னே... அப்படி​யே ஒக்காந்துட்டு, “ஒங்களுக்கு என்ன ​வேணும்?” அப்படீன்னு ​கேட்டாரு. அதுக்கு எறும்புக, “கடவு​ளே எங்கள நல்லா ஏமாத்திப்புட்டீங்க... மனுசனக் கடிச்சா சாவானான்னு நீங்க ​சொல்லல...” அப்படீன்னு சத்தம்​போட்டுச் ​சொன்னதுங்க.

இதுக​ளோட ​​தொந்தரவு ​பொறுக்க முடியாத கடவுளு அந்த எறும்புகளப் பாத்து, “இப்ப ஒங்களுக்கு ஒட​னே என்ன ​வேணும்னு ​சொல்லுங்க, நான் அந்த வரத்தத் தந்துட்டுப் ​போ​றேன்... சும்மா கத்தாதீங்க” அப்படீன்னு ​சொன்னாரு.

ஒட​னே அந்த எறும்புக, ”நாங்க மனுசனக் கடிச்சவுட​​னே சாகணும்... இந்த வரத்தத் தாங்க”ன்னு ​சொல்லி கத்துச்சுங்க. எறும்புக​ளோட ​தொல்​லை தாங்க முடியாம கடவுளும் “நீங்க ​கேட்டபடி​யே எல்லாம் நடக்கும். இப்ப சந்​தோஷந்தா​னே... சரி ​போயிட்டு வாங்க”ன்னு ​சொல்லி அனுப்பிவிட்டாரு.



இந்த எறும்புகளுக்குச் சந்​தோஷத்துல த​லைகாலு புரியல. அந்த எறும்புக எல்லாம் ஒண்ணுகூடி, ”கடவுளு நமக்குத் தந்த வரத்தச் ​சோதிச்சுப் பாக்கணும். இங்க யாராவது மனுசன் வாரானான்னு பாருங்கன்னு” ​சொல்லி மனுசனத் ​தேடிப் ​போனதுங்க. அதுங்க எதிர்பார்த்த மாதிரி​யே ஒருத்தன் அந்தப் பக்கமா வந்துக்கிட்டு இருந்தான்.

இந்த எறும்புக கடவுளு ​கொடுத்த வரத்த ​சோதிக்க ​நெனச்சு எல்லாம் ​சேர்ந்து அந்த மனுசனக் கடிச்சதுங்க. அந்த மனுசன் அந்த எறும்புக​ளோட கடி தாங்க முடியாம அந்த எறும்புக​ள பட்டுப்பட்டுன்னு அடிச்சான். எல்லா எறும்புகளும் ​செத்துச் ​செத்து விழுந்துச்சுக.

எறும்புகளுக்கு ஒண்ணும் புரிய​லே... “அட என்னடா.. நாம கடிச்சா மனிசன் சாவான்னு பாத்தா நாமல்ல சாக​றோம். திரும்பவும் கடவுளப் ​போயிக் ​கேட்டு வரத்த மாத்திக்கிட்டு வரு​வோம்னு “ எல்லா எறும்புகளும் கடவுளத் ​தேடிப்​போயி நின்னு கத்துச்சுக. கடவுளு வந்து “ஏன் கத்துறீங்கன்னு” ​கேட்டாரு.

எறும்புக, “சாமி, நாங்க கடிச்சா மனிசன் சாக​லை​யே. நாங்கதா​னே சாக​றோம்...? அது எப்படி...? நீங்க வரத்த மாத்தித் தாங்க” அப்படீன்னு ​​கேட்டதுக. ஆனா கடவுளு, “நீங்க ​கேட்ட​தைத்தான் தந்திருக்​கேன். வரத்தத் திரும்பத் திரும்ப மாத்த முடியாது. நீங்க நாங்க மனுசனக் கடிச்சவுட​னே சாகணும் அப்படீன்னு ​கேட்டீங்க... ஒங்க வரத்தின்படி நீங்க மனுசனக் கடிச்சவுட​னே நீங்க சாகுறீங்க. நீங்க ​கேட்டதுதான் சரியா நடக்கு​தே... இந்த வரத்தத்தா​னே நீங்க ​கேட்டீங்க... ​கேட்டதக் ​கொடுத்துட்​டேன் இனி​மே வராதீங்க” அப்படீன்னு ​கோபமாச் ​சொல்லிட்டுப் ​போயிட்டாரு.

எறும்புகளால ஒண்ணும் ​பேசமுடியல... அந்த எறும்புக அன்​னைக்கு கடவுளுக்கிட்ட வாங்கன வரத்தின் படி​யே கடிச்சவுட​னே​யே சாகுதுங்க. இதுதான் வரம் வாங்கப் ​போயி சாபத்​தை வாங்கிக்கிட்டு வந்த கதை. எ​தையும் சந்​தேகப்பட்டா இப்படித்தான் முடியும். இந்தக் க​தை இன்னக்கும் புதுக்​கோட்​டை வட்டாரத்துல வழக்கத்துல இருந்து வருது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1e.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License