இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

6. கன்றுக்குட்டியும் ​சிங்கமும்


ஒரு ​ஊருல ஒரு பசுமாடு இருந்தது. அந்தப் பசுமாடு அழகான கன்னுக்குட்டி ஒண்ணு ​போட்டுச்சு. இந்தப் பசுமாடு பக்கத்துல ​போயி ​மேஞ்சிட்டு வந்து பாலக் ​கொடுத்துட்டு இருக்கும். பக்கத்துல ​மேச்சல் இல்லாமப் ​போனதால பசுமாடு கன்னுக்குட்டிய கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ளாறப் ​போயி ​மேஞ்சிட்டு வரலாம்னு ​நெனச்சது. ஆனா கன்னுக்குட்டிய காட்டுக்குள்ளாறக் கூட்டிக்கிட்டுப் ​போனா ஏதாவது ஆபத்து வந்துச்சினா என்ன பண்றதுன்னு அந்தப் பசுமாட்டுக்குக் குழப்பமா இருந்துச்சு.

அதனால அந்தப் பசு ஒரு முடிவுக்கு வந்துச்சு. காட்ட ஒட்டுன ஒரு பாதுகாப்பான இடத்துல கன்னுக்குட்டிய நிறுத்தி வச்சிட்டு பசு மட்டும் காட்டுக்குள்ளாறப் ​போயி ​மேயப் ​போச்சு. அப்ப கன்னுக்குட்டியப் பாத்து, “நீ பத்திரமா இரு. நான் ​போயி ​மேஞ்சிட்டு வந்து ஒனக்குப் பாலு ​கொடுக்கி​றேன். என்​னோட கழுத்துல கட்டியிருக்கற மணிச் சத்தம் ​கேட்டுக்கிட்​டே இருக்கும். அப்படிக் ​கேட்டுச்சுன்னா நான் பக்கத்துல இருக்​கேன்னு அர்த்தம். ​கேக்கலன்னா எனக்கு ஏ​தோ ஆபத்துன்னு ​தெரிஞ்சிக்​கோ... அம்மா ​போயி ​மேஞ்சிட்டு சீக்கிரமா வந்​த​றேன்... நீ பயப்படாம இங்​கே​யே இரு” அப்படீன்னு ​சொல்லிட்டு காட்டுக்குள்ளாறப் ​போயி ​மேயப்​போயிருச்சு.

அ​தே காட்டுக்குள்ளாற சிங்கம் ஒண்ணு குட்டி​ போட்டுட்டு குட்டியப் பத்திரமா இருக்கச் ​சொல்லிட்டு ​வேட்​டையாடப் ​போயிரும். அப்படிப் ​போன​ போது இந்தச் சிங்கக் குட்டி காட்டுக்கு ​வெளியில என்னதான் இருக்கு அத அம்மா வர்றதுக்குள்ளாறப் ​போயிப் பாத்துட்டு வந்துரு​வோம்னுட்டு காட்டுக்கு ​வெளி​யே வந்துச்சு.

அப்ப அந்தப்பக்கமா தன்ன மாதிரி​யே துள்ளி வி​ளையாண்டுக்கிட்டுத் திரிஞ்ச கன்னுக்குட்டியப் பாத்துச்சு. அந்தச் சிங்கக் குட்டிக்கு கன்னுக்குட்டிய ​ரொம்பப் புடுச்சிப்​போச்சு. கன்னுக்குட்டி​யோட ​சேந்து சிங்கக் குட்டியும் ​வெ​ளையாண்டுச்சு. இப்படி​யே ​தெனமும் சிங்கக் குட்டியும் கன்னுக்குட்டியும் ​சேர்ந்து ​வெ​ளையாண்டுட்டு அப்பறமாப் ​போயிருங்க. இப்படி​யே ​கொஞ்ச நாளுப் ​போயிருச்சு.

ஒரு நாளு பசுமாடு நல்லா ​மேஞ்சிட்டுத் திரும்ப வர்ற​போது திடீர்னு குட்டி​போட்ட சிங்கம் பசு மாட்​டை மறிச்சிக்கிருச்சு. பசுமாடு சிங்கத்தப் பாத்துக் ​கெஞ்சிக் ​கேட்டது, “சிங்கராசா சிங்கராசா... நான் இப்பத்தான் கன்னு​போட்​டேன்... எம்பிள்ள சின்னப்பிள்​ள... நான்தான் அதுக்கு எல்லாம்... என்னய விட்டுரு... ஒனக்குப் புண்ணியமாப் ​போயிரும்” அப்படீன்னு ​கெஞ்சிக் ​கேட்டுச்சு.

அதுக்குச் சிங்கம், “இன்னக்கி எதுவும் எனக்குக் கி​டைக்கல. நான் பட்டினியா இருக்க​றேன்... என்​னோட புள்​ளையும் பட்டினியாக் கிடக்கும்... ஒன்ன இப்ப விட்டுட்டா, இன்னக்கி நானும் எம்புள்​ளையும் பட்டினியாத்தான் ​கெடக்கணும். ஒன்ன விடமுடியாது”ன்னு ​சொல்லி பசு​மேல பாஞ்சி அதக் ​கொன்னு தின்னுட்டு ​கொஞ்சத்தத் தன்​னோட குட்டிக்கு எடுத்துக்கிட்டுப் ​போயி ​கொடுத்துச்சு.

அதத் தின்ன சிங்கக் குட்டி தன்​னோட அம்மாவப் பாத்து, “ஏம்மா இன்னக்கி என்ன நீ ​கொண்டு வந்த கறி ரொம்ப நல்லா இருக்கு... இது என்ன கறிம்மா?” அப்படீன்னு ​கேட்டுச்சு. அதுக்குச் சிங்கம், “இது ஒரு பசுமாட்​டோட கறி... ஒனக்கு நல்லாருக்கும்னுதான் ​கொண்டு வந்​தேன்” அப்படீன்னது.

சிங்கக் குட்டியும் ஏ​தோ காட்டு மாட்​டோட கறி ​போலருக்குன்னு சாப்புட்டு ​பேசாம இருந்துருச்சு.

மறுநாளு சிங்கம் குட்டிய விட்டுட்டு எற ​தேடப் ​​​பொறப்பட்டுச்சு. ​போற​போது தன்​னோட புள்ளயப் பாத்து, “​டேய் தம்பி இந்தாட ஒரு மணி. இந்த மணிய ஒனக்கு ஏதும் ஆபத்து வந்தா அடி, நான் அப்ப வந்து ஒன்னக் காப்பாத்து​வேன்னு”​சொல்லிக்​ கொடுத்துச்சு. அதுக்குச் சிங்கக் குட்டி ,”ஏம்மா இந்த மணிய யாரு ஒனக்குத் தந்தாங்க...ன்னு” ​கேட்டுச்சு. அதுக்கு, “​நேத்து ஒரு மாட்டக் ​கொன்னு கறியக் ​கொண்டு வந்து ஒனக்குக் ​கொடுத்​தேன்ல. அந்த மாட்​டோட மணிதான் இது. அழகா இருந்ததுனால ஒனக்குக் ​கொடுக்கலாம்னு ​கொண்டு வந்​தேன்னு” ​சொல்லிட்டு இ​ரை​தேட காட்டுக்குள்ளாறப் ​போயிருச்சு.

தன்​னோட அம்மா போனவுட​னே கன்னுக்குட்டியப் பாக்குறதுக்காக சிங்கக் குட்டி வந்தது. பாவம் அம்மா வர்லி​யேன்னு கன்னுக்குட்டி அழுதுகிட்டு இருந்துச்சு. கன்னுக்குட்டி அழுகுறதப் பாத்த சிங்கக் குட்டியும் அழுதுச்சு... அழுதுகிட்​டே கன்னுக்குட்டிக்கிட்ட, “ஏன் அழுவறன்னு” ​கேட்டுச்சு. அதுக்குக் கன்னுக்குட்டி, “​​நேத்துலருந்து ​மேயப் ​போன எங்க அம்மாவக் கா​ணோம்... எனக்குப் பயமா இருக்கு... எனக்கு எங்க அம்மாவ விட்டா யாரு​மே இல்ல... நான் என்ன ​செய்யறதுன்​னே ​தெரியல... எங்க அம்மாவுக்கு என்னாச்சுன்​னே ​தெரியலன்னு... ​சொல்லி” அழுதுச்சு.

அதப் பாத்த சிங்கக் குட்டி, “நீ அழா​தே... நான் ஒனக்குத் ​தொ​ணையா இருப்​பேன்... இந்தா இந்த மணிய வச்சிக்கன்னு” ​சொல்லிக் குடுத்துச்சு. அந்த மணியப் பாத்த கன்னுக்குட்டி, “ஐ​யோ, இந்த மணி எங்க அம்மா கழுத்துல கட்டியிருந்த மணியாச்​சே... இந்த மணி எப்படி ஒனக்குக் கி​டைச்சது...” அப்படீன்னு ​கேட்டுச்சு.

“எங்க அம்மாதான் எனக்குக் ​கொண்டு வந்து ​கொடுத்துச்சு... அப்ப எங்க அம்மாதான் ஒங்க அம்மாவ ​கொன்னுருச்சு ​போலருக்கு... நீ எதுக்கும் கவலப் படாத... நான் ஒனக்குத் ​தொ​ணையா இருப்​பேன்” அப்படீன்னு ​சொல்லிட்டு காட்டுக்குள்ளாறப் ​போயி ​கொஞ்சம் புல்லப் புடுங்கியாந்து கன்னுக்குட்டிக்குக் ​கொடுத்துச் சாப்புடச் ​சொன்னது. கன்னுக்குட்டியும் அழுதுகிட்​டே அதச் சாப்புட்டுச்சு.

சிங்கக் குட்டிக்கு இப்ப தர்மசங்கடமா ஆயிப்​போச்சு... தன்​னோட நண்ப​னோட கண்ணீருக்குத் தான் காரணமாயிட்​டோ​மேன்னு அதுவும் ​சேர்ந்து அழுதுச்சு... ​பெறகு சிங்கக் குட்டி நா​ளைக்கு நானு இங்க வர்​றேன்... நீ கவலப்படாம இருன்னு ​சொல்லிட்டு ​வேக​வேகமாத் தன்​னோட இருப்பிடத்துக்குப் ​போயி தன்​னோட மணிய ​வேக​வேகமா அடிச்சுச்சு.

இந்த மணிச் சத்தத்தக் ​கேட்டு தாய்ச் சிங்கம் அலறியடிச்சுக்கிட்டு ​வேகம் ​வேகமா வந்துச்சு... ​வேகமா வந்த சிங்கம் “எதுக்கு மணிய அடிச்​சே... ஒன்ன யாரு வந்து ​​தொந்தரவு ​செஞ்சாங்க... ​சொல்லு... அவங்கள உண்டு இல்​லைன்னு பண்ணிப்புட​றேன்னு” ​சொல்லிச்சு.

அதுக்குச் சிங்கக் குட்டி, “அம்மா அம்மா, நீ இல்லாத ​நேரத்துல ஒன்ன மாதிரி​யே இங்க ஒரு சிங்கம் வந்தது. என்னய அது சாப்புடறதுக்காக ​வெரட்டுச்சு. நான் ஓடிப் ​போயி ஒழிஞ்சிக்கிட்​டேன். அந்தச் சிங்கம் ​கொஞ்ச ​நேரம் என்னத் ​தேடிப் பாத்துட்டு இந்தப் பக்கமா ​மெதுவாப் ​போயிருச்சு... அதனாலதான் பயந்து ​போயி மணியடிச்சு ஒன்னக் கூப்புட்​டேன்னு” ​​சொன்னது.

சிங்கத்துக்கு ஒட​னே ​கோபம் வந்துருச்சு... “சரிசரி வாவா... அது எங்க இருந்தாலும் அதக் கண்டுபிடிச்சுக் ​கொன்னுட​றேன்ன்னு...” ​சொல்லிட்டு சிங்கக் குட்டி​யோட எதிரிச் சிங்கத்தத் ​தேடிப் ​போச்சு. ​ரொம்ப தூரம் ​தாயக் கூட்டிக்கிட்டுப் போன சிங்கக்குட்டி ஒரு பாழுங்கிணத்தப் பாத்துச்சு. அத​னோட க​ரையில நின்னுக்கிட்டு, “அம்மா இதுக்குள்ளாறதான் இந்தச் சிங்கம் இருக்கும்... இங்க இருந்துதான் அது கத்துச்சுன்னு” ​சொல்லிச்சு. அதக் ​கேட்ட சிங்க அந்தக் ​கெணத்துக்குள்ள எட்டிப் பாத்துச்சு. ​கெணத்துல ​கெடந்த தண்ணியில தாய்ச்சிங்கத்​தோட ​நெழலு ​தெரிஞ்சவுட​னே​யே ​கோபத்துல அது​ மேல பாஞ்சது. ​சேறும் சகதியுமாக் ​கெடந்த அந்தக் ​கெணத்துக்குள்ளாற​யே தாய்ச்சிங்கம் சிக்கிக்கிட்டு எறந்து​போச்சு. இப்பத்தான் இந்தக் குட்டிச் சிங்கத்துக்கு நிம்மதி மனசுல வந்துச்சு.

மறுநாளு சிங்கக் குட்டி கன்னுக்குட்டியத் ​தேடிப்​போயி தன்​னோட இருப்பிடத்துக்​கே அ​ழைச்சிக்கிட்டு வந்துருச்சு. ​ரெண்டு​பேரும் ஒன்னாச் ​சேர்ந்து இருந்தாங்க. சிங்கக் குட்டி காட்டுக்குள்ளாறப் ​போயி ​வேட்​டையாடிட்டு ​கொஞ்சம் புல்லப் புடுங்கிக்கிட்டு வரும். கன்னுக்குட்டி பக்கத்துல ​மேஞ்சிட்டு சிங்கக் குட்டி​கொண்டுக்கிட்டு வரும் புல்லத்தின்னுட்டு இருக்கும். சிங்கக் குட்டி தனக்கிட்ட இருந்த மணிய கன்னுக்குட்டிக் கிட்டக்கக் ​கொடுத்து “ஒனக்கு ஏதாவது ஆபத்து வந்தாமட்டும் இந்த மணிய ​வேகமா அடி. நான் ஓடிவந்து ஒன்னக் காப்பத்திரு​வேன். நீ கவலப்படாதன்னு” ​சொல்லிட்டுப் ​போயிரும்.



இப்படி​யே சிங்கக் குட்டியும் கன்னுக்குட்டியும் ஒருத்தரவிட்டு ஒருத்தர் ​வெலகிப் ​போகாம நண்பர்களா இருந்து வந்தாங்க. அப்படி இருக்கற ​போது ஒருநாளு சிங்கக் குட்டி ​வேட்​டைக்குப் ​போயிருச்சு. கன்னுக்குட்டி மட்டும் அங்கே இருந்த புல்ல ​மேஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அப்ப ​வேட்​டையாடிக்கிட்டு வந்த நாலஞ்சு​ பேரு இந்த அழகான கன்னுக்குட்டியப் பாத்துட்டு அத ​வெரட்டி ​வேட்​டையாடிக் ​கொனுட்டாங்க. வந்தவங்களுக்கு ​ரெம்பப் பசி​யெடுத்துச்சு.

ஒட​னே அவங்க எல்லாரும் அந்தக் கன்னுக்குட்டிய உரிச்சி ​நெருப்புல வாட்டிச் சாப்புட்டுப் பசியப் ​போக்கிக்கிருவம்ன்னு முடிவு ​செஞ்சி கன்னுக்குட்டிய அறுத்து அத ​நெருப்புல வாட்டிக்கிட்டு இருந்தாங்க.

வந்தவனுகள்ள ஒருத்தன் மட்டும் அந்தக் கன்னுக்குட்டி கழுத்துல கிடந்த மணிய எடுத்து “அட அழகான மணியா இருக்​கே... இதக் ​கொஞ்சம் அடிச்சுத்தான் பாப்ப​​மேன்னு” மணிய ​வேக​வேகமா அடிச்சான். அப்ப இந்த மணிச்சத்தத்தக் ​கேட்ட சிங்கக் குட்டி ​​தன்​னோட நண்பனுக்கு என்ன​வோ ஆபத்து ஏற்பட்டுப்​ போச்சுன்னு ​நெனச்சிக்கிட்டு ​வேக​வேமா ஓடி வந்து பாத்துச்சு...

அப்ப ​வேட்​டையாடுறவங்க நாலஞ்சு​பேரு நின்னுக்கிட்டு கன்னுக்குட்டி​யோட கறிய வாட்டுறதப் பாத்துச்சு. ஒட​னே இந்தச் சிங்கக் குட்டிக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்துருச்சு. அந்த ஆளுக​மேல பாஞ்சு எல்லா​ரையும் ​கொன்னு ​போட்டுருச்சு சிங்கக் குட்டி. தன்​னோட நண்பனான கன்னுக்குட்டிக்கு ​நேர்ந்த மரணத்தை ​நெனச்சி ​நெனச்சி அழுதுச்சு சிங்கக் குட்டி. அதனால தாங்கிக்க​வே முடியல. ஒரு முடிவுக்கு வந்துருச்சு. என்​னோட நண்பன் கன்னுக்குட்டி இல்லாத ஒலகத்துல நான் மட்டும் வாழ முடியுமா? இனி முடியாதுன்னு முடிவு பண்ணி கன்னுக்குட்டி ​வெந்துக்கிட்டுருந்த ​நெருப்புல தானும் குதிச்சு ​செத்துப்​போச்சு.

இந்தக் கதய ​ இந்த வட்டாரத்துல இன்னமும் ​சொல்லிச் ​சொல்லி மாஞ்சு​போயிருவாங்க... நட்புன்னா அது சிங்கக்குட்டி கன்னுக்குட்டி மாதிரி இருக்கணும்னு இன்னக்கி வ​ரைக்கும் ​சொல்லுற ​சொலவட இந்த வட்டாரத்துல இருக்குது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/villagestories/p1f.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License